valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 20 September 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

30 . கனவிலும் நனவிலும் அனுக்கிரஹம் (பகுதி 2 )

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

ஓம் நமோ சாயி தேவா! பக்தவத்சலரே! கருணாலயமே! தரிசனமொன்றாலேயே பிறவிப்பயத்தை விலக்கி ஆபத்துகளிலிருந்து காப்பவரே! உம்மை வணங்குகிறேன்.

ஞானிகளுள் முடிமணியாகிய சாயிநாதரே! ஆரம்பித்தில் நீர் குணமற்றவராக இருந்தீர். பிறகு, உம் பக்தர்களின் அன்பு, பக்தி ஆகிய விசைகளால் உந்தப்பட்டு உருவத்தையும் குணங்களையும் ஏற்று அவதரித்தீர்.

பக்தர்களை உத்தாரணம் செய்வதே (தீங்கிலிருந்து மீட்டு உயர்த்துதல்) குருமார்களின் ஜீவாதாரமான மூச்சுக் காற்று. குருவம்ச திலகமாகிய உங்களுக்கு வாழ்க்கையின் லட்சியம் வேறென்னாவாக இருக்கமுடியும்!

உமது இரு பாதங்களையும் பற்றிகொண்டவர்களுடைய பாவங்களைனைத்தும் அழியும். பூர்வஜென்ம நல்வினைகளின் பலன் மேல் தளத்திற்கு எழும்பும்.  வாழ்க்கைப் பாதையில் பயமோ தடைகளோ வாரா.

மகத்தான புனிதத் தலங்களில் வாழும் பிராமணர்களும் உம்முடைய பாதங்களை மறவாது இங்கு வந்து காயத்ரி மந்திரத்தை இடைவிடாது ஓதுகிறார்கள்; போதி, புராணங்களையும் வாசிக்கிறார்கள்.

சடங்குகள் தெரியாத, அல்ப சக்தியுடைய எங்களுக்கு பக்தியைப்பற்றி என்ன தெரியும் ? ஆயினும், சமஸ்தமான (எல்லா) மக்களும் எங்களை ஒதுக்கிவிட்டாலும், சாயி எங்களைக் கைவிடமாட்டார்.

அவர் யாருக்குக் கிருபை செய்கிறாரோ, அவர் சிந்தனைக்கெட்டாத அளவிற்கு சக்தி பெறுகிறார். ஆத்மா எது, அனாத்மா எது, என்னும் விவேக சம்பத்தை அடைகிறார். அதிலிருந்து ஞானம் பிறக்கிறது.

சாயியின் திருவாய்மொழியைக் கேட்கவேண்டும் என்ற தீவிர ஆசை பக்த ஜனங்களை பிச்சேற்றுகிறது. ஒவ்வொரு வார்த்தையும் மனத்தில் ஆழமாகப் பதிகிறது. வார்த்தைகளின் உட்பொருளை அனுபவத்தில் காண முயல்கின்றனர்.

பக்தர்களின் மனோரதங்களை சாயி பரிபூரணமாக அறிவார்; அவற்றை நிறைவேற்றவும் செய்கிறார். அதன்மூலமாக, பக்தர்கள் வாழ்க்கையில் நிறைவு பெற்றவர்களாகிறார்கள்.