valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 29 December 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


உள்ளே, சுவரிலிருந்த மாடத்தில் சாய்ந்துகொண்டு பாபா உட்கார்ந்திருப்பார். சாப்பிடுபவர்கள் அவருக்கு இரண்டு பக்கங்களிலும் கண்கவர் பந்தியாக உட்கார்ந்திருப்பர். சகலரும் ஆனந்தத்தின் உச்சியில் இருப்பார்கள்.

எல்லாரும் தம் தம் நைவேத்தியத்தை சமர்த்த சாயியின் முன்பு நகர்த்துவர், சாயியும் ஒரு பெரிய தட்டில் எல்லாப் பிரசாதங்களையும் தம்முடைய கைகளாலேயே ஒன்றாகக் கலப்பார்.

பாபாவின் கையிலிருந்து ஒரு பருக்கை சோறு பெறுவது மகா பாக்கியம். உண்பவரின் உள்ளும் புறமும் புனிதமாகும்; வாழ்க்கை பயனுள்ளதாக ஆகும்.

வடை, அப்பம், பூரி, சான்ஜோரி - சில சமயங்களில் சிகரண், கர்கா, பேணி, பலவித பாயசங்கள் - பாபா இவையனைத்தையும் ஒன்றாக கலந்துவிடுவார்.

இந்தக் கூட்டுக்கலவையை பாபா இறைவனுக்கு அர்ப்பணம் செய்வார். பின்னர், சாமாவையும் நிமோன்கரையும் தட்டுத் தட்டாக நிரப்பிப் பரிமாறச் சொல்வார்.

பக்தர்களை ஒவ்வொருவராக கூப்பிட்டுத் தம்மருகில் உட்காரவைத்து பரமானந்தத்துடனும் பிரீதியுடனும் தொண்டைவரை நிரம்புமாறு போஜனம் செய்விப்பார்.

சப்பாத்திகளையும் பருப்பு சூப்பையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து, நெய் கலந்து சுவையூட்டி எல்லாருக்கும் தாமே பரிமாறுவார்.

அந்தப் பிரேமையின் கலவையைச் சுவைத்தபோது - ஆஹா! அந்த பிரமானந்தத்தை யாரால் வர்ணிக்க முடியும்! அதை உண்டவர்கள் வயிறு நிரம்பிய பிறகும் விரலை நக்கிக் கொண்டே போவார்கள்!

சில சமயங்களில் மாண்டாவும் பூரணப் போளியும் - சில சமயங்களில் சர்க்கரை ஜீராவில் தோய்த்த பூரி - சில சமயங்களில் பாஸந்தி, ரவாகேசரி, சான்ஜோரி - சில சமயங்களில் வெள்ளம் கலந்து செய்த சப்பாத்தி - இத்தனை வகைகளில், சுவையான உணவை பாபா அளித்தார்.

சில சமயங்களில், வெண்மையான அம்பேமொஹொர் அரிசிச்சாதம், அதன்மேல் பருப்பு சூப்பு, அதற்கும் மேல் சுவை மிகுந்த நெய், சுற்றிலும் பலவிதமான காய்கறிகள் பரிமாறப்படும்.

ஊறுகாய், அப்பளம், ரைத்தா, பலவித பஜ்ஜிகள் - புளித்த தயிர், மோர், பஞ்சாமிருதம் - இவையும் எப்பொழுதாவது இருந்தன. இந்த திவ்வியமான அன்னத்தை உண்டவர் தன்யராவார் (எல்லாப் பேறுகளையும் பெற்றவராவார்).

எங்கே சாயிநாதரே பரிமாறினாரோ அங்கே சாப்படைப் பற்றி என்ன சொல்ல முடியும்! பக்தர்கள் அங்கே வயிறு புடைக்கும்வரை உண்டு திருப்தியுடன் ஏப்பம் விட்டனர்.

ஒவ்வொரு கவளமும் சுவையாகவும் பசியைத் தீர்ப்பதாகவும் திருப்தியளிப்பதாகவும் புஷ்டியளிப்பதாகவும் அமைந்தது. பிரேமையுடன் அளிக்கப்பட்ட புனிதமான இவ்வுணவு மிகச் சுவையாக இருந்தது. 




Thursday 22 December 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

நானா சொன்னார், "குதிரை வண்டி அமர்த்தியபோது நேராக ஷிர்டிக்குச் செல்லவேண்டுமென்றே பேசினோம். ஆனால், அவ்வாறு செய்திருந்தால், கோதாவரி நதிக்கரையில் இருக்கும் தத்தாத்ரேயரை பினீவாலே தரிசனம் செய்திருக்க முடியாது. -

"தத்தாத்ரேய பக்தரான அவர் எங்களுடைய மார்க்கத்திலிருந்த தத்தாத்ரேயர் கோயில் வழியாக வண்டி சென்றபோது, இறங்கி தரிசனம் செய்ய விரும்பினார்". -

"நான் இங்கு வரும் அவசரம் காரணமாக, ஷிர்டியிலிருந்து திரும்பிவரும்போது தரிசனம் செய்துகொள்ளலாம்' என்று சொல்லி அவரைத் தடுத்துவிட்டேன். -

"ஷீர்டி வந்து சேர்வதில் தாமதம் ஏற்படும் என்ற காரணத்தால், பொறுமையிழந்து தத்தர் தரிசனம் செய்துகொள்ளலாம்' என்று சொல்லி அவரைத் தடுத்துவிட்டேன். -

"பின்னர், கோதாவரி நதியில் ஸ்நானம் செய்தபோது ஒரு பெரிய முள் என் பாதத்தில் குத்தி சதைக்குள் ஏறிவிட்டது. வழியில் மிக அவஸ்தைப்பட்டேன். கடைசியில், பிரயத்தனம் செய்து எப்படியோ முள்ளை பிடுங்கிப் போட்டேன்".

பாபா நானாவைக் கண்டித்தார், "உமக்கு இந்த அவசரம் உதவாது. தரிசனம் செய்வதை புறக்கணித்த குற்றத்திற்கு இம்முறை லேசான தண்டனையுடன் தப்பித்துக்கொண்டீர். -

"தொழுகைக்குரிய தேவரான தத்தர், நீர் எவ்விதமான பிரயாசையும் செய்யாமல் தரிசனம் தரக்  காத்துக்கொண்டிருக்கும்போது அவரைப் புறக்கணித்துவிட்டு நீர் இங்கு வந்தால் நான் மகிழ்ச்சியடைவேனா என்ன!"

இப்பொழுது மறுபடியும் ஹண்டியைப் பற்றி பேசுவோம். ஓ, மசூதியில் சாயியுடன் அமர்ந்து உண்ட அந்த மதிய உணவு எத்தனை புனிதமானது ! சாயி, பக்தர்களின்பால் எவ்வளவு பிரேமை செலுத்தினார்!

ஒவ்வொரு நாளும் பாபாவுக்குப் பூஜையும் ஆரத்தியும் முடிந்து பக்தர்கள்  தம் தம் வீடுகளுக்குத் திரும்பும்போது,-

பாபா வெளியே வந்து மசூதியின் கைப்பிடிச்சுவர் முனையில் நிற்பார். பக்தர்கள் அனைவரும் முற்றத்தில் காத்திருப்பர். பிறகு, அவர்கள் ஒவ்வொருவராக பாபாவை வணங்கிவிட்டுச் செல்வர்.

பாதங்களில் வணங்கிவிட்டு எழுந்து எதிரே நின்றபோது பாபா ஒவ்வொருவருக்கும் நெற்றியில் உதீ இடுவார்.

"இப்பொழுது, குழந்தைகள் பெரியோர்கள் எல்லாரும் அவரவர் வீட்டிற்குச் சென்று சாப்பிடுங்கள்". பாபாவின் ஆணையை சிரமேற்கொண்டு அனைவரும் வீடு திரும்புவர்.

பாபா திரும்பியவுடன் படுதா இறக்கப்படும். தட்டுகளும் கரண்டிகளும் கணகணவென்று ஒலிக்கும். பிரசாத விநியோக நிகழ்ச்சி ஆரம்பிக்கும்.

சாயியின் கரம் பட்டுப் புனிதமடைந்த பிரசாதம் சிறிது கிடைக்கும் என்ற ஆசையுடன் சில பக்தர்கள் கீழே முற்றத்தில் காத்திருப்பர். 




Thursday 15 December 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

இக் கூட்டத்தில், பாபாவிடம் மிகுந்த பிராயம் கொண்ட உயர்ந்த பக்தரான சந்தோர்க்கரும் இருந்தார். தரிசனம் செய்ய ஆர்வமுற்று தம் சகலபாடி பினீவாலேயுடன் வந்திருந்தார்.

சாயிநாதர்க்கு நமஸ்காரம் செய்துவிட்டு இருவரும் அவருடைய முன்னிலையில் அமர்ந்தனர். குசலம் விசாரித்துக்கொண்டிருந்தபோது பாபா திடீரென்று கோபமடைந்தார். 

பாபா கேட்டார், "நானா, இதை எப்படி நீர் மறந்து போகலாம்? என்னுடன் இவ்வளவு நாள்கள் பழகி இதைத்தான் கற்றுக்கொண்டீரா?-

என்னுடைய கூட்டுறவில் இவ்வளவு காலம் கழித்த பிறகு இந்த கதியைத்தான் அடைந்தீரா? ஓ, உம்முடைய மனம் எப்படி இவ்வாறு மயங்கலாம்! அனைத்தையும் என்னிடம் விவரமாகச் சொல்லும்."

இதைக் கேட்ட நானா தலையைக் குனிந்துகொண்டார். கோபத்தின் காரணத்தை ஆராய ஆரம்பித்தார். அவரால் எதையும் யூகிக்க முடியவில்லை; மனம் குழம்பினார்.

என்ன தவறு செய்தோம் என்று அவருக்கு விளங்கவில்லை. கோபத்திற்கு காரணமும் தெரியவில்லை. ஆனால், பாபா காரணமின்றி  எவர் மனத்தையும் புண்படுத்தமாட்டார்.  

ஆகவே, அவர் பாபாவின் பாதங்களை பற்றிக்கொண்டு பலவிதமாக கெஞ்சினார். கடைசியாக தம்முடைய அங்கவஸ்திரத்தை பாபாவின் சன்னிதியில் விரித்து, "ஏன் என்மீது இவ்வளவு கோபம் கொள்கிறீர்?" என்று கேட்டார்.

பாபா நானாவைக் கேட்டார், "என்னுடைய சங்கத்தில் வருடக்கணக்காகக்  கழித்த பிறகும் உம்முடைய நடத்தை ஏன் இப்படி இருக்கிறது? உம்முடைய மூளைக்கு என்ன ஆயிற்று?-

"நீர் எப்பொழுது கோபர்காங்வ் வந்தடைந்தீர்? வழியில் என்ன நேர்ந்தது? நீர் வழியில் எங்காவது இறங்கினீரா, அல்லது குதிரைவண்டியில் நேராக இங்கு வந்தீரா?-

"வழியில் வினோதமாக ஏதாவது நடந்ததா? எல்லாவற்றையும் விவரமாக அறிந்துகொள்ள விரும்புகிறேன். சிறியதாக இருப்பினும் பெரியதாக இருப்பினும் எங்கு, என்ன நடந்தது என்பதை எனக்குச் சொல்லும்".

இதைக் கேட்டவுடன் நானாவுக்கு விஷயமென்ன என்பது புரிந்துவிட்டது. அவருடைய முகம் கவிழ்ந்தது. உள்ளூர அவமானமாக இருந்தாலும், நானா விவரமனைத்தும் பாபாவிடம் சொன்னார்.

இங்கே கண்ணாம்பூச்சி ஆட்டம் செல்லாது என்பதை நிச்சயம் செய்துகொண்டார். ஆகவே, அவர் நடந்ததனைத்தையும் பாபாவிடம் விவரமாகச் சொன்னார்.

அசத்தியம் சாயியிடத்தில் செல்லாது என்பதை நிச்சயம் செய்துகொண்டார். ஆகவே, அவர் நடந்ததனைத்தையும் பாபாவிடம் விவரமாகச் சொன்னார்.

குருவை வஞ்சிப்பது மஹா பாதகச் செயல். அதிலிருந்து விடுபடவேமுடியாது. இதை நன்கு அறிந்த நானா, ஆரம்பித்திலிருந்து கடைசிவரை என்ன நடந்ததென்பதை பாபாவிடம் சொன்னார். 




Thursday 1 December 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பக்தர்களின் எண்ணிக்கைப் பெருக பெருக, பாபாவுக்கு ராஜோபசாரங்கள் செய்யப்பட்டன. பல இன்னிசை வாத்தியங்கள் ஒலிக்க, தலைக்குமேல் குடை பிடிக்கப்பட்டது. சாமரம் வீசப்பட்டது.

அவருடைய புகழ் திக்கெட்டும் பரவியது. மக்கள் பாபாவைத் தோத்திரம் செய்யவும் புகழ்பாடவும் ஆரம்பித்தனர். ஷீர்டி, புனிதப் பயணிகளுக்குப் புண்ணிய க்ஷேத்திரம் ஆகியது.

அந்த நிலையில் ஹண்டிக்குத் தேவை இல்லாமல் போய்விட்டது. பக்கீர்களும் ஏழைஎளியவர்களும் வயிறார உண்டு திருப்தியடைந்த பிறகும், உணவு மீந்துபோகும் அளவிற்கு நைவேத்தியம் வந்து குவிந்தது.

இப்பொழுது இன்னுமொரு காதை சொல்கிறேன்; கேட்டால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பக்தர்கள் ஆராதனை செய்யவேண்டிய தெய்வங்களை அனாதரவாக விட்டுவிடும்போது பாபா அகம் குவிந்தார்.

ஜாதியே இல்லாதவருடைய ஜாதியைப் பலர் பலவிதமாக அனுமானம் செய்தனர். சிலர் சாயியே பிராமணர் என்று நினைத்தனர்; சிலர் முஸல்மான் என்று நினைத்தனர்.

அவர் எந்த ஊரில் பிறந்தார்? எந்த ஜாதியில் எப்பொழுது பிறந்தார்? அவருடைய பெற்றோர்கள் பிராமணர்களா முஸ்லீம்களா? இவற்றில் எதுவமே தெரியாமல் கற்பனையில் அனுமானம் செய்தனர்.

அவர் முஸ்லீம் என்ற அனுமானத்தை ஏற்றுக்கொண்டால், அவர் எப்படி மசூதியில் அக்கினி வழிபாட்டை அனுமதித்தார்? துளசி பிருந்தாவனம் இருந்திருக்குமா? மணி அடிப்பதை எப்படி சகித்துக்கொண்டார்?

சங்கு ஊதுவதையும் தாளம், மிருதங்கம் போன்ற இன்னிசை வாத்தியங்களுடன் நடந்த கதாகீர்த்தனத்தையும் ஹரிநாம கோஷத்தையும் மசூதியில் அனுமதித்திருப்பாரா?

அவர் முஸ்லீமாக இருந்திருந்தால், மசூதியில் உட்கார்ந்துகொண்டிருக்கையில் நெற்றியில் சந்தனம் இட அனுமதித்திருப்பாரா? சமபந்தி போஜனம் செய்திருப்பாரா?

அவர் முஸ்லீமாக இருந்திருந்தால், தம்முடைய பாக்கெட்டிலிருந்து பணம் கொடுத்து இந்து ஆலயங்களை புனருத்தாரணம் செய்திருப்பாரா? அவருடைய காதுகள் குத்தப்பட்டிருந்தனவே!

ஸ்னானம் செய்தபிறகு பட்டுப் பீதாம்பரங்களை தமக்கு அணிவிக்க அனுமதித்திருப்பாரா? ஆராதனை செய்யவேண்டிய தெய்வங்களை அனாதரவாக விட்டுவிடுவதை அவரால் ஒருகணமும் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.

நான் இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே இது சம்பந்தமான ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. மிக வினயமாக அதை உங்களுக்கு சொல்கிறேன். அமைதியான சித்தத்துடன் கேளுங்கள்.

ஒரு சமயம் இவ்வாறு நிகழ்ந்தது. பாபா அப்பொழுதுதான் லெண்டியிலிருந்து திரும்பிவந்து மசூதியில் அமர்ந்திருந்தார். பக்தர்களும் தரிசனத்திற்காகக் கூடியிருந்தனர். 




Thursday 24 November 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"பாத்திரத்தின் மூடியைத் திறந்துவிட்டு உள்ளே கையை விட்டு நீரே பாரும்!" என்று சொல்லிக்கொண்டே, தாதாவின் கையைத் தம்முடைய கையால் பிடித்து பாத்திரத்தினுள்ளே பலவந்தமாகச் செருகினார்.

பிறகு பாபா சொன்னார், "இப்பொழுது உமது கையை வெளியே ஏதும். கரண்டியால் எடுத்து ஒரு தட்டில் பரிமாறிக்கொள்ளும். மடி ஆச்சாரத்தைபற்றிக் கவலைப்பட வேண்டா."

ஞானிகள் தம் சிஷ்யர்களை தூரசாரமான செயல்களில் ஈடுபடுத்துவார்கள் என்று கனவிலும் நினைக்க வேண்டா. ஞானிகள் கிருபையால் நிரம்பிவழிபவர்கள். அவர்களுடைய வழிமுறைகள் அவர்களுக்குத்தான் விளங்கும்!

ஒரு தாயும் தம்முடைய மனத்தில் பிரேமபாசம் அலையாகப் பொங்கியெழும்போது குழந்தையை கிள்ளிவிடுவார். குழந்தை அலறி அழும். தாய்தாம் உடனே அனைத்துக்கொள்ளவும் செய்வார்.

ஓர் உணவைத் தின்ன வேண்டுமென்று ஒருவர் மனத்தால் ஆசைப்பட்டபோதுதான் பாபா அவருடைய ஆசையை பூர்த்திசெய்தார். மனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவரே பாபாவின் ஆமோதிப்பை வென்றார்!

பாபாவின் ஆணையைப் பாவிக்கவேண்டும் என்ற உறுதி சில பக்தர்களின் விஷயத்தில் வரம்புமீறிச் சென்றது. ஜன்மம் முழுவதும் மாமிசத்தை தொட்டறியாதவர்கள் கூடத் தங்களுடைய விரதத்தில் தடுமாறினர்!

உண்மை நிலை என்னவென்று பார்த்தல், அதுமாதிரியான பக்தர்களை அவர்கள் தவறு என்று கருதிய செயல்களை செய்ய பாபா தூண்டியதில்லை; அனுமதிக்கவுமில்லை.

ஆக, 1910  ஆம் ஆண்டிற்கு முன்பாக ஹண்டி நிகழ்ச்சி மிகுந்த உற்சாகத்துடன் அடிக்கடி நடந்தது.

அதன் பிறகு தாசகனு பம்பாய் நகரத்திற்குச் சென்றார். சாயியின் மஹிமையைக் கதாக்கீர்த்தனங்கள் செய்து எல்லாருடைய மனத்திலும் பதியும்படி செய்தார்.

அப்பொழுதிலிருந்து குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் பாபாவின் மகத்துவத்தை அறிந்தனர். கணக்கற்ற மக்கள் ஷிர்டிக்கு விஜயஞ்செய ஆரம்பித்தனர்.

பின்னர் ஐந்து உபச்சாரங்களுடன் கூடிய பூஜை ஆரம்பித்தது. மதிய உணவையும் சிற்றுண்டிகளுமாகப் பல நைவேத்தியங்கள் வந்து குவிந்தன.

அரிசிச்சோறு, பருப்பு சூப்பு, பூரி, ரவாகேசரி, சப்பாத்தி, சட்டினி கோகமல்லி, பலவிதமான பாயாசங்கள், பஞ்சாமிருதம் - இவ்வகையான உணவுப்பண்டங்கள் மசூதிக்கு வந்துசேர்ந்தன.

அபரிதமான எண்ணிக்கையில் யாத்திரிகர்கள் வந்தனர். எல்லாரும் பாபாவை தரிசனம் செய்ய விழுந்தோடிச் சென்றனர். சாயிபாதங்களில் நைவேத்தியம் சமர்ப்பித்தனர். இப் பண்டங்களெல்லாம்  பசித்தவர்களைத் திருப்தி செய்யச் சென்றடைந்தது இயல்பே. 




Thursday 17 November 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


இக் கேள்விக்கு ஒரே பதில்தான் உண்டு. சாயி பாபா எது தர்மம், எது அதர்மம் என்பதை நிரந்தரமாக அறிந்திருந்தார்.

ஹண்டியில் தயாரிக்கப்பட்ட பதார்த்தத்தை எல்லாரும் சாப்பிடவேண்டுமென்று பாபா என்றுமே சிறிதளவும் வற்புறுத்தியதில்லை.

பிரசாதத்தை அடையவேண்டுமென்று எவரெவர் தம்மிச்சையாகவே விரும்பினார்களோ, அவர்களுடைய ஆசையே பாபாவால் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டது. அவர் யாரையும் ஏமாற்றவில்லை!

மேலும், அவர் எந்த ஜாதியென்பதை யார் அறிவார்? மசூதியில் வாழ்ந்தாரென்பதால் அவர் ஒரு முஸ்லீம் என்று எல்லாரும் சொன்னார்கள். ஆயினும், அவருடைய வாழ்க்கைநெறியைக் கண்டு ஜாதியென்னவென்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

எவரைக் கடவுளாக ஏற்று பக்தர்கள் பாததூளியில் புரளுகின்றனரோ, அவருடைய ஜாதி என்னவென்று ஆராய்ச்சி செய்யவேண்டுமா? அய்யகோ! என்ன ஆன்மீகத் தேடல் இது!

எவரிடம் இகபர நாட்டமின்மை உட்பொதிந்திருந்ததோ, இவருக்கு விவேகமும் வைராக்கியமுமே செல்வமோ, அவருடைய ஜாதியை ஒரு பிரச்சினையாக எழுப்பவேண்டுமா! அய்யகோ! என்ன ஆன்மீகத் தேடல் இது!

தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் அப்பாற்பட்டவரும் சுத்த ஆனந்தத்தில் சதா மூழ்கியவருமானவரின் ஜாதி என்னவென்று தெரிந்துகொள்ள வேணுமா? அய்யகோ! என்ன ஆன்மீகத் தேடல் இது!

இவ்வாறே பாபாவின் சரித்திரம். நானோ நிஜமான சுகத்தையும் ஆனந்தத்தையும் அனுபவிப்பதற்காகவே அவருடைய சரித்திரத்தைப் பாடுகிறேன். கேட்க வேண்டுமென்று விரும்புபவர்களின் ஆவலை என் பாட்டு பூர்த்திசெய்யும்.

ஹண்டிக் கதையின் நூலை வழியில் எங்கோ விட்டுவிட்டோம். இப்பொழுது, பாபா தாதாவிடம் என்ன கேட்டார் என்பதைச் சொல்கிறேன்; கவனத்துடன் கேளுங்கள்.

"சுவையான புலாவ் கொஞ்சம் சமைக்கப்பட்டிருந்தது. அது எப்படி அமைந்திருக்கிறது என்று பார்த்தீரா?" "ஆஹா, ஆஹா, மிகச் சுவைக்காக இருக்கிறது" என்று தாதா உபசார வார்தையைச் (புகழ் மொழியாக) சொன்னார்.

தாதா கேள்கர் வயதான பக்த சிரேஷ்டர். ஸ்நானம், சந்தியாவந்தனம் போன்ற தினசரிச் சடங்குகளை நியம நிஷ்டையுடன் செய்துவந்தவர். எந்த காரியமும் சாஸ்திரிவிதிகளுக்கு உட்பட்டதா, உடன்படாததா என்று பார்த்து சதா அனுசரித்துவந்தவர். அவருக்கு இச்செயல் (மாமிசம் கலந்த உணவைச் சுவைத்துப் பார்த்தல்) முறையானதாகத் தோன்றவில்லை.

பாபா தாதாவிடம் சொன்னார், 'நீர் எப்பொழுதும் கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. எப்பொழுதும் சுவைத்தும் பார்த்ததில்லை. அவ்வாறிருக்க, அது சுவையாக இருக்கிறது என்று எப்படிச் சொல்கிறீர்?-

 


 

Thursday 10 November 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஒரு மளிகைச் சாமானைக் கையில் எடுத்துப் பார்த்துப் பேரம் பேசிய பிறகே விலையை நிர்ணயம் செய்வார். ஏமாற்ற முயன்றவர்கள் கர்வபங்கமடைந்தனர்.

கூட்டல் கணக்குப் போடுவதுபோல் பாசாங்கு செய்வார். ஆனால், பணம் கைக்கு கை பட்டுவாடா செய்யும்போது கடைக்காரர் ஐந்து ரூபாய் கேட்ட இடத்தில் பத்து ரூபாய் கொடுப்பார்.

அவர் இவ்வேலைகளைத் தாமே செய்ய விரும்பினார். மற்றவர்கள் செய்வதை அவர் அனுமதிக்கவில்லை; மற்றவர்கள் தமக்காகச் செய்வார்கள் என்று எதிரிபார்க்கவும் இல்லை; யாரையும் அவமதிக்கவுமில்லை.

இந்த ஒரு கொள்கையில் அவர் இரவுபகலாக விழிப்புணர்வுடன் இருந்தார். ஆகவே, ஹண்டி வேலைக்கு பாபா யாருடைய உதவியையும் நாடவில்லை.

ஹண்டி வேலை மாத்திரமில்லை, துனிக்கருகில் உள்ள விறகுகிடங்கின் கிழக்குப்புறச் சுவரில் முக்கால் பங்கைத் தம்முடைய கைகளாலேயே கட்டினார்.

மஹாதூ காரையைக் கலந்து கொடுப்பார். பாபா செங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்துக் கொல்லுருவை உபயோகித்து தம்முடைய கையாலேயே காரை பூசிச் சுவரை எழுப்பினார்.

ஓ, பாபா செய்யாத வேலைதான் என்ன? மசூதியின் தரையைத் தாமே சாணியால் மெழுகினார். யாரையும் எதிர்பார்க்காமல் கப்னியையும் லங்கோட்டையும் தாமே தைத்துக்கொண்டார்.

ஹண்டி கொதித்துப் பயங்கரமாக நீராவி வெளிவந்துகொண்டிருக்கும்போது கம்பனியின் கைகளை மடித்துவிட்டுக்கொண்டு உணவை மேலுங்கீழுமாகத் தம் கையால் கிளறுவார்.

ஹண்டி தளதளவென்று கொதித்துக் கிளறுவதற்குத் தயாராகிவிட்டது என்று தெரிந்தபின் பாபா இந்த அற்புதமான லீலையைச் செய்வார்.

ஓ, ரத்தமும் சதையுமான கை எங்கே? கொதிக்கும் ஹண்டி எங்கே? ஆயினும், பீதியடைந்த முகத்தையோ கை வெந்துபோன அடையாளத்தையே சிறிதளவும் காணமுடையவில்லை!

பக்தர்களின் தலைமேல் இன்னல் விழுந்தவுடன் எடுத்தெறியும் கையை, கொதிக்கும் சோறு என்ன செய்யமுடியும்? அவருடைய மகத்துவம் அதற்குத் தெரியாதா என்ன?

ஊறவைத்த பருப்புகளை அவரே அம்மியின்மீது பரப்பிச் சுத்தம் செய்தபின்  குழவியால் அரைப்பார். அரைத்த மாவைத் தம்முடைய கைகளாலேயே வடை உருவில் தட்டுவார்.

பிறகு அவற்றை லாவகமாக ஹண்டியில் நழுவவிடுவார் . அவை பாத்திரத்தின் அடியில் ஒட்டிக்கொள்ளாதவாறு புரட்டிவிடுவார். உணவு தயாரானவுடன் ஹண்டியைக் கீழே இறக்கி எல்லாருக்கும் பிரசாதம் அளிப்பார்.

'ஏன் எல்லாருக்கும் அளித்தார்? சாயி பாபா ஒரு முஸ்லீம். மற்றவர்களை எப்படி அவர் இம்மாதிரியாக அதர்ம வழியில் இறக்கலாம்?" என்று கதை கேட்பவர்கள் வினவலாம். 





Thursday 3 November 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ஆணையை சிரமேற்கொண்டு வணங்கிவிட்டு தாதா உடனே உடையணிந்து கொண்டு கோர்ஹாலா கிராமத்திற்குச் செல்லக் கிளம்பியபோது திருப்பியழைக்கப்பட்டார்.

" ஓய்! வாங்கும் வேலையைச் செய்வதற்கு வேறு யாரையாவது அனுப்பலாமே. நீர் எதற்கு அனாவசியமாக அலையவேண்டும்?" என்று பாபா சொன்னார்.

ஆகவே, மாமிசம் வாங்கிக்கொண்டு வருவதற்கு பாண்டுவை அனுப்பலாம் என்று தாதா முடிவு செய்தார். அப்பொழுது பாபா தாதாவிடம் என்ன சொன்னார் என்று கேளுங்கள்.

பாண்டு கிளம்பிச் சிறிது தூரம் சென்றபிறகு, "சரி, இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம்"  என்று சொல்லி பாபா பாண்டுவைத் திரும்பி வரும்படி செய்தார்.

பின்னர் ஒருசமயம், ஹண்டி செய்யவேண்டுமென்ற திடீர் உற்சாகம் பாபாவுக்கு எழும்பியது. அடுப்பின்மேல் அண்டாவை ஏற்றி மாமிசத் துண்டுகளைப் போட்டார்.

பிறகு அரிசியைக் களைந்து அளவான நீருடன் அதைச் சேர்த்தார். விறகுகளை அடுக்கி அடுப்பை மூட்டி அருகில் உட்கார்ந்துகொண்டு வாயால் ஊதா ஆரம்பித்தார்.

கிராமமக்கள் அனைவருமே அவர் காலால் இட்ட பணியைத் தலையால் செய்யத் தயாராக இருந்தனர். எவராவது ஒருவர் நெருப்பை ஊத்தி ஜுவாலையைப் பெருக்கும் பணியை மகிழ்ச்சியுடன் செய்திருப்பார். ஆனால், பாபாவின் ஆணையின்றி ஒருவருக்கும் இதைச் செய்ய தெரியமில்லை.

சமையல் செய்வதற்கோ உணவுப் பொருள்களைக் கொண்டுவருவதற்கோ பக்தர்களுக்கு ஒரு கோடி காண்பித்தால் போதும்; அவர்மேல் கொண்ட அன்பினால் அதை மிகுந்த உற்சாகத்துடன் செய்துமுடிக்கப் பலர் தயாராக இருந்தனர். இதுவிஷயமாக உதாசீனம் காட்டியவர் சாயியே!

அவர் உதாசீனம் செய்தார் என்று சொல்வதும் சரியாகாது. தாமே சமையல் செய்வது தம்முடைய நன்மைக்கே என்று அவர் நினைத்ததால் , அன்னதானம் செய்வதில் மற்றவர்களைக் கஷ்டப்படுத்துவத்தில் அர்த்தம் என்ன இருக்கிறது?

அவரோ  மதுகரீப் பிச்சை எடுத்தவர்; அதற்காக தம்முடைய உயிரைக் காத்துக்கொள்ளும் அளவிற்கு மட்டும் வீடு வீடாகச் சென்று கால் பாகம் சோளரொட்டி இரந்தவர் .

அப்படிப்பட்ட மனிதர் அன்னதானம் செய்வதற்குத் தாமே கஷ்டப்பட்டு உழைத்தால்தான் திருப்தியடைவார். ஆகவே, பாபா இதற்காக யார்மீதும் சார்ந்திருப்பதை விரும்பவில்லை.

நூறுபேர்களுக்குச் சுயமாகச் சமைப்பதற்கு மாவு, அரிசி, பருப்புகள் போன்ற சாமான்களை அவரே பார்த்து வாங்கிக்கொண்டு ரொக்கமாக பணம் பட்டுவாடா செய்தார்.

கூடையைக் கையில் எடுத்துக்கொண்டு அவரே மாளிகைக்கு கடைக்குச் சென்ற காட்சி, உலகவிவகாரங்களில் மனிதன் எவ்வளவு உஷாராக இருக்கவேண்டுமென்பதை மக்களுக்கு உணர்த்தியது. 




Thursday 27 October 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

இந்த சந்தேகத்தை நிவிர்த்தி செய்வதில் சிரமம் ஏதும் இல்லை. மாமிசம் கலந்த உணவை வழக்கமாகச் சாப்பிடுபவர்களுக்குத்தான் பாபா அந்த உணவை அளித்தார்.

பிறந்ததிலிருந்து மாமிசம் சாப்பிடும் பழக்கமில்லாவதர்களை அவ்வுணவைத் தொடவும் விடமாட்டார். அம்மாதிரியான சாகசங்களை அவர் என்றுமே செய்ததில்லை. பிரசாதம் வேண்டுமென்று நாடியவர்களுக்கே மாமிச உணவு அளிக்கப்பட்டது.

குருவே ஒரு பிரசாதத்தை அளிக்கும்போது அது ஏற்றுகொள்ளத் தக்கதா, தகாததா, என்று விகற்பமாகச் சிந்திக்கும் சிஷ்யன் அதலபாதாளத்தில் வீழ்ந்து தன்னையே அழித்துக்கொள்கிறான்.

இந்தத் தத்துவத்தை பக்தர்கள் நன்கு உணர்ந்து கொண்டிருக்கிறார்களா என்பதைக் கேலியாலும் நகைச்சுவை மூலமாகவும் பாபா தாமே நேரிடையாகத் தெரிந்துகொள்வார்.

இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே எனக்கு ஒரு சுவையான நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வருகிறது. கதைகேட்பவர்களே! உங்களுடைய நன்மை கருதி இதை அமைதியான மனத்துடன் கேளுங்கள்.

பாபா ஒரு ஏகாதசி தினத்தன்று தாதா கேள்கரைக் கேட்டார், "கோர் ஹாலாவிலிருந்து எனக்குக் கொஞ்சம் மாமிசம் வாங்கி வர முடியுமா?"

சாயி கொஞ்சம் பணத்தை எடுத்து அதை எண்ணிப் பார்த்துவிட்டு தாதாவிடம் கொடுத்தார். "நீரே போய் வாரும். நீர்தான் இப்பணியைச் செய்யவேண்டும்"  என்றும் ஆணையிட்டார்.

கணேஷ் தாமோதர் என்ற பெயரும் கேள்கர் என்ற குடும்பப் பெயரும் கொண்டவரை அவருடைய மூப்பின் காரணமாக ஷீர்டி மக்கள் 'தாதா' என்றழைத்தனர்.

தாதா ஷிர்டியில் முதல் சத்திரம் கட்டிய ஹரிவினாயக் சாடேவின் மாமனார்; சாயிபாதங்களில் அளவுகடந்த பிரேமை கொண்டவர்; தம்முடைய ஆச்சார அனுஷ்டானங்களை சிரத்தையுடன் கடைபிடித்த பிராமணர்.

இரவுபகலாக பாபாவுக்கு சேவை செய்தும் திருப்தியடையாத இவர், பாபாவின் இந்த ஆணையைக் கேட்டு எப்படி ஆச்சரியப்படாதுபோனார் என்றுதான் எனக்கு விளங்கவில்லை!

உடல் வலிமை குறைவாக இருப்பினும், ஆன்மீக அப்பியாசங்கள் செய்து சாதனை பலம் பெற்றவர்கள் எப்பொழுதும் மனச்சஞ்சலம் அடையமாட்டார்கள்; அவர்களுடைய புத்தியும் ஆடாது அசையாது குருபாதங்களில் நிலைத்திருக்கும்.

தனத்தையும் தானியத்தையும் வஸ்திரங்களையும் அளிப்பது மட்டும் தக்ஷிணையாகிவிடாது. குருவின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்றி அவரை சந்தோஷப்படுத்துவதும் தக்ஷிணையே.

எவர் தம்முடைய மனத்தையும் வாக்கையும் செயலையும் குருபாதங்களில் அர்ப்பணித்து, முடிவில் குருவின் கிருபையை சம்பாதிக்கிறாரோ, அவருக்கு உண்மையான சிரத்தை லாபமாகிறது. 



Thursday 20 October 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

உப்பு, மிளகாய், ஜீரகம், மிளகு போன்ற மாளிகைச் சரக்குகளையும் காய்கறிகளையும் கொப்பரைத் தேங்காய்களையும், எவ்வளவு தேவைப்படும் என்பதுபற்றிப் பூரணமாக சிந்தித்து அவரே வாங்குவார்.

மசூதியில் உட்கார்ந்துகொண்டு எந்திரக்கல்லை எடுத்துவைத்து அவருடைய கைகளாலேயே கோதுமை, பருப்பு வகைகள், கேழ்வரகு, இவற்றை மாவுகளாக அரைத்துக்கொள்வார்.

ஹண்டிபிரீத்தி (அன்னதானம்) செய்வதற்கான அனைத்து வேலைகளையும் பாபாவே அயராது செய்தார். மசாலா அரைக்கும் வேலைகளையும் தாமே மிகுந்த சிரத்தையுடன் செய்தார்.

அடுப்பின் ஜுவாலையைக் குறைப்பதற்கும் பெருக்குவதற்கும் விறகுக்குச்சிகளைக் கீழும் மேலும் தாமே தள்ளுவார்.

பருப்பைத் தண்ணீரில் ஊறவைத்துப் பெருங்காயம், ஜீரகம், கொத்தமல்லி போன்ற பொருள்களை சேர்த்து அரைத்துக் காரசாரமான பண்டமொன்றைச் செய்வார்.

பிசைந்த கோதுமை மாவை ஒன்றேகால் முழ நீளத்திற்கு வட்ட உருவில் நீட்டிச் சிறிய உருண்டைகளாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு உருண்டையையும் ஒரு சப்பாத்தியாகக் குழவியால் விஸ்தீரணம் செய்வார்.

ஏற்கெனவே, அளந்துவைக்கப்பட்ட தண்ணீருடன் கேழ்வரகு மாவையும் மோரையும் சேர்த்து ஹண்டியில் அம்பீலையும் தயார் செய்வார்.

பிறகு, இவ்வாறு தயார் செய்த அம்பீலை (மோர்க் குழம்பு) மிகுந்த அன்புடன் தம்முடைய கைகளாலேயே மற்ற உணவுப்பண்டங்கள் பரிமாறப்படும்போது மரியாதையுடன் எல்லாருக்கும் பரிமாறுவார்.

இவ்வாறாக, உணவு நன்றாக வெந்துவிட்டது என்பதை பரிசோதித்தபின் ஹண்டியை அடுப்பிலிருந்து இறக்கி மசூதிக்குள் எடுத்துச் செல்வார்.

மௌல்வியின் மூலம் விதிகளின்படி பாதியா ஓதி, இவ்வுணவு புனிதமாக்கப்படும். அதன் பிறகு, பிரசாதம் முதலில் மகால்சாபதிக்கும் தாத்யாவுக்கும் அனுப்பப்படும்.

பின்னர் இவ்வுணவைப் பாபாவே எல்லாருக்கும் பரிமாறுவார். ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் ருசியான உணவளித்து திருப்தியும் மகிழ்ச்சியும் பெறுவார்.

அன்னத்தை நாடியவர்கள் வயிறு நிரம்புவரை திருப்தியாகச் சாப்பிடுவார்கள். பாபா அவர்களை, "போட்டுக்கொள்; இன்னும் கொஞ்சம் போட்டுக்கொள்" என்று வற்புறுத்துவார்.

ஓ, இவ்வுணவை உண்டு திருப்தியடைந்தவர்கள் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்! பாபா தம்முடைய கைகளாலேயே பரிமாறிய உணவை உண்டவர்கள் மஹா பாக்கியசாலிகள்!

பாபா, மாமிசம் கலந்த உணவை பிரசாதமாகப் பல பக்தர்களுக்கு தங்குதடையில்லாமல் ஏன் விநியோகம் சிஎதார்? இந்த சந்தேகம் இங்கு எழுவது இயற்கையே. 




Thursday 13 October 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


அன்னதானம் இல்லாது செய்யப்படும் தருமத்தைப் பிரேமை இல்லாத பஜனைக்கும் குங்குமத் திலகம் இட்டுக்கொள்ளாத சுமங்கலிக்கும் குரலினிமை இல்லாதவனின் பாட்டுக்கும் உப்பு இடப்படாத மோருக்கும் ஒப்பிடலாம்.

அன்னதானம் செய்யும்போது, வியாதியஸ்தர்களுக்கும் பலம் குன்றியவர்களுக்கும் குருடர்களுக்கும் முடவர்களுக்கும் செவிடர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் முதலில் உணவு அளிக்கப்படவேண்டும். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அதன் பின்னரே அளிக்க வேண்டும்.

இப்பொழுது, பாபாவின் ஹண்டியைப்பற்றிய விவரங்களை அறிய ஆர்வமாக இருப்பவர்களை பிரீதிசெய்யும் வகையில் விவரம் சொல்ல முயல்கிறேன்.

மசூதியின் முற்றத்தில் ஒரு பெரிய மண் அடுப்பு நிறுவப்பட்டிருந்தது. அதன்மீது ஒரு வாயகன்ற பாத்திரம் வைக்கப்பட்டுத் தேவையான தண்ணீர் நிரப்பப்படும்.

சிலசமயங்களில் சர்க்கரைப் பொங்கலும் சிலசமயங்களில் மாமிசம் கலந்த புலாவும் செய்யப்படும். சிலசமயம் மாவைப் பிசைந்து வடைபோல் கையால் உருச்செய்து பருப்பு சூப்புடன் சேர்த்து சமையல் செய்யப்படும்.

சிலசமயங்களில், கொதிக்கும் பருப்பு சூப்பில், மாவால் செய்யப்பட்ட பானக்காக்களையோ ரோடக்காக்களையோ பாபா லாவகமாக மிதக்க விடுவார்.

மசாலாப் பொருள்களைத் தாமே அம்மியில் அரைத்துச் சமையலுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்வார். பயத்தம் பருப்பு மாவால் தம் கையாலேயே சின்னச் சின்ன வடைகள் தட்டி லாவகமாக ஹண்டியில் நழுவ விடுவார்.

சொர்க்கம் கிடைக்கவேண்டுமென்ற நோக்கத்தில் சிலர், மிருகங்களை சடங்குபூர்வமாக கொன்று யாகத்தீயில் சமர்பிக்கின்றனர். பிராமணர்களும் இம் மாமிசத்தில் சிறிது பிரசாதமாக உண்கின்றனர். இதற்கு 'சாஸ்திரத்தால் அனுமதிக்கப்பட்ட ஹிம்சை' என்று பெயர்.

அவ்வாறே, பாபாவும் முல்லாவுக்குச் சொல்லியனுப்புவார். இஸ்லாமிய சாஸ்திர விதிகளின்படி குரான் மந்திரங்களை ஓதிய பின்னரே, விதிக்கப்பட்ட சடங்குமுறையில் ஆடு கொல்லப்படும்.

ஹண்டிகள் இரண்டு இருந்தன; ஒன்று சிறியது. மற்றது பெரியது. இந்த ஹண்டிகளில் சமைத்து, அன்னத்தை நாடியவர்களுக்குப் போஜனம் செய்துவைத்தார் பாபா.

இரண்டு ஹண்டிகளில் சிறியது, ஐம்பது ஜனங்களுக்கு உணவளிக்கக்கூடிய கொள்ளளவு வாய்ந்தது. நூறு ஜனங்களுக்கு உணவளித்த பிறகும், சிறிது மீதம் இருக்கக்கூடிய அளவிற்குப் பெரிய ஹண்டி இருந்தது.

அவரே மளிகைக்கடைக்கு சென்று சாமான்கள் வாங்கி கணக்கைக் காட்டுவார். கடன் என்ற பேச்சுக்கே இடமில்லை. எப்பொழுதுமே கைமேல் காசுதான்!

 


 

Thursday 6 October 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ஒரு குழந்தைக்கு எப்படிச் சாப்பிடுவது என்றுதான் தெரியும்; எதைச் சாப்பிடுவது என்பது தெரியாது. தாய்தான் பாலூட்டியோ ஒரு கவளம் சோறூட்டியோ குழந்தையைப் பாதுகாக்க வேண்டும்.

அவ்வாறே, என் சாயிமாதாவும் என்னுடைய பேனாவைப் பிடித்துக்கொண்டு தம் பக்தர்களின்மேல் கொண்ட அன்பால் இந்தப் பிரபந்தத்தை (பாமாலையை) எனக்கு சிரமமேதுமின்றி எழுதி வாங்கிக்கொண்டார்.

மோக்ஷம் சித்தியாவதற்கான சாதனைகளை தர்மசாஸ்திரம் நான்கு யுகங்களுக்கும் நான்குவிதமாக விதித்திருக்கிறது. கிருதயுகம் அல்லது சத்யயுகத்திற்குத் தவம்; திரேதாயுகத்திற்கு ஞானம்; துவாபரயுகத்திற்கு யாகம்; கலியுகத்திற்கு தானம்.

மனிதன் அடிக்கடி தானதர்மங்கள் செய்யவேண்டும். பசிப்பிணியைக் களைவதையே முக்கியமான தானமாகக் கருதவேண்டும். நித்தியநியமமாக அன்னதானம் செய்வதையே தலையாய கடமையாகக்கொண்டு வாழ வேண்டும்.

மதியம் பன்னிரண்டு மணிக்கு அன்னமேதும் கிடைக்காவிட்டால் மனம் குழம்புகிறது. நமக்கெப்படியோ அப்படியே பிறருக்கும். இதை உள்ளுக்குள் நன்கு உணர்ந்தவன் உயர்ந்த மனிதன்.

ஆசாரதர்மத்தில் பிரதானமானதும் முதலில் செய்யவேண்டியதுமான தானம் அன்னதானம். இதுபற்றி நன்கு சிந்தித்துப் பார்த்தால் அதைவிட சிரேஷ்டமான (சிறந்த) தானம் எதுவும் இல்லை என்பது நன்கு விளங்கும்.

அன்னம் பாரா பிரம்ம ரூபம். எல்லா உயிரினங்களும் அன்னத்திலிருந்தே எழுகின்றன. அன்னமே உயிரைக் காப்பாற்றும் சாதனம். உயிர் உடலைப் பிரிந்த பிறகு அன்னத்திற்குள்ளேயே சென்று கலந்து விடுகிறது.

அதிதி (விருந்தாளி) நேரத்தோடு வந்தாலும், நேரம் தவறி வந்தாலும், இல்லறத்தோன் அவருக்கு அன்னமிட்டுத் திருப்திசெய்யவேண்டும். அன்னமளிக்காமல் விருந்தாளியை அனுப்பிவிடுபவன் இன்னல்களுக்கு அழைப்புவிடுகிறான்; இதில் சந்தேகமே இல்லை.

வஸ்திரங்களையோ பாத்திரங்களையோ தானமாக அளிக்கும்போது தானம் வாங்குபவர் தகுதியுள்ளவரா என்று யோசிக்கவேண்டிய அவசியம் உண்டு. அனால், அன்னதானம் செய்வதற்கு இந்தச் சிந்தனையே தேவையில்லை. வீட்டுவாயிலுக்கு எவர் வந்தாலும், எந்த நேரத்தில் வந்தாலும், அவரை அனாதவராக விட்டுவிடுவது தகாது.

அன்னதானம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது; இதற்கு கருதியே (தைத்திரீய உபநிஷதம்) பிரமாணம். ஆகவே, பாபாவும் உலகியல் ரீதியைக் கடைபிடிக்கும் வகையில் ஜனங்களுக்கு உணவளித்துத் திருப்தி செய்தார்.

அன்னதானம் இன்றிச் செய்யப்படும் காசுதானம் போன்ற மற்ற தானங்கள் முழுமை பெறாதவை. எத்தனை நட்சத்திரங்கள் இருப்பினும் சந்திரன் இன்றி வானம் அழகு பெறுமோ? பதக்கம் இல்லாமல் தங்கச்சங்கிலி முழுமை பெறுமோ?

அறுசுவை உணவில் பருப்பு எவ்வாறு முக்கியமானதோ அவ்வாறே புண்ணியங்களிலெல்லாம் சிறந்த புண்ணியம் அன்னதானம். கலசமில்லாத கோபுரத்திற்கு தாமரை இல்லாத நீர்நிலைக்கும் சோபை ஏது?

 


 

Thursday 29 September 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


38 . அன்னதானம்

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

அகில உலகங்களுக்கும் ஆனந்தமளிப்பவரே! பக்தர்களின் இஷ்டங்களை பூர்த்தி செய்பவரே!  சரணமடைந்தவர்களின் மூன்றுவிதமான இன்னல்களையும் அபகரிப்பவரே! குருவரரே! உம்முடைய பாதங்களில் வணங்குகிறோம்.

அடக்கமுள்ளவர்களைக் காப்பவரும் பரம உதாரணமுள்ளவரும் அடைக்கலம் புகுந்த பக்தர்களை உத்தாரணம் செய்பவருமாகிய தேவரீர், உலகமக்களுக்கு உபகாரம் செய்வதற்காகவே அவதாரம் செய்திருக்கிறீர்.

துவைத பாவத்தை நாசம் செய்வபவரே ஜய ஜய! பக்தர்களின் மனத்தைக் கொள்ளைகொள்பவரே ஜய ஜய! பக்தர்களை உலகியல் வாழ்விலிருந்து விடுவிப்பவரே ஜய ஜய! கருணைக்கு கடலான குருராயரே ஜய ஜய!

உம்முடைய புனிதமான பாதங்களை பார்ப்பதற்கும் உம்முடன் சமகாலத்தில் வாழும் சுகத்தை அனுபவிப்பதற்கும் நாங்கள் என்ன பேரு பெற்றோம் ஐயனே! ஆனால் அந்தக் காலம் கடந்துவிட்டது; இனித் திரும்பி வரப்போவதில்லை.

முழுமுதற்பொருளின் சுத்த சொரூபமான ரசத்தை ஓர்  அச்சில் ஊற்றியபோது உருவான மூர்த்தியே ஞானிகளில் சிறந்தவரான இந்த சாயி.

சாயியே ஆத்மாராமர். அவரே பூர்ணானந்தத்தின் இருப்பிடம். தாமே எல்லா விருப்பங்களும் நிறைவேறியவராதலால் பக்தர்களையும் ஆசையற்றவர்களாக ஆக்கிவிடுகிறார்.

எவர் எல்லா தர்மங்களையும் ரக்ஷிப்பவரோ, எவர் பிரம்ம பலத்தாலும் க்ஷத்திரிய பலத்தாலும் யமனையே விழுங்கக்கூடியவரோ, அவர் ஆடிய நாடகமே இந்தச் சரித்திரம்.

ஜனனமரண சம்பந்தத்தையும் மற்ற பந்தங்களையும் அறுத்தெறியக்கூடியவரின் சன்னியதியில் குருட்டு ஜடமாகிய நான் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.

சென்ற அத்தியாயத்தில், மிகுந்த அன்புடன் சாயிநாதரின் சாவடி ஊர்வலத்தை வர்ணித்தேன். இந்த அத்தியாயத்தில், இடையறாத ஆனந்தத்தை அளிக்கும் ஹண்டியின் (வாயகன்ற பெரிய தவலை - அன்னதானம்) விவரத்தைக் கேளுங்கள். 




Thursday 22 September 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

சிலீம், அக்தர், பன்னீர் இவற்றை பாபாவுக்கு கொடுத்துவிட்டு அனுமதி பெற்றுக்கொண்டு, தாத்யா பாடீல் வீட்டிற்குக் கிளம்பும் சமயத்தில் பாபா அவரிடம் சொல்வார். "என்னைக் கவனித்துக்கொள்.-

"போவதாக இருந்தால் போ. ஆனால், இரவில் அவ்வப்பொழுது என்னை விசாரித்துக்கொள். "சரி" என்று உறுதி கூறிவிட்டுத் தாத்யா சாவடியை விட்டுத் தமது இல்லம் நோக்கிச் செல்வார்.

இவ்வாறாக எல்லா ஜனங்களும் சென்ற பிறகு, பாபா தம்முடைய கைகளாலேயே படுக்கைச் சுருளை எடுத்து ஒவ்வொரு வேட்டியாகச் சீர் செய்து பல படலங்களைப் பரப்பித் தம்முடைய படுக்கையைத் தாமே தயார் செய்துகொள்வார்.

சுமார் அறுபது - அறுபத்தைந்து வெண்ணிறத்த துணிகளை ஒன்றன்மேல் ஒன்றாக விரித்து அதன்மீது பாபா படுத்துக்கொள்வார்.

இவ்வாறாக, சாவடியில் கதை எவ்விதம் நடந்ததோ, அவ்விதமாகவே இதுவரை எடுத்துரைக்கப்பட்டது. மற்ற கதைகள் அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப்படும்.

இந்த சாயியின் மஹிமை ஆழங்காணமுடியாதது. நான் சுருக்கமாகச் சொல்ல நினைத்தாலும் அது எல்லையில்லாமல் என்னை இழுத்துக்கொண்டே போகிறது. குருதர்மம் (குருநெறி) எல்லையற்றதன்றோ!

ஹண்டியின் கதையையும் விட்டுப்போன கதைகளையும் அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன். ஒருமித்த மனத்துடன் கேளுங்கள்.

இடையறாத குருநினைவே ஹேமாடுக்கு இகவுலக க்ஷேமமும் பரவுலக க்ஷேமமும், குருசரணங்களில்  பணிவதே செய்ய வேண்டிய செயல்கள் அனைத்தும்; அடையவேண்டிய பலன்கள் அனைத்தும். ஏனெனில், அவருடைய பாதங்களில்தான் நான்கு புருஷார்த்தங்களையும் (ஆறாம்-பொருள்-இன்பம்-வீடு) அடையமுடியும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'சாவடி வர்ணனை' என்னும் முப்பத்தேழாவது அத்தியாயம் முற்றும்.


ஸ்ரீ சத்குரு சாயிநாதர்க்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும்.

 


 

Thursday 15 September 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

சிலீம் மஹா கடினமான தவத்தைச் செய்த பொருளாகும். சிறுவயதில் அது காலால் மிதித்துத் துவைத்துத் துவம்சம் செய்யப்பட்டது. பிறகு வெயிலின் காய்ச்சலைத் தாங்கிக்கொண்டது. கடைசியாக சூளையில் அக்கினிப் பிரவேசமும் செய்தது.

பாபாவின் கையால் தொடப்படும் பாக்கியத்தைப் பெற்றது. மறுபடியும், எரியும் புகையிலையின் சூட்டைப் பொறுத்துக்கொண்டது. சூளையிலிடப்பட்ட பிறகு, செம்மண் பூசப்பட்டு மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டாலும், பின்னர் பாபாவின் உதடுகளால் முத்தமிடப்படும் கௌரவத்தைப் பெற்றது.

கற்பூரமும் குங்குமப்பூவும் சந்தனமும் சேர்த்து அரைத்த குழம்பை பக்தர்கள் பாபாவின் கைகளில் பூசுவர். கழுத்தில் பூமாலைகளை அணிவித்து கைகளில் ஒரு பூச்செண்டையும் அளிப்பர்.

சதா புன்னைகைபூத்த முகத்துடன், மிகுந்த பிரேமையுடனும் தயையுடனும் பக்தர்களை நோக்கியவருக்குத் தம்மைச் சிங்காரித்துக்கொள்வதில் என்ன அபிமானம் இருந்திருக்கமுடியும்? பக்தர்களைத் திருப்திசெய்வதற்காகவே இவையனைத்தையும் பாபா ஏற்றுக்கொண்டார்.

பக்தியென்னும் விலைமதிப்பற்ற ஆபரணத்தை அணிந்து சாந்தியென்னும் அழகில் மூழ்கியவர்க்கு, மாலைகளாலும் மணிகளாலும் செய்யப்பட்ட உலகநடையான அலங்காரத்தில் என்ன நாட்டம் இருந்திருக்க முடியும்?

துறவின் உருவாக வாழ்ந்தவருக்கு மரகத கற்களாலான அட்டிகை எதற்கு? ஆயினும், பக்தர்களால் அர்ப்பணம் செய்யப்பட்டபோது அவர்களுடைய களிப்பு நாட்டத்தைத் திருப்திசெய்வதற்காகக் கழுத்தில் அவற்றை அணிந்துகொள்வார்.

மரகதம் இழைத்த தங்கச் சங்கிலிகளும் பதினாறு சாரம் முத்துமாலைகளும் அன்றலர்ந்த தாமரைகளுடனும் சேர்ந்து அவருடைய கழுத்தை அலங்கரித்தன.

மல்லிகையும் முல்லையும் துளசியும் சேர்த்துக் கட்டப்பட்ட மாலைகள் அவருடைய கழுத்திலிருந்து கால்வரை நீண்டு புரண்டன. கழுத்தைச் சுற்றி முத்தாலான ஆபரணங்கள் அபூர்வமாக ஜொலித்தன.

அவருடைய மார்பில் தங்கப்பதக்கம்  பதிக்கப்பட்ட மரகத அட்டிகை தவழ்ந்தது. நெற்றியில் இடப்பட்ட கறுப்பு நிறுத்த திலகம் அழகுக்கு அழகு சேர்த்தது.

அவர் ஒரு சிறந்த வைஷ்ணவரைப்போல ஜொலித்தார். தலைக்குமேல் குடை சுழன்றது; சாமரங்கள் வீசின. தங்கச்சரிகை கரை போட்ட சால்வை போர்த்தியிருந்தார். அவரை எப்படிப் பக்கீர்  என்று  சொல்ல   முடியும்?

மங்கள வாத்தியங்கள் பின்புலத்தில் முழங்க, ஜோக் தான் பெரும்பாலும் ஐந்து விளக்குகள் பிரகாசமாக எரியும் ஆரதியைச் சுற்றுவார்.

ஐந்து உபச்சாரங்களுடன் கூடிய பூஜை முடிந்த பிறகு, பளபளக்கும் பெரிய பஞ்சாராத்தித்தட்டை பத்திரமாக எடுத்து ஐந்து திரிகளையும் கற்பூரத்தையும் ஏற்றி பாபாவுக்கு ஆரத்தி சுற்றுவார்.

ஹாரதி நடந்து முடிந்த பிறகு எல்லா பக்தர்களும் ஒவ்வொருவராக வந்து பாபாவுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வர். பின்னர் தம் தம் வீடுகளுக்குச் செல்வர். 




Thursday 8 September 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


சிலர் வைரம் கட்டிய முத்துமாலைகளைக் கழுத்தில் அணிவித்தனர். சிலர் நெற்றியில் திலகமிட்டனர். இவ்வாறான சின்னச் சின்ன விஷயங்களை அனுமதித்தது பாபா அவர்களுக்குச் செல்லம் கொடுத்தார்.

எல்லாச் சிங்காரிப்புகளும் முடிந்து, முது மாலைகள் கழுத்தில் ஜொலிக்க, தலைமேல் மகுடம் வைக்கப்பட்டவுடன் வீசிய சோபை காண்பதற்கு மிக அற்புதமாக இருந்தது.

நானாசாஹேப் நிமோன்கர் குஞ்சலங்கள் தொங்கும் மஞ்சள் நிறத் துணிக்குடையை பாபாவின் மேல் தலைக்குமேல் பிடித்துக்கொண்டு பிடியுடன் சேர்த்துக் குடையைச் சக்கரம் போல் சுழற்றிக்கொண்டேயிருப்பார்.

பாபுசாஹெப் ஜோக் குருவின் பாதங்களை அலம்பியபின் அர்க்கியம் பாத்யம் ஆகிய உபசாரங்களை மிகுந்த பக்தியுடன் செய்வார். பிறகு, விதிமுறைகளின்படி பாபாவுக்கு பூஜை செய்வார்.

முன்னால் ஒரு வெள்ளித்தட்டை வைத்து அதில் பாபாவின் பாதங்களை எடுத்துவைத்து மிகுந்த மரியாதையுடன் தம்முடைய இரண்டு கைகளாலும் அலம்புவார்.

குங்குமப்பூக் குழம்பைப் பேலாவில் எடுத்துக்கொண்டு குழம்பை பாபாவின் கைகளுக்குப் பூசுவார். பின்னர் உள்ளங்கையில் ஒரு பீடாவை வைப்பார். ஈதனைத்தையும் பாபா புன்னகை மலர்ந்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருப்பார்.

அரியணையில் பாபா அமர்ந்திருக்கையில் தாத்யாவும் மற்றும் சிலரும் பாபாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அவர் ஆசுவாசமாக உட்கார்ந்திருக்க உதவி செய்வர். பிறகு அவருடைய பாதங்களை மரியாதையுடன் வணங்குவர்.

சாவடியின் தரை பல தடவைகள் தேய்த்துப் பெருக்கிச் சுத்தம் செய்யப்பட்டு ஸ்படிகம் போல் நிர்மலமாக மின்னியது. சாயியின் அன்பில் கட்டுண்டவர்களாக சிறுபிள்ளைகளிலிருந்து வயோதிகர்கள்வரை எல்லாரும் அங்கு வந்தனர்.

பாபா அவ்வாறு 'காதியில்' (அரியணையில்) சாய்ந்துகொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கையில் இருபுறங்களிலும் சவரிகளும் (சாமரங்களும்) விசிறிகளும் வீசப்பட்டன.

பிறகு, மாதவராவ் புகையிலையைக் கசக்கிச் சிலீமைத் தயார் செய்வார். அதைத் தாத்யா பாடீலிடம் கொடுப்பார். தாத்யா சிலீமை உறிஞ்சிப் புகையைவைத்துக்கொடுப்பார்.

புகையிலையில் ஜுவாலை வந்தவுடன் தாத்யா சிலீமை பாபாவின் கையில் கொடுப்பர். ஒருதடவை புகைத்த பிறகு, பாபா சிலீமை மகால்சாபதியிடம் கொடுப்பார்.

சிலீம், புகையிலை தீர்ந்துபோகும் வரை மகால்சாபதி, சாமா (மாதவராவ்), தாத்யா, என்று மாற்றி மாற்றிச் சுற்றிவரும்.

அந்தச் சிலீம் மகா பாக்கியசாலி. உயிரற்ற ஜடப்பொருளாக இருந்தபோதிலும் எவ்வளவு பாக்யம் பெற்றது அந்த சிலீம்! உயிருள்ளவர்களாகிய நம்மாலும் சிலீமின் சேவைக்கு இணையாக சேவை செய்யமுடியுமோ?

 


 

Thursday 1 September 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

பின்னர் பக்தர்கள் ஒன்று சேர்ந்து சாவடிக்குள் செல்வர். தாத்யா, பாபாவின் ஆசனத்தைத் தயார் செய்துவிட்டு பாபாவைக் கையைப் பிடித்து அழைத்துவந்து உட்கார வைப்பார்.

சாய்ந்து உட்காருவதற்காக, பஞ்சடைக்கப்பட்ட நீண்ட திண்டுடன் விளங்கிய இந்த உன்னதமான ஆசனத்தில் பாபா அமர்ந்தவுடன் அவருக்கு மேலாக ஒரு நீளமான அங்கவஸ்திரம் அணிவிக்கப்படும்.

மகிழ்ச்சி பொங்கும் இதயத்துடன் திவ்வியமான ஆடைகளை அணிவித்தபின் மக்கள் பக்தியுடன் பூஜை செய்வர். அவருக்கு மாலைகளை அணிவித்தபின் ஆரதிப் பாட்டை உறக்கப் பாடுவர்.

மணம் கமழும் சந்தனத்தை இடுவர். கைகளில் வாசனை திரவியங்களை பூசுவர். அழகான ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிவிப்பர். கடைசியாக, ஒரு கிரீடத்தை தலைமேல் பொருத்துவர்.

சிலசமயங்களில் பொன்னாலான கிரீடம்; சிலசமயங்களில் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டதும் மயிற்பீலி செருகப்பட்டதுமான தலைப்பாகை. தொண்டைக்கு நேராக வைரமும் மாணிக்கமும் அணிவிப்பர்.

பிறகு கழுத்திற்கு நல்முத்துமணிமாலைகளை அணிவிப்பர். தீபங்களின் ஒளியில் இவ்வழகான ஆடைகளும் அணிகலன்களும் ஜொலித்த அழகே அலாதியானது.

நெற்றியில் நறுமணம் கமழும் கஸ்தூரியால் கறுப்பு நிறத்தில் ஒற்றைக்கோடு நாமம் இடப்படும். நடுவில் வைஷ்ணவ குல சம்பிரதாயத்தையொட்டி ஒரு கறுப்புநிற வட்டப் புள்ளியும் இடப்படும்.

நுணுக்கமான தங்கச்சரிகை வேலைப்பாடு நிறைந்த, விலையுயர்ந்த, கத்தரிப்பூ நிற அங்கவஸ்திரம் நழுவினால், இரண்டு பக்கங்களிலிருந்தும் ஜாக்கிரதையாகவும் யாரும் அறியாதவாறும் பக்தர்களால் பிடித்துக்கொள்ளப்பட்டது.

அதுபோலவே, தங்கக் கிரீடத்தையோ தலைப்பாகையையோ பின்னாலிருந்து பக்தர்கள் மெலுக்காகவும் ஜாக்கிரதையாகவும் முறைபோட்டுப் பிடித்துக்கொண்டனர்.

தப்பித்தவறி தலையிலிருக்கும் பளு தெரிந்துவிட்டால், பாபா அதைத் தூக்கி எறிந்துவிடுவார் என்பதே பக்தர்களுடைய பயமும் விசாரமும். ஆயினும், பாபாவின் தலையில் மகுடம் அணிவிக்க வேண்டும் என்ற எல்லையில்லாத பிரேமையும் ஆசையும் அவர்களுக்கு இருந்தது.

சார்வார்ந்தர் ஞானியான பாபாவுக்கா அவர்களுடைய தந்திரம் தெரியாமலிருக்கும்? பக்தர்களின் உற்சாகத்திற்கு இடமளித்து, விருப்பப்பட்டே பாபா மௌனமாக இருப்பார்.

பிரம்மானுபவத்தில் மூழ்கியவருக்கு தங்கஜரிகை வேய்ந்த அங்கவஸ்திரம் எதற்கு? உண்மையான சாந்தியின் சோபையால் ஒளிர்பவர்க்கு மணிமகுடம் என்ன அழகு சேர்க்கும்?

ஆயினும், பக்தர்கள் பாபாவுக்கு நானாவிதமாக அலங்காரங்கள் செய்தனர். நெற்றியில் மனோஹரமான சந்தனத் திலகம் இட்டனர்; குங்குமப் போட்டும் இட்டனர். 





Thursday 25 August 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


கிராம மக்களும் பாபாவின் பக்தர்களும் பிரீதியுடன் தரிசனம் செய்ய வந்தனர். அந்த வேளையில் பாபாவின் திருமுகம் அருணன் (உதயகால சூரியன்) உதித்ததுபோல் செந்நிற ஒளியால் அற்புதமாக ஜொலித்தது.

அந்தத் தேஜோவிலாசத்தைப் பார்த்தவர்களின் கண்கள் வியப்பால் விரிந்து மலர்ந்தன. அவர்களுடைய மனம் பிரேமையால் உள்ளமடைந்தது. உலகியல் துன்பங்கள் அனைத்தும் ஒழிந்ததுபோல் உணர்ந்தனர்.

ஓ, பாலசூரியனைப் போன்ற அந்த திவ்விய தேஜஸும் அற்புதமுந்தான் என்னே! அவருக்குமுன்னால் பேரிகைகள் நெடுநேரம் முழங்கின.

வடக்குப் பார்த்தவாறு, ஒரே இடத்தில் ஒன்றரை மணி நேரம் தம்முடைய வலக்கையை மேலும் கீழும் மீண்டும் மீண்டும் ஆட்டிக்கொண்டே பாபா நிற்பார்.

பாபாவின் திருமுகவொளிவட்டம் அப்பொழுது தாழம்பூவின் நடுப்பாகம் போல் கொஞ்சம் சிவப்பு கலந்த மஞ்சள் நிறமாக ஜொலிக்கும். இந்த அழகை வாக்கால் வர்ணிக்க இயலாது; கண்களால் பார்த்துத்தான் அனுபவிக்கமுடியும்.

மகால்சாபதி ஆவேசம் பிடித்து நடனமாட ஆரம்பித்த பிறகும், பாபா ஒருமுகமான நிலையிலிருந்து கலையாதது அனைவர்க்கும் ஆச்சரியத்தை விளைவித்தது.

ஊர்வலத்தில் மகால்சாபதி பாபாவின் கப்னியின் நுனியைப்பிடித்துக்கொண்டு அவருக்கு வலப்பக்கத்தில் நடந்து வருவார். பாபாவின் இடப்பக்கத்தில் தாத்யா கோதே பாடீல் ஒரு லாந்தரைக் கையில் பிடித்துக்கொண்டு வருவார்.

ஓ, அந்த உற்சவந்தான் எவ்வளவு அற்புதமானது! அந்தப் பிரேம பக்தி எவ்வளவு உன்னதமானது! அந்தக் கோலாகலத்தை காண்பதற்குச் சான்றோர்களும் செல்வர்களும் அங்கு ஒன்று கூடினர்.

பாபாவின் சந்திரவதனம் பொன்னிற ஒளியுடன் ஜொலித்த காட்சி வர்ணனைக்கு அப்பாற்பட்டது. அங்கிருந்த மக்கள் அதைக் கண்கொட்டாமல் பார்த்தனர். ஆனந்தத்தால் நிரம்பினர்.

எல்லையற்ற பிரேமபக்தியாலும் இதயத்தை மூழ்கடித்த ஆனந்தத்தாலும் நிரம்பியவர்களாய் மக்கள் இருமருங்கிலும் மெதுவாக ஊர்வலத்தில் நடந்தனர்.

வருங்காலத்தில் யாருமே இந்தக் கோலாகலமான சாவடி ஊர்வலத்தைக் கண்களால் காணமுடியாது. அந்த நாள்கள் கடந்துவிட்டன. அக் காலம் மலையேறிவிட்டது. பழைய நினைவுகளை அசைபோட்டு மனத்தைச் சமாதானம் செய்துகொள்ள வேண்டியதுதான்.

இவ்விதமாக, வாத்தியங்களின் இன்னிசைக்கும் அவ்வப்பொழுது எழும்பிய ஜெயகோஷத்திற்கும் இடையே, பாபா சாவடியிலிருந்த ஆசனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தெய்வங்களுக்குரிய உபசாரங்கள் செய்யப்பட்டன.

தலைக்குமேல் வெள்ளைத் துணியொன்று விதானமாகக் (கூரை போன்ற விரிப்பு) கட்டப்படும். தொங்கும் சரக்கொத்து விளக்குகளும் சாதாரண விளக்குகளும் ஏற்றப்படும். பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகளில் விளக்குகளின் ஒளி பிரதிபலிக்கும். சாவடி பார்ப்பதற்கு ஜெகஜோதியாக காட்சியளிக்கும். 




 

Thursday 18 August 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


வாத்தியங்கள் இன்னிசை முழங்கின. பக்தர்கள் பாபாவுக்கு ஜெயஜெயகோஷம் கர்ஜித்தனர். இவ்வாறு பக்தர்களின் கூட்டம் நடந்துசென்றபோது அதிகாரக் கோலேந்திகள் அவ்வப்பொழுது ஜெயகோஷத்தில் பிரேமையுடன் கலந்துகொண்டனர்.

ஹரிநாமமும் அவ்வப்பொழுது கர்ஜிக்கப்பட்டது. பக்தர்களின் சம்மேளனம் சேகண்டி, மிருதங்கம், ஜால்ரா இவற்றின் ஒலிகளுக்கேற்ப நடைபோட்டுச் சென்றது.

ஊர்வலம் தெருமுனையை அடையும் சமயத்தில், ஆனந்தமாக ஜெயஜெயகோஷம் போட்டுகொண்டு சாயிக்கு முன்னால் செல்லும் பஜனை கோஷ்டி நிற்கும்.

சேகண்டிகள், ஜால்ராக்கள், டோலக்குகள் போன்ற வாத்தியங்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து ஒலிக்கப் பக்தி பாவத்துடன் பாடப்பட்ட பஜனை இசையின் ஆரவாரம் உச்சகட்டத்தை எட்டும். சாயி நாம கோஷம் இவற்றையும் மீறி ஒலிக்கும்.

பஜனை இசையால் கிளர்ந்த ஆனந்தம் நிரம்பியவர்களாய் இருமருங்கிலும் ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் ஆண்களும் பெண்களும் எழுப்பும் சாயி நாம கோஷம் வானைப் பிளக்கும்.

அவர்களுக்கு மேலிருந்த வானமே இசையால் நிறைந்தபோது மக்கட்கூட்டம் அகமகிழ்ச்சியால் பொங்கியது. இவ்விதமாகச் சாவடி ஊர்வலம் அனைவரும் கண்டு அனுப்பிவைக்கவேண்டிய கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. அந்த விழாக்கோலத்திற்கும் சோபைக்கும் ஈடிணையே இல்லை.

சாவடியின் முன்பாக பாபா நின்றபோது அவருடைய திருமுகத்தின் சோபை, உருக்கிய பொன் போன்றும், உதயகாலத்திலும் அஸ்தமனகாலத்திலும் வானை நிரப்பும் சூரியனுடைய பிரபையைப் போன்றும் செந்நிற ஒளி வீசியது.

அந்நேரத்தில் அவருடைய திருமுகத்திலிருந்து வீசிய ஒளி உதயசூரியனின் பிரபையை ஒத்திருந்தது. இக் காட்சி, பிரபஞ்ச சக்தியே அவருடைய திருமுகத்தில் ஒளியாக வெஸ்ஸியது போன்றிருந்தது. இந்த லாபத்தை யாராவது விட்டுவிடுவார்களா என்ன?

அந்த சமயத்தில் அவரை தரிசனம் செய்தவர்கள் தன்யர்கள். அவர் வடக்கு நோக்கி யாரையோ கூப்பிடுபவரை போல ஒருமுனைப்பட்ட மனத்துடன் நின்றபோது அவருடைய திருமுகம் செந்நிறத்தில் ஜொலித்தது.

இன்னிசை வாத்தியங்களின் முழக்கத்திற்கு நடுவே மஹராஜ் ஆனந்தம் நிரம்பியவராகத் தம்முடைய வலக்கையை மேலும் கீழுமாக மீண்டும் மீண்டும் ஆட்டுவார்.

பக்தர்களில் சிரேஷ்டராகிய (தலை சிறந்தவராகிய ) ஹரி சீதாராம் தீக்ஷிதர் ஒரு வெள்ளித்தட்டு நிறையப் பூக்களை வைத்துக்கொண்டு பாபாவின் மேல் மறுபடியும் மறுபடியும் பூமாரி பொழிவார்.

இவ்வாறாக, காகாசாஹெப் தீக்ஷிதர் 'குலால்' (சிவப்பு வர்ணாப் பொடி) கலந்த ரோஜாக்களை பிரேமையுடன் பாபாவின் சிரத்தின்மீது மீண்டும் மீண்டும் பொழிவார்.

குலால் கலந்த ரோஜாக்களை அவர் பொழியும்போது கஞ்சிராக்களும் ஜால்ராக்களும் சேகண்டிகளும் பேரிகைகளும் ஒருசேர ஒலித்து ஆரவாரம் செய்யும். 




Thursday 11 August 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

வில் போன்று வளைந்தும் வட்டமாகவும் பலவிதமான வடிவமைப்புகளில் அமைந்த, சிறிய மற்றும் பெரிய கொம்புகள் ஊதப்படும். சிலர் எக்காலம் ஊதினர். சிலர் ஜால்ராவாலும் சிலர் சேகண்டியிலும் தாளம் போட்டனர். கைத்தாளம் போட்டுகொண்டு வந்தவர்கள் அநேகம்.

மிருதங்கங்களையும் வீணைகளையும் 'ஜன்ஜன்' என்றொலித்துக்கொண்டு ஆண்களும் பெண்களும் பிரேமையுடன் வரிசைவரிசையாகப் பஜனையுடன் சேர்ந்து ஊர்வலமாக நடந்தனர். சாயி நாம கோஷம் வானைப் பிளந்தது.

சிலர் பதாகைகளை (விருதுகொடிகளை) நிலைதவறாது கவனமாகப் பிடித்துக்கொண்டு ஊர்வலத்தில் நடந்தனர். சிலர் கருடன் சித்திரம் வரையப்பட்ட கொடிகளை ஏந்திப் பெருமையுடன் நடந்தனர். இவ்வாறாக, மக்கள் அனைவரும் சந்தோஷமாக பஜனை பாடிக்கொண்டும் நடனமாடிக்கொண்டும் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

சகல ஜனங்களும் மிக்க மகிழ்ச்சியுடன், பறக்கும் பதாகைகளுக்கும் உரத்த மேளதாளச் சத்தத்திற்கும் கொம்புகளின் சத்தத்திற்கும் சியாமகர்ண செய்த குளம்படிச் சத்தத்திற்கும் ஜெய கோஷச்  சத்தத்திற்கும் இடையே, ஊர்வலமாகச் சென்றனர்.

இவ்வளவு ஆரவாரத்திற்கும் இன்னிசை வாத்தியங்களின் பேரொலிக்கும் நடுவே பாபா மசூதியை விட்டுக் கிளம்புவார். அவர் படியை மிதித்தவுடன் வாயில்காப்போர் பாபாவுக்கு கட்டியங்கூறுவர்.

சேகண்டிகளும் மிருதங்கங்களும் கஞ்சிராக்களும் பக்கவாத்யங்களாக ஒலிக்க, சிலர் வீணை வாசித்தனர்; சிலர் சப்லாகட்டையால் தாளம் போட்டனர்; பக்த மண்டலி பஜனை பாடியது. பக்த சம்மேளனம் பிரேமையினால் பொங்கியது.

பல பக்தர்கள் பதாகைகளையும் கொடிகளையும் ஏந்திக்கொண்டு ஆனந்தமாக ஊர்வலத்தில் நடந்து வந்தபோது, சிலர் பாபாவின் இருபக்கங்களிலும் சவரியால் (சாமரத்தால்) தலைக்குமேல் விசிறிக்கொண்டு வந்தனர்.

சிலர் முன்னோடிகளாகச் சென்று ஒற்றையாகவும் இரட்டையாகவும் நடைவிரிப்புகளை விரித்தனர். பாபா விரிப்பின்மீது மெதுவாக நடந்து சென்றார். சிலர் அவருடைய கைகளை பிடித்துக்கொண்டனர். சிலர் சவரியால் அவருக்கு விசிறினர்.

தாத்யா சாஹேப் இடைக்கையைப் பிடித்துக்கொள்வார். மகால்சாபதி வலக்கையைப் பிடித்துக்கொள்வார். பாபு சாஹேப்  ஜோக் ஒரு பெரிய குடையை பாபாவின் தலைக்குமேல் உயரமாகப் பிடித்துக்கொள்வார். இவ்வாறு பாபா சாவடியை நோக்கி ஊர்வலமாக செல்வார்.

சியாமகர்ண என்ற பெயர்கொண்ட தாமிரவர்ணக் குதிரை எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு கால்களில் கட்டிய சதங்கைகள் 'ஜன்ஜன்' என்று ஒலிக்க வழிவகுத்துக்கொண்டு நடந்துசெல்லும்.

அதிகார கோலேந்திகள் அவ்வப்பொழுது சாயி நாம கோஷம் செய்துகொண்டு முன்னால் சென்றனர். குடையேந்துபவர் பெரிய குடையொன்றை ஏந்திச் சென்றார். சிலர் சவரிகளை ஏந்திச் சென்றனர். 




Thursday 4 August 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

சிலர் சேகண்டியைக் கையில் எடுத்துக்கொள்வர்; சிலர் சப்பளாக்கட்டையால் கைத்தலம் போடுவர். சிலர் மிருதங்கத்துடனும் வேறு சில கஞ்சிராவுடனும் பஜனையில் சேர்ந்துகொள்வர். இவ்வாறாக, பஜனை கோலாகலமான கூட்டிசையாக அமையும்.

சமர்த்த சாயி தம்முடைய காந்தசக்தியால் இரும்பு உலோகமான பக்தர்களை அவர்கள் அறியாதவாறு இழுத்தார்.

தீவட்டி ஏந்துபவர்கள் முற்றத்தில் தங்களுடைய தீவட்டிகளைத் தயார் செய்துகொள்வர்.  சிலர் பல்லக்கை அலங்கரிப்பதில் ஈடுபட்டிருப்பர். வாயிலில் வாயில்காப்போர் ஜெயகோஷமிட்டுக் கட்டியங்கூறுவர்.

மக்கள் கூடுமிடம் மாவிலைத் தோரணங்களாலும் உயர்ந்து பறக்கும் கொடிகளாலும் அலங்கரிக்கப்படும். சிறுவரும் சிறுமியரும் புத்தாடைகளையும் ஆபரணங்களையும் அணிந்துகொண்டு மகிழ்ச்சியுடன் ஜம்பமாக நடமாடுவர்.

மசூதியைச் சுற்றி வரிசைவரிசையாக தீபங்கள் ஏற்றிவைக்கப்படும். 'சியாமகர்ண' என்ற பெயர்கொண்ட அருமையான குதிரை பூரணமாகச் சிங்காரிக்கப்பட்டு வாயிலில் தயாராக நின்றுகொண்டிருக்கும்.

தாத்யா பாடீல் தம்முடைய நண்பர்களுடன் திடீரென்று வந்து, பாபாவுக்கு அருகில் அவருடன் கிளம்புவதற்குத் தயார் நிலையில் உட்கார்ந்துகொள்வார்.

பாபா தாம் கிளம்புவதற்குத் தயாராகிவிட்டாலும், தாத்யா பாடீல் வரும்வரை தாம் இருக்குமிடத்திலேயே உட்கார்ந்துகொண்டு காத்திருப்பார்.

தாத்யா பாடீல் பாபாவின் அக்குளுக்குக் கீழ் கைகொடுத்து எழுந்திருப்பதற்குக் கைலாகு கொடுத்த பிறகுதான், பாபா சாவடிக்குச் செல்வதற்கு கிளம்புவார்.

தாத்யா பாடீல் பாபாவை மாமாவென்று அழைத்தார். அவர்களுடைய பரஸ்பர பிரேமை அவ்வாறு இருந்தது. அவர்களிடையே நிலவிய நெருக்கமான உறவிற்கு ஈடினையே இல்லை.

உடலின் மேல் எப்பொழுதும் அணியும் கப்னி, அக்குளில் இடுக்கப்பட்ட சட்கா, கைகளில் புகையிலையும் சிலீமும், தோளின்மேல் ஒரு துணி.

பாபா இவ்வாறு தயாரானவுடன் தாத்யா பாடீல் அவருக்கு ஒரு ஜரிகைக்காரை போட்ட அழகான சால்வையை அணிவிப்பார்.

சுவரோரமாக விறகுகுச்சிகள் ஒரு கட்டாக இருக்கும். பாபா தமது வலக்கால் கட்டைவிரலால் அதை அப்பொழுதுக்குப் பின்னுக்குத் தள்ளிவிடுவார்.

உடனே தமது வலக்கையால் ஜுவாலையை அணைத்துவிடுவார். அதன் பிறகு சாவடிக்குப் போகக் கிளம்புவார்.

சாயி கிளம்பும்போது இன்னிசை வாத்தியங்கள் முழங்க ஆரம்பிக்கும். தீவட்டிகளும் சந்திரஜோதிவாணங்களும் நான்கு பக்கங்களிலும் ஏற்றப்படும். 




Thursday 28 July 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


கரும்பைச் சக்கையாய்ப் பிழிவது போன்ற ஆயாசம் தரும் விவரங்கள் தற்பொழுது போதும்! நமக்கு உடனே வெள்ளம் வேண்டும்! முன்னரே குறிப்பறிவிக்கப்பட்ட ரசமான கதையைக் கேட்க எல்லாரும் ஆவலாக இருக்கிறீர்கள்.

கேட்பவர்களின் இந்த உணர்வை நன்கு அறிந்த நான், நான் சொல்லப்போகும் அற்புதமான கதையை அவர்கள் கவனத்துடன் கேட்கும் வகையிலும் அவர்களுடைய ஆர்வம் மழுங்காத வகையிலும் கதாம்சம் இல்லாத பொதுவான தத்துவ விவரணத்தை இப்பொழுது நிறுத்திக்கொள்கிறேன்.

பாமரனும் மந்தமதி படைத்தவனுமாகிய நான் சொற்களைக் கோர்த்துச் செய்யுள் படைக்கும் திறமை பெற்றவனில்லை. நான் எழுதுவது, என்னுடைய பேனாவை அவருடைய கையால் பிடித்துக்கொண்டு சாயி என்னை எழுதவைப்பதுவே.

சாயி எனக்கு புத்தியைக் கொடுத்திராவிட்டால், அவருடைய சரித்திரத்தை எழுத நான் யார்? ஒரே அவருடைய கதையைச் சொல்லி என்னிடமிருந்து எழுதி வாங்கிக்கொள்கிறார்.

நான் ஏற்கெனவே உறுதியளித்தபடி, சாவடி, கண்டி, பிரசாத விநியோகம் இவற்றைப்பற்றிய கதையை இப்பொழுது தொடர்வோமாக. கதையைக் கவனத்துடன் கேளுங்கள்.

சம்பந்தப்பட்ட கதைகள் ஏதாவது ஞாபகத்திற்கு வந்தால் அவற்றையும் சொல்கிறேன். விவரணத்தைக் கவனமாகக் கேளுங்கள்.

சாயியின் அற்புதமான கதைகள் பாக்கியமளிப்பவை. கேட்பதால் ஏற்படும் விளைவுகளும் பாக்கியமளிப்பவை. மனத்தில் சிந்திக்கச் சிந்திக்க நம்முடன் பிறந்த நற்குணங்கள் மேலோங்கும். சாயிபாதங்களில் சத்பாவமும்  வளரும்.

இப்பொழுது நாம் முதலில் சாவடி வர்ணனை செய்வோம். அலங்கார அணிவகுப்புத் திருவிழாவைபற்றிச் சொற்சித்திரம் ஒன்று வரைவோம். ஒருநாள் விட்டு ஒருநாள் நியமமாக பாபா சாவடியில் உறங்கினார்.

ஒருநாள் மசூதியில் உறங்கினர்; மறுநாள் சாவடியில் உறங்கினார். மஹாசமாதி அடையும்வரை பாபா இரவில் உறங்கும் கிரமம் இவ்வாறு இருந்தது.

பின்னர், 1909 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பத்தாம் தேதியிலிருந்து சாவடி வழிபாடும் பஜனையும் பூஜையும் தொடங்கின.

சாவடியில் நடந்த திருவிழாவை என் புத்திக்கு எட்டியவாறு விவரிக்கிறேன். சாயியின் கிருபை இதற்குத் தேவையான அருள்வெளிபாட்டைத் தந்து என்னுடைய முயற்சியைப் பூரணமாகப் பலனுள்ளதாகச் செய்யும்.

சாவடியில் உறங்கும் முறைநாளன்று பஜனை மண்டலி மசூதிக்கு வரும். பிற்பகல் வேளையிலிருந்தே சபாமண்டபத்தில் பஜனை ஆரம்பித்துவிடும்.

பின்புறத்தில், துளசி பிருந்தாவனத்திற்கு இடப்பக்கத்தில் ஒளிவீசும் ரதம் நிற்கும். பாபா முன்னால் அமர்ந்திருப்பார். மத்தியில் பஜனை பாடும் பக்தர்கள் அமர்ந்திருப்பர்.

ஹரிபஜனையில் ஈடுபாடுகொண்ட ஆடவரும் பெண்டிரும் நேரத்தோடு வந்து சபாமண்டபத்தில் தம் தம் இடங்களில் அமர்ந்துகொள்வர். 




Thursday 21 July 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


அகண்டமாக இச் சரித்திரம் படிக்கப்படும் வீடுகளில் திருமகள் நித்யவாஸம் செய்வாள். சப்தாஹமாகப்  (ஏழு நாள்களுக்குள் ஒரு சுற்று படித்து முடித்தல்) படிப்பவர்களின் தரித்திரம் பறந்தோடும்.

இவ்வாறு நான் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டா. ஏனெனில், என் சோ உங்களுக்கு சமுசயங்களை (ஐயங்களை) விளைவிக்கலாம். என்னுடைய, வாய்மூலமாக சாயியே இதைச் சொல்கிறார். அஆக்வே, இது விஷயத்தில் அனாவசியமான கற்பனைகளையும் சந்தேகங்களையும் தூக்கியெறியுங்கள்.

சகலமான நற்குணங்களின் சுரங்கமும் பக்தர்களுக்கு கைவல்ய பதவியை (முக்தியை) அளிப்பவருமான சாயியின் கதையை பக்தர்கள் இப்பொழுது கேட்கவேண்டும். அவருடைய கதைகள் கலியுகத்தின் பாவங்களை அழிக்கும்.

ஓ, ஞானிகளின் சரித்திரங்களுக்குமுன், சொர்க்கத்தின் சுகங்கள் எம்மாத்திரம்? உடனுக்குடன் பலனளிக்கும் சுவாரசியமான இக் கதைகளைக் கேட்பதை விடுத்து, யார் அந்த சுகங்களை சீந்துவார்?

இன்பமும் துன்பமும்  மனத்தின் விகாரங்கள், சத்சங்கம் நம்மை இந்த நிலைக்குமேல் இட்டுச்செல்கிறது. நம்முடைய மனத்தை சுகமோ துக்கமோ இல்லாத பிரபஞ்ச உணர்வுடன் சத்சங்கம் ஒன்றுசேர்க்கும்.

துறவி தனிமையில் காணும் சுகத்தையும் பக்தன் பக்தியில் காணும் சுகத்தையும் தேவலோகத்து இந்திரனோ பூலோகத்து சக்கரவர்த்தியோ யுகமுடிவுவரை முயன்றாலும் அடையமுடியாது.

பிராரப்த கர்மத்தினால் (முன்ஜன்ம வினைகள்) விளையும் சுகத்தையும் துக்கத்தையும் அனுபவித்தே தீரவேண்டும். கர்மத்தை அனுசரித்தே புத்தியும் வேலை செய்யும்! ஆயினும் விதியால் நிர்ணயிக்கப்பட்டதையும்  பக்தன் சுலபமாக தவிர்த்துவிடலாம்.

பிராரப்த கர்மத்தின் விளைவுகளிலிருந்து பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் விடுபடமுடியாது. அவசியம் நடந்தே தீரவேண்டிய நிகழ்ச்சிகளிலிருந்து தப்புவதற்கு வழியேதும் இல்லை.

துக்கங்கள் எவ்வாறு வேண்டப்படாதவையோ, அவ்வாறே சுகங்களும் எதிர்பார்க்கப்படாதவை! முன்ஜன்ம வினைகளால் ஒரு மனிதனுக்கு என்னென்ன நடக்கபோகின்றன என்பது ஞானிகளுக்கு முன்கூட்டியே தெரியும்!

அகண்டமாக அவருடைய நாமத்தை ஜபம் செய்வதே நமது விரதமும் தவமும் தானமும், அவ்வப்பொழுது ஷிர்டிக்கு பிரயாணம் செய்வதே நமது தீர்த்த யாத்திரை.

சாயி, சாயி என்று நாமஸ்மரணமும் செய்வதே நமது மந்திரமும் அனுஷ்டானமும் தியானமும் புரசரணமும். ஆகவே, அவரிடம் அனன்னியமாக சரணடையுங்கள்.

கள்ளங்கபடமற்ற பிரேமைகளுடன் ஒருமித்த மனத்துடனும் அவரைப் பூஜை செய்து பாருங்கள். அவர் செய்யும் விவரிக்கமுடியாத அற்புதங்களை மனத்துள்ளே அனுபவியுங்கள். 




Thursday 14 July 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


தேவையானவை என்னவென்றால், கடமையைச் செய்தும் தூய்மை தரும் சடங்குகளை செய்தும் கிடைக்கும் பலமும், பிறந்ததிலிருந்தே செய்யும் ஆன்மீக அப்பியாசங்களால் விளையும் விவேகபுத்தியுந்தான்.  பயிற்சின்றி சித்தம் சுத்தமடையாது; மனம் தூய்மையடையாது; ஞானம் பிறக்காது.

நிர்மலமான சித்தத்தை விருத்தி செய்துகொள்ளாவிட்டால் ஆத்மஞானம் பிறக்காது. ஆகவே, தன்னை அறிந்த நிலையை அடையும்வரை பக்திமார்க்கத்தை கைவிடலாகாது.

நான்கு முக்திநிலைகள் என்னும் கலசங்களுக்குமேல் துறவென்னும் கொடி உயரப் பறக்குமாறு ஆத்மஞானமாகிய கோயிலை எழுப்புவதற்கு  பகவானின்மீது பக்தியென்பதே அஸ்திவாரம்.

நாய்களும் பன்றிகளும் மலத்தைத் தின்றுவிட்டு இரவுபகலாக குப்பைமேட்டில் புரளுகின்றன. அவையும் விஷயபோகங்ளை அனுபவிக்கின்றன. மனிதப்பிறவி எடுத்த பிறகும் நாம் அவற்றைப் போலவே செயல்படுவது முறையா?

மனித தேகத்தில் வாழும்போது, கடமைகளைச் செவ்வனே செய்தும் சுயதர்ம அனுஷ்டானங்களை செய்தும் தவம் செய்தும் மனத்தைத் தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். தூய்மையான மனம் அகண்டமான பிரம்ம சித்தியை அளிக்கும்.

'சாதுக்களுக்கு சேவை செய்வது முக்தி மார்க்கத்தின் வீடு; சிற்றின்பம் நரகத்தின் நுழைவாயில்'. பூஜைக்குரிய ஆன்றோர்களின் இந்த வாக்கு எப்பொழுதும் சிந்தனையில் வைக்கத்தக்கது.

எப்பொழுதும் நன்னெறியில் நடந்து உயிரைக் காப்பதற்கு மட்டும் உணவுண்டு வீடும் குடும்பமும் வேண்டாவென்று ஒதுக்கி வாழும் சாது தன்னியராவார்.

எவர்களெல்லாம் கண்களையும் சிமிட்டாமல் சாயியைபற்றிச் சிந்தனை செய்கிறார்களோ, அவர்களெல்லாம் அற்புதமான அனுபவத்தைப் பெறுகிறார்கள். அவர்களிடம் விசுவாசம் ஏற்பட்டு ஏற்பட்டு சாயி அவர்களின் மேல் தியானம் செய்கிறார்.

குரு நாமஸ்மரணம்  மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், குருவும் பக்தஸ்மரணம்  செய்கிறார்! தியானம் செய்பவர், தியானம் செய்யப்படுபவருடன் ஒன்றிவிடுகிறார்! இருவரும் பூரணமாகத் தம்மை மறந்துவிடுகின்றனர்.

'நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்குத்தான் தெரியும். நானோ இரவுபகலாக உங்களையே நினைத்துக்கொண்டிருக்கிறேன்." இது பாபாவின் பிரேமை பொதிந்த திருவாய்மொழி; பலருக்கு ஞாபகமிருக்கும்.

நமக்கு ஞானக்கதைகள் ஏதும் வேண்டா. இந்த சாயியின் போதியே (தினமும் பாராயணம் செய்யும் நூலே) நமக்குத் போதுமானது. எத்தனையோ பாவங்கள் நம் தலையில் இருந்தாலும் சங்கடங்களிலிருந்து விடுவிப்பவர் அவரே.

தினமும் முழுமையாகப் பாராயணம் செய்யமுடியாவிட்டாலும், குருபக்தி சம்மந்தப்பட்ட அத்தியாயங்களையாவது தினமும் காதால் கேட்டு இதயத்தின் ஆபரணமாக அணிந்துகொள்ள வேண்டும்.

ஒரு நாளின் எப்பகுதியிலாவது தினமும் இந்தச் சரித்திரத்தைப் படிப்பவருக்கு ஸ்ரீஹரி குருராஜருடன் சேர்ந்து காட்சியளிப்பார். 




Thursday 7 July 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

சாயியே அவருடைய பார்க்கும் விஷயமாக அமைந்துவிட்ட பிறகு அவர் வேறெதையும் நோக்குவாரா? பார்க்குமிடங்களிலெல்லாம் அவருக்கு சாயியே தெரிவார். அவருக்கு இவ்வுலகில் சாயி இல்லாத இடமே இல்லாமல் போய்விடும்.

சாயியின் நாமத்தை வாயிலும், பிரேமையை இதயத்திலும் தரித்து, அவர் எப்பொழுதும் சாந்தமாகவும் க்ஷேமமாகவும் இருப்பார். ஏனெனில், சாயியே அவரை ரட்சிப்பார்.

செவிச்செல்வ விஷயத்திலும் இதுவே கதி. காதுகளுக்கு சாயியைத் தவிர வேறு கேள்வியே இல்லை. மூக்கும் சாயியின் பரிமளத்தால் நிறையும்; நாக்கிலும் சாயி நாமத்தின் இனிமையான சுவையே ஊறும்.

சாயியின் புன்னகை தவழும் முகம் எவ்வளவு அற்புதமானது! அப் புன்னகை அளித்த சுகம் எவ்வளவு தூய்மையானது! சாயியின் திருமுகத்தை நேரில் பார்த்தவர்களும் அமிருதத்தை ஒத்த அவருடைய திருவாய்மொழியைக் கேட்டவர்களும் மஹாபாக்யம் பெற்றவர்கள்!

மங்களங்களின் உறைவிடமும், சுகத்திற்கும் சாந்திக்கும் பிறப்பிடமும், விவேகமும் வைராக்கியமும் நிறைந்தவருமான சாயி எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருந்தார்.

வயிறு நிரம்பப் பாலைக் குடித்தபிறகும் கன்று தாயிடமிருந்து பிரிவதற்கு விரும்பாது. கன்றைத் தாயிடமிருந்து பிரிக்கக் கயிறு கொண்டுதான் கட்டவேண்டும். அதுபோலவே, நம்முடைய மனத்தை உலக இன்பங்களிலிருந்து பிரித்து, குருபாதங்களில் கட்டிவிடவேண்டும்.

குருவின் கிருபையையும் காதலையும் பெறுவதற்கு அவருடைய பாதகமலங்களை வழிபடுங்கள். ஒவ்வொரு கட்டத்திலும் அவர் அருளும் நலந்தரும் போதனையை ஏற்பதற்கு இதயத்தில் இடம் செய்துகொள்ளுங்கள்.

இந்திரிய சுகங்களை யதேச்சையாக அனுபவிக்கும் போதுங்கூட உள்ளுக்குள்ளே எப்பொழுதும் சாயிபிரீதி இருக்கட்டும். ஏனெனில், அதுவே உலகியல் விஷயங்களுக்கும் ஆன்மீக விஷயங்களுக்கும் அபயமளிக்கும்.

கால்கள் முதலாக வெளிவந்து பிறந்தவரின் கண்களில், சித்திகள் பெற்ற மந்திரவாதியின் மையைப் பூசினால், அவருக்கு மறைந்திருக்கும் புதையல்களும் கண்ணுக்குப் புலப்படும். அதுபோலவே, குருவின் பாதத்துளிகள் கண்களில் பட்டவருக்கு ஞானமும் விஞ்ஞானமும் மலரும்.

சித்தர்களுக்கு எந்தெந்த லக்ஷ்ணங்கள் (சிறப்பியல்புகள்) உண்டோ, அவையே சாதகர்களின் பயிற்சிமுறையாக அமைய வேண்டும். கடுமையான பயிற்சியும் நீண்டகாலப் பிரயத்தனமும் செய்பவரே வெற்றியடைகிறார்.

நெய் பாலுக்குள் இருக்கத்தான் செய்கிறது. ஆயினும், பாலைக் காய்ச்சி அது ஆறிய பின், புளித்த மோரை உறையாக ஊற்றாவிட்டால் மோரும் கிடைக்காது; வெண்ணையும் கிடைக்காது. முறையாகச் செயலாற்றி மோர் கிடைத்த பின்பும், நெய் கிடைப்பதற்கு மேலும் செயல்பட வேண்டும்.

மோரைக் கடையாமல் வெண்ணெய் கிடைக்காது. வெண்ணெயையும் அடுப்பிலேற்றி பதமாகக் காய்ச்சினால்தான் சுவை மிகுந்த நெய் கிடைக்கும்.


 

Thursday 30 June 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"பூரணமான சிரத்தையும், தைரியம் சேர்ந்த பொறுமையுமே உமையுடன் இணைந்த மகேசுவரன். அவர்களுடைய அருட்கரம் தலையில் படும்வரை உலகத்தையே ஆடையாக அணிந்தவனும் நம் ஹிருதயவாசியுமான ஆண்டவன் கண்ணுக்குப் புலப்படமாட்டான்.

"பொறுமையும் நிட்டையுள்ள விசுவாசமும் சிறந்த ஐசுவர்யங்களை அளிக்கும்" மேற்கொண்டது. அமோகமான வீரியம் கொண்ட வார்த்தைகளை உடையவரும் குருமார்களில் தலைசிறந்தவருமாகிய சாயிநாதரின் திருவாய்மொழியாகும்.

கண்ணுக்குத் தெரியும் இப் பிரபஞ்சம் ஓர் மாயை என்பதையும், பிரத்யக்ஷமாக அனுபவிக்கப்பட்டபோதிலும் கண்விழித்தவுடன் காணாமற்போகும் கனவைப் போன்றது என்பதையும் அவசியம் ஒத்துக்கொள்ளவேண்டும்.

நம்முடைய புத்திக்கு அவ்வளவு தூரந்தான் எட்டும்; அதற்குமேல் கேட்டது. நாம் ஆத்மாவை அறிந்துகொள்வதும் அவ்வளவே. உண்மை எது என்பதை புத்தியால் அறிந்துகொள்ளமுடியாது. அதை உணரும் சக்தி ஆத்மாவுக்குத்தான் உண்டு.

இருக்கிறது என்னும் குணாதிசயமோ, இல்லை என்னும் குணாதிசயமோ, இரண்டுமே இல்லாததும் லிங்க (ஆண்/பெண்) பேதம் இல்லாததையும் எந்த குணமும் இல்லாததும் எங்கும் நிறைந்ததும் ஒளியால் ஒளியினுள்ளும் பலவிதமாக வர்ணிக்கப்பட்டதும் - குரு ரூபத்தில் இருக்கிறது.

ஆத்மா எந்த குணாதியசம் இல்லாதது; மூப்பிற்கும் ஜனன மரணத்திற்கும் அப்பாற்பட்டது; புராணமானது; சாசுவதமானது; என்றும் அழிவில்லாதது;

நித்தியமானது; பிறக்காதது; புராதானமானது; விண்வெளியைப் போல் எங்கும் நிறைந்தது; ஆரம்பம் இல்லாதது; இடையறாதது; வளர்ச்சியோ மாறுதலோ இல்லாதது.

சொல்லுக்கு அப்பாற்பட்டதும் உருவமில்லாததும் ஆரம்பமில்லாததும் முடிவில்லாததும் அளக்கமுடியாததும் அழிவில்லாததும் வாசனையோ ருசியோ இல்லாததும் கறைபடாததுமான ஒன்றின் சொரூபத்தை யாரால் வர்ணிக்கமுடியும்?

இவ்வகையான நிர்குணமான ஆத்மாவை அஞ்ஞானத்தால் அறியமுடியாதபோது அஞ்ஞானத்தை ஞானத்தால் விலக்குங்கள். ஆத்மா சூனியம் என்று மட்டும் எப்பொழுதும் சொல்லிவிடாதீர்கள்.

ஸ்ரீசாயியின் சொந்தச் செல்வமான அந்தப் பரமஹம்ச நிலை எப்பேர்பட்டது! காலம் அதை ஒரு கணத்தில் திருடிக்கொண்டு போனபிறகு அதை மறுபடியும் பார்க்கமுடியுமா?

மனைவி, மக்கள், செல்வம் ஆகியவற்றால் பந்தப்பட்ட சாதாரண இல்லற பக்தனை விட்டுவிடுங்கள். அனைத்தையும் துறந்த யோகிகளும் சாயிதரிசனத்திற்கு வந்து பாதகமலங்களில் மூழ்கினர்.

ஆசை, வினையாற்றல் ஆகிய இவ்வுலக பந்தங்களிலிருந்து விடுபட்டவரும், தேகம் குடும்பம் போன்ற உலகியல் பாசங்களிலிருந்து முழுமையாக விடுபட்டவருமாகிய பக்தர் தன்யராவார் (சகல பேறுகளையும் பெற்றவராவார்)

 


 

Thursday 23 June 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

புத்திதான் ஆசைகளுக்கு இடமளிக்கறது. ஆகவே, புத்தி அழிந்துபோகும்போது ஆத்மா எழும்புகிறது; அழியாத இடத்தை அடைந்துவிடுகிறது.

அஞ்ஞானம், மாயை, ஆசை, செயல் இவைதான் மரணத்தின் முக்கியமான வழிமுறைகள். இவையனைத்தும் அணைந்துபோகும்போது உலகவாழ்வின் பந்தங்களும் அறுந்துவிடுகின்றன.

மேகங்கள் விலகியவுடன் சுயம்பிரகாசியான சூரியன் ஒளிர்வதுபோல், பந்தங்கள் அறுந்து விழுந்தவுடன் ஆத்மா எந்த முயற்சியுமின்றித் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

'இந்த சரீரமே நான்; இது என்னுடைய செல்வம்'. - இதற்குத்தான் திடமான தேகாபிமானம் என்று பெயர். இதுதான் முடிச்சுகளுக்குக் காரணம். இதுதான் மாயையால் விளையும் துக்கங்களுக்கும் காரணம்.

இந்த தேகம் ஒருமுறை விழுந்தவுடன் கர்மவிதையால் இன்னொரு தேகத்தை ஏற்றுக்கொள்கிறது. இந்தத் தடவையும் கர்மவிதை முழுமையாக அழிக்கப்படாவிட்டால் மற்றுமொரு ஜன்மம் ஏற்படுகிறது.

மறுபடியும் விதை மரமாகிறது. பூர்வஜென்ம வாசனை என்னும் விதை புதுப்புது தேகங்களை ஒவ்வொரு தடவையும் அளிக்கிறது. இந்தச் சக்கரம் பூர்வஜென்ம வாசனைகள் அழியும் வரை முடிவில்லாமல் சுழன்றுகொண்டேயிருக்கிறது.

ஆசைகள் வேரோடு அழிக்கப்பட்டவுடன் இதயத்தின் முடிச்சுகள் அவிழ்ந்து விடுகின்றன. அப்பொழுதுதான் மனிதன் மரணமிலாப் பெருவாழ்வை அடைகிறான். இதுவே வேதாந்த (உபநிஷதங்கள் தரும்) உபதேசம்.

தர்மம், அதர்மம், இரண்டையுமே கடந்த நிலைக்கு விரஜ நிலை (ஆசைகளைக் கடந்த நிலை) என்று பெயர். அஞ்ஞானமும் ஆசைகளும் அழிக்கப்பட்ட நிலையில் மரணத்திற்கு எந்தவிதமான சக்தியும் இல்லாமல் போகிறது.

பூர்வஜென்ம வாசனைகளால் விளையும் ஆசைகளை அறுப்பதே பிரம்மானந்தத்தை அடையும் வழி. இந்த நிலையை எழுத்தால் விவரிக்கமுடியாது; ஆயினும் அதை எழுதி விவரிக்க முயல்கிறோம். பேச்சால் வர்ணிக்கமுடியாது; ஆயினும் அதை வாய்ச்சொல்லால் வர்ணிக்க  முயல்கிறோம்.

முழுமுதற்பொருளை நன்கு அறிந்துகொள்வதே வேண்டாத விஷயங்களுக்கெல்லாம் ஒரு முடிவு; மனத்தில் விளைந்த அனைத்து ஆசைகளின் நிறைவேற்றம். இதுவே சுருதி (வேதங்கள்), ஸ்மிருதி (வாழ்க்கை நெறிக் கோட்பாடுகள்), இவை இரண்டின் பிரமாணம்.!

பிரம்ம ஞானத்தை அடைந்தவனே பரவுலகத்தை அடைந்தவன். அது மட்டுமே கடைமுடிவாக பிரம்மத்துடன் ஒன்றிய ஆனந்தத்தை அடையும் மார்க்கம். இதைவிட உயர்ந்த நிலை வேறெதுவும் உண்டோ? தன்னை அறிந்தவன் சோகத்தை கடந்தவன் அல்லனோ?

அஞ்ஞான இருளை மூலமாகக் கொண்ட சம்சாரக்கடலை பிரம்ம ஞானம் என்னும் ஒரே உபாயத்தால்தான் கடக்கமுடியும். அதுவே அனைத்துப் பேறுகளையும் பெரும் சாதனை மார்க்கம். 





Thursday 16 June 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

சிரேயஸை (ஆன்மீக மேன்மை) அளிக்கும் ஞானமே கட்டாயமாக அடையவேண்டிய மெய்யான ஞானம். எது கேவலம் பிரேயஸை (உலக வாழ்வில் உழலுதல்) அளிக்கிறதோ அதற்கு அவித்யாஅல்லது அஞ்ஞானம் என்று பெயர்.

மனித வாழ்க்கையின் மிகப் பெரிய பயம் மரணம் பற்றியதுதான். இந்த பயத்திலிருந்து விடுபட்டு பயமற்ற நிலை பெறுவதற்கு 'உள்ளது ஒன்றே'என்ற அத்வைத ஞானத்தை அளிக்கும் குருவின் இருபாதங்களையும் கெட்டியாகப் பற்றிக்கொள்ளவேண்டும்.

எங்கு 'இரண்டுண்டு' என்னும் பிழையான கருத்து நுழைகிறதோ அங்கு பயமும் நுழைந்துவிடும். ஆகவே, பேதம் பாராத குருவின் திருவடிக்கு சேவை செய்தால், பயமென்பது லவலேசமும் இருக்காது.

தூய அன்பு என்னும் சந்தனத்தை அவருடைய நெற்றியில் இடுங்கள். எளிமையான விசுவாசம் என்னும் பீதாம்பரத்தை அவருக்கு ஆடையாக அணிந்த இறைவனைத் தம் பக்தர்களுக்கு காட்டிக்கொடுப்பார்

அஷ்டபாவ நிலையில் பெருகும் கண்ணீரால் அவரைக் குளிப்பாட்டுங்கள். திடமான சிரத்தையென்னும் சிம்மாசனத்தில் அவரை எழுந்தருளச் செய்யுங்கள். அவர் உடனே முகம் மலர்வார்.

பக்தி என்னும் மேகலையை இடுப்பில் அணிவித்து அவரை உங்களுக்கே சொந்தமாக்கிக்கொள்ளுங்கள். உங்களிடம் இருப்பவை அனைத்தையும் அவருக்கு பிரீதியுடன் சமர்ப்பித்து ஆரத்தி சுற்றுங்கள்.

இல்லாத பொருளை அழிக்கமுடியாது; இருக்கும் பொருளைத்தான் அழிக்க முடியும். கல்லால் அடிபட்டபானை உடையும்போது அதனுடைய உருவந்தான் இல்லாமற்போகிறது.

பானையின் இருக்கும் தன்மை சிறிதளவும் அழிவதில்லை. ஏனெனில், உடைந்த பாகங்களுக்கு மறுபடியும் பானையாக ஆகும் சக்தி இருக்கிறது.

ஆகவே ஒரு பொருளை அழிக்கமுடியுமா என்பது அதனுடைய இருக்கும் தன்மையையே சார்ந்திருக்கிறது. அதுபோலவே எந்த மரணமும் சூனியத்தில் முடிவதில்லை.

காரணம் இன்றி விளைவேதும் இல்லை. இதை எல்லா விஷயங்களிலும் அனுபவத்தால் காண்கிறோம். உருவநிலையில் இருப்பது அருவநிலைக்கு மாறினாலும், சத்தியத்தின் சம்பந்தத்தை விட்டுவிடுவதில்லை.

சூக்கும நிலையிலேயே பல படிகள் இருப்பது இதைத் தெளிவாக்குகிறது. பூதவுடல் அழிந்துபோன பின்பும் சூக்கும சரீரம் தொடர்ந்து வாழ்கிறது!

சூக்கும சரீரமும் மறையும்போது அதைவிடச் சூக்குமமான நிலை தொடர்கிறது. அந்த நிலையில் ஞானேந்திரியங்களும் மனமும் புத்தியும் இன்பங்களைத் துய்க்கும் சக்தியை இழந்துவிடுகின்றன.

தாத்பர்யம் (மூலக்கருத்து) என்னவென்றால், புத்தியும் ஓய்ந்துபோகும் நிலையில் உருவமுள்ளது உருவமில்லாமல் போக்கியது, அப்பொழுதும் ஆத்மா அணைந்துபோவதில்லை; சுயமாகவே பிரகாசித்துக்கொண்டிருக்கிறது.