valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 1 February 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"லட்சுமி, எனக்குப் பசி எடுக்கிறது." "பாபா, நான் இப்போதே பொய் உங்களுக்குச் சில சோளரொட்டிகள் கொண்டுவருகிறேன்."

என்று சொல்லிக்கொண்டே லக்ஷ்மி தம் இல்லத்திற்குச் சென்றார். சோளரொட்டி காய்கறி பதார்த்தம், சட்டினி இவற்றைச் சுடச்சுடச் செய்து எடுத்துக்கொண்டு தாமதம் இன்றித் திரும்பி வந்தார். அந்தச் சிற்றுண்டியை பாபாவின் எதிரில் வைத்தார்.

பாபா அந்தத் தட்டை எடுத்து ஒரு நாயின் முன்னே வைத்தார். லக்ஷ்மீ பாயி உடனே கேட்டார், "பாபா, நீங்கள் என்ன இவ்வாறு செய்கிறீர்கள்?"-

"நான் ஓடோடிச் சென்று என்னுடைய கைகளாலேயே  சீக்கிரமாக ரொட்டி செய்துகொண்டு வந்தேன். அதற்குப் பலன் இதுதானா? உணமையான மகிழ்ச்சியை நாய்க்கன்றோ கொடுத்துவிட்டீர்கள்!-

"நீங்கள் பசியாக இருந்தீர்கள்; அந்தப் பசியைத் தணிப்பதற்கு இதுதான் வழியா? ஒரு துண்டுகூட நீங்கள் வாயில் இடவில்லை; நான் இங்கே தவித்துக்கொண்டு நிற்கிறேன்!"

பாபா அப்பொழுது லக்ஷ்மீ பாயீயிடம் கூறினார், "நீ ஏன் வீணாகி வருத்தப்படுகிறாய்? நாயின் வயிறு நிறைந்தால், நான் திருப்தியடைகிறேன் என்று அறிவாயாக.-

"இந்த நாய்க்கு உயிர் இல்லையா? எல்லாப் பிராணிகளுக்கும் பசி என்பது ஒன்றுதான். அது ஊமை; நான் பேசுகிறேன். எனினும், பசியில் எதாவது பேதம் உண்ட என்ன?-

"பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாக! இது எங்கும், என்றும், பிரமாணம் என்றும் அறியவாயாக."

இது அன்றாடம் நடக்கும் சாதாரண நிகழ்ச்சி; ஆயினும் போதனையோ ஆன்மீக பாஷை. சாயியின் உபதேசபரமான திருவாய்மொழி இவ்வாறே; பிரேமையெனும் ரசத்தால் பரிபக்குவம் செய்யப்பட்டது.

மக்கள் அன்றாடம் பேசும் எளிய மொழியில் பேசியே ஆன்மீகத் தத்துவங்களை உபதேசித்தார் பாபா. யாருடைய தோஷத்தையும் (குறையையும்) ரகசியத்தையும் சுட்டிக்காட்டாது. ஆன்மீக போதனை அளித்து சிஷ்யர்களை மகிழ்வித்தார்.

பாபாவின் இந்த உபதேசத்திலிருந்து லக்ஷ்மி பாயியின் தினப்படிச் சோளரொட்டி சேவை ஆரம்பித்தது. தினமும் பகல் வேளையில் சோளரொட்டி சையது அதை உடைத்துப் பாலில் ஊறவைத்து பிரேமையுடன் பாபாவுக்கு சமர்ப்பணம் செய்தார்.

பாபாவும், பிரேமையுடனும் பக்தியுடனும் அளிக்கப்பட்ட அந்தச் சோளரொட்டியைத் தினமும் சாப்பிட ஆரம்பித்தார். சில சமயங்களில் அது நேரத்துடன் வந்து சேராவிட்டால், பாபா சாப்பிடுவதற்கு எழுந்திருக்கமாட்டார்.

லக்ஷ்மீயின் சோளரொட்டி நேரம் தவறினால், தட்டுகளில் உணவு பரிமாறப்பட்டிருந்தாலும், சாப்பிடும் வேளை கடந்து விட்டிருந்தாலும், பாபா ஒரு கவளம் உணவையும் வாயில் இடமாட்டார்.