ஷிர்டி சாயி சத் சரிதம்
ஒரு பைசாவைக் கூட அவர் எவரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளவில்லை. மருத்துவ ரீதியில் அவருடைய புகழ், அவர் பெற்ற நோய் நிவாரண வெற்றிகளைச் சார்ந்தே வளர்ந்தது. ஏழைஎளியவர்களின் நோய் தீர்த்து, ஆரோக்கியம் தந்து, அந்த ஜில்லாவிலேயே (அஹமத் நகர்) சிறந்த ஹகீம் எனப் புகழ் பெற்றார்.
ஆனால், இந்த ஹகீம் மற்றவர்களுடைய நல்வாழ்வுக்காகவே வாழ்ந்தார். தமக்கு என்ன கிடைக்கும் என்பதை உதாசீனம் செய்துவிட்டார். மற்றவர்களுக்கு நன்மை நடக்கவேண்டுமென்பதற்காக அவர்களுடைய சகிக்க முடியாத வலிகளையும் அவஸ்தைகளையும் தம்முடைய உடலில் ஏற்றுக் கொண்டு பொறுத்துக் கொண்டார்.
கதை கேட்பவர்களுக்கு நிவேதேனமாக, பாபாவின் தயை ஒழுகும் சுபாவத்தையும் எங்கும் நிறைந்த இயல்பையும் எடுத்துக் காட்டுமாறு இந்த சந்தர்ப்பத்தில் புதினமான கதை ஒன்று சொல்கிறேன்.
1910 ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு முன்னாள் தனத்திரி யோதசியன்று பாபா துனியுனுள் விறகுகளை போட்டுக் கொண்டு ஆசுவாசமாக உட்கார்ந்து கொண்டிருந்தார்
திடீரென்று பார்த்தால் , கொழுந்து விட்டுப் பெரிதாக எரிந்து கொண்டிருந்த துனி யினுடைய தீயில் பாபாவினுடைய கை செருகப் பட்டிருந்தது. பாபா நிச்சிந்தையாக தான் இருந்தார். கை என்னவோ கருகிப் போய் விட்டது.
அவருடைய தொண்டரான மாதவ் இதை உடனே கவனித்தார். அருகிலிருந்த மாதவராவ் தேச்பாண்டேவும் இதைப் பார்த்து விட்டு, உடனே பாபாவை நோக்கி ஓடினார்.
பாபாவுக்குப் பின்பக்கமாகச் சென்று, தம்முடைய இரு கைகளையும் பாபாவின் இடுப்பைச் சுற்றி இறுக்கமாகக் கோத்து பாபாவைப் பின்னுக்கு இழுத்தார்.
"ஆஹா !" பாபா என்ன காரியம் செய்து விட்டீர்?" என்று கூவினார். இக் கூவலைக் கேட்ட பாபா, மோன நிலையிலிருந்து திரும்பி, "ஓ சாமா, உனக்கு தெரியுமா? ஒரு குழந்தை அதன் தாயினுடைய கையிலிருந்து திடீரென்று நழுவிக் கொல்லனுடைய உலைக் களத்தில் விழுந்து விட்டது.
"அவ்வாறு செய்யும்போது அவளையுமறியாமல் கையில் இடுக்கிக் கொண்டிருந்த குழந்தையை மறந்து விட்டாள் . மித மிஞ்சிய சுறு சுறுப்பான, அமைதியற்றிருந்த குழந்தை, கையிலிருந்து விழுந்துவிட்டது. ஆனால் , சாமா, அப் பெண் குழந்தை விழுந்தவுடனேயே நான் குழந்தையை தூக்கி விட்டேன்.
"அவ்வாறு அப் பெண் குழந்தையை உலைக் களத்தில் இருந்து எடுக்கும்போது இது நடந்து விட்டது! கை எரிந்து கருகிப் போனால் போகட்டும்; குழந்தை உயிர் பிழைத்ததே!"
"யாரால், எந்த விதமாக, தீகாயமடைந்த கைக்கு வைத்தியம் செய்யப் படவேண்டும்?" என்றெண்ணி மாதவராவ் பிரமித்துப் போனார். நானா சாந்தோர்கருக்கு கடிதம் எழுத வேண்டுமென்று தீர்மானித்தார்.
No comments:
Post a Comment