valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 14 December 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


1918 ஆம் ஆண்டு, தக்ஷிணாயன காலத்தில், வளர்பிறைப் பருவத்தில், விஜயதசமியன்று, பகல் நேரத்தில், பாபா தம் சரீரமாகிய ஆடையை உதறினார்.

அன்று மொஹர்ரம் மாதத்தில் 9 ஆவது தினம்; 'படுகொலை இரவு' நாள்.  அந்நாளில் பிற்பகல் 2:35  மணியளவில்  சாயிநாதர் தம்முடைய நிர்யாணத்திற்குத் தயாரானார்.

கௌதம புத்தரின் பிறந்த நாள் புத்த ஜெயந்தியாகக் கொண்டாடப்படுவதைப் போல், சாயியின் புண்ணிய திதியும் மஹாசமாதி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. விழா கொண்டாடுவதற்கு தேவர்களுக்குப் பிறந்தநாள் எப்படி முக்கியமோ, அப்படியே ஞானிகளுக்கு முக்தியடைந்த நாள் முக்கியமானது.

அன்று (15 .10 .1918 ) மதியம் 12 : 30  மணி கடியாரத்தில் அடித்தபோது தசமி திதி கழிந்து ஏகாதசி திதி ஆரம்பமாகிவிட்டது. ஆகவே, பாபா முக்தியடைந்த திதி ஏகாதசியே.

ஆயினும், அன்று உதயகாலத்தில் தசமி திதியாக இருந்ததால், விஜயதசமியே பாபா முக்தியடைந்த திதியாகக் கொள்ளப்படுகிறது. உற்சவமும் விஜயதசமியன்றே கொண்டாடப்படுகிறது.

அந்தச் செவ்வாய்க் கிழமை, முஸ்லீம்களுக்குப் 'படுகொலை இரவு' நாள்; மிகப் பிரசித்தமான நாள். அந்த நாளில், சாயி, ஜோதியை ஜோதியுடன் (தம்முடைய ஆத்மஜோதியைப் பரஞ்சோதியுடன் ) கலந்துவிட்டார்.

விஜயதசமி, வங்காள தேசத்தில் துர்க்கா பூஜை முடியும் நாள். விஜயதசமி வடநாட்டிலும் எல்லாருக்கும் பண்டிகை நன்னாள்.

1916 ஆம் ஆண்டு (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு) இதே விஜயதசமி நாளன்று. சாயங்கால நேரத்தில், பிரதோஷ காலத்தில், பின்னர் நடக்கப்போவதை சூசகமாகத் தெரிவித்தார் பாபா.

அந்த அபூர்வமான லீலையை எவ்வாறு செய்தார் என்பதை இப்பொழுது சொல்கிறேன்; கேட்பவர்கள் வியப்படைவீர்கள். மேலும் , எல்லாரும் சமர்த்த சாயியின், திட்டமிட்டுச் செயலாற்றும் சாமார்த்தியத்தையும் அறிந்துகொள்வீர்கள்.

1916 ஆம் ஆண்டு நவராத்திரிப் பண்டிகை சமயத்தில், சிலாங்கண் நாளன்று, சாயங்கால வேளையில், அவருடைய வழக்கமான சுற்றுலாவை முடித்தபின் ஓர் அற்புதமான லீலை பாபாவிடமிருந்து வெளிப்பட்டது.