ஷீர்டி சாயி சத்சரிதம்
செய்யலாம், செய்யலாம் என்று சொல்லி இழுத்தடிக்கப்பட்டு, அந்த நேர்த்திக்கடனும் நிறைவேற்றப்படாமல் இருந்தது. உடலை உதிர்க்கும் சமயத்தில் தாயாருக்கு அதுவும் ஞாபகம் வந்தது.
தாயார் அதுபற்றியும் மாதவராவுக்கு ஞாபகப்படுத்தி, 'நேர்த்திக் கடனை நிறைவேற்றுவேன்' என்று சத்தியம் வாங்கிக்கொண்டு நிம்மதியான மனத்துடன் இவ்வுலக பந்தங்களில் இருந்து விடுபட்டு, ஹரியின் பாதங்களைச் சென்றடைந்தார்.
மறுபடியும், 'போவோம், போவோம்' என்று சில்லியே தாமதம் ஏற்பட்டது. நாள்கள், மாதங்கள், வருடங்கள் உருண்டன. மாதவ்ராவ் அனைத்தையும் மறந்து போனார். நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படாமலேயே இருந்தது.
30 ஆண்டுகள் இவ்வாறு கடந்தபின், ஒருநாள், ஊர் ஊராகச் சென்று கொண்டிருந்த ஒரு ஜோதிடர் ஷிர்டிக்கு வந்துசேர்ந்தார்.
ஜோதிட சாஸ்திரத்தில் வானளாவிய ஞானம் படைத்திருந்த அவர், நடந்தது, நடக்கப்போவது, நடந்துகொண்டிருப்பது அனைத்தையும் சொல்லக்கூடிய சக்தி பெற்றிருந்தார். பலபேர்களுக்கு வரும் பொருள் உரைத்துத் திருப்திசெய்து பெரும் புகழ் சேர்த்திருந்தார்.
ஸ்ரீமான் புட்டிக்கும் அவரைச் சார்ந்த மற்றவர்களுக்கும் ஜோதிடம் சொல்லி எல்லாரையும் திருப்தியும் மகிழ்ச்சியும் அடையச் செய்து மதிப்பு பெற்றிருந்தார்.
மாதவராவின் தம்பி பாபாஜியும் அவரை வருங்காலத்தை பற்றிக் கேட்டார். தேவி அவரிடம் மனவருத்தம் கொண்டிருக்கிறாள் என்று ஜோதிடர் சொன்னார்.
ஜோதிடர் கூறினார், "உமது தாயார் மரணத் தருவாயில் உமக்கு அண்ணனைத் தம்முடைய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிவைக்க சொன்னார்.-
"ஆனால், இன்றுவரை அவை நிறைவேற்றப்படவில்லை. ஆகையால், தேவி உங்களுக்குத் துன்பம் கொடுக்கிறாள்." மாதவராவ் வீட்டுக்கு வந்தபோது பாபாஜி முழுக்கதையையும் அவரிடம் சொன்னார்.
மாதவராவுக்கு இக் குறிப்பு உடனே விளங்கிவிட்டது. பொற்கொல்லரை அழைத்துவந்து வெள்ளியில் இரண்டு முலைகள் செய்யச் சொன்னார். வேலை முடிந்ததும் அவற்றை மசூதிக்கு எடுத்துக்கொண்டு போனார்.
பாபாவுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, இரண்டு வெள்ளிமுலைகளையும் அவரெதிரில் வைத்து, "என்னுடைய நேர்த்திக்கடனை எடுத்துக்கொண்டு என்னை விடுதலை செய்யுங்கள்" என்று வேண்டினார்.-
"நீரே எனது சப்தசிருங்கி; நீரே எமது தேவி. தாயார் வாக்கு கொடுத்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு சமாதானமடையுங்கள்".
பாபா பதில் கூறினார், நீ சப்தசிருங்கி கோயிலுக்கே சென்று, தேவைக்காக அழகாக வடிக்கப்பட்டுள்ள இந்த முலைகளை உன் கைகளாலேயே சமர்ப்பணம் செய்".
பாபாவின் வற்புறுத்தல் இவ்வாறு இருந்ததால், மாதவராவின் மனச்சாயலும் அவ்வாறே மாறி, கோயிலுக்கு போவதென்று முடிவு செய்துகொண்டு வீட்டுக்கு திரும்பினார்.
செய்யலாம், செய்யலாம் என்று சொல்லி இழுத்தடிக்கப்பட்டு, அந்த நேர்த்திக்கடனும் நிறைவேற்றப்படாமல் இருந்தது. உடலை உதிர்க்கும் சமயத்தில் தாயாருக்கு அதுவும் ஞாபகம் வந்தது.
தாயார் அதுபற்றியும் மாதவராவுக்கு ஞாபகப்படுத்தி, 'நேர்த்திக் கடனை நிறைவேற்றுவேன்' என்று சத்தியம் வாங்கிக்கொண்டு நிம்மதியான மனத்துடன் இவ்வுலக பந்தங்களில் இருந்து விடுபட்டு, ஹரியின் பாதங்களைச் சென்றடைந்தார்.
மறுபடியும், 'போவோம், போவோம்' என்று சில்லியே தாமதம் ஏற்பட்டது. நாள்கள், மாதங்கள், வருடங்கள் உருண்டன. மாதவ்ராவ் அனைத்தையும் மறந்து போனார். நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படாமலேயே இருந்தது.
30 ஆண்டுகள் இவ்வாறு கடந்தபின், ஒருநாள், ஊர் ஊராகச் சென்று கொண்டிருந்த ஒரு ஜோதிடர் ஷிர்டிக்கு வந்துசேர்ந்தார்.
ஜோதிட சாஸ்திரத்தில் வானளாவிய ஞானம் படைத்திருந்த அவர், நடந்தது, நடக்கப்போவது, நடந்துகொண்டிருப்பது அனைத்தையும் சொல்லக்கூடிய சக்தி பெற்றிருந்தார். பலபேர்களுக்கு வரும் பொருள் உரைத்துத் திருப்திசெய்து பெரும் புகழ் சேர்த்திருந்தார்.
ஸ்ரீமான் புட்டிக்கும் அவரைச் சார்ந்த மற்றவர்களுக்கும் ஜோதிடம் சொல்லி எல்லாரையும் திருப்தியும் மகிழ்ச்சியும் அடையச் செய்து மதிப்பு பெற்றிருந்தார்.
மாதவராவின் தம்பி பாபாஜியும் அவரை வருங்காலத்தை பற்றிக் கேட்டார். தேவி அவரிடம் மனவருத்தம் கொண்டிருக்கிறாள் என்று ஜோதிடர் சொன்னார்.
ஜோதிடர் கூறினார், "உமது தாயார் மரணத் தருவாயில் உமக்கு அண்ணனைத் தம்முடைய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிவைக்க சொன்னார்.-
"ஆனால், இன்றுவரை அவை நிறைவேற்றப்படவில்லை. ஆகையால், தேவி உங்களுக்குத் துன்பம் கொடுக்கிறாள்." மாதவராவ் வீட்டுக்கு வந்தபோது பாபாஜி முழுக்கதையையும் அவரிடம் சொன்னார்.
மாதவராவுக்கு இக் குறிப்பு உடனே விளங்கிவிட்டது. பொற்கொல்லரை அழைத்துவந்து வெள்ளியில் இரண்டு முலைகள் செய்யச் சொன்னார். வேலை முடிந்ததும் அவற்றை மசூதிக்கு எடுத்துக்கொண்டு போனார்.
பாபாவுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, இரண்டு வெள்ளிமுலைகளையும் அவரெதிரில் வைத்து, "என்னுடைய நேர்த்திக்கடனை எடுத்துக்கொண்டு என்னை விடுதலை செய்யுங்கள்" என்று வேண்டினார்.-
"நீரே எனது சப்தசிருங்கி; நீரே எமது தேவி. தாயார் வாக்கு கொடுத்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு சமாதானமடையுங்கள்".
பாபா பதில் கூறினார், நீ சப்தசிருங்கி கோயிலுக்கே சென்று, தேவைக்காக அழகாக வடிக்கப்பட்டுள்ள இந்த முலைகளை உன் கைகளாலேயே சமர்ப்பணம் செய்".
பாபாவின் வற்புறுத்தல் இவ்வாறு இருந்ததால், மாதவராவின் மனச்சாயலும் அவ்வாறே மாறி, கோயிலுக்கு போவதென்று முடிவு செய்துகொண்டு வீட்டுக்கு திரும்பினார்.