valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 28 March 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பெற்ற சொற்களை அனைவரும் அறிவர். உலகவழக்கைக் காக்கும் ரீதியில் இறையடியார்கள் இந்த நியதின்படி நடந்துகாட்டினர்.

பாபாவின் முடிவு நெருங்கியது; இன்னும் நாள்களே இருந்தன. ஆகவே, பாபா வஜே அவர்களை ராமவிஜயம் (ராமாயணம்) படிக்கச் சொல்லி நியமித்தார்.

வஜே மசூதியில் அமர்ந்தார். போதி பாயராயணம் ஆரம்பித்தது. பாபாவும் செவிமடுக்க ஆரம்பித்தார். எட்டு நாள்கள் கழிந்தன.

பிறகு பாபா ஆணையிட்டார், "போதி பாராயணம் தடையின்றித் தெளிவாக நடக்கட்டும்." வஜே மேலும் மூன்று நாள்கள் இரவுபகலாக வாசித்துக்கொண்டேயிருந்தார்.

மொத்தம் பதினொன்று நாள்கள் உட்கார்ந்து வாசித்தார். பின்னர் வலுவிழந்து சோர்ந்துபோனார். வாசித்துக்கொண்டிருத்தபோதே குரல் மங்கியது. இவ்வாறு மூன்று நாள்கள் கழிந்தன.

பிறகு பாபா என்ன செய்தாரென்றால், போதி வாசிப்பை சமாப்தம் (முடிவு)  செய்துவிட்டு, வஜேயை அப் பணியிலிருந்து விடுவித்தார். தாம் அமைதியாகவும் சாந்தமாகவும் இருந்துகொண்டார்.

'வஜேயை விடுவித்து அனுப்பியதற்கு காரணம் என்னவென்று சொல்லுங்கள்" என்று கதைகேட்பவர்கள் கேட்கலாம். என் மதிக்கு எட்டிய அளவுக்குச் சிறப்பாகச் சொல்கிறேன். கவனத்துடன் கேளுங்கள்.

ஞானிகளும் சாதுக்களும் சான்றோர்களும் தேகத்தை உதிர்க்கும் காலம் வரும்போது போதிபுராணத்தைப் படிக்கச் சொல்லிக் கவனத்துடன் கேட்பார்கள்.

ராஜா பரீக்ஷீத்திற்கு சுக மகரிஷி ஏழு நாள்கள் பாகவதம் (ஸ்ரீகிருஷ்ணரின் கதை) வாசித்தார். அதைக் கேட்டுத் திருப்தியடைந்த ராஜா தேகத்திலிருந்து விடுதலை பெற்றார்.

பகவானுடைய லீலைகளைக் கேட்டுக்கொண்டும், பகவானுடைய உருவத்தைக் கண்களால் பார்த்துக்கொண்டும் உயிர் நீப்பவர் நிச்சயமாக நற்கதியடைகிறார்.

இதுவே, உலகியல் வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களின் நிலைமை, ஞானிகளோ நிரந்தரமாக இக் கோட்டபாட்டின்படி நடந்துகாட்டினர். உலக மக்களுக்கு வழிகாட்டும் பாதையிலிருந்து ஞானிகள் என்றும் விலகுவதில்லை. சிந்தித்துப் பார்த்தால், ஞானிகளின் அவதார நோக்கமே மக்களுக்கு வழிகாட்டுவதுதான்!

உடலை உதிர்க்கும்போது துக்கமோ சோகமோ படாதிருத்தல், பௌதிக உடலின்மேல் ஆசைகொள்ளாதவர்களின் சுபாவம் அன்றோ!

கதைகேட்பவர்களுக்கு இங்கு ஒரு சந்தேகம் எழலாம். பிரம்மானந்த சுகத்தில் திளைத்துக்கொண்டிருப்பவர்கள் மாயையாலும் மோஹத்தாலும் பாதிக்கப்படுகின்றனர் என்று சொல்லுவது பொருத்தமாகுமா?