ஷீர்டி சாயி சத் சரிதம்
அந்தக் காலத்தில்தான் இப்புத்தகங்கள் உபயோகத்திற்கு வரும். நாம் அப்பொழுது மேலுலகத்தில் இருப்போம். ஆயினும், சாமா தம்முடைய புத்தக சம்மேளனத்தில் இருந்து (குவிப்பதிலிருந்து) எடுத்துக் கொடுப்பார். இயற்றிய ஆசிரியர்களின் பிரதிநிதிகளாகப் புத்தகங்கள் அப்பொழுதும் இயங்கும்!
இந்நூல்கள் பரம பவித்திரமானவை. ஷிர்டியிலோ அல்லது மற்ற இடங்களிலோ பக்தர்கள் இப் புராணநூல்களை வாசிக்க வேண்டும் என்பதே பாபாவினுடைய விருப்பமாக இருந்திருக்க வேண்டும். பத்திரமாக பாதுகாக்கச் சொன்னது அதற்காகவே.
ராமனுடைய சரித்திரமான ராமாயணத்தையோ, கிருஷ்ணனுடைய சரித்திரமான பாகவதத்தையோ வாசிக்கிறோம். அப்பொழுதும் முன்னும் பின்னும் சாயியே கண்ணுக்குத் தெரிகிறார்.
இந்நூல்களின் கதாநாயகர்கள், வேறு உருவம் ஏற்றுக்கொண்ட சாயியே என்று உணர்ந்த நிலையில், கதையை பிரவசனம் செய்பவரும் காதுகொடுத்துக் கேட்பவர்களும் சாயியின் உருவத்தையே கண்முன் காண்கிறார்கள்.
புத்தகங்கள் குருவுக்கு அர்ப்பணம் செய்யப்படுகின்றன; அல்லது பிராமணர்களுக்கு தானமாக அளிக்கப்படுக்கின்றன. இச் செய்கை, கொடுத்தவர்களுக்கு மங்களைத்தை விளைவிக்கின்றது என்பது சாஸ்த்திர பிரமாணம்.
"இப் புத்தகங்களை நீ வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய், உன்னுடைய தொகுப்பில் சேர்த்து சம்ரட்சணம் செய்" என்று சாமாவுக்கு பாபா இட்ட ஆக்கினையின்பின், ஒரு மிகவும் முக்கியமான நோக்கம் இருந்தது.
சாமாவின் பக்தி எவ்வாறு ஒப்பில்லாததோ, அவ்வாறே பாபாவுக்கு சாமாவின் மீது இருந்த பிரேமை கரைகடந்தது. ஆகவே, அவரை ஓர் ஆன்மீக நியமத்துக்கு உட்படுத்தவேண்டுமென்ற விருப்பம் சாயியின் மனதில் எழுந்தது.
இதனால் பாபா என்ன செய்தாரென்று பாருங்கள்! சாமாவுக்கு இச்சையே இல்லாத போதிலும், அவருக்குச் சிறந்ததொரு அனுக்கிரத்தை செய்தார். சந்தர்ப்பச் சூழ்நிலையைப் பற்றிக் கேளுங்கள்!
ஒருநாள் மசூதிக்கு ராமதாசி புவா ஒருவர் வந்துசேர்ந்தார். ராமாயண பாராயணம் செய்வது அவருடைய நித்திய நியமம். (தினப்படி வழிபாட்டு ஒழுக்கம்).
விடியற்காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்தபின் ஸ்நானம் செய்துவிட்டு, விபூதி தாரணம் செய்துகொண்டு காவியாடை தரித்து அனுஷ்டானத்துக்கு அமர்ந்துவிடுவார்.
பரிபூரணமான சிரத்தையுடன் அத்யாத்ம ராமாயணத்தை நெடுநேரம் வாசித்த பிறகு விஷ்ணு சஹஸ்ர நாமாவளியை பாராயணம் செய்வார்.
இவ்வாறு பலநாள்கள் நித்திய அனுஷ்டானம் நடந்து வந்தது. மாதவராவுக்கு நல்ல காலம் பிறந்தது; சமர்த்த சாயியின் மனதில் அவருக்கு அருள் செய்யவேண்டுமென்ற எண்ணம் உதித்தது. அதுபற்றிய விவரம் கேளுங்கள்.
மாதவராவின் சேவைக்குப் பலன் பழுக்கும் நேரம் வந்துவிட்டது. 'மாதவராவ் சமயாசார (மத ஒழுக்க) நியமம் ஒன்றைக் கடைப்பிடித்து பக்திமார்க்கத்தின் பிரசாதத்தை பெறவேண்டும். இவ்வழியாக உலகியல் வாழ்வின் தொல்லைகளில் இருந்து விடுபட்டு, சாந்தியடைய வேண்டும்.'-
அந்தக் காலத்தில்தான் இப்புத்தகங்கள் உபயோகத்திற்கு வரும். நாம் அப்பொழுது மேலுலகத்தில் இருப்போம். ஆயினும், சாமா தம்முடைய புத்தக சம்மேளனத்தில் இருந்து (குவிப்பதிலிருந்து) எடுத்துக் கொடுப்பார். இயற்றிய ஆசிரியர்களின் பிரதிநிதிகளாகப் புத்தகங்கள் அப்பொழுதும் இயங்கும்!
இந்நூல்கள் பரம பவித்திரமானவை. ஷிர்டியிலோ அல்லது மற்ற இடங்களிலோ பக்தர்கள் இப் புராணநூல்களை வாசிக்க வேண்டும் என்பதே பாபாவினுடைய விருப்பமாக இருந்திருக்க வேண்டும். பத்திரமாக பாதுகாக்கச் சொன்னது அதற்காகவே.
ராமனுடைய சரித்திரமான ராமாயணத்தையோ, கிருஷ்ணனுடைய சரித்திரமான பாகவதத்தையோ வாசிக்கிறோம். அப்பொழுதும் முன்னும் பின்னும் சாயியே கண்ணுக்குத் தெரிகிறார்.
இந்நூல்களின் கதாநாயகர்கள், வேறு உருவம் ஏற்றுக்கொண்ட சாயியே என்று உணர்ந்த நிலையில், கதையை பிரவசனம் செய்பவரும் காதுகொடுத்துக் கேட்பவர்களும் சாயியின் உருவத்தையே கண்முன் காண்கிறார்கள்.
புத்தகங்கள் குருவுக்கு அர்ப்பணம் செய்யப்படுகின்றன; அல்லது பிராமணர்களுக்கு தானமாக அளிக்கப்படுக்கின்றன. இச் செய்கை, கொடுத்தவர்களுக்கு மங்களைத்தை விளைவிக்கின்றது என்பது சாஸ்த்திர பிரமாணம்.
"இப் புத்தகங்களை நீ வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய், உன்னுடைய தொகுப்பில் சேர்த்து சம்ரட்சணம் செய்" என்று சாமாவுக்கு பாபா இட்ட ஆக்கினையின்பின், ஒரு மிகவும் முக்கியமான நோக்கம் இருந்தது.
சாமாவின் பக்தி எவ்வாறு ஒப்பில்லாததோ, அவ்வாறே பாபாவுக்கு சாமாவின் மீது இருந்த பிரேமை கரைகடந்தது. ஆகவே, அவரை ஓர் ஆன்மீக நியமத்துக்கு உட்படுத்தவேண்டுமென்ற விருப்பம் சாயியின் மனதில் எழுந்தது.
இதனால் பாபா என்ன செய்தாரென்று பாருங்கள்! சாமாவுக்கு இச்சையே இல்லாத போதிலும், அவருக்குச் சிறந்ததொரு அனுக்கிரத்தை செய்தார். சந்தர்ப்பச் சூழ்நிலையைப் பற்றிக் கேளுங்கள்!
ஒருநாள் மசூதிக்கு ராமதாசி புவா ஒருவர் வந்துசேர்ந்தார். ராமாயண பாராயணம் செய்வது அவருடைய நித்திய நியமம். (தினப்படி வழிபாட்டு ஒழுக்கம்).
விடியற்காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்தபின் ஸ்நானம் செய்துவிட்டு, விபூதி தாரணம் செய்துகொண்டு காவியாடை தரித்து அனுஷ்டானத்துக்கு அமர்ந்துவிடுவார்.
பரிபூரணமான சிரத்தையுடன் அத்யாத்ம ராமாயணத்தை நெடுநேரம் வாசித்த பிறகு விஷ்ணு சஹஸ்ர நாமாவளியை பாராயணம் செய்வார்.
இவ்வாறு பலநாள்கள் நித்திய அனுஷ்டானம் நடந்து வந்தது. மாதவராவுக்கு நல்ல காலம் பிறந்தது; சமர்த்த சாயியின் மனதில் அவருக்கு அருள் செய்யவேண்டுமென்ற எண்ணம் உதித்தது. அதுபற்றிய விவரம் கேளுங்கள்.
மாதவராவின் சேவைக்குப் பலன் பழுக்கும் நேரம் வந்துவிட்டது. 'மாதவராவ் சமயாசார (மத ஒழுக்க) நியமம் ஒன்றைக் கடைப்பிடித்து பக்திமார்க்கத்தின் பிரசாதத்தை பெறவேண்டும். இவ்வழியாக உலகியல் வாழ்வின் தொல்லைகளில் இருந்து விடுபட்டு, சாந்தியடைய வேண்டும்.'-