valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 14 April 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"இவ்வாறாக, நான் இழந்த செல்வத்தைத் திரும்பப் பெற்ற பிறகு மகிழ்ச்சிக் கடலில் திளைத்தேன். இதன் விளைவாக நேர்த்திக்கடனை முற்றிலும் மறந்துபோனேன். செல்வத்தின் மோகத்தை வெல்வதை எளிதோ!-

"பின்னர் ஒரு சமயம் நான் குலாபா பக்கம் சென்றபோது கனவில் சாயியைக் கண்டேன். உடனே, ஷீர்டி செல்வதற்குக் கிளம்பினேன். -

"சமர்த்த சாயி தம் பயணத்தை விளக்கியவாறு, கப்பலுக்குள் நுழைவதற்கு அனுமதி கிடைக்காதது, சிப்பாயின் முயற்சியால் தடங்கல் விலகியது. இவை அனைத்தும் உண்மை.-

"இவையனைத்தும் என்னுடைய பிரச்சினைகள். கப்பல் நின்றுகொண்டிருந்த இடத்தை நான் அடைந்தபோது சிப்பாய் எனக்காக மனப்பூர்வமாக சிபாரிசு செய்தார்.-

"அதன் பிறகே, முதலில் எனக்குப் பயணம் செய்ய அனுமதி தர மறுத்த அதிகாரி இடம் கொடுத்து உதவி செய்தார்.-

அந்த சிப்பாயும் எனக்கு முன்பின் தெரியாதவர்; ஆயினும் அவருக்கு என்னைத் தெரியுமென்று சொன்னார். ஆகவே யாரும் எங்களைத் தடுக்கவில்லை. நாங்கள் சுகமாகக் கப்பலில் அமர்ந்துகொண்டோம்.

"இதுதான் கப்பலின் கதையும் சிப்பாயின் கதையும். இதெல்லாம் எனக்குத்தான் நேர்ந்தது; ஆயினும், சாயி இவற்றை தம்மேல் ஏற்றிக்கொண்டு கதை சொன்னார். -

"இந்த அற்புதத்தை நினைத்துப் பார்க்கும்போது என்னுடைய மனம் செயலிழந்து போகிறது. சாயி இந்த உலகம் முழவுதும் வியாபித்திருப்பதை நான் உணர்கிறேன்.

"இவ்வுலகில் ஓர் அணுவளவு கூட இல்லாத இடம் இல்லை. எங்களுக்கு இவ்வரசு இந்த அனுபவத்தை அளித்தாரோ, அவ்வாறே மற்றவர்களுக்கும் அனுபவங்களை அளிப்பார்.-

"நாங்கள் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? எங்களை அலாக்காக தூக்கித் தம்மிடம் கொண்டுவந்து நல்வழிப்படுத்த, நாங்கள் எவ்வளவு பாக்கியம் செய்தவர்கள்!-

"ஆஹா! என்னுடைய செல்வம் திருடுபோனதுதான் என்ன! நான் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்டதுதான் என்ன! திருடுபோன செல்வம் சிரமமின்றி திரும்பி வந்ததுதான் என்ன! நேர்த்திக்கடன் நிறைவேறிய அற்புதந்தான்  என்னே! -

"எங்களுடைய வானளாவிய பாக்கியம் என்னே! நாங்கள் அவரை இதற்குமுன் தரிசனம் செய்தது கிடையாது; அவரைபற்றிக் கேள்விப்படும் இல்லை; சிந்தனை செய்ததும் இல்லை. ஆயினும், அவர் எங்களை நினைவில் வைத்திருந்தார்; அனுக்கிரமும் செய்தார்!-

"ஆண்டாண்டாக அவருடைய கூட்டுறவில் மூழ்கி இரவுபகலாக அவருடைய பாதங்களுக்கு சேவை செய்யும் கடவுள் - பக்தர்கள் எவ்வளவு பாக்யசாலிகளாகவும் தன்யவர்களாகவும் இருக்கவேண்டும்?-