ஷீர்டி சாயி சத்சரிதம்
குருவினிடத்தில் பக்தி பாவமும் கரைகாணாத அன்பும் அசையாத நிட்டையும் இல்லையெனில், ஆறு உல் எதிரிகளை (காமம், கோபம், லோபம், மோகம், மதம், மாச்சரியம்) வெல்ல முடியாது. அஷ்டபாவங்களை அடையவும் முடியாது.
பக்தனுடைய ஆத்மசுகம் குருவுக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. பக்தன் எவ்வெளவுக்கு எவ்வளவு ஆன்மீக முன்னேற்றம் அடைகிறானோ அவ்வவளக்கு அவ்வளவு குரு குதூகலம் அடைகிறார்; பக்தனைக் கொண்டாடுகிறார்.
'தேகம், வீடு, மனைவி, மக்கள் - இவையனைத்தும் என்னுடையவை' என்று நினைப்பது விவேகமற்ற செயல். இவையனைத்தும் பிற்பகல் நிழலைப் போல் வேகமாய் இடம் மாறும் தன்மையுடையவை; கணநேரத்தில் மறையக்கூடிய மாயை.
இந்த மாயையின் சுழலில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று விரும்புவர் வேறெதிலும் நாட்டமில்லாது சாயியிடம் சரணடைந்துவிட வேண்டும்.
மாயையின் மர்மத்தை முடிச்சவிழ்க்க முயன்ற வேத சாஸ்திரங்கள் கையை விரித்துவிட்டன. சிருஷ்டி அனைத்திலும் இறைவனை காண முடிந்தவரே மாயையை வெல்ல முடியும்.
நிஜாம் ராஜ்யத்தில் இருந்து பக்கீர் சாயியைத் தம்முடன் முதலில் நெவாஸாவுக்கு அழைத்துவந்த சாந்த் பாய் பாடீல் பாக்கியசாலி.
அங்கே பக்கீர் சாயி கிட்டத்தட்ட ஓராண்டு காலம் வாசம் செய்தார். அங்கேதான் அவர் காணட் கிராமவாசியான கமா என்பவருடன் சகவாசமாக இருந்தார்.
இருந்தபோதிலும், சிறிதுகாலம் கழித்து, கமாவும் பிரசித்தி பெற்ற டாக்ளீ கிராமத்தைச் சேந்த தகடூ தாம்போலியும் (தாம்பூல வியாபாரியும்) பாபுவுடன் நெவாஸாவில் இருந்து ஷிர்டிக்கு வந்துசேர்ந்தனர்.
நாடெங்கும் புண்ணியத் தலங்களும் புண்ணிய தீர்த்தங்களும் அபரிதமாக இருக்கின்றன. ஆயினும், சாயி பக்தர்களுக்கு ஷிர்டியே மிக பவித்திரமானது.
இந்த யோகம் நேர்ந்திராவிட்டால் (பாபாவின் ஷீர்டி வருகை) தீனர்களாகிய நமக்கு அவருடைய கூட்டுறவு எப்படிக் கிடைத்திருக்கும்? இது நம்முடைய கிடைத்ததற்கரிய பெரும் பேறன்றோ!
பக்தர்களில் எவரெல்லாம் முழுமையாக சரணடைகிறார்களோ, அவர்கள் எல்லாருடைய நன்மையையும் கருதி சாயி அவர்களை சன்மார்க்கத்தில் செலுத்துகிறார்.
ஆகவே, கதை கேட்பவர்களே! ஊன்றிய மனதுடன் சத் சரித்திரத்தை படியுங்கள். சாயியின் புண்ணிய சரித்திரமே அவரருளை பெறச் சிறந்த வழியாகும்.
கடந்த அத்தியாயத்தில், ஒரு பக்தருக்கு குலகுருவினிடம் இருந்த விசுவாசம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதும் மற்றொருவருக்கு அக்கல்கோட் சுவாமியை பற்றிய சூசகம் அளிக்கப்பட்டு அவருடைய நம்பிக்கையும் விசுவாசமும் மறுமலர்ச்சி செய்யப்பட்டதும் விவரிக்கப்பட்டது.
குருவினிடத்தில் பக்தி பாவமும் கரைகாணாத அன்பும் அசையாத நிட்டையும் இல்லையெனில், ஆறு உல் எதிரிகளை (காமம், கோபம், லோபம், மோகம், மதம், மாச்சரியம்) வெல்ல முடியாது. அஷ்டபாவங்களை அடையவும் முடியாது.
பக்தனுடைய ஆத்மசுகம் குருவுக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. பக்தன் எவ்வெளவுக்கு எவ்வளவு ஆன்மீக முன்னேற்றம் அடைகிறானோ அவ்வவளக்கு அவ்வளவு குரு குதூகலம் அடைகிறார்; பக்தனைக் கொண்டாடுகிறார்.
'தேகம், வீடு, மனைவி, மக்கள் - இவையனைத்தும் என்னுடையவை' என்று நினைப்பது விவேகமற்ற செயல். இவையனைத்தும் பிற்பகல் நிழலைப் போல் வேகமாய் இடம் மாறும் தன்மையுடையவை; கணநேரத்தில் மறையக்கூடிய மாயை.
இந்த மாயையின் சுழலில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று விரும்புவர் வேறெதிலும் நாட்டமில்லாது சாயியிடம் சரணடைந்துவிட வேண்டும்.
மாயையின் மர்மத்தை முடிச்சவிழ்க்க முயன்ற வேத சாஸ்திரங்கள் கையை விரித்துவிட்டன. சிருஷ்டி அனைத்திலும் இறைவனை காண முடிந்தவரே மாயையை வெல்ல முடியும்.
நிஜாம் ராஜ்யத்தில் இருந்து பக்கீர் சாயியைத் தம்முடன் முதலில் நெவாஸாவுக்கு அழைத்துவந்த சாந்த் பாய் பாடீல் பாக்கியசாலி.
அங்கே பக்கீர் சாயி கிட்டத்தட்ட ஓராண்டு காலம் வாசம் செய்தார். அங்கேதான் அவர் காணட் கிராமவாசியான கமா என்பவருடன் சகவாசமாக இருந்தார்.
இருந்தபோதிலும், சிறிதுகாலம் கழித்து, கமாவும் பிரசித்தி பெற்ற டாக்ளீ கிராமத்தைச் சேந்த தகடூ தாம்போலியும் (தாம்பூல வியாபாரியும்) பாபுவுடன் நெவாஸாவில் இருந்து ஷிர்டிக்கு வந்துசேர்ந்தனர்.
நாடெங்கும் புண்ணியத் தலங்களும் புண்ணிய தீர்த்தங்களும் அபரிதமாக இருக்கின்றன. ஆயினும், சாயி பக்தர்களுக்கு ஷிர்டியே மிக பவித்திரமானது.
இந்த யோகம் நேர்ந்திராவிட்டால் (பாபாவின் ஷீர்டி வருகை) தீனர்களாகிய நமக்கு அவருடைய கூட்டுறவு எப்படிக் கிடைத்திருக்கும்? இது நம்முடைய கிடைத்ததற்கரிய பெரும் பேறன்றோ!
பக்தர்களில் எவரெல்லாம் முழுமையாக சரணடைகிறார்களோ, அவர்கள் எல்லாருடைய நன்மையையும் கருதி சாயி அவர்களை சன்மார்க்கத்தில் செலுத்துகிறார்.
ஆகவே, கதை கேட்பவர்களே! ஊன்றிய மனதுடன் சத் சரித்திரத்தை படியுங்கள். சாயியின் புண்ணிய சரித்திரமே அவரருளை பெறச் சிறந்த வழியாகும்.
கடந்த அத்தியாயத்தில், ஒரு பக்தருக்கு குலகுருவினிடம் இருந்த விசுவாசம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதும் மற்றொருவருக்கு அக்கல்கோட் சுவாமியை பற்றிய சூசகம் அளிக்கப்பட்டு அவருடைய நம்பிக்கையும் விசுவாசமும் மறுமலர்ச்சி செய்யப்பட்டதும் விவரிக்கப்பட்டது.