valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 24 May 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஸ்ரீராமநவமித் திருவிழாவின்போது ஷிர்டியில் இரண்டு அலங்காரமான, பெரிய, புதிய கொடிகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இதை ஷிர்டிவாழ் மக்கள் அனைவரும் அறிவர்.

இரண்டு கொடிகளில் ஒன்று நானாசாஹேப் நிமோன்கருடைய உபயம்; இரண்டாவது தாமு அண்ணாவுடையது. பக்தியாலும் பிரேமையாலும் விளைந்த இந்த நியமம் தடையில்லாமல் வருடா வருடம் நடைபெற்று வருகிறது.

தாமு அண்ணாவுக்கு இரண்டு மனைவிகள் இருந்தும் மக்கட்பேறு இல்லாமலிருந்தது. சாயியினுடைய ஆசீர்வாதத்தால் அவருக்கு ஒரு புத்திரரத்தினம் பிறந்தான்!

நன்றி தெரிவிக்கும் வகையில், ஸ்ரீராமநவமி விழாவன்று கோலாகலத்துடன்  ஊர்வலமாக எடுத்துச் செல்ல ஒரு கொடியை அளிப்பதென்று தாமு அண்ணா உறுதிபூண்டார். அந்த வருடத்திலிருந்தே கொடி எடுத்துக்கொண்டு செல்லும் வருடாந்திர திருவிழாவும் ஆரம்பித்தது.

ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் கோன்யா என்னும் தச்சு வேலை செய்பவரின் வீட்டில் செய்யப்பட்டன. அங்கிருந்து, கொடிகள் ஏந்திய ஊர்வலம் மேளதாளத்துடன் வாத்திய முழக்கங்களுடன் கிளம்பும்.

இரு நீண்ட கொடிகளும் மசூதியின் இரண்டு கோடிகளில் பதாகைகளாக (விருதுக் கொடிகளாக)கட்டப்படும். இவ்விதமாகவே ஒவ்வொரு வருடமும் திருவிழா கொண்டாடப்பட்டது.

அவ்வாறே, அங்கே குழுமிய பக்கீர்களுக்கும் திருப்தியாக உணவளிக்கப்பட்டது. இவ்விதமாக சேட்(தாமு அண்ணா) ஸ்ரீராமநவமி உற்சவத்தில் பங்கேற்றார்.

இந்த தாமு அண்ணாவின் கதையைத்தான் நான் கேட்பவர்களுக்கு நிவேதனம் செய்கின்றேன். கவனத்துடன் கேட்டால் சமர்த்த சாயியின் சக்தியை அறிவீர்கள்.

பம்பாயில் இருந்த நண்பரொருவர் தாமு அண்ணாவிற்கு பின்வருமாறு கடிதம் எழுதியிருந்தார். "நாம் இருவரும் ஒரு கூட்டுவியாபாரம் செய்வோம். நிகர லாபமாக இரண்டு லட்ச ரூபாய் கிடைக்கும் .-

"நீங்களும் நானும்  சம பங்குதாரர்களாக ஆவோம். ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் பங்கு கிடைக்கும். சீக்கிரமாக முடிவெடுத்து எனக்கு பதில் அனுப்புங்கள். இந்த பேரம் சிக்கலில்லாதது; பயத்திற்கு இடமில்லை.-

"இம்முறை பருத்தி வாங்கி விற்கலாம். சீக்கிரமாகவே விலை ஏறும். நல்ல பேரம் வரும்போது செயல்படாதவர்கள் பிறகு அதை நினைத்து வருந்துவார்கள்.-

"இம்மாதிரியான ஒரு நல்ல வாய்ப்பை நாம் நழுவவிடக்கூடாது! " அண்ணாவின் மனம் பெருங்குழப்படமடைந்தது. அவரால் இது விஷயமாக முடிவெடுக்க முடியவில்லை!

"இந்த வியாபாரத்தில் நான் நுழையலாமா? கூடாதா?" அண்ணா வியப்படைந்தார். "இறைவா! என்ன நடக்கும்? நான் என்ன செய்யட்டும்? " அவர் குழம்பிப்போனார்.

ஆயினும் தாமு அண்ணா ஒரு குருபுத்திரர் அல்லாரோ! ஆகவே, அவர் பாபாவுக்கு பின்வருமாறு ஒரு கடிதம் எழுதினார். "பாபா, எங்களுக்கென்று சுதந்திரமான மனம் ஒன்று இல்லை. தங்களுடைய குடையின் நிழலிலேயே நாங்கள் வாழ்கிறோம். -