பாபசாஹெப் அவரை சாயி தரிசனத்திற்கு அனுப்பிவைத்தார். சாயியினுடைய ஆசிர்வாதத்தால் நானா சாஹேபுக்கு ஒரு மகன் பிறந்தான்.
இதன் பிறகு, சாயியுனுடைய புகழ் வளர்ந்து, சாயி தரிசனத்திற்காக ஜனசமுதாயம் கூட்டங்கூட்டமாக ஷிர்டியை முற்றுகையிட்டது. இச் செய்தி ஜில்லாவின் தலைநகரமான அஹமத் நகரை எட்டியது.
நானா சாஹேப் (நிம்காங்க்வ் வாசி) அஹமத் நகரத்திலிருந்த அரசாங்க உத்தியோகஸ்தர்கள் வட்டத்தில் நல்ல செல்வகுக் கொண்டவர். அதிகாரிகளுடன் நன்கு பழகினார். அதிகாரிகளில் ஒருவருக்கு சிதம்பர கேசவ் என்று பெயர். ஜில்லா கலெக்டரின் காரியதரிசியாக வேலை பார்த்தவர்.
நானா சாஹேப் டான்கேலே, அவரை ஷிர்டிக்குக் கட்டாயமாக மனைவியுடனும் மக்களுடனும் நண்பர்களுடனும் சாய் தரிசனம் செய்ய வரச் சொல்லி ஒரு கடிதம் எழுதினார். இவ் விஜயம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் எழுதியிருந்தார்.
இவ்விதமாக பாபாவின் புகழ் பரவபரவ, ஒவ்வொருவராக ஷீரடிக்கு வர ஆரம்பித்தனர். பக்தர்களுடைய கூட்டம் பெருகியது.
பாபாவுக்கு எவருடைய சந்காதமும் தேவைப்படவில்லை எனினும், பகல் நேரத்தில் பக்த பரிவாரம் அவரைச் சூழ்ந்து கொள்ளும், சூரிய அச்த்மனதைற்குப் பிறகு, அவர் (ஷிர்டியிலிருந்த) பாழடைந்த மசூதியில் தூங்குவார்.
சில்லிமும் புகையிலையும் ஒரு தகர டப்பாவும் எப்பொழுதும் அவர் அருகிலேயே இருந்தன. தழையத் தழைய நீண்ட கப்னி ஒன்றை அணிந்து கொண்டு தலையை வெள்ளைத் துணியால் மூடிக்கொண்டு எப்பொழுதும் சட்காவைக் கையில் வைத்துக் கொண்டிருந்தார்.
சுத்தமான வெள்ளைத் துநியோன்றைத் தலைமேல் போர்த்து, இடக்காதிற்குப் பின்னால் ஜடாமுடியைப் போன்று இறுக்கமாக முறுக்கி, அழகான தலைப்பாகை போல் பாபா கட்டிக்கொண்டார்.
இம்மாதிரியான உடைகளை அணிந்துகொண்டு சில சமயங்களில் சேர்ந்தாற்போல் எட்டு நாள்களும் குளிக்காமல் இருப்பார். வெறும் பாதங்களுடந்தான் நடந்தார். ஒரு கோணிப் பையையே ஆசனமாகக் கொண்டார்.
இவ்வாறு, ஒரு கந்தல் கோணித் துணியே அவருடைய நிரந்தரமான ஆசனமாக அமைந்தது. மெத்தையின் சுகமென்பது என்னவென்றே அவருக்கு தெரியாது. மொத்தத்தில், எது கிடைத்ததோ அதில் திருப்தி அடைந்தார்.
நலிந்து போன பழைய சாக்குத் துணியே அவருடைய பிரியமான ஆசனம். சதா சர்வகாலமும் அது அவ்விடத்திலேயே இருந்தது.
ஆசனம், விருப்பு, எல்லாம் அதுவே. பாபா கோவணம் மட்டும் தரித்தார். வஸ்திரமோ போர்வையோ வேறு எதுவுமே இல்லை. குளிரை விரட்ட துனி (நெருப்பு) இருந்தது.
இடக்கையைக் கிராதியின்மீது வைத்துக் கொண்டு தெற்குப் பார்த்தவாறு இக் கோணிப் பை ஆசனத்தின் மீது உட்கார்ந்துகொண்டு, தம்மெதிரில் இருந்த துனியையே பாபா உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார்.
இதன் பிறகு, சாயியுனுடைய புகழ் வளர்ந்து, சாயி தரிசனத்திற்காக ஜனசமுதாயம் கூட்டங்கூட்டமாக ஷிர்டியை முற்றுகையிட்டது. இச் செய்தி ஜில்லாவின் தலைநகரமான அஹமத் நகரை எட்டியது.
நானா சாஹேப் (நிம்காங்க்வ் வாசி) அஹமத் நகரத்திலிருந்த அரசாங்க உத்தியோகஸ்தர்கள் வட்டத்தில் நல்ல செல்வகுக் கொண்டவர். அதிகாரிகளுடன் நன்கு பழகினார். அதிகாரிகளில் ஒருவருக்கு சிதம்பர கேசவ் என்று பெயர். ஜில்லா கலெக்டரின் காரியதரிசியாக வேலை பார்த்தவர்.
நானா சாஹேப் டான்கேலே, அவரை ஷிர்டிக்குக் கட்டாயமாக மனைவியுடனும் மக்களுடனும் நண்பர்களுடனும் சாய் தரிசனம் செய்ய வரச் சொல்லி ஒரு கடிதம் எழுதினார். இவ் விஜயம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் எழுதியிருந்தார்.
இவ்விதமாக பாபாவின் புகழ் பரவபரவ, ஒவ்வொருவராக ஷீரடிக்கு வர ஆரம்பித்தனர். பக்தர்களுடைய கூட்டம் பெருகியது.
பாபாவுக்கு எவருடைய சந்காதமும் தேவைப்படவில்லை எனினும், பகல் நேரத்தில் பக்த பரிவாரம் அவரைச் சூழ்ந்து கொள்ளும், சூரிய அச்த்மனதைற்குப் பிறகு, அவர் (ஷிர்டியிலிருந்த) பாழடைந்த மசூதியில் தூங்குவார்.
சில்லிமும் புகையிலையும் ஒரு தகர டப்பாவும் எப்பொழுதும் அவர் அருகிலேயே இருந்தன. தழையத் தழைய நீண்ட கப்னி ஒன்றை அணிந்து கொண்டு தலையை வெள்ளைத் துணியால் மூடிக்கொண்டு எப்பொழுதும் சட்காவைக் கையில் வைத்துக் கொண்டிருந்தார்.
சுத்தமான வெள்ளைத் துநியோன்றைத் தலைமேல் போர்த்து, இடக்காதிற்குப் பின்னால் ஜடாமுடியைப் போன்று இறுக்கமாக முறுக்கி, அழகான தலைப்பாகை போல் பாபா கட்டிக்கொண்டார்.
இம்மாதிரியான உடைகளை அணிந்துகொண்டு சில சமயங்களில் சேர்ந்தாற்போல் எட்டு நாள்களும் குளிக்காமல் இருப்பார். வெறும் பாதங்களுடந்தான் நடந்தார். ஒரு கோணிப் பையையே ஆசனமாகக் கொண்டார்.
இவ்வாறு, ஒரு கந்தல் கோணித் துணியே அவருடைய நிரந்தரமான ஆசனமாக அமைந்தது. மெத்தையின் சுகமென்பது என்னவென்றே அவருக்கு தெரியாது. மொத்தத்தில், எது கிடைத்ததோ அதில் திருப்தி அடைந்தார்.
நலிந்து போன பழைய சாக்குத் துணியே அவருடைய பிரியமான ஆசனம். சதா சர்வகாலமும் அது அவ்விடத்திலேயே இருந்தது.
ஆசனம், விருப்பு, எல்லாம் அதுவே. பாபா கோவணம் மட்டும் தரித்தார். வஸ்திரமோ போர்வையோ வேறு எதுவுமே இல்லை. குளிரை விரட்ட துனி (நெருப்பு) இருந்தது.
இடக்கையைக் கிராதியின்மீது வைத்துக் கொண்டு தெற்குப் பார்த்தவாறு இக் கோணிப் பை ஆசனத்தின் மீது உட்கார்ந்துகொண்டு, தம்மெதிரில் இருந்த துனியையே பாபா உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார்.
No comments:
Post a Comment