valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 13 September 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

ஆனால்,  ஸ்ரீ ராம ஜன்ம உற்சவத்தைக் கொண்டாட வேண்டுமென்றால், கதா காலாட்சேபதிற்கு ஏற்பாடு செய்யப் படவேண்டுமே? இந்தக் குக்கிராமத்தில் காலட்சேபம் செய்யும் திறமையுள்ள ஹரிதாசர் எப்படி கிடைப்பார்? இது ஒரு பிரச்சினையாக இருந்தது.

பீஷ்மா இவ்வாறு சொன்னார், 'நான் கதாகாலட்சேபம் செய்கிறேன். நீங்கள் ஆர்மோனியம் வாசியுங்கள்; ராதாக்ருஷ்ணபாய் இந்நிகழ்ச்சிக்கு பிரசாதமாக சுக்குவெல்ல உருண்டை செய்துவிடுவார். -

"வாருங்கள், பாபாவிடம் போகலாம்; சுபகரமான காரியங்களில் சீக்கிரமாக செயல்படுவது சுலபமாக வெற்றியைத் தரும். -

காகா பூஜையச் செய்து கொண்டிருந்தபோது பாபாவே முதற்கேள்வியாக கேட்டார், "ஆக, வாடாவில் என்ன நடந்தது?" ஆனால் அந்நேரத்தில், சம்பத்தப்பட்ட கேள்வியை எழுப்ப வேண்டுமென்று காகாவுக்குத் தோன்றவில்லை.

உடனே பாபா கேள்வியின் உருவத்தை மாற்றி, "புவா, நீர் என்ன சொல்கிறீர்?" என்று பீஷ்மாவக் கேட்டார்.

காகாவுக்கு உடனே விஷயம் ஞாபகத்திற்கு வந்து, அவர்கள் என்ன செய்ய விரும்பினார்கள் என்பதை எடுத்துச் சொன்னார். பாபா அவர்களுடைய யோசனைக்கு அனுமதி தந்தார்; உற்சவம் நிச்சயமாகி விட்டது.

அடுத்த நாள் காலையில், பாபா லென்டிக்கு கிளம்பிய பிறகு, காலத் சேபதிற்கு வேண்டிய சம்பிரதாயமான ஏற்பாடுகளுக்கு இடையே சபாமண்டபத்தில் ஒரு தொட்டிலும் கட்டப் பட்டது.

உரிய நேரத்தில் காலத் சேபத்தை கேட்பதற்கு மக்கள் கூடினர். பாபா லென்டியிலிருந்து திரும்பிவந்ததும் பீஷ்மா காலத் சேபம் செய்வதற்கு எழுந்தார். காகா மகாஜனி ஆர்மோனிய பெட்டியின் அருகில் அமர்ந்தார். பாபா திடீரென்று காகாவை அழைத்துவரச் சொன்னார்.

'பாபா உங்களைக் கூப்பிடுகிறார்' என்று செய்தி வந்தது. காகா இதைக் கேட்டு பயந்து போனார். ஏன் தம்முடைய மனத்தில் விபரீதமான எண்ணங்கள் தோன்றுகின்றன என்று அவருக்கு புரியவில்லை; எனினும் காலட் சேபதிற்கு குந்தகம் ஏதும் நேராது என்று நம்பிக்கை கொண்டார்.

பாபாவினுடைய அழைப்பை பற்றிக் கேட்டபோது பயத்தால் காகாவின் தொடைகள் நடுங்கின. 'பாபா ஏன் இவ்வாறு மனக் கொந்தளிப்பு அடைய வேண்டும்?