ஷீர்டி சாயி சத்சரிதம்
சிவபூஜை செய்வதில் மேகா மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். பாபா அவருக்கு சிவலிங்கம் அளித்து அவருடைய பக்தியை திடப்படுத்தினார். சாயியின் லீலை அளவிடற்கரியது!
இந்த கதை ஒன்றுதானா! இம்மாதிரியான கதைகள் அபரிதமாக உள்ளன. அவையனைத்தையும் சொல்லப் புகுந்தால், இக் காவியம் அளவுக்கு மீறி விஸ்தாரமானதாக ஆகிவிடும். ஆகவே, கதை கேட்பவர்களே, என்னை மன்னித்துவிடுங்கள்!
ஆயினும் நீங்கள் மென்மேலும் கேட்க ஆர்வம் காட்டுவதால், அடுத்த அத்தியாயத்தில் இம்மாதிரியான கதை இன்னுமொன்று சொல்கிறேன். நீங்கள் இதைவிட அற்புதமான சாயி லீலைகளைக் கேட்டு மகிழ்வீர்கள்.
சாயி பாதங்களில் சரணமடைந்து, ஹேமாட் உங்களை சாயி சரித்திரத்தை கேட்கும்படி செய்கிறேன். கேட்பவர்களின் பிறவிப் பயம் அழியும்; எல்லாத் தொல்லைகளும் துரிதமாக நிவாரணம் அடையும்.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'தெய்வீகக் காட்சிகள்' என்னும் இருபத்தெட்டாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீ சத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
சிவபூஜை செய்வதில் மேகா மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். பாபா அவருக்கு சிவலிங்கம் அளித்து அவருடைய பக்தியை திடப்படுத்தினார். சாயியின் லீலை அளவிடற்கரியது!
இந்த கதை ஒன்றுதானா! இம்மாதிரியான கதைகள் அபரிதமாக உள்ளன. அவையனைத்தையும் சொல்லப் புகுந்தால், இக் காவியம் அளவுக்கு மீறி விஸ்தாரமானதாக ஆகிவிடும். ஆகவே, கதை கேட்பவர்களே, என்னை மன்னித்துவிடுங்கள்!
ஆயினும் நீங்கள் மென்மேலும் கேட்க ஆர்வம் காட்டுவதால், அடுத்த அத்தியாயத்தில் இம்மாதிரியான கதை இன்னுமொன்று சொல்கிறேன். நீங்கள் இதைவிட அற்புதமான சாயி லீலைகளைக் கேட்டு மகிழ்வீர்கள்.
சாயி பாதங்களில் சரணமடைந்து, ஹேமாட் உங்களை சாயி சரித்திரத்தை கேட்கும்படி செய்கிறேன். கேட்பவர்களின் பிறவிப் பயம் அழியும்; எல்லாத் தொல்லைகளும் துரிதமாக நிவாரணம் அடையும்.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'தெய்வீகக் காட்சிகள்' என்னும் இருபத்தெட்டாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீ சத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.