ஷீர்டி சாயி சத்சரிதம்
இன்னுமொரு சிட்டுக்குருவியும் பாபாவால் நூல் கட்டி இழுக்கப்பட்டு ஷிர்டிக்கு கொண்டுவரப்பட்டது. பக்தைக்கு நேருக்கு நேராக தரிசனம் செய்யும் நல்லநேரம் வந்தபோது இது நடந்தது. அவ்வம்மையாருடைய அற்புதமான காதையைக் கேளுங்கள்.
இந்தச் சிட்டுக்குருவி ஓர் அன்பார்ந்த பெண்மணி. அவருடைய காதை மிக சுவாரஸ்யமானது. பர்ஹான்ப்பூரில் அவருக்கு ஒரு தெய்வீகக் காட்சி கிடைத்தது; அதில் சாயி மஹாராஜை பார்த்தார்.
அவர் அதற்குமுன் பாபாவைப் பிரத்தியட்சமாக தரிசனம் செய்ததில்லை. ஆயினும், பாபா தம் வீட்டு வாயிற்படிக்கு வந்து, கிச்சடி உணவு தருமாறு கேட்கின்ற காட்சியைக் கனவில் கண்டார்.
உடனே தூக்கத்திலிருந்து எழுந்து வீட்டைச் சுற்றிச் தேடிப்பார்த்தார். வெளியில் யாரும் தென்படவில்லை. எல்லாருக்கும் தம் கனவுக் காட்சியைப்பற்றி ஆவலுடன் தெரிவித்தார்.
அம்மையாரின் கணவர் அப்பொழுது பர்ஹான்ப்பூரிலேயே தபால் இலாகாவில் அதிகாரியாக வேலை பார்த்துவந்தார். பின்னர் அவருக்கு அகோலாவுக்கு பணிமாற்றம் ஏற்பட்டது. அகோலாவுக்கு மாறியவுடன் ஷீர்டி செல்வதற்கு அம்மையார் ஆயத்தம் செய்தார்.
கணவனும் மனைவியும் பக்தி பாவம் மிகுந்தவர்கள். சாயியை தரிசனம் செய்யவேண்டுமென்று பேராவல் கொண்டனர். கனவில் வந்த காட்சியை போற்றி பெருமிதம் அடைந்தனர். சாயியினுடைய லீலை இவ்வுலக நடப்பிற்கு அப்பாற்பட்டதன்றோ!
ஒரு தகுந்த நாளைத் தேர்ந்தெடுத்து இருவரும் ஷிர்டிக்கு கிளம்பினர். வழியில் கோமதி தீர்த்தத்திற்கு (கோதாவரி நதிக்கு) வந்தனம் செலுத்திவிட்டு ஷிர்டிக்கு வந்துசேர்ந்தனர்.
பிரேமையுடன் பாபாவை தரிசனம் செய்து பக்தியுடன் பூஜையும் செய்தனர். பாபாவின் பாதங்களை தினமும் சேவித்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் திருப்தியுடனும் ஷிர்டியில் தங்கினர்.
இவ்வாறு கணவனும் மனைவியும் ஷிர்டியில் ஆனந்தமாக இரண்டு மாதங்கள் தங்கினர். பாபாவும் அவர்கள் அத்தியந்த பக்தியுடன் அளித்த கிச்சடி போஜனத்தை ஏற்றுக்கொண்டதில் பரிபூரணமாகத் திருப்தியடைந்தார்.
கணவனும் மனைவியும் கிச்சடியை பாபாவுக்கு நைவேத்தியமாக அளிப்பதற்காகவே ஷிர்டிக்குப் பயணமாக வந்திருந்தனர். ஆனால், பதினான்கு நாள்கள் கடந்தும் கிச்சடியை சமர்ப்பணம் செய்யமுடியாத நிலைமையாக இருந்தது.
அப்பெண்மணிக்குத் தாம் செய்துகொண்ட சங்கற்பம் இவ்வாறு காலம் கடந்துகொண்டே போனது பொறுக்கவில்லை. ஆகவே, பதினான்காவது நாள் மதியவேளை வந்தவுடனே கிச்சடியுடன் மசூதிக்கு வந்தார்.
வந்துசேர்ந்தவுடன், பாபா தமது பக்தர்களுடன் உணவருந்த அமர்ந்துவிட்டதை அறிவிக்கும் வகையில் மசூதியில் படுதா போடப்பட்டிருந்ததை கண்டார்.
இன்னுமொரு சிட்டுக்குருவியும் பாபாவால் நூல் கட்டி இழுக்கப்பட்டு ஷிர்டிக்கு கொண்டுவரப்பட்டது. பக்தைக்கு நேருக்கு நேராக தரிசனம் செய்யும் நல்லநேரம் வந்தபோது இது நடந்தது. அவ்வம்மையாருடைய அற்புதமான காதையைக் கேளுங்கள்.
இந்தச் சிட்டுக்குருவி ஓர் அன்பார்ந்த பெண்மணி. அவருடைய காதை மிக சுவாரஸ்யமானது. பர்ஹான்ப்பூரில் அவருக்கு ஒரு தெய்வீகக் காட்சி கிடைத்தது; அதில் சாயி மஹாராஜை பார்த்தார்.
அவர் அதற்குமுன் பாபாவைப் பிரத்தியட்சமாக தரிசனம் செய்ததில்லை. ஆயினும், பாபா தம் வீட்டு வாயிற்படிக்கு வந்து, கிச்சடி உணவு தருமாறு கேட்கின்ற காட்சியைக் கனவில் கண்டார்.
உடனே தூக்கத்திலிருந்து எழுந்து வீட்டைச் சுற்றிச் தேடிப்பார்த்தார். வெளியில் யாரும் தென்படவில்லை. எல்லாருக்கும் தம் கனவுக் காட்சியைப்பற்றி ஆவலுடன் தெரிவித்தார்.
அம்மையாரின் கணவர் அப்பொழுது பர்ஹான்ப்பூரிலேயே தபால் இலாகாவில் அதிகாரியாக வேலை பார்த்துவந்தார். பின்னர் அவருக்கு அகோலாவுக்கு பணிமாற்றம் ஏற்பட்டது. அகோலாவுக்கு மாறியவுடன் ஷீர்டி செல்வதற்கு அம்மையார் ஆயத்தம் செய்தார்.
கணவனும் மனைவியும் பக்தி பாவம் மிகுந்தவர்கள். சாயியை தரிசனம் செய்யவேண்டுமென்று பேராவல் கொண்டனர். கனவில் வந்த காட்சியை போற்றி பெருமிதம் அடைந்தனர். சாயியினுடைய லீலை இவ்வுலக நடப்பிற்கு அப்பாற்பட்டதன்றோ!
ஒரு தகுந்த நாளைத் தேர்ந்தெடுத்து இருவரும் ஷிர்டிக்கு கிளம்பினர். வழியில் கோமதி தீர்த்தத்திற்கு (கோதாவரி நதிக்கு) வந்தனம் செலுத்திவிட்டு ஷிர்டிக்கு வந்துசேர்ந்தனர்.
பிரேமையுடன் பாபாவை தரிசனம் செய்து பக்தியுடன் பூஜையும் செய்தனர். பாபாவின் பாதங்களை தினமும் சேவித்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் திருப்தியுடனும் ஷிர்டியில் தங்கினர்.
இவ்வாறு கணவனும் மனைவியும் ஷிர்டியில் ஆனந்தமாக இரண்டு மாதங்கள் தங்கினர். பாபாவும் அவர்கள் அத்தியந்த பக்தியுடன் அளித்த கிச்சடி போஜனத்தை ஏற்றுக்கொண்டதில் பரிபூரணமாகத் திருப்தியடைந்தார்.
கணவனும் மனைவியும் கிச்சடியை பாபாவுக்கு நைவேத்தியமாக அளிப்பதற்காகவே ஷிர்டிக்குப் பயணமாக வந்திருந்தனர். ஆனால், பதினான்கு நாள்கள் கடந்தும் கிச்சடியை சமர்ப்பணம் செய்யமுடியாத நிலைமையாக இருந்தது.
அப்பெண்மணிக்குத் தாம் செய்துகொண்ட சங்கற்பம் இவ்வாறு காலம் கடந்துகொண்டே போனது பொறுக்கவில்லை. ஆகவே, பதினான்காவது நாள் மதியவேளை வந்தவுடனே கிச்சடியுடன் மசூதிக்கு வந்தார்.
வந்துசேர்ந்தவுடன், பாபா தமது பக்தர்களுடன் உணவருந்த அமர்ந்துவிட்டதை அறிவிக்கும் வகையில் மசூதியில் படுதா போடப்பட்டிருந்ததை கண்டார்.