valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 12 July 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

சாயி பர பிரம்மத்தின் அவதாரம்; பக்கீரோ பிரமையே உருவானவர். ஷீரடியில் தேவி தாசரால் பரீக்ஷை செய்யப்பட்டபோது பிரமைகள் அனைத்தும் தூள் தூளாகிவிட்டன.

தேவிதாஸ் சுந்தரமான உருவமும் ஒளிவீசிய கண்களும் மனோஹரமான முகமும் படைத்தவர். ஷீரடிக்கு முதன்முதலாக அவர் வந்தபோது அவருக்குப் பாத்து அல்லது பதினொன்று வயதுதான் இருக்கும்.

ஒரு லங்கோட்டை மாத்திரம் கட்டிக்கொண்டு, இந்த பாலகன், வந்த புதிதில் மாருதி கோயிலில் தங்கினான்.

ஆப்பா பில்லும் மகால்சாபதியும் அடிக்கடி தேவி தாசரிடம் சென்றனர். காசிராமரும் மற்றவர்களும் இவருக்கு மளிகைச் சாமான்களையும் விறகையும் அளித்தனர். கொஞ்சங்கொஞ்சமாக அவருடைய முக்கியத்துவம் வளர்ந்தது.

பாபா கல்யாணக் கோஷ்டியுடன் வருவதற்கு பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பாகவே, தேவிதாசர் ஷீரடியில் தங்குவதற்கு வந்துவிட்டார்.

தேவிதாசர் ஆப்பா பில்லுக்கு கரும்பலகையில் எழுதக் கற்றுக் கொடுத்தார். வெங்கடேச தோத்திரத்தை எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்து கோஷ்டியாகப் பாராயணம் செய்ய வைத்தார். இவ்வகுப்புகளை அவர் தவறாது நடத்தினார்.

தேவிதாசர் மகா ஞானி. தாத்யாபா இவரைத் தம் குருவாகக் கொண்டார். காசிநாதரும் மற்றவர்களும் இவருடைய சிஷ்யர்களாகவும் அடியவர்களாகவும் ஆனார்கள்.

தேவிதாசர் முன்னிலையில் பக்கீர் கொண்டுவரப்பட்டார். தேவிதாசரும் பக்கீரும் சாஸ்திர ரீதியாக வாக்குவாதம் செய்தனர். தம்முடைய தவத்தின் சக்தியால் தேவிதாசர் பக்கீரை அடியோடு தோற்கடித்து விட்டார். பக்கீர் ஷிர்டியிலிருந்து விரட்டப்பட்டார்.

ஷிர்டியிலிருந்து தப்பியோடிய பிறகு, பக்கீர் வைஜாபுரிக்குச் சென்று அங்கு வாழ்ந்து வந்தார். பல வருடங்களுக்குப் பிறகு அவர் ஷீரடிக்கு வந்து சாய்நாதரை நமஸ்காரம் செய்தார்.

தாம் குருவென்றும் பாபா ஷிஷ்யரென்றும் எண்ணிய பிரமையனைத்தும் நிவர்த்தியாகி, மன்னிப்புக் கோரியதால் பக்கீர் தூய்மைடைந்து விட்டார். பாபாவும் அவரை முன்போலவே ஆதரித்தார்.

பாபவினுடைய வழிமுறைகள் இவ்வாறு ஆராய்ச்சிக்கும் காரணகாரிய விளக்கத்திற்கும் அப்பாற்பட்டவை! நேரம் வந்தபோது பிரச்சினை தீர்வு செய்யப்பட்டது. ஆனால், அதுவரி பாபா பொறுமையாக குரு சிஷ்ய உறவுக்கு மதிப்புகொடுத்து வாழ்ந்தார்.

குருவென்று பக்கீர் தமக்குத்தாமே நினைத்துக் கொண்டால், அது முழுமையாக அவருடைய பொறுப்பாகிறது. ஆனால், சிஷ்யன் என்கிற முறையில் தமது கடமைகள் என்னவென்று தெரிந்துகொண்டு, அவற்றை செவ்வனே செய்தார் பாபா. இதுதான் இக்காதையின் பாடமாகும்.



No comments:

Post a Comment