valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 10 January 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

மாங்கர் சாயியின் திருவாய் மொழியைக் கேட்டு அவருடைய ஆணையை சிரமேற்கொண்டு, பாதங்களில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

மிகுந்த விநயத்துடன் மாங்கர் பதில் கூறினார், "உங்களுடைய தரிசனம் கிடைக்காத இடத்தில உட்கார்ந்துகொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்?-

"இங்கே தினமும் உங்களை தரிசனம் செய்வேன்; பாத தீர்த்தம் அருந்துவேன்; இயல்பாகாவே இரவுபகலாக உங்களுடைய சிந்தனையில் மூழ்குவேன். அங்கோ, நான், நான்மட்டும் ஓர் ஆண்டிப் பயலைப் போல் வாழ்வேன்.-

"ஆகவே, பாபா, நீங்கள் இல்லாமல் அங்கு நான் என்ன லாபம் பெறுவேன்! என்னை ஏன் அங்கு அனுப்புகிறீர்கள்?"

"சிஷ்யனுக்கு குருவின் வார்த்தைகளில் அணுவளவும் சந்தேகமோ கோணல் சிந்தனையோ ஏற்படக்கூடாது' என்று நினைத்த மாங்கர், அடுத்த கணமே விகற்பத்தை விடுத்து, சங்கற்பம் செய்துகொண்டார்.

மாங்கர் கூறினார், "பாபா, என்னை மன்னித்துவிடுங்கள். என்னுடைய எண்ணங்கள் அற்பத்தனமான புத்தியிலிருந்து எழுந்தவை. என்னுடைய சந்தேகங்களைப்பற்றி  நானே வெட்கப்படுகிறேன். எனக்கு இந்த சந்தேகம் வந்திருக்கவேகூடாது.-

"நான் உங்களுடைய நாமத்தை சதா ஜபம் செய்பவன்; ஆக்ஞயை சிரமேற்கொள்பவன். உங்களுடைய அருள் சக்தியால் நான் அந்த கோட்டையிலும் சந்தோஷமாக இருப்பேன். -

"அங்கும் உங்களையே தியானம் செய்வேன்; உமது கருணை பொங்கும் உருவத்தையே மனத்திரையில் நிறுத்துவேன். உங்களைப்பற்றிய நினைத்துக்கொண்டிருப்பேன்.-

"உங்களிடம் அனன்னியமாக(வேறெதிலும் நாட்டமில்லாத) சரணடைந்து, வருவதையும் போவதையும் உங்களுடைய கையில் ஒப்படைத்துவிட்ட பிறகு, நான் ஏன் எதைப்பற்றியும் கவலைப்படவேண்டும்?-

"உங்களுடைய ஆக்ஞய்யின் சக்தியே எனக்கு அங்கும் சாந்தியளிக்கும். உங்களுடைய மகத்தான சக்தியினுள் அடைக்கலம் புகுந்த நான் ஏன் வீணாகக் கவலைப்படவேண்டும்?"

சமர்த்த சாயி சனாதன பிரம்மம். அவருடைய வார்த்தைகளே நமது தலையெழுத்தாகும். எவர் அவருடைய வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறாரோ, அவர் பூரணமான அனுபவத்தை பெறுவார்.

பாபா அப்பொழுது மாங்கரிடம் சொன்னார், "மனத்தை நிலைப்படுத்திக்கொண்டு  நான் கூறுவதைக் கவனமாக கேளும். விகற்பமான எண்ணங்கள் வேண்டா.-

"உடனே கிளம்பி மசிந்தரகட்டுக்குப் போம். தினமும் மூன்று முறைகள் தியானம் செய்யும். காலக்கிரமத்தில் ஆத்மானந்தத்தால் நிரம்புவீர்".

இவ்வாறு உறுதியளிக்கப்பட்ட மாங்கர் மௌனமானார். "தீனனாகிய நான் என்ன சொல்ல முடியும்" என்று நினைத்து, கோட்டைக்குப் போவதற்குத் தயாரானார்.

மறுபடியும் சாயிபாதங்களை வணங்கிவிட்டு உதீ பிரசாதத்தையும் பெற்றுக்கொண்டு தெளிவான மனத்துடன் மச்சீந்திர பவனுக்கு கிளம்பினார். (அங்கு போய்ச் சேர்ந்தபின்)