ஷீர்டி சாயி சத்சரிதம்
பாதங்கள் அழிவைத் தருவனவா என்ன? வீண், வீண், வீண்; முயற்சிக்களனைத்தும் வீணாகிப் போயின!-
"திருடனுக்கு பயந்து ஒரு வீட்டில் நுழைந்தால் அந்த வீடே நம் தலையில் இடிந்து விழுமோ ! நாம் இங்கு வந்தது அதற்கொப்பானதே .-
"புலி அடித்துத் தின்றுவிடும் என்று பயந்தோடிய பசு, வழியில் கசாப்புக் கடைக்காரனிடம் மாட்டிக்கொண்டது! நமக்கு நிகழ்ந்தது இதுவே" என்று தாயார் புலம்பினார்.
வழிப்போக்கன் கடுமையான வெளியிலிருந்து தப்பிக்க மர நிழலில் ஒதுங்கியபோது மரமே வேர் அறுந்து சாய்ந்து அவன் மீது விழுந்தது போலிருந்தது அவர்களுடைய நிலைமை.
பயபக்தியுடன் இறைவனுக்கு பூஜை செய்யக் கோயிலிக்குச் சென்றவன் மேல் கோயிலே இடிந்து விழுந்தாற்போலிருந்து அவர்களுடைய நிலைமை.
ஆயினும், பாபா அவர்களுக்கு ஆறுதளித்தார், "மனத்தில் பொறுமையும் தைரியம் கொள்ளுங்கள். பையனை ஜாக்கிரதையாகத் தூக்கி எங்காவது எடுத்துச் செல்லுங்கள். அவன் மறுபடியும் உணர்வு பெறுவான். -
"பையனை நீங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். இன்னும் ஒரு நாழிகையில் (24 நிமிடங்களில்) ஜீவனுள்ளவனாவேன். அவசரப்பட்டு எக்காரியத்தையும் செய்யாதீர்கள்".
ஆகவே அவர்கள் அப்படியே செய்தனர். பாபாவின் வார்த்தைகள் உண்மையாயின. குடும்பத்துடன் பிதலே ஆனந்தமடைந்தார். கோணல் சிந்தனைகளும் சந்தேகங்களும் அடியோடு மறைந்தன.
வாடாவுக்குக் கொண்டுசெல்லப்பட்ட உடனே பையனுக்கு மறுபடியும் பிரக்ஞய் வந்தது. தாயும் தந்தையும் முதலில் நிம்மதி பெருமூச்சு விட்டனர்; பிறகு ஆனந்தமடைந்தனர்.
பின்பு, பிதலே மனைவியுடன் பாபாவை தரிசனம் செய்ய வந்தார். மிகுந்த பணிவுடன் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.
தம் மகன் பிழைத்தெழுந்ததை கண்ட பிதலே, நன்றியும் மகிழ்ச்சியும் பொங்க பாபாவின் பாதங்களை பிடித்து விட்டார். பாபா அப்பொழுது புன்னகை பூத்த முகத்துடன் கேட்டார்.
"என்ன, உம்முடைய கோணல் சிந்தனையும் சந்தேக அலைகளும் இப்பொழுதாவது அடங்கினவா? யார், முழு நம்பிக்கை வைத்து தைரியமாக பொறுமை காக்கிறாரோ அவரை ஸ்ரீ ஹரி ரக்ஷிக்கிறார். "
செல்வரும் பெருங்குடிமகனுமாகிய பிதலே, இந்த சந்தர்பத்தைப் பொருத்தமாகவும், சிறப்பாகவும் கொண்டாடினர். அனைவருக்கும் இனிப்புகளும் தின்பண்டங்களும் வழங்கினார். பாபாவுக்கு பழங்களையும் பூக்களையும் தாம்பூலத்தையும் சமர்ப்பணம் செய்தார்.
பாதங்கள் அழிவைத் தருவனவா என்ன? வீண், வீண், வீண்; முயற்சிக்களனைத்தும் வீணாகிப் போயின!-
"திருடனுக்கு பயந்து ஒரு வீட்டில் நுழைந்தால் அந்த வீடே நம் தலையில் இடிந்து விழுமோ ! நாம் இங்கு வந்தது அதற்கொப்பானதே .-
"புலி அடித்துத் தின்றுவிடும் என்று பயந்தோடிய பசு, வழியில் கசாப்புக் கடைக்காரனிடம் மாட்டிக்கொண்டது! நமக்கு நிகழ்ந்தது இதுவே" என்று தாயார் புலம்பினார்.
வழிப்போக்கன் கடுமையான வெளியிலிருந்து தப்பிக்க மர நிழலில் ஒதுங்கியபோது மரமே வேர் அறுந்து சாய்ந்து அவன் மீது விழுந்தது போலிருந்தது அவர்களுடைய நிலைமை.
பயபக்தியுடன் இறைவனுக்கு பூஜை செய்யக் கோயிலிக்குச் சென்றவன் மேல் கோயிலே இடிந்து விழுந்தாற்போலிருந்து அவர்களுடைய நிலைமை.
ஆயினும், பாபா அவர்களுக்கு ஆறுதளித்தார், "மனத்தில் பொறுமையும் தைரியம் கொள்ளுங்கள். பையனை ஜாக்கிரதையாகத் தூக்கி எங்காவது எடுத்துச் செல்லுங்கள். அவன் மறுபடியும் உணர்வு பெறுவான். -
"பையனை நீங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். இன்னும் ஒரு நாழிகையில் (24 நிமிடங்களில்) ஜீவனுள்ளவனாவேன். அவசரப்பட்டு எக்காரியத்தையும் செய்யாதீர்கள்".
ஆகவே அவர்கள் அப்படியே செய்தனர். பாபாவின் வார்த்தைகள் உண்மையாயின. குடும்பத்துடன் பிதலே ஆனந்தமடைந்தார். கோணல் சிந்தனைகளும் சந்தேகங்களும் அடியோடு மறைந்தன.
வாடாவுக்குக் கொண்டுசெல்லப்பட்ட உடனே பையனுக்கு மறுபடியும் பிரக்ஞய் வந்தது. தாயும் தந்தையும் முதலில் நிம்மதி பெருமூச்சு விட்டனர்; பிறகு ஆனந்தமடைந்தனர்.
பின்பு, பிதலே மனைவியுடன் பாபாவை தரிசனம் செய்ய வந்தார். மிகுந்த பணிவுடன் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.
தம் மகன் பிழைத்தெழுந்ததை கண்ட பிதலே, நன்றியும் மகிழ்ச்சியும் பொங்க பாபாவின் பாதங்களை பிடித்து விட்டார். பாபா அப்பொழுது புன்னகை பூத்த முகத்துடன் கேட்டார்.
"என்ன, உம்முடைய கோணல் சிந்தனையும் சந்தேக அலைகளும் இப்பொழுதாவது அடங்கினவா? யார், முழு நம்பிக்கை வைத்து தைரியமாக பொறுமை காக்கிறாரோ அவரை ஸ்ரீ ஹரி ரக்ஷிக்கிறார். "
செல்வரும் பெருங்குடிமகனுமாகிய பிதலே, இந்த சந்தர்பத்தைப் பொருத்தமாகவும், சிறப்பாகவும் கொண்டாடினர். அனைவருக்கும் இனிப்புகளும் தின்பண்டங்களும் வழங்கினார். பாபாவுக்கு பழங்களையும் பூக்களையும் தாம்பூலத்தையும் சமர்ப்பணம் செய்தார்.