valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 8 March 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

கேள்வி, தொடும் உணர்வு, பார்வை, வாசனையறிதல் ஆகிய மற்ற நாணம் புலன்களின் விஷயத்திலும் கூட, நாக்கையும் உணவையும் பற்றிய பாபா செய்த போதனையே உண்மை. இன்று நேர்ந்த சூழ்நிலைக்கு எவ்வளவு பொருத்தமானவை பாபாவின் வார்த்தைகள்! என்ன அற்புதமான போதனை!

மனமும் புத்தியும் புலனுறுப்புகளும் உலக இன்பங்களை துய்க்க ஈர்க்கப்படும்போது முதலில் என்னை நினை. பிறகு அவற்றை அம்சம் அம்சமாக எனக்கு சமர்ப்பணம் செய்வாயாக.

இவ்வுலகம் அழியும் வரை புலன்கள் அவற்றுக்குரிய நாட்டங்களால் ஈர்க்கப்பட்டே தீரும்; இதைத் தடுக்க இயலாது. ஆனால், அந்த நாட்டங்களை குருவின் பாதங்களில் சமர்பித்துவிட்டால் அவை இயற்கையாகவே வழுவிழந்து விடும்.

காமம் எழும்போது என் விஷயமாகவே காமப்படு. கோபம் வரும்போது கோபத்தை என்மீது காட்டு. அபிமானத்தையும் (தேகத்தின் மீதுள்ள பிடிப்பையும்) துராக்கிரத்தையும் (உரிமை இல்லாத இடத்து வலிய நிகழ்த்தும் செயலையும்) பக்தர்கள் என்னுடைய பாதங்களை நோக்கியே செலுத்தட்டும்.

காமம், கோபம், தேகாபிமானம் போன்ற இயற்கையான உணர்ச்சிகள் பொங்கியெழும்போது என்னைக் குறியாக ஆக்கி அவற்றை என்மீது ஏவுக.

காலக்கிராமத்தில் ஹரி இவற்றை ஒவ்வொன்றாக அழித்துவிடுவான். இம் மூன்று விஷ அலைகளையும் (காமம், கோபம், தேகாபிமானம்) கோவிந்தன் பரிகாரம் செய்துவிடுவான்.

வேறுவிதமாகச் சொன்னால், பலாத்காரமானதும் கொடியதுமான உணர்ச்சிகள் அனைத்தும் என்னுடைய சொரூபத்தில் லயமாகிவிடும். (கலந்துவிடும்) என்னுடைய பாதங்களில் இளைப்பாறி என்னுடன் ஒன்றாகிவிடும்.

இம்மாதிரியாக அப்பியாசம் (பயிற்சி) செய்துவந்தால், மனத்தின் வேகங்களும் தீவிரமான உணர்ச்சிகளும் தாமாகவே பலமிழந்துவிடும். காலகிராமத்தில் வேருடன் அறுக்கப்படும். மனம் வேகங்களிலிருந்து விடுபட்டு விடும்.

குரு நிரந்தரமாகவே தன்னுடைய அருகில் இருக்கிறார் என்று மனம் ஆழமாக நம்ப ஆரம்பித்துவிட்ட பிறகு, மேற்சொன்ன அவலங்கள் அதை பாதியா.

இந்த நல்லொழுக்கம் வேர்விட்ட பிறகு, உலக வாழ்வின் பந்தங்கள் நசித்துவிடும். குரு உலக விஷயங்கள் அனைத்திலும் தோன்றுகிறார்; வேறுவிதமாக சொன்னால், ஒவ்வொரு உலகவிஷயமும் குருவின் உருவத்தை அனைத்து கொள்கிறது.

புலனின்பம் துய்க்க வேண்டும் என்கிற சிறிய ஆசை தோன்றும்போதே, பாபா நம்முடன் இருக்கிறார் என்ற எண்ணம், அந்த இன்பம் துய்ப்பதற்கு தகுதியுடையதா, தகுதியற்றதா என்கிற கேள்வியை மனதில் எழுப்பும்.

தகுதியற்றதும் பொருந்தாதுமான உலகவிஷயம் சகஜமாகவே நிராகரிக்கப்படும். கெட்ட பழக்கமுள்ளவன் அதிலிருந்து விடுபடுகிறான். நன்மையளிக்காத விஷயங்களில் இருந்து திரும்ப திரும்ப வெளியேறும் அப்பியாசத்தினால், மனம் தனக்கு ஒவ்வாத உலகவிஷயங்களையும் சுகங்களையும் வெறுக்க ஆரம்பிக்கும்.