valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 5 April 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

தரிசனம் செய்ய வரும் கூட்டத்தைக் கண்டு, தாம் அங்கு வந்தால் தங்குவதற்காகச் சொந்தமாகவே ஒரு வாடா கட்டிவிடலாம் என்று முடிவெடுத்தார்.

கிராமத் தலைவர்களை சந்தித்து பாபா முதன்முதலில் தோன்றிய இடத்தை விலைக்கு வாங்கினார். அந்த இடத்தில வாடா கட்டுவதென்று முடிவு செய்யப்பட்டது.

இந்தப் புனிதமான இடத்தின் முக்கியவத்துவம் நான்காவது அத்தியாயத்தில் ஏற்கெனவே விவரிக்கப்பட்டு விட்டது. இங்கு மறுபடியும் விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. விட்ட இடத்திலிருந்து கதையை மேலும் தொடர்வோம்.

ஆக, மேகா, ராவ் பகதூர் சாடேவைச் சந்திக்க நேர்ந்தது அவருடைய பூர்வபுண்ணிய பலத்தாலயே. ஏனெனில், சாடேதான் பெருமுயற்சி செய்து மேகாவுக்கு ஆன்மீகப் பாதையில் வழிகாட்டினார்.

சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட மேகா, பிராமணர்களுக்குரிய வழிபாடுகளையும் சடங்குகளையும் உதாசீனம் செய்துவிட்டார். ஆயினும், சாடே காயத்ரி மந்திரத்தை உபதேசம் செய்து அவரை சன்மார்க்கத்தில் பிரவேசம் செய்யவைத்தார்.

மேகா சாடேவிடம் பணி செய்ய ஆரம்பித்தபின், பரஸ்பர மரியாதையை வளர்ந்தது. இவ்விதமாக மேகா சாடேவை தம் குருவாகக் கருதி அவரிடம் பாசம் கொண்டார்.

ஒருநாள் சகஜமாக பேசிக்கொண்டிருந்தபோது, சாடே தம் குருவின் மஹாத்மியத்தை எடுத்துரைத்தார். சித்தத்தில் பிரேமை பொங்கிவழிய அப்பொழுது மேகாவிடம் சொன்னார், -

"பாபாவுக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்யவேண்டுமென்று என் இதயத்தின் ஆழத்தில் விரும்புகிறேன். உம்மை ஷிர்டிக்கு அனுப்புவதன் முக்கிய காரணம் இதுவே என்றறிந்து கொள்ளும். -

"மேலும், வேறெதிலும் நாட்டமின்றி நீர் எனக்குச் செய்யும் சேவையைப் பார்க்கும்போது, நீர் சத் குருவிடம் போய்ச்சேரவேண்டும் என்றும் அவரிடம் பரிபூரணமான நம்பிக்கையும் பக்தியையும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன்.-

"நீர் பிறவி எடுத்தது அர்த்தமுள்ளதாக ஆகும். இந்த ஜென்மத்தில் பரம மங்களங்களை அடைவீர். போங்கள், போங்கள், போய் சத்குருவின் பாதங்களை மனதாலும் வாக்காலும் காயத்தாலும் (உடலாலும்) வழிபடுங்கள்."

மேகா சாயியின் ஜாதி என்னவென்று கேட்டார். உண்மையில் அது சாடேவுக்குத் தெரியாது. சாடே சொன்னார், "அவர் மசூதியில் வசிப்பதால் அவரைச் சிலர் 'அவிந்த' (காது குத்தப்படாதவர்  - முஸ்லீம்) என்று சொல்கிறார்கள்.

'அவிந்த' என்னும் வார்த்தை காதில் விழுந்தவுடனே மேகா மனமுடைந்துபோனார். 'ஒரு முஸ்லீமைவிட, நீசமான பிராணி இவ்வுலகில் ஏதும் உண்டோ? நீசன் எப்படி ஒரு குரு ஆகமுடியும்?