valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 9 August 2012

ஸ்ரீ சாயி சத் சரிதம்

'நானே அது' என்னும் பாவம் எழுப்பப்பட்டு ஆனந்தத்தை உள்ளிருந்து மலரச் செய்கிறது. நான் - நீ என்னும் வேறுபாட்டை முழுவதும் அழித்து, முழு முதற் பொருளோடு ஐக்கியமாகிவிடுவதை கொண்டாடுகிறது.

எந்தப் போதியையும் புராணத்தையும் படித்தாலும் ஒவ்வொரு கட்டத்திலும் சத்குருவின் ஞாபகமே வருகிறது. ஆகவே, சாயிதான் ராமனாகவும் கிருஷ்ணனாகவும் தோன்றித் தம்முடைய காதையையே நம்மைப் பாராயணம் செய்ய வைக்கிறார்.

ஸ்ரீ மத்பாகவதம் கேட்கலாம் என்று உட்கார்ந்தால், உதாவ கீதையை பக்தர்களின் நன்மைக்காகப் பாடும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, நகத்திலிருந்து சிகை வரை சாயி யாகவே காட்சியளிக்கிறார்.

ஒரு விஷயத்தைத் தெளிவாக விளக்க முயலும்போது, சாதாரணப் பேச்சிலேயே திடீரென்று சாயியினுடைய கதை ஏதாவதொன்று ஞாபகத்திற்கு வருகிறது.

எழுத வேண்டுமென்ற சங்கல்பத்துடன் ஒரு நாள் காகிதத்தை எடுக்கிறேன். ஆனால், ஒரு அக்ஷரமும் வெளிவருவதில்லை. எனினும், சாயியே அவருடைய அருளால் என்னை எழுத உணர்வூட்டும்போது, எழுதுகிறேன். எழுதிக்கொண்டே இருக்கிறேன்.

எப்பொழுதெல்லாம் அஹங்காரம் தலை தூக்குகிறதோ அப்பொழுது எல்லாம் அவருடைய கையால் அதை எழும்ப முடியாமல் அழுத்தி விடுகிறார். அத்தோடு மட்டுமல்லாமல், தம்முடைய சக்தியை சிஷ்யனின் மீது பாய்ச்சி, அவனை ஆருலாளன் ஆக ஆக்கி விடுகிறார்.

மனத்தாலும் வாக்காலும் செய்கையாலும் சாயி பாதங்களை முழுமையாக சரணடைந்துவிட்டால், ஆறாம், பொருள், இன்பம், வீடு இவை நான்கும் நம்மைத் தாமாகவே வந்தடைந்துவிடுகின்றன.
கர்மம், ஞானம், யோகம், பக்தி இந்நான்கும் இறைவனை அடையும் வழிகளாகும். இந்நான்கு பாதைகளும் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் சென்றாலும், கடைசியில் போய்சேருமிடம் ஒன்றே; ஈசுவரப் ப்ராப்தியே (இறைவனை அடைவதே)

பக்திமார்க்கம் பள்ளம் படுகுழிகள் நிறைந்த கருவேலங்காட்டை கடந்து செல்வது போலக் கடினமானது. ஒருவரே, நடக்க கூடிய ஒற்றையடிப் பாதையாக இருந்தாலும், நேராக இறைவனின் அண்மைக்கு அழைத்துச் செல்லும்.

இதைக் கடப்பதற்கு சுலபமான வழி, முட்களை தவிர்த்து ஒவ்வொரு அடியாக பயமின்றி எடுத்துவைக்க வேண்டியதுதான். இதையே அன்னையாகிய குரு தெளிவாக எச்சரிக்கிறார். 


No comments:

Post a Comment