ஷிர்டி சாயி சத் சரிதம்
கிராமத்து மக்களுக்கு அவர் நாட்டுமருந்துகளைக் கொடுத்துவந்தார். நோயினுடைய குறிகளை அறிந்து மருத்துவம் செய்து அதில் பெருமளவில் வெற்றியடைந்து புகழ் பெற்ற ஹகீமாகத் திகழ்ந்தார்
ஒருமுறை பக்தர் ஒருவருக்குக் கண்கள் இரண்டும் சிவந்து வீங்கிப் போய் நெருப்புக் கோளங்களைப் போல ஆகி விட்டன. கண்விழிகளில் ரத்த நாளங்கள் வெடித்து விடும் போலச் சிவப்பேறிக் கிடந்தன. ஷீரடியில் வைத்தியர் ஒருவரும் கிடைக்கவில்லை.
நம்பிக்கையுள்ள எளிமையான பக்தர்கள் அவருடைய கண்களை பாபாவிடம் காண்பித்தனர். உடனே பாபா செங்கோட்டைக் காய்களை கொணரச் செய்து அவற்றை அரைத்து இரண்டு உருண்டைகளாக செய்து கொண்டார்.
இம்மாதிரியான உபாதைக்கு சிலர் கர்மாவை உபயோகிப்பர். சிலர் பசும்பாலைப் பஞ்சில் தோய்த்து கண்களின் மேல் வைப்பர். சிலர் சீதள கற்பூரத் தையோ கண்ணுக்கிடும் மையையோ உபயோகிப்பர்.
அனால், பாபாவின் உபாய்மோ யாருமே கண்டறியாதது. செங்கோட்டை உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து, ஒவ்வொரு கண்ணாக அப்பி, துண்டுத் துணியால் கட்டுப்போட்டு விட்டார்.
மறுநாள் காலையில் கட்டு அவிழ்க்கப்பட்டு, கண்களின்மீது தாரையாக தண்ணீர் ஊற்றப் பட்டது. வீக்கம் அறவே வடிந்து விட்டது. விழிக் கோளங்கள் நிர்மலமாக ஆகிவிட்டிருந்தன .
கண் எவ்வளவு நுட்பமான அங்கம்! ஆனால், செங்கோட்டையின் பிசின்கூட எரிச்சலையோ வலியையோ உண்டாக்கவில்லை. நேத்திர ரோகத்தை முழுமையாக முழுமையாக நிவாரணம் செய்து விட்டது. இம்மாதிரி எத்தனையோ அனுபவங்கள்.
பாபாவுக்கு தோதீ-போதி (ஹட யோகம்) தெரிந்தது. எவரும் அறியாமல் ஏதாவதொரு மறைவிடத்திற்கு சென்று குளியலை முடித்து விட்டு, குடல்களை (வாய்வழியாக) வெளியே கொண்டு வருவார். பிறகு குடலை நன்றாக கழுவி உலர்வதற்காக தொங்கவிடுவார்
மசூதியிலிருந்து கிணறு இருந்த அதே தூரத்தில் ஓர் ஆலமரம் இருந்தது. ஆலமரதுக்கப்பால் மற்றொரு கிணறு இருந்தது. அந்தக் கிணற்றுக்கு அவர் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை செல்வார்.
நண்பகலில் கொளுத்தும் வெய்யிலில் யாரும் பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்று தெரிந்து கொண்டு, அவரே கிணற்றிலிருந்து தண்ணீர் இழுத்து முகத்தையும் வாயையும் கழுவிக் கொள்வார்.
இம்மாதிரியான ஒரு சந்தர்பத்தில், அவர் குளிப்பதற்கு உட்கார்ந்து கொண்டிருந்த போது வேகமாகக் குடல்களை வெளியே எடுத்து அவ்விடத்திலேயே கழுவ ஆரம்பித்தார்
கிராமத்து மக்களுக்கு அவர் நாட்டுமருந்துகளைக் கொடுத்துவந்தார். நோயினுடைய குறிகளை அறிந்து மருத்துவம் செய்து அதில் பெருமளவில் வெற்றியடைந்து புகழ் பெற்ற ஹகீமாகத் திகழ்ந்தார்
ஒருமுறை பக்தர் ஒருவருக்குக் கண்கள் இரண்டும் சிவந்து வீங்கிப் போய் நெருப்புக் கோளங்களைப் போல ஆகி விட்டன. கண்விழிகளில் ரத்த நாளங்கள் வெடித்து விடும் போலச் சிவப்பேறிக் கிடந்தன. ஷீரடியில் வைத்தியர் ஒருவரும் கிடைக்கவில்லை.
நம்பிக்கையுள்ள எளிமையான பக்தர்கள் அவருடைய கண்களை பாபாவிடம் காண்பித்தனர். உடனே பாபா செங்கோட்டைக் காய்களை கொணரச் செய்து அவற்றை அரைத்து இரண்டு உருண்டைகளாக செய்து கொண்டார்.
இம்மாதிரியான உபாதைக்கு சிலர் கர்மாவை உபயோகிப்பர். சிலர் பசும்பாலைப் பஞ்சில் தோய்த்து கண்களின் மேல் வைப்பர். சிலர் சீதள கற்பூரத் தையோ கண்ணுக்கிடும் மையையோ உபயோகிப்பர்.
அனால், பாபாவின் உபாய்மோ யாருமே கண்டறியாதது. செங்கோட்டை உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து, ஒவ்வொரு கண்ணாக அப்பி, துண்டுத் துணியால் கட்டுப்போட்டு விட்டார்.
மறுநாள் காலையில் கட்டு அவிழ்க்கப்பட்டு, கண்களின்மீது தாரையாக தண்ணீர் ஊற்றப் பட்டது. வீக்கம் அறவே வடிந்து விட்டது. விழிக் கோளங்கள் நிர்மலமாக ஆகிவிட்டிருந்தன .
கண் எவ்வளவு நுட்பமான அங்கம்! ஆனால், செங்கோட்டையின் பிசின்கூட எரிச்சலையோ வலியையோ உண்டாக்கவில்லை. நேத்திர ரோகத்தை முழுமையாக முழுமையாக நிவாரணம் செய்து விட்டது. இம்மாதிரி எத்தனையோ அனுபவங்கள்.
பாபாவுக்கு தோதீ-போதி (ஹட யோகம்) தெரிந்தது. எவரும் அறியாமல் ஏதாவதொரு மறைவிடத்திற்கு சென்று குளியலை முடித்து விட்டு, குடல்களை (வாய்வழியாக) வெளியே கொண்டு வருவார். பிறகு குடலை நன்றாக கழுவி உலர்வதற்காக தொங்கவிடுவார்
மசூதியிலிருந்து கிணறு இருந்த அதே தூரத்தில் ஓர் ஆலமரம் இருந்தது. ஆலமரதுக்கப்பால் மற்றொரு கிணறு இருந்தது. அந்தக் கிணற்றுக்கு அவர் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை செல்வார்.
நண்பகலில் கொளுத்தும் வெய்யிலில் யாரும் பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்று தெரிந்து கொண்டு, அவரே கிணற்றிலிருந்து தண்ணீர் இழுத்து முகத்தையும் வாயையும் கழுவிக் கொள்வார்.
இம்மாதிரியான ஒரு சந்தர்பத்தில், அவர் குளிப்பதற்கு உட்கார்ந்து கொண்டிருந்த போது வேகமாகக் குடல்களை வெளியே எடுத்து அவ்விடத்திலேயே கழுவ ஆரம்பித்தார்
No comments:
Post a Comment