valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 22 March 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

நாம் இந்தக் காதையின் சாரமென்ன என்று சிந்திப்போம். ஐம்புலன்களில் எது ஒன்றும் பாபாவை நினைக்காமல் இவ்வுலக இன்பங்களை அனுபவிக்கலாகாது.

மனதிற்கு இப் பாடம் ஒருமுறை புரிந்துவிட்டால், அது மறுபடியும் மறுபடியும் ஞாபகத்திற்கு வரும். ஒவ்வொரு உலகியல் கொடுக்கல் வாங்கலிலும் சாயியின் பதங்களையே இடையறாது சிந்திக்கும்.

குணங்களுடன் கூடிய சுத்தப் பிரம்மம் கண்முன்னே தோன்றும். பக்தியையும் விரக்தியையும் முக்தியையும் மலரச் செய்து பரமபதத்தை அளிக்கும்.

கண்கள் அந்த சுந்தரமான உருவத்தை உற்றுப் பார்க்கும்பொழுது இவ்வுலக உணர்வும் பசியும் தாகமும் உருகி ஓடிவிடும். இவ்வுலக இன்பங்கள் பற்றிய உணர்வே தொலைந்துபோகும்! மனம் சாந்தத்தையும் திருப்தியையும் அனுபவிக்கும்.

நான் எவ்வளவு முயற்ச்சி செய்தாலும், ஓவி (செய்யுள்) சில சமயங்களில் என் மனத்தே தோன்ற மறுக்கிறது. ஆயினும், எந்திரத்தில் மாவு அரைக்கும்பொழுது பளிச்சென்று ஞாபகத்திற்கு வருகிறது! அதுபோலவே உடைத்த கடலைக் காதையை விவரிக்கும்பொழுது எனக்கு சுதாமரின் (குசேலர்) கதை ஞாபகத்திற்கு வருகிறது!

ஒருகாலத்தில், பலராமனும் ஸ்ரீகிருஷ்ணனும் சுதாமனும் குரு சாந்தீபனியின் ஆசிரமத்தில் வசித்துவந்த காலத்தில், ஸ்ரீகிருஷ்ணனும் பலராமனும் விறகு சேகரித்துக்கொண்டு வரக் காட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

குருபத்தினியின் ஆணைக்கிணங்கி ஸ்ரீகிருஷ்ணனும் பலராமனும் காட்டினுள்ளே சென்றனர். அவர்கள் புறப்பட்டவுடனே சுதாமனும் அவர்களுடன் செல்லுமாறு பணிக்கப்பட்டான்.

குருபத்னி சுதாமனிடம் கொஞ்சம் உடைத்த கடலையை கொடுத்து, 'காட்டில் திரியும்பொழுது பசியாக இருந்தால் மூவரும் பகிர்ந்து உண்ணுங்கள்' என்று ஆணையிட்டு அனுப்பினார்.

பிறகு, சுதாமன் காட்டில் ஸ்ரீகிருஷ்ணனை சந்தித்தான். ஸ்ரீகிருஷ்ணன் சுதாமனிடம் சொன்னான், "தாதா, எனக்கு தாகமாக இருக்கிறது". சுதாமன் தன்னிடம் இருக்கும் உடைத்த கடலையைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசாமல் என்ன பதில் சொன்னான் என்பதை கவனமாகக் கேளுங்கள்.

"எப்பொழுதும் காலி வயிற்றில் தண்ணீர் குடிக்காதே; மாறாக, முதலில் சிறிது ஓய்வெடுத்துக்கொள்". ஸ்ரீகிருஷ்ணன் சுதாமனுடைய துடையின் மேல் தலை வைத்து ஓய்வெடுத்தபொழுதும் சுதாமானால், "இந்த உடைத்த கடலையை கொஞ்சம் சாப்பிடு" என்று சொல்ல முடியவில்லை.

ஸ்ரீகிருஷ்ணன் சிறுதுயில் கொண்டுவிட்டான் என்று தெரிந்துகொண்டபின், சுதாமன் உடைத்த கடலையைத் தானே தின்ன ஆரம்பித்தன். ஸ்ரீகிருஷ்ணன் கேட்டான், "தாதா, நீ என்ன தின்கிறாய்? இது என்ன சத்தம்?"

"ஹே கிருஷ்ணா! இவ்விடத்தில் தின்பதற்கு என்ன இருக்கிறது. குளிரில் என்னுடைய பற்கள் நடுங்கிச் சத்தம் செய்கின்றன; அவ்வளவே! நீயே பார், என்னால் விஷ்ணு சஹஸ்ர நாமங்கூடத் தெளிவாக ஓத முடியவில்லை!"