valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 15 November 2018

ஷீர்டி சாயி சரிதம்

நம் முன்னோர்கள் செய்த புண்ணியங்களின் கூட்டுவலிமையே சாயியின் கிருபை என்னும் பலனை விளைவிக்கிறது. நம்மைத் தூயவர்களாக்கி இவ்வுலக வாழ்வின் தொந்தரவுகளில் இருந்தும் துன்பங்களிலிருந்தும் மயக்கங்களிலிருந்தும் விடுவிக்கும் மஹிமை பெற்றது விஷ்ணு சஹஸ்ர நாமாவளி தோத்திரம்.

மற்ற மதச் சடங்குகளுக்கு எத்தனையோ விதிகளை அனுசரிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், நாமஜெபத்தையோ எந்நேரமும் இடைவிடாது செய்யலாம். நாமஜபத்திற்குத் தடங்கல் என்பதே கிடையாது. வேதம் ஓதக்கூடாத நாள்களிலும் நேரங்களிலும் கூட, நாம ஜபம் செய்யலாம். அதைவிட எளிமையானதும் சுலபமானதுமான வழிபாட்டுமுறை வேறேதுமிவுமில்லை.

மராட்டி ஞானி ஏகநாதருங்கூட இதே ரீதியில் தம் அண்டைவீட்டுக்காரர் ஒருவரின் மீது விஷ்ணு சஹஸ்ர நாமாவலையைத் திணித்து அவருடைய வாழ்க்கையை ஆன்மீகப் பாதைக்குத் திருப்பினார்.

ஏகநாதரின் இல்லத்தில் தினமும் விஷ்ணு சஹஸ்ர நாமாவளி பாராயணமும் புராணங்கள் வாசிப்பதும் பஜனையும் நடந்துகொண்டிருந்தன. ஆயினும், பக்கத்து வீட்டுப் பிராமணர், நீராடுதல் சந்தியாவந்தனம் போன்ற நித்திய விதிகளை கூடத் துறந்துவிட்டு மனம் போனபடி துராசாரத்தில் மூழ்கி வாழ்ந்துவந்தார்.

புராணப் பிரவசனத்தை ஒருபோதும் செவிமடுத்தாரில்லை. மேலும் சொல்லப்போனால், அக் கெட்ட மனிதர் ஏகநாதர் வீட்டினுள் என்றுமே நுழைந்தாரில்லை. ஆயினும் ஏகநாதர் கருணைகூர்ந்து அவரைத் தம்மிடம் வரவழைத்தார்.

உயர்குல பிராமணராகப் பிறந்திருந்தபோதிலும் அவர் தடம் புரண்டு வாழ்ந்துவந்தார். இவ்வுண்மை தெரிந்த ஏகநாதர் பரிதாபப்பட்டு, அவரைச் சீர்திருத்திச் செம்மையாக்குவது எப்படி என்று யோசித்தார்.

அவர் 'வேண்டா' என்று சொன்னபோதிலும், தாம் விஷ்ணு சஹஸ்ர நாமாவளியை ஒவ்வொரு சுலோகமாக உரக்கச் சொல்லி, அவரைத் திருப்பி ஒப்பிக்க வைத்தார். ஒவ்வொரு சுலோகமாகப் பாடம் ஏற ஏற படிப்படியாக அவர் உத்தாரணம் (தீங்கிலிருந்து மீளுதல்) அடைந்தார்.

விஷ்ணு சஹஸ்ர நாமாவளியை படிப்பதோ பாராயணம் செய்வதோ நம் மனத்தைத் தூய்மை செய்துகொள்வதற்கு சுலபமான நேர்வழிப் பாதை ஆகும். இவ்வழிபாட்டுமுறை நமக்குப் பரம்பரை சொத்தாக கிடைத்திருக்கிறது. பாபா மேற்கொண்ட பெருமுயற்சி இக் காரணம்பற்றியே.

இதற்கிடையே ராமதாசை சோனாமுகி மருந்துடன் விரைவாகத் திரும்பி வந்தார். சண்டை மூட்டிவிடுவதில் நாரதரைப் போல் மகிழ்ச்சி கண்ட அண்ணா பாபரே தயாராக காத்திருந்து, நடந்தது அனைத்தையும் ராமதாசியிடம் விவரமாகத் தெரிவித்தார்.

ஏற்கெனவே ராமதாசி ஒரு முரட்டு மனிதர். போதாக்குறைக்கு அண்ணா பாபரேவின் நாரதர் வேலையும் சேர்ந்துகொண்டது. இந்த அபூர்வமான சூழ்நிலையின் உண்மை நிலையை எவரால் விவரிக்க முடியும்?