valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Wednesday 28 March 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

சுதாமனின் பதிலைக் கேட்டு சர்வ வியாபியான பகவான் ஸ்ரீகிருஷ்ணன், "ஓ, அப்படியா! எனக்கும் அம்மாதிரியே கனவொன்று வந்தது!-

"மற்றொருவருக்கு உரியதை ஒருவர் தின்று கொண்டிருந்தபொழுது, என்ன தின்கிறீர் என்று உடையவர் கேட்டார். தின்று கொண்டிருந்தவர் எரிச்சலடைந்து, 'ஆ, நான் இதைத் தின்கிறேன் - இந்த மண்ணைத் தின்கிறேன்' என்று பொய் சொன்னார். பளிச்சென்று 'அப்படியே ஆகட்டும் ' என்று பதில் வந்தது. -

"ஆனால் தாதா! இதெல்லாம் ஒரு கனவுக்கு காட்சிதான். என்னை விட்டுவிட்டு நீ எப்பொழுதாவது எதையாவது தின்பாயா? என்ன தின்கிறாய் என்று உன்னைக் கேட்டபொழுது நான் கனவு நிலையில் இருந்தேன் போலும்".

சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்திற்கு வருவதற்குமுன் ஸ்ரீகிருஷ்ணன் புரிந்த லீலைகளை சுதாமன் அறிந்திருந்தால், இம்மாதிரியான பெருங்குற்றத்தை செய்து அதன் விளைவாக பிற்காலத்தில் கஷ்டத்தை அனுபவித்திருக்கமாட்டான்.

இதன் விளைவு சாதாரணமாதா என்ன? இல்லவேயில்லை! அவர் கொடுமையான வறுமையில் வாட நேர்ந்தது. ஆகவே, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் தாம் மாத்திரம் தின்பவர்கள் இதை நினைவில் வைக்க வேண்டும்.

சுதாமர் ஒரு பக்தர்; ஸ்ரீகிருஷ்ணரின் நண்பர். ஆயினும், தார்மீக நெறியில் இருந்து சிறிது புரண்டதற்காகவே உலக வாழ்வில் வறுமையில் உழல வேண்டியதாயிற்று.

அதே சுதாமர் (குசேலர்), தம் மனைவி கஷ்டப்பட்டுச் சேகரித்த ஒரு பிடி அவளை ஸ்ரீகிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்தபோது, பரமாத்மா மனம் மகிழ்ந்து சுதாமாருக்கு சகல சௌபாக்கியங்களையும் செல்வங்களையும் அளித்தார்.

இப்பொழுது, மகத்தான போதனையை உள்ளடக்கிய காதை ஒன்றைச் சொல்கிறேன்; கேளுங்கள். அது ஆரம்பித்தில் விநோதமாகவும் நகைச்சுவையுள்ளதாகவும் இருப்பினும், முடிவில் சிறந்த போதனையை அளிக்கும்.

சிலருக்கு, அறநெறிப் போதனைகள் பிடிக்கும்; சிலருக்குத் தர்க்கமும் யுக்தியான வாதங்களும் பிடிக்கும்; இன்னும் சிலர் நகைச்சுவையையும் நையாண்டியையும் விரும்புவர். எல்லாருமே மகிழ்ச்சியாக இருப்பதை விரும்புகின்றனர் அல்லரோ?

இதுவும் ஒரு வகையில் ஹாஸ்யமும் கேலியும்தான். பிடிவாதக்காரர்களான ஒரு பெண்மணிக்கும் ஒரு பெரிய மனிதருக்கும் இடையே சாயியின் தர்பாரில் ஒரு தண்டா (சச்சரவு) எழுந்தது. கடைசியில் இந்தத் தண்டா யார் மீதும் பழி ஏற்படாதவாறு சுமுகமாகத் தீர்த்துவைக்கப்பட்டது.

இக்கதை பரம சுவாரசியமானது; கேட்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பக்தையும் பக்தரையும் சச்சரவு செய்தபொழுது கேலியும் சிரிப்பும் உல்லாசமும் உச்சத்தை எட்டின.

அண்ணா சிஞ்சணிகர் என்று எல்லாராலும் அழைக்கப்பட்ட தாமோதர் கனச்யாம் பாபரே என்ற பெயர் கொண்ட பக்தரொருவர் இருந்தார். இவர் பாபாவிடம் எல்லையற்ற பிரேமை வைத்திருந்தார்.