ஷீர்டி சாயி சத்சரிதம்
39 . கீதை சுலோகத்திற்கு விசேஷ விளக்கம் - சமாதி கோயில் நிர்மாணம்
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி! குலதேவைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும், என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
ஷீர்டி ஒரு பாக்யம் பெற்ற கிராமம். புண்ணியபாவரான ஸ்ரீ சாயி நிர்வாணம் (முக்தி) அடையும்வரை வசித்த துவாரகமாயி பவனம், மஹா பாக்கியம் பெற்ற ஸ்தானம் (இருப்பிடம்) அன்றோ!
ஷிர்டியில் வாழ்ந்த மக்கள் அனைவரும் தன்னியர்கள். எக்காரணம்பற்றியோ அவர்களுக்காக சாயி நெடுந்தூரம் வந்தார். ஷீர்டி மக்களை அவருக்கு என்றென்றும் கடமைப்பட்டவர்களாகச் செய்துவிட்டார்.
ஷீர்டி ஆதியில் ஒரு குக்கிராமமாக இருந்தது. சாயியின் சகவாசத்தால் மகத்துவம் அடைந்தது. பின்னர் புனிதம் பெற்று க்ஷேத்திரமாக மாறியது.
ஷீர்டி வாழ் பெண்மணிகள் தன்னியர்கள் (எல்லாப் பேறுகளையும் பெற்றவர்கள்). அவர்களுடைய அனன்னியமான சிரத்தையால், மாவரைக்கும்போதும் உரலில் தானியங்களை குற்றும்போதும் குளிக்கும்போதும் சாயியின் பெருமையைப் பாடினர்.
அவர்களுடைய பிரேமை பேறு பெற்றது. அவர்கள் பாடிய கீதங்கள் மிக உன்னதமானவை. ஈடிணையற்ற அந்தப் பாட்டுகளைக் கேட்டால் மனம் பற்றுகளிலிருந்து விடுபெறும்.
கதைகேட்பவர்களின் ஆர்வத்தைத் தணிக்கும் வகையில் மனத்திற்கு விச்ராந்தி அளிக்கும் சில பாடல்களைக் கதையுடன் கலந்து தகுந்த சமயத்தில் அளிக்கிறேன்.
சாயி, நிஜாம் ராஜ்யத்தில் சாலையோரத்திலிருந்த ஒரு மாமரத்தினடியில் காணப்பட்டார். பின்னர், சற்றும் எதிர்பாராதவிதமாக தூப்கேடாவிலிருந்து ஒரு கல்யாண கோஷ்டியுடன் ஷிர்டிக்கு வந்துசேர்ந்தார்.
அந்த கிராமத்தை சேர்ந்த சாந்த்பாய் பாடீல் என்ற பெயர் கொண்ட புண்ணியவான்தான் முதன்முதலாக இந்தப் புதையலைக் கண்டுபிடித்தார். அவர்மூலம் மற்றவர்களும் சாயிதரிசனம் பெற்றனர்.
பாடீல் குதிரையை தொலைத்தது, சாயி அவருக்குப் புகைகுடிக்கச் சிலீம் கொடுத்தது, குதிரையைக் கண்டுபிடித்துக்கொடுத்தது,