valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 20 December 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

ஓர் ஆடு கொல்லப்  படும்போது  அதனுடைய குடல்கள் உள்வெளியாகத் திருப்பிக் கழுவப்பட்டு மடிப்பு மடிப்பாக உலர வைக்கப்படும்.

அதுபோலவே பாபா குடல்களை வெளியே எடுத்து உள்வெளியாக திருப்பி, ஜாக்கிரதையாக கழுவிச் சுத்தம் செய்தார்  பிறகு, அவர் குடல்களை ஒரு நாவல் மரத்தின்மீது உலர்தினார் மக்கள் இதைப் பார்த்து ஆச்சரியமும் பயமும் அடைந்தனர்.

இக்காட்சியை  தம் கண்களாலேயே  பார்த்த மனிதர்கள் இன்னும் வாழ்கின்றனர். அபூர்வமான சித்தர் இவர், என்று அவர்கள் சொல்கின்றனர்.

சில சமயங்களில் அவர் கைகளையும் கால்களையும் உடலிலிருந்து பிரித்துக் கண்ட யோகம் பயில்வார். பிரிந்த அவயங்கள் மசூதியில் தனித் தனியாக பல இடங்களில் விழுந்து கிடக்கும்.

உடலின் அவயங்கள் கண்ட துண்டமாக இவ்வாறு விழுந்து கிடக்கும் பயங்கரமான காட்சியை பார்க்க, மக்கள் கூட்டங்கூட்டமாக மசூதிக்கு ஓடி வந்த போது  அவர்கள் பார்த்தது பாபாவின் முழுமையான உருவத்தையே!

ஒருசமயம் இந்தக் காட்சியை பார்த்த ஒருவர் பீதியடைந்து, யாரோ ஒரு கொலைகாரன் பாபாவைக் கொன்று விட்டுத் துண்டு துண்டாக வெட்டிப் போட்டு விட்டான் என்று நினைத்தார்

மசூதியின் நான்கு மூலைகளிலும் உடலின் அங்கங்கள் இறைந்து கிடந்ததைப் பார்க்க முடிந்தது. அது நள்ளிரவு நேரம்; யாருமே அருகில் இல்லை; அவர் மிகக் கவலையுற்றார்

யாரிடமாவது போய்ச் சொல்லலாம் என்று பார்த்தால், சிக்கலில் மாடிக் கொள்ளக் கூடும் என்பது அவருடையப் பிரச்சினை. ஆகவே, அவர் மசூதிக்கு வெளியில் போய்  உட்கார்ந்து கொண்டார்.

அது பாபாவினுடைய யோகப் பயிற்சிகளுள் ஒன்றாக இருக்கலாம், என்று அவருக்குக் கனவிலும் தோன்றவில்லை. சின்னாபின்னமாக வெட்டப் பட்ட உடலின் காட்சி அவருக்குப் பெரும் பீதியை அளித்தது.

அவர் கண்டதை யாரிடமாவது சொல்ல வேண்டுமென்று அவர் விரும்பினாராயினும் முதற் செய்தி கொடுப்பதால் கொலைக் குற்றம் தம் மீது சாட்டப் படலாம் என்று பயந்தார் இந்த பயமே அவரை எவரிடமும் இச் செய்தியை சொல்ல முடியாமல் செய்து விட்டது.

அவருடைய மனதில் எண்ணற்ற கற்பனைகள் தோன்றின. ஆகவே, அவர் பொழுது புலர்ந்த பிறகு மறுபடியும் சென்று பார்த்தார்; பெரு  வியப்படைந்தார்.

அவர் ஏற்கனவே கண்ட காட்சி முழுக்க மறைந்து விட்டது. பாபா தம்முடைய வழக்கமான இடத்தில சௌக்கியமாக உட்கார்ந்து கொண்டிருந்தார். தாம் கண்டது ஒரு கனவோ என்று அவர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்.

தோதி-போதி  போன்ற யோக சாதனைகளை  பாபா தம் சிறு வயதிலிருந்தே பயின்று வந்தார். எவராலுமே அவருடைய யோக சக்திகளையும் அச் சக்திகளால் அடைய முடிந்த மர்மமான உடல் நிலைகளையும் புரிந்து கொள்ள முடியவில்லை. 


No comments:

Post a Comment