நகரும் நகராப் பொருள்களுடன் கூடிய இவ்வுலகமனைத்தும் இறைவனின் வெளிப்பாடே. ஆனால், பரமாத்வான இறைவன் இப் பிரபஞ்சத்திற்கும் அப்பாற்பட்டவன்.
இறைவன் இவ்வுலகத்திலிருந்து வேறுபட்டவன் அல்லன். ஆனால், இப் பிரபஞ்சம் இறைவனிடமிருந்து வேறுபட்டது ! சிருஷ்டியின் ஆரம்பத்திலிருந்தே இவ்வுலகம் நகரும் நகராப் பொருள்களால் நிறைந்திருக்கிறது. ஈதனைதிற்கும் இறைவனே ஆதாரம்.
சிலை, பலிபீடம் போன்ற எட்டு இடங்கள் இறைவனைப் பூஜை செய்ய உகந்த ஸ்தானங்கலாகும்; இவையனைத்திலும் குருவின் திருவடிகளே மிகச்சிறந்தவை.
பூரண பிரம்மமான ஸ்ரிக்ரிஷ்னரே, குரு சந்தீபனியின் பாதங்களை சரணடைந்தார். அவர் கூறியிருப்பதாவது, "சத் குருவின் நினைவில் நீ மூழ்கினால், நாராயணனாகிய நான் சந்தோஷமடைகிறேன். -
"என்னை வழிபடுவதை விட, சத்குருவை நீ வழிபடுவதை நான் ஆயிரம் மடங்கு விரும்புகிறேன்". சத்குருவின் சிறப்பும் மகிமையும் வானளாவியான.
குரு வழிபாட்டிற்கு புறங்காட்டுபவன், அபாகிவானும் பாவியுமாவான். ஜனன மரணச் சுழற்சியில் மாட்டிகொண்டு இன்னல்பட்டே தீருவான். ஆன்மீக முன்னேற்றத்தின் வாய்ப்பை பாழடித்து விடுகிறான்.
மறுபடி ஜனனம், மறுபடி மரணம் ! இவ்விரண்டிற்குமிடையில் அலைவதே நமது விதியாகிவிட்டது. ஆகவே, நாம் குருவின் சரித்திரத்தைச் செவிமடுப்போம். நிஜமான விடுதளையச் சம்பாதிப்போம்.
முனிவர்களின் வாயிலிருந்து சஹாஜமாக வெளிவரும் கதைகள் நம்முடைய அஞ்ஞான மூட்டையின் முடிச்சை அவிழ்த்து, பெரிய துன்பங்கள் வரும்போது தாரக மந்திரமாக அமையும். ஆகவே, இக் காதைகளை இதயத்தில் சேர்த்து வைப்போம்.
எதிர்காலத்தில், எவ்வித சக்திகள் எவ்விதமான சோதனைகளைக் கொண்டு வரும் என்பதை நாம் அறிவோம். ஏனெனில், ஈதனைத்தும் அல்லாவின் லீலையாகும்; பிரேமையுடைய பக்தர்கள் வெறும் பார்வையாளர்களே!
ஞான பலத்தைப் பெற்றிராமலேயே, நான் சகலசக்திகளும் வாய்ந்த சத்குருவைப் பெற்றேன். இது தெய்வபலதால் நடந்தேன்றா ஏற்றுக்கொள்வது? இல்லவேயில்லை! இதுவும் அவரது லீலைகளில் ஒன்றே!
இக் காவியத்தின் பிரயோஜனம் என்னவென்று சொல்லிவிட்டேன். அவருடைய உறுதிமொழியையும் விவரமாக சொன்னேன். இந்த சந்தர்பத்தில், பாபா அவருடைய தன்மையைப் பற்றியும் தம்மை எப்படி வழிபடுவது என்பது பற்றியும் வலி காட்டினார்.
கதை கேட்பவர்களே! அடுத்த அத்தியாயத்தில் ஸ்ரீ சமர்த சாய் எப்படி ஷீரடியில் முதன்முறையாகத் தோன்றினார் என்பது பற்றி கேட்பீர்கள்.
இளைஞர்களும் முதியவர்களும் அனைவரும் உலகியல் சிந்தனைகளைச் சிறிது நேரம் ஒதுக்கிவைத்துவிட்டுக் கபடமின்றி விசுவாசத்துடன் சாயியின் அசாதர்ணமான் கதையைக் கேளுங்கள்.
இறைவனுடைய அவதாரமான சாயி நிர்விகாரமானவராக இருப்பினும், மாயையின் பிடிக்கு உட்பட்டு, உலகியல் வாழ்வில் ஒரு சாதாரண மனிதனைப் போலவே பல வேதங்கள் பூண்டு நடித்தார்.
அவருடைய பாதங்களை "சமர்த்த சாய்" என்னும் குறு மந்திரத்தால் அடைந்துவிடலாம். பக்தர்களைப் பிறவிப் பிணியிலிருந்து விடுவிக்கும் நூலை இழுப்பவருடைய காதைகள், மிகத் தூய்மையானவை; புனிதமானவை.
பொளிப்பாகச் சொன்னால், சாயியினுடைய சரித்திரம் புனிதமானது; இதைப் படிப்பவரும் கேட்பவரும் புண்ணியசாலிகள்; அவர்களுடைய அந்தரங்கம் சுத்தம் ஆகும்.
இக் கதைகள் பிரேமையுடன் கேட்கபட்டால், இவ்வுலகத் துன்பங்கள் அழியும்; கிருபாநிதியான சாய் திருப்தியடைவார்; சுத்த ஞானம் தோன்றும்.
மசமசப்பு, தாவும் மனம், புலனின்பங்களிலேயே மூழ்கிப் போதல் - இவையனைத்தும் கவனத்துடன் கேட்பதற்கு தடங்கல்கலாகும். இத் தடங்கல்களை ஒதுக்கித் தள்ளுங்கள்; கேள்வி சந்தோஷத்தை அளிக்கும்.
விரதங்கள் வேண்டா, விரத முடிவுவிலாகளும் வேண்ட, உபவாசம் வேண்டா , உடலை வர்தவும் வேண்டா. புண்ணிய தளங்களை தரிசனம் செய்வதற்கான பிரயாணமும் தேவையில்லை; இச் சரித்திரத்தை கேளுங்கள். அதுவே போதுமானது.
நம்முடைய பிரேமை கள்ளமில்லாததும் விடாப்பிடியானதுமாக இருக்க வேண்டும். பக்தியின் சாரத்தை கிரஹித்துக் கொள்ள வேண்டும்; விஷமமான அக்ஞானத்தை நாசம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான், நமக்கு மனிதப் பிறவியின் உச்ச இலக்காகிய மோஷம் சித்திக்கும்.
பிற சாதனைகளில் ஈடுபடவேண்டிய அவசியம் இல்லை; பழைய வினைகளும் புதிய வினைகளும் சுவதேயின்றி அழிந்துவிட, சாய் சரித்திரத்தைக் கேட்போமாக!
பேராசை பிடித்த செல்வந்தன் தான் எங்கிருந்த போதிலும் மறைத்துவைத்த புதையளைபற்றியே நினைத்துக் கொண்டிருப்பான். அதேவிதமாக, சாயி நம்முடைய இதயத்தில் வீற்றிருக்கட்டும்.
எல்லாருக்கும் சேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயே பக்தன் ஹெமாத் பந்தால் இயற்றப்பட்ட, "ஸ்ரீ சமர்த சாயி சத் சரித்திரம்" என்னும் காவியத்தில், "இக் காவயியத்தின் பிரயோஜனம் - காவியம் எழுத பாபா சம்மதம் அளித்தது " என்னும் மூன்றாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீ சத் குரு சாய் நாதருக்கு சமர்ப்பணம் ஆகட்டும்...