valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 17 October 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

பக்தர்களில் சிரேஷ்டமானவருக்கு தரிசனம் செய்ய வேண்டுமென்ற தாபம் எவ்வளவோ, பக்தியும் பாவமும் நிட்டையும் எவ்வளவு ஆழமோ, அதற்கேற்றவாறே அவருடைய ஆனந்த அனுபவம் விளைகிறது.

இவ்விதமாக் காகாஜி, 'ஷீர்டி தரிசனத்திற்கு எப்படிச் செல்வேன்' என்று மூளையைக் குழப்பிக் கொண்டிருந்தபோது அவருடைய விலாசத்தைத் தேடிக்கொண்டு ஷிர்டியிலிருந்து ஒரு விருந்தாளி வந்துசேர்ந்தார்!

விருந்தாளி என்ன சாமானியமான ஆளா? ஓ, இல்லவே இல்லை. இவரை பாபா மற்றவர்களைவிட அதிகமாக விரும்பினாரோ, எவருடைய பிரேமை இணையில்லாததோ, எவரிடத்தில் உயர்ந்த அதிகாரம் இருந்ததோ, அவரே விருந்தாளியாக வந்திருந்தார்!

அவருடைய பெயர் மாதவ்ராவ் தேச்பாண்டே (சாமா). அவரொருவரால்தான் பாபாவிடம் இனிமையாகப் பேசியும் புகழ்ந்தும் வெற்றி காணமுடியும். வேறெவராலும் இதைச் செய்ய இயலாது.

சதாசர்வகாலமும் இருவருக்குமிடையே அனுப்புப் பூசல்கள் நடக்கும். ஒருவரையொருவர் ஏகவசனத்தில் ('நீ, வா, போ' என்னும் ரீதியில்) பேசி சகஜமாக உறவாடுவர். பாபா மாதவராவிடம் மகனைப் போன்று பாசம் வைத்திருந்தார். வணிக்கு அப்பொழுது வந்து சேர்ந்த விருந்தாளி இவர்தான்.

குழந்தை நோயுற்றபோது, தாயார் தேவியிடம் வேண்டிக்கொண்டார், "இக்குழந்தையை உன்னுடைய பொறுப்பில் விட்டுவிடுகிறேன்; ஆக்குவதோ அழிப்பதோ உன் பாடு.-

"குழந்தை பிழைத்தெழுந்து என்னுடையதாகிவிட்டால், கட்டாயம் அவனை உன் பாதங்களில் கொண்டுவந்து போடுகிறேன்." இவ்விதமாக தேவிக்கு நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்டபின் குழந்தை நோயிலிருந்து விடுபட்டது.

வைத்தியரானாலும் சரி, இறைவனாயினும் சரி, வேலை முடிந்தவுடன் அவர்களை மறந்துவிடுகிறோம். சங்கடம் வரும்போதுதான் வேங்கடரமணன்! நிறைவேற்றப்படாமல் கிடைக்கும் நேர்த்திக்கடன் பயத்திற்கு காரணம் ஆகிறது.

நாள்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி, காலம் உருண்டது. நேர்த்திக்கடன் முழுமையாக மறந்துபோய்விட்டது. கடைசியாக, தாயார் தம் இறுதிக்காலத்தில் மாதவராவிடம் விநயமாகத் தெரிவித்தார், -

"பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தப் பிரார்த்தனையை நேர்ந்துகொண்டேன். அது தாமதமாகித் தாமதமாகி இன்றைய தினத்திற்கு வந்துவிட்டது. இவ்விதமாக இழுத்துக்கொண்டே போவது நன்றன்று. ஆகவே நீ போய் தேவியை தரிசனம் செய்துவிட்டு வா."

தேவிக்கு நேர்ந்துகொண்ட பிரார்த்தனை இன்னுமொன்றும் இருந்தது. தாயாரின் இரண்டு முலைகளிலும் கட்டிகள் தோன்றித் தாங்கமுடியாத வலியையும் துன்பத்தையும் அளித்தன.

"தாயே, உன் பாதங்களில் விழுகிறேன். இந்த வலியையும் துன்பத்தையும் நிவிர்த்தி செய்; நான் வெள்ளியால் இரண்டு முலைகள் செய்து உன் சந்நிதியில் ஆரத்தி போல் சுற்றியபின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்."