ஷீர்டி சாயி சத்சரிதம்
திடீரென்று பாபா கோபாவேசம் கொண்டார். குழுமியிருந்த மக்களை பார்த்து உறக்கச் சொன்னார், "இந்த சந்நியாசியை விரட்டியடியுங்கள். இவருடைய சங்காத்தமே நமக்கு வேண்டாம்".
சந்நியாசியோ புதியவர்; பாபாவின் சுபாவம் தெரியாதவர். மனத்தில் அடி வாங்கியபோதிலும் பக்தர்கள் செய்த சேவையைப் பார்த்துக்கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தார்.
அது காலை தர்பார் நேரம். மக்கட்கூட்டத்தில் மசூதி நிரம்பி வழிந்தது. பக்தர்கள் கொண்டுவந்த பூஜை திரவியங்களும் அவர்கள் செய்த உபச்சாரங்களும் சந்நியாசிக்குப் பெருவியப்பை அளித்தன.
சில பக்தர்கள் பாபாவின் பாதங்களைக் கழுவிக் கட்டைவிரலிலிருந்து புனித நீரை எடுத்துக்கொண்டனர். சிலர் அப் புனித நீரைத் தேக்கரண்டியினால் அருந்தினர். சிலர் அதைக் கண்களில் பூசிக்கொண்டனர். அனைவரும் சுத்தமான பக்தியுடன் சேவை செய்தனர்.
சிலர் அவருக்குச் சந்தானம் பூசினார். வேறு சிலர் அத்தர் போன்ற வாசனை திரவியங்களை பூசினர். அனைவருமே, பிராமணர் , பிற்படுத்தப்பட்டோர், இதர ஜாதியினர் என்னும் பாகுபாடுகளையும் கட்டுப்பாடுகளையும் அறவே துறந்து சேவை செய்தனர்.
பாபா கோபம் காட்டியிருந்தாலும் சந்நியாசியின் மனத்தில் அநுராகம் (காதல்) பொங்கியது! அவர் இடத்தை விட்டு எழுந்திருக்கவோ நகரவோ இல்லை!
அவர் ஷீர்டி வந்துசேர்ந்த இரண்டு நாள்களுக்குள்ளாகவே கிராமத்தில் அவருக்குத் தாயார் தீவிரமாக நோய்வாய்பட்டிருந்ததாக கடிதம் வந்தது. சந்நியாசி சோகமுற்றார்.
தம்முடைய கிராமத்திற்கு திரும்பிச் சென்று தாயாரைக் காணவேண்டுமென்று அவர் விரும்பினார். ஆனால், பாபாவின் அனுமதியின்றி போகமுடியாது.
சந்நியாசி, கையில் கடிதத்துடன் மசூதிக்குச் சென்று பாபாவிடம் தாயாருடைய நிலைமையைத் தெரிவித்து வீடு திரும்புவதற்கு அனுமதி வேண்டினார்.
"சமர்த்த சாயி மஹாராஜரே! என் மனம் தாயாரைக் காணாத துடிக்கிறது. இந்த யாத்திரீகனின் மீது கருணை காட்டுங்கள். இன்முகத்துடன் எனக்கு அனுமதி தாருங்கள்".
அவர் ஓடி வந்து பாபாவின் பாதங்களை பிடித்துக்கொண்டு, "எனக்கு அனுமதியளித்துக் கிருபை செய்வீர்களா? என் தாயார் பிராணனைத் தொண்டையில் வைத்துக்கொண்டு தரையில் படுத்துக்கிடக்கிறார் போலும்.-
"தாயார் எனக்காக காத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. நான் போய்ப் பார்த்தால் அவருடைய வேதனை குறையும்; முடிவும் அமைதியாக நேரும்."
சந்நியாசியின் ஆயுட்காலமே முடியப்போகிறது என்பதை அந்தர் ஞானத்தால் அறிந்த சமர்த்த சாயி அவரிடம் என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள்.
"தாயாரிடம் இவ்வளவு பாசம் வைத்திருக்கும் நீர் ஏன் சந்நியாசம் ஏற்றீர்? உலகியல் பந்தங்களும் காவி உடைக்கும் சரிப்பட்டு வராதே. காவி உடைக்குக் களங்கம் கற்பித்துவிட்டீரே!-
திடீரென்று பாபா கோபாவேசம் கொண்டார். குழுமியிருந்த மக்களை பார்த்து உறக்கச் சொன்னார், "இந்த சந்நியாசியை விரட்டியடியுங்கள். இவருடைய சங்காத்தமே நமக்கு வேண்டாம்".
சந்நியாசியோ புதியவர்; பாபாவின் சுபாவம் தெரியாதவர். மனத்தில் அடி வாங்கியபோதிலும் பக்தர்கள் செய்த சேவையைப் பார்த்துக்கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தார்.
அது காலை தர்பார் நேரம். மக்கட்கூட்டத்தில் மசூதி நிரம்பி வழிந்தது. பக்தர்கள் கொண்டுவந்த பூஜை திரவியங்களும் அவர்கள் செய்த உபச்சாரங்களும் சந்நியாசிக்குப் பெருவியப்பை அளித்தன.
சில பக்தர்கள் பாபாவின் பாதங்களைக் கழுவிக் கட்டைவிரலிலிருந்து புனித நீரை எடுத்துக்கொண்டனர். சிலர் அப் புனித நீரைத் தேக்கரண்டியினால் அருந்தினர். சிலர் அதைக் கண்களில் பூசிக்கொண்டனர். அனைவரும் சுத்தமான பக்தியுடன் சேவை செய்தனர்.
சிலர் அவருக்குச் சந்தானம் பூசினார். வேறு சிலர் அத்தர் போன்ற வாசனை திரவியங்களை பூசினர். அனைவருமே, பிராமணர் , பிற்படுத்தப்பட்டோர், இதர ஜாதியினர் என்னும் பாகுபாடுகளையும் கட்டுப்பாடுகளையும் அறவே துறந்து சேவை செய்தனர்.
பாபா கோபம் காட்டியிருந்தாலும் சந்நியாசியின் மனத்தில் அநுராகம் (காதல்) பொங்கியது! அவர் இடத்தை விட்டு எழுந்திருக்கவோ நகரவோ இல்லை!
அவர் ஷீர்டி வந்துசேர்ந்த இரண்டு நாள்களுக்குள்ளாகவே கிராமத்தில் அவருக்குத் தாயார் தீவிரமாக நோய்வாய்பட்டிருந்ததாக கடிதம் வந்தது. சந்நியாசி சோகமுற்றார்.
தம்முடைய கிராமத்திற்கு திரும்பிச் சென்று தாயாரைக் காணவேண்டுமென்று அவர் விரும்பினார். ஆனால், பாபாவின் அனுமதியின்றி போகமுடியாது.
சந்நியாசி, கையில் கடிதத்துடன் மசூதிக்குச் சென்று பாபாவிடம் தாயாருடைய நிலைமையைத் தெரிவித்து வீடு திரும்புவதற்கு அனுமதி வேண்டினார்.
"சமர்த்த சாயி மஹாராஜரே! என் மனம் தாயாரைக் காணாத துடிக்கிறது. இந்த யாத்திரீகனின் மீது கருணை காட்டுங்கள். இன்முகத்துடன் எனக்கு அனுமதி தாருங்கள்".
அவர் ஓடி வந்து பாபாவின் பாதங்களை பிடித்துக்கொண்டு, "எனக்கு அனுமதியளித்துக் கிருபை செய்வீர்களா? என் தாயார் பிராணனைத் தொண்டையில் வைத்துக்கொண்டு தரையில் படுத்துக்கிடக்கிறார் போலும்.-
"தாயார் எனக்காக காத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. நான் போய்ப் பார்த்தால் அவருடைய வேதனை குறையும்; முடிவும் அமைதியாக நேரும்."
சந்நியாசியின் ஆயுட்காலமே முடியப்போகிறது என்பதை அந்தர் ஞானத்தால் அறிந்த சமர்த்த சாயி அவரிடம் என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள்.
"தாயாரிடம் இவ்வளவு பாசம் வைத்திருக்கும் நீர் ஏன் சந்நியாசம் ஏற்றீர்? உலகியல் பந்தங்களும் காவி உடைக்கும் சரிப்பட்டு வராதே. காவி உடைக்குக் களங்கம் கற்பித்துவிட்டீரே!-