valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 1 February 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

சத் குருவிடம் சரணடைந்தவர்கள் அவருடன் ஒன்றி விடுவர். உப்புப் பொம்மை சமுத்திரத்தில் குளிக்கச் சென்றால் திரும்பி வருமோ!

ஜீவாத்மா உலககத்தின் சுக துக்கங்களை அனுபவிக்கிறது. உலக போகத்தை அளிப்பவன் இறைவனே ஆயினும், மோட்சத்தை அளிக்க வல்லவர் சத் குருவே. அவரே ஆத்மாக்களை ஒன்றுபடுத்தும் சக்தியின் களஞ்சியம்.

ஒரே சமயத்தில் சகலவிதமான சிருஷ்டிகளையும் பார்க்கக் கூடிய தெய்வ திருஷ்டியை (பார்வையைக்) கிருபை ஏற்படும்போது குரு வழங்குவார்.

ஹேமாட் சாயியை சரணடைகிறேன்; தேகாபிமானத்தை சாயி பாதங்களில் ஒப்படைத்து விடுகிறேன். எப்பொழுதும் என்னை மனவொன்றிப்பு உடையவனாகவும் ஆசைகளில் இருந்து விடுபட்டவனாகவும் வைத்திருக்கும்படி இதயபூர்வமாக பிரார்த்திக்கிறேன். 

அடுத்த இரண்டு அத்தியாயங்களில் சாயி மஹராஜ் ஹாஸ்யமும் பரிஹாசமும் நிரம்பிய விருந்தை அளிப்பார். அவருடைய அற்புதமான லீலைகளை கேளுங்கள்.

லீலைகள், மேலெழுந்த பார்வைக்கு விநோதமாகவும் நகைச்சுவை மிகுந்ததாகவும் தெரிந்தாலும், சிறந்த போதனை அளிக்கக் கூடியவை. பாவமுள்ள பக்தர் கவனத்துடன் அதை பாராயணம் செய்தால் பரம சுகங்களை அடைவர்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும் ! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, "ஸ்ரீ சமர்த்த சாயி சத்சரிதம்' என்னும் காவியத்தில், 'பக்தர்களின் பால் லீலைகள்' என்னும் இருபத்து மூன்றாவது அத்தியாயம் முற்றும்.

                         ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

                                                  சுபம் உண்டாகட்டும்.