ஷீர்டி சாயி சத்சரிதம்
கோபம் எவரைத் தொட்டதில்லையோ, எவரிடத்தில் துவேஷம் புக முடியாதோ, எவர் வயிறு நிரப்புவதைப்பற்றி கவலைப்படுவதில்லையோ அவரையே உண்மையான சாது என்றறிக.
'எல்லாரிடத்தும் சுயநலமில்லாத அன்பு' என்பதே ஒரு சாதுவின் உன்னதமான வாழ்க்கை லட்சியம். தரும விஷயங்களை தவிர வேறெதிலும் அவர் தம்முடைய வார்த்தைகளை வீண் செய்வதில்லை.
சாராம்சமான ரகசியம் இங்கென்னவென்றால், என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டு தம்முடைய சரித்திரத்தைத் தாமே எழுதிக்கொள்வதன் மூலம், பக்தர்கள் தம்மை ஞாபகப்படுத்திக்கொண்டு அந்நினைவினிலேயே மூழ்க வேண்டுமென்று சாயி விரும்புகிறார்.
அதனால்தான் பக்தர்கள் சாயி சரித்திரத்தை சிரத்தையுடனும் பக்தியுடனும் கேட்கவேண்டும் என்று ஹேமாட், கதை கேட்பவர்களை அடிக்கடி வேண்டுகிறேன்.
கேட்பவர்களின் மனத்தில்சாந்தி நிலவும். விசனத்தில் மூழ்கியவர்கள் விசனத்தில் இருந்து விடுபடுவார்கள். சாயி பாதங்களில் பக்தி வளர்த்துப் பிறவிப் பிணியிலிருந்து விடுதலை பெறுவார்கள்.
மானஸரோவருக்கு யாத்திரையாக கிளம்பி, போகும் வழியில் சாயி பாதங்களில் முக்தியடைந்த சந்நியாசி விஜயானந்தரின் கதை அடுத்த அத்தியாயத்தில் மலரும்.
பக்தர் பாலாராம் மாங்கரும் பாபாவின் முன்னிலையிலேயே முக்தி பெற்றார். அம்மாதிரியாகவே, நூல்கர், மேகா ஆகியவர்களுடைய வேண்டுதலையும் சாயிநாதர் பூர்த்தி செய்துவைத்தார்.
குரூரமான பிராணியான ஒரு புலிக்கும் பாபாவின் பாதங்களில் அடைக்கலம் அளிக்கப்பட்டது. இவ்வாறாக, சாயியின் செயல்கள் ஆழங்கான முடியாதவை, கேட்பது திருவிழாவைப்போன்று மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் உரிய அரிய நல்வாய்ப்பு.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'நேர்த்திக்கடனும் மற்ற கதைகளும்' என்னும் முப்பதாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீ சத்குரு சாயிநாதர்க்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
கோபம் எவரைத் தொட்டதில்லையோ, எவரிடத்தில் துவேஷம் புக முடியாதோ, எவர் வயிறு நிரப்புவதைப்பற்றி கவலைப்படுவதில்லையோ அவரையே உண்மையான சாது என்றறிக.
'எல்லாரிடத்தும் சுயநலமில்லாத அன்பு' என்பதே ஒரு சாதுவின் உன்னதமான வாழ்க்கை லட்சியம். தரும விஷயங்களை தவிர வேறெதிலும் அவர் தம்முடைய வார்த்தைகளை வீண் செய்வதில்லை.
சாராம்சமான ரகசியம் இங்கென்னவென்றால், என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டு தம்முடைய சரித்திரத்தைத் தாமே எழுதிக்கொள்வதன் மூலம், பக்தர்கள் தம்மை ஞாபகப்படுத்திக்கொண்டு அந்நினைவினிலேயே மூழ்க வேண்டுமென்று சாயி விரும்புகிறார்.
அதனால்தான் பக்தர்கள் சாயி சரித்திரத்தை சிரத்தையுடனும் பக்தியுடனும் கேட்கவேண்டும் என்று ஹேமாட், கதை கேட்பவர்களை அடிக்கடி வேண்டுகிறேன்.
கேட்பவர்களின் மனத்தில்சாந்தி நிலவும். விசனத்தில் மூழ்கியவர்கள் விசனத்தில் இருந்து விடுபடுவார்கள். சாயி பாதங்களில் பக்தி வளர்த்துப் பிறவிப் பிணியிலிருந்து விடுதலை பெறுவார்கள்.
மானஸரோவருக்கு யாத்திரையாக கிளம்பி, போகும் வழியில் சாயி பாதங்களில் முக்தியடைந்த சந்நியாசி விஜயானந்தரின் கதை அடுத்த அத்தியாயத்தில் மலரும்.
பக்தர் பாலாராம் மாங்கரும் பாபாவின் முன்னிலையிலேயே முக்தி பெற்றார். அம்மாதிரியாகவே, நூல்கர், மேகா ஆகியவர்களுடைய வேண்டுதலையும் சாயிநாதர் பூர்த்தி செய்துவைத்தார்.
குரூரமான பிராணியான ஒரு புலிக்கும் பாபாவின் பாதங்களில் அடைக்கலம் அளிக்கப்பட்டது. இவ்வாறாக, சாயியின் செயல்கள் ஆழங்கான முடியாதவை, கேட்பது திருவிழாவைப்போன்று மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் உரிய அரிய நல்வாய்ப்பு.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'நேர்த்திக்கடனும் மற்ற கதைகளும்' என்னும் முப்பதாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீ சத்குரு சாயிநாதர்க்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.