valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 23 August 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

மாளிகைச் சாமான்களையும் சேகரித்துகொண்டுவந்து, பக்தியுடன் ஒரு சிறப்பான நைவேத்தியம் சமைத்தார். தக்ஷிணையையும் செய்துகொண்டார்.

நைவேத்தியம் தயாரானவுடன் எல்லாப் பண்டங்களையும் ஒரு மூங்கில் தட்டில் வைத்து பாபாவுக்கு சமர்ப்பணம் செய்யப்புகுந்தபோது, தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, நடந்ததனைத்தையும் கனவே என்று அறிவித்தார்.

தாம் ஷிர்டிக்கு இதற்கென்றே சென்று, கனவில் சமர்ப்பித்த பண்டங்களை நேரிடையாகவே சமர்ப்பிக்க வேண்டும் என்று காப்டன் ஹா டே நினைத்தார்.

ஆனால், அவர் அப்பொழுது குவாலியரில் இருந்ததால், பம்பாயில் இருந்த நண்பருக்கு (ஹரி சீதாராம் தீக்ஷிதருக்கு )கடிதம் எழுதினார். கனவில் நடந்த சம்பவத்தை விவரித்து அவரை ஷிர்டிக்கு போகுமாறு வேண்டினார்.

பணம் மணியார்டர் மூலமாக வருமென்றும் பணத்திற்கு ஏற்றவாறு தாம் கனவில் சேகரித்த மளிகைச் சாமான்களை வாங்கவேண்டுமென்றும், முக்கியமாக, எப்பாடுபட்டாவது உயர்ந்த தரமான அவரைக்காய்களை வாங்கவேண்டுமென்றும் கடிதத்தில் எழுதியிருந்தார்.

மீதிப்பணம் ஷிர்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு மற்றப் பண்டங்களுடன் சேர்க்கப்பட்டு தக்ஷிணையாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். பாதங்களை நமஸ்காரம் செய்து, பிரசாதம் கேட்டு வாங்கிக் குவாலியருக்கு அனுப்ப வேண்டும்.

மணியார்டர் வந்து சேர்ந்த உடனே நண்பர் ஷிர்டிக்கு சென்றார். இதர மளிகைச் சாமான்களை சுலபமாக வாங்கிவிட்டார்; அவரைக்காய்தான் எங்குமே கிடைக்கவில்லை. திடீரென்று ஒரு காய்கறிக் கூடை வந்துசேர்ந்தது!

கூடையைத் தலையில் சுமந்துவந்த பெண்மணி உடனே அழைக்கப்பட்டார். கூடையைத் திறந்து பார்த்தால், அதுவரை எங்கே தேடியும் கிடைக்காத அவரைக்காய் இருந்தது. கூடியிருந்தவர் எல்லாரும் மிகுந்த ஆச்சரியமடைந்தனர்.

எல்லாப் பண்டங்களும் மசூதிக்கு கொண்டுவரப்பட்டு பயபக்தியுடன் பாபாவுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டன. பாபா அவற்றை நிமோன்கரிடம் ஒப்படைத்தார். நிமோன்கர் அவற்றை மறுநாள், உணவாகச் சமையல் செய்து நைவேத்தியமாக சமர்ப்பணம் செய்தார்.

மறுநாள் பாபா சாப்பிட உட்கார்ந்தார். ஆனால், சாதத்தையோ பருப்பையோ தொடவில்லை. எல்லாரும் ஆச்சரியப்படும் வகையில் காய்கறி பதார்தத்தையோ முதலில் எடுத்தார்.

பாபா உண்டது காய்கறிகளையே; அவரைக்காய் பதார்த்தையோ வாயில் இட்டுக்கொண்டார். காப்டன் ஹாடே இந்த விருத்தாந்தத்தை கேட்டுப் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

ஹாடேவின் மனதில் என்ன பாவமும் இருந்ததோ அதுவே அனுபவமாக மலர்ந்தது. இப்பொழுது பின்வரும் அற்புதமான கதையைக் கேளுங்கள். பக்தர்களை மகிழ்விப்பதற்காக சாயி எவ்வளவு லாவகமாகவும் இனிமையாகவும் வளைந்து கொடுத்துச் செல்லங்கொடுத்தார் என்பதை இது காட்டும்.