valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 19 December 2019

ஷீர்டி சாய் சத்சரிதம்

"போய் அமைதியாக உட்காரும்; சோகம் வேண்டா, போவதா, வேண்டாவா என்று சில நாள்கள் கழித்து முடிவெடுப்போம். அதுவரை தைரியமாகவும் பொறுமையாகவும் இரும்.-

"வாடாவில் பல திருடர் இருக்கிறார்கள். கதவுகளை மூடிக்கொண்டு உஷாராக இரும். ஏனெனில் திருடர்கள் உம்மைக் கடுமையாகத் தாக்கிவிட்டு எல்லாப் பொருள்களையும் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.-

"செல்வம் என்றுமே சாசுவதுமில்லை; சரீரமோ ஒரு நீர்க்குமிழி. மரணம் எப்பொழுதுமே பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறது என்பதை அறிந்து தருமவழியில் நடப்பீராக.-

"உடல், மனைவி, மக்கள் ஆகிவரின் சம்பந்தமாக 'நான்' - 'எனது' என்ற உணர்வுகளும் அவற்றிலிருந்து விளையும் மூன்று வகையான தாபங்களும் இவ்வுலகின் அனர்த்தங்கள் (கேடுகள்).-

"இரண்டாவது வகையான அனர்த்தம் சொர்க்கத்தை சார்ந்தது. மரணத்திற்குப்பின் மக்கள் அடைய விரும்பும் சொர்க்கமே மோக்ஷத்திற்குத் தடையாகிவிடுகிறது. தலைகீழாக கீழே விழுவதற்கும் பொதுவான காரணமாகிறது. -

"சொர்க்கத்தில் புண்ணியம் சம்பாதிக்கமுடியாது. பயமில்லாத நிலையையும் அடைய முடியாது. ஏனெனில், சேர்த்து வைத்த புண்ணியம் செலவழிந்த பிறகு கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயம், சந்தேகத்துக்கு இடமில்லாமல் அங்கும் நிலவுகிறது.-

"இவ்வகையாக, இவ்வுலக வாழ்வு, மேலுலகவாழ்வு இரண்டுமே அனர்த்தங்கள் நிறைந்தவை. ஆகவே, இரண்டையுமே முழுமையாக துறப்பதே ஆனந்தப் பெருநிலையின் அஸ்திவாரம்.-

"உலக வாழ்வை வெறுத்தொதுக்கி, ஹரியின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்பவர்கள். பந்தங்களின் பிடியிலிருந்து விடுபடுகின்றனர். அஞ்ஞானமும் மாயையும் அவர்களைவிட்டு அகன்றுவிடுகின்றன. -

"ஹரிபஜனையும் நாமஸ்மரணமும் அளிக்கும் உந்துவிசை, பாவம், தாபம், துயரம் ஆகியவற்றை விரட்டிவிடும். நிறைந்த அன்புடன் தியானம் செய்தால், இறைவன் நம்மை சங்கடங்களில் இருந்து விடுவிப்பான். -

"நீர் இவ்விடம் வந்துசேர்ந்தது மிக உயர்ந்த பூர்வபுண்ணிய பலத்தாலேயே. இப்பொழுது என்னுடைய அறிவுரையைக் கேட்டு இந்த ஜன்மத்தைப் பயனுள்ளதாகச் செய்துகொள்வீராக!-

"நீர் இவ்விடம் வந்துசேர்ந்தது மிக உயர்ந்த பூர்வபுண்ணிய பலத்தாலேயே. இப்பொழுது என்னுடைய அறிவுரையை கேட்டு இந்த ஜன்மத்தைப் பயனுள்ளதாக செய்துகொள்வீராக!

"நாளையில் இருந்து பாகவதத்தை (ஸ்ரீகிருஷ்ணரின் கதையைப்) பரிசீலனை செய்யும். மனத்தையும் வாக்கையும் செயலையும் ஒருமுகப்படுத்தி, மூன்று சப்தாஹங்கள் பாராயணம் செய்யும்.-

"மற்ற விஷயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பாகவதத்தை காதால் கேளும்; அல்லது நீரே பாராயணம் செய்யும். முழுநம்பிக்கையுடன் படித்து மறுபடியும் மறுபடியும் படித்ததை ஆழமாகச் சிந்தனை செய்யும்.-