ஆயினும், ஷிர்டி கிராம மக்கள் பாபாவின் அன்பார்ந்த பக்தர்கள்; அவர் மீது பந்தமும் பாசமும் கொண்டிருந்தனர். பாபாவிடமிருந்து அவ்வாறு பிரிந்திருந்தது அவர்களுக்கு முறையான செய்கையாக தோன்றவில்லை.
ஜவஹர் அலியின் பிடியில் பாபா அவ்வாறு பலமாக மாடிக் கொண்டது பற்றி கிராம மக்கள் மனத்துள் கலக்கமுற்றனர். பாபாவைத் திரும்ப பெறுவது எப்படியென்று தீவிரமாகச் சிந்தித்தனர்.
பொன்னும் அதன் காந்தியும் (பள பளப்பும் ), விளக்கும் அதன் ஒளியும் போன்று குருவும் சிஷ்யனும் பிரிக்க முடியாதவர்கள். இருவருமே இந்த ஒருமையை அனுபவிக்கிறார்கள்.
பக்தர்களின் கூட்டம் ஒன்று, எப்பாடுபட்டாவது பாபாவைத் திரும்பவும் ஷீரடிக்கு அழைத்துக் கொண்டு வரும்வரை, ஒருவரை ஒருவர் பிரிவதில்லை என்னும் திட வைராக்கியத்துடன் ஷிர்டியிலிருந்து ரஹாதா விலிருந்த இத்காவிற்குச் சென்றது.
ஆனால், பாபா இதற்கு நேரெதிரான நிலைப்பாடு எடுத்தார். "இந்தப் பக்கீர் மகா கோபி; அவரைச் சம்மதிக்க வைக்க முயற்சி செய்யாதீர்கள்; ஏனெனில், நீங்கள் அவ்வாறு செய்யின் , அவர் என்னை எப்பொழுதுமே விடுவிக்க மாட்டார். -
"நீங்கள் சீக்கிரம் இங்கிருந்து போய்விடுங்கள். அவர் கிராமத்திலிருந்து திரும்பிவரும் தருணம் வந்து விட்டது. கடுங்கோபியான அவர் உங்களைத் தீர்த்துக் கட்டி விடுவார்.
"பயங்கரமான கோபம் அவருடைய முகத்தைச் சிவக்க வைத்து விடும். போங்கள், போங்கள், உடனே இடத்தை காலி செய்து விட்டு ஷிர்டி போகும் பாதையில் நடையைக் கட்டுங்கள்".
"அடுத்ததாக என்ன செய்வது? நம்முடைய எதிர்பார்ப்புக்கு நேரெதிராக பாபா பேசுகிறாரே!" என்று அவர்கள் சிந்தித்தனர். இதன் நடுவே, பக்கீர் எதிர்பாரதவிதமாக த்ரயும்பி வந்து, அவர்களை வினவ ஆரம்பித்தார்.
"ஆக, நீங்கள் இந்த இளைஞனுக்காக வந்திருக்கிறீர்கள் அல்லீரோ? கோஷ்டியாக என்ன பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்? இளைஞனை திரும்ப அழைத்துக் கொண்டு போக வேண்டுமென்ற எண்ணமிருந்தால், அதை மறந்து விடுங்கள்; அது நடக்காத காரியம்".
ஆரம்பத்தில் இவ்விதமாக அவர் வெட்டொன்று துண்டிரண்டாக சொல்லி விட்டாலும், கடைசியில் அவரே கிராம மக்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி இவ்வாறு சொன்னார், "உங்களுடன் என்னைச் ஷீரடிக்கு அழைத்துச் செல்லுங்கள். நாமெல்லோரும் நம்முடன் இந்த பையனையும் அழைத்துக் கொண்டு போவோம்."
இவ்விதமாக பக்கீரும் கோஷ்டியுடன் திரும்பி ஷீரடிக்கு வந்தார். அவருக்கு பாபாவிடமிருந்து பிரிய மனமில்லை; பாபாவுக்கும் அவரை அனுப்பிவிட மனமில்லை. இது எப்படி சாத்தியமாயிற்று என்று யாருக்குமே புரியவில்லை!
ஜவஹர் அலியின் பிடியில் பாபா அவ்வாறு பலமாக மாடிக் கொண்டது பற்றி கிராம மக்கள் மனத்துள் கலக்கமுற்றனர். பாபாவைத் திரும்ப பெறுவது எப்படியென்று தீவிரமாகச் சிந்தித்தனர்.
பொன்னும் அதன் காந்தியும் (பள பளப்பும் ), விளக்கும் அதன் ஒளியும் போன்று குருவும் சிஷ்யனும் பிரிக்க முடியாதவர்கள். இருவருமே இந்த ஒருமையை அனுபவிக்கிறார்கள்.
பக்தர்களின் கூட்டம் ஒன்று, எப்பாடுபட்டாவது பாபாவைத் திரும்பவும் ஷீரடிக்கு அழைத்துக் கொண்டு வரும்வரை, ஒருவரை ஒருவர் பிரிவதில்லை என்னும் திட வைராக்கியத்துடன் ஷிர்டியிலிருந்து ரஹாதா விலிருந்த இத்காவிற்குச் சென்றது.
ஆனால், பாபா இதற்கு நேரெதிரான நிலைப்பாடு எடுத்தார். "இந்தப் பக்கீர் மகா கோபி; அவரைச் சம்மதிக்க வைக்க முயற்சி செய்யாதீர்கள்; ஏனெனில், நீங்கள் அவ்வாறு செய்யின் , அவர் என்னை எப்பொழுதுமே விடுவிக்க மாட்டார். -
"நீங்கள் சீக்கிரம் இங்கிருந்து போய்விடுங்கள். அவர் கிராமத்திலிருந்து திரும்பிவரும் தருணம் வந்து விட்டது. கடுங்கோபியான அவர் உங்களைத் தீர்த்துக் கட்டி விடுவார்.
"பயங்கரமான கோபம் அவருடைய முகத்தைச் சிவக்க வைத்து விடும். போங்கள், போங்கள், உடனே இடத்தை காலி செய்து விட்டு ஷிர்டி போகும் பாதையில் நடையைக் கட்டுங்கள்".
"அடுத்ததாக என்ன செய்வது? நம்முடைய எதிர்பார்ப்புக்கு நேரெதிராக பாபா பேசுகிறாரே!" என்று அவர்கள் சிந்தித்தனர். இதன் நடுவே, பக்கீர் எதிர்பாரதவிதமாக த்ரயும்பி வந்து, அவர்களை வினவ ஆரம்பித்தார்.
"ஆக, நீங்கள் இந்த இளைஞனுக்காக வந்திருக்கிறீர்கள் அல்லீரோ? கோஷ்டியாக என்ன பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்? இளைஞனை திரும்ப அழைத்துக் கொண்டு போக வேண்டுமென்ற எண்ணமிருந்தால், அதை மறந்து விடுங்கள்; அது நடக்காத காரியம்".
ஆரம்பத்தில் இவ்விதமாக அவர் வெட்டொன்று துண்டிரண்டாக சொல்லி விட்டாலும், கடைசியில் அவரே கிராம மக்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி இவ்வாறு சொன்னார், "உங்களுடன் என்னைச் ஷீரடிக்கு அழைத்துச் செல்லுங்கள். நாமெல்லோரும் நம்முடன் இந்த பையனையும் அழைத்துக் கொண்டு போவோம்."
இவ்விதமாக பக்கீரும் கோஷ்டியுடன் திரும்பி ஷீரடிக்கு வந்தார். அவருக்கு பாபாவிடமிருந்து பிரிய மனமில்லை; பாபாவுக்கும் அவரை அனுப்பிவிட மனமில்லை. இது எப்படி சாத்தியமாயிற்று என்று யாருக்குமே புரியவில்லை!
No comments:
Post a Comment