ஷீர்டி சாயி சத்சரிதம்
ஆயினும் ஷிர்டியே அவருக்கு மத்திய கேந்திரமாக விளங்கியது. எங்கே சென்றாலும் திரும்பத் திரும்ப ஷிரடிக்கே வந்தார். கடைசியில் பரம புனிதமான ஷிர்டியிலேயே தம்முடலை உகுத்தார்.
பூர்வ புண்ணிய பலத்தால் சாயியின் பார்வைக்குட்பட்டு, அவருடைய பாதங்களில் மூழ்கி பயமே இல்லாமல் மரணத்தைச் சந்தித்த மாங்கர் மஹா பாக்கியசாலி.
தாத்யாசாஹெப் நூல்கரும் பெரும்பேறு பெற்றவர்! பக்த சிகாமணியான மேகாவும் பெரும்பேறு பெற்றவர்! இவர்கள் இருவரும் ஷிர்டியில் பஜனை பாடிக்கொண்டிருந்தபோதே உடலை உகுத்தனர்.
இறுதிச் சடங்குகளைச் சரிவர நடத்துவதில் பாபாவுக்கு இருந்த அக்கறையும் பக்தர்களிடம் பாபா வைத்திருந்த நட்புறவையும் மேகாவின் மரணம் எடுத்துக்காட்டியது. மேகா ஜென்மம் எடுத்ததன் பயனை ஏற்கெனவே அடைந்துவிட்டார்.
பக்தர்கள் புடைசூழ ஷீர்டி கிராம மக்கள் மேகாவின் உடலை தகனம் செய்யச் சென்றபோது, பாபாவும் சுடுகாடுக்குச் சென்று மேகாவின் உடலின்மேல் பூமாரி பொழிந்தார்.
மாயையின் பிடியில் சிக்கிய சாதாரண மனிதன் துக்கப்படுவதுபோல் இறுதிச்சடங்கு நடந்துமுடிந்தபோது பாபா கண்ணீர் சிந்தினார்.
பிரேமையுடன் தம்முடைய கைகளாலேயே பிரேதத்தை பூக்களால் மூடினார். கருணை மிகுந்த குரலில் துக்கத்தை ஆற்றிக்கொண்டே மசூதிக்குத் திரும்பினார்.
மானிதஜாதியைக் கைதூக்கிவிட்டு எத்தனையோ ஞானியரை பார்க்கிறோம். அனால், ஓ, சாயி பாபாவின் மகத்துவத்தை யாரால் வர்ணிக்க முடியும்!
புலி பயங்கரமான மிருகம் அன்றோ? அதற்கு மனிதர்களைப்போல் ஞானம் உண்டா என்ன? ஆனால், அதுவும் பாபாவின் பாதங்களில் சரண் புகுந்தது! பாபாவின் செயல்கள் புரிந்துகொள்ளமுடியாதவை அல்லவோ!
இது சம்பந்தமாக ஒரு ரம்மியான காதையைக் கேளுங்கள். பாபாவின் எங்கும் நிறைந்த தன்மையையும் அவர் எல்லா உயிர்களையும் சமமாக மதித்ததையும் காண்பீர்கள்.
ஷிர்டியில் ஒருசமயம் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. பாபா மஹாசாமதி அடைவதற்கு ஏழு நாள்களுக்கு முன்பு, மசூதி வாசலில் ஒரு வண்டி வந்து நின்றது.
வண்டியின் பின்புறத்தில் கனத்த இரும்புச் சங்கிலியால் கழுத்தில் பிணைக்கப்பட்டு பெரியதொரு புலி இருந்தது.
புலி ஏதோ வியாதியால் அவதிப்பட்டது. தர்வேசிகள் எல்லா உபாயங்களையும் செய்து பார்த்துவிட்டனர். கடைசியில், ஒரு ஞானியை தரிசனம் செய்வதே சிறந்த வைத்தியம் என்று தீர்மானித்தனர்.
ஆயினும் ஷிர்டியே அவருக்கு மத்திய கேந்திரமாக விளங்கியது. எங்கே சென்றாலும் திரும்பத் திரும்ப ஷிரடிக்கே வந்தார். கடைசியில் பரம புனிதமான ஷிர்டியிலேயே தம்முடலை உகுத்தார்.
பூர்வ புண்ணிய பலத்தால் சாயியின் பார்வைக்குட்பட்டு, அவருடைய பாதங்களில் மூழ்கி பயமே இல்லாமல் மரணத்தைச் சந்தித்த மாங்கர் மஹா பாக்கியசாலி.
தாத்யாசாஹெப் நூல்கரும் பெரும்பேறு பெற்றவர்! பக்த சிகாமணியான மேகாவும் பெரும்பேறு பெற்றவர்! இவர்கள் இருவரும் ஷிர்டியில் பஜனை பாடிக்கொண்டிருந்தபோதே உடலை உகுத்தனர்.
இறுதிச் சடங்குகளைச் சரிவர நடத்துவதில் பாபாவுக்கு இருந்த அக்கறையும் பக்தர்களிடம் பாபா வைத்திருந்த நட்புறவையும் மேகாவின் மரணம் எடுத்துக்காட்டியது. மேகா ஜென்மம் எடுத்ததன் பயனை ஏற்கெனவே அடைந்துவிட்டார்.
பக்தர்கள் புடைசூழ ஷீர்டி கிராம மக்கள் மேகாவின் உடலை தகனம் செய்யச் சென்றபோது, பாபாவும் சுடுகாடுக்குச் சென்று மேகாவின் உடலின்மேல் பூமாரி பொழிந்தார்.
மாயையின் பிடியில் சிக்கிய சாதாரண மனிதன் துக்கப்படுவதுபோல் இறுதிச்சடங்கு நடந்துமுடிந்தபோது பாபா கண்ணீர் சிந்தினார்.
பிரேமையுடன் தம்முடைய கைகளாலேயே பிரேதத்தை பூக்களால் மூடினார். கருணை மிகுந்த குரலில் துக்கத்தை ஆற்றிக்கொண்டே மசூதிக்குத் திரும்பினார்.
மானிதஜாதியைக் கைதூக்கிவிட்டு எத்தனையோ ஞானியரை பார்க்கிறோம். அனால், ஓ, சாயி பாபாவின் மகத்துவத்தை யாரால் வர்ணிக்க முடியும்!
புலி பயங்கரமான மிருகம் அன்றோ? அதற்கு மனிதர்களைப்போல் ஞானம் உண்டா என்ன? ஆனால், அதுவும் பாபாவின் பாதங்களில் சரண் புகுந்தது! பாபாவின் செயல்கள் புரிந்துகொள்ளமுடியாதவை அல்லவோ!
இது சம்பந்தமாக ஒரு ரம்மியான காதையைக் கேளுங்கள். பாபாவின் எங்கும் நிறைந்த தன்மையையும் அவர் எல்லா உயிர்களையும் சமமாக மதித்ததையும் காண்பீர்கள்.
ஷிர்டியில் ஒருசமயம் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. பாபா மஹாசாமதி அடைவதற்கு ஏழு நாள்களுக்கு முன்பு, மசூதி வாசலில் ஒரு வண்டி வந்து நின்றது.
வண்டியின் பின்புறத்தில் கனத்த இரும்புச் சங்கிலியால் கழுத்தில் பிணைக்கப்பட்டு பெரியதொரு புலி இருந்தது.
புலி ஏதோ வியாதியால் அவதிப்பட்டது. தர்வேசிகள் எல்லா உபாயங்களையும் செய்து பார்த்துவிட்டனர். கடைசியில், ஒரு ஞானியை தரிசனம் செய்வதே சிறந்த வைத்தியம் என்று தீர்மானித்தனர்.