மனமென்னும் செழிப்பும் வீரியமுள்ள மண்ணில் பக்தி என்னும் நீரைப் பாய்ச்சினால், வைராக்கியம் முளைக்கிறது. ஞானம் மலர்கிறது. பரவசநிலை பீறிட்டு கைவல்லியம் (வீடுபேறு - மோட்சம்) கை கூடுகிறது. ஜனனமும் மரணமும் நிச்சயமாக விலகி விடுகின்றன.
மூல பரமாத்மா தனித்துச் செயல்படக்கூடிய சித்திகள் நிறைந்தது. அதுவே, சத், சித், ஆனந்தம் என்னும் முக்கூட்டான சக்தி, பக்தர்களுக்கு போதனை செய்வதற்காக அவதாரம் செய்கிறது.
பிரம்மம் சச்சிதானந்தமாக மாறும்போது, மாயையும் செயலாற்ற ஆரம்பித்து சத்துவம், ராஜசம், தாமசம் ஆகிய குணங்களின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
களிமண் ஓர் உருவகமாக வடிக்கப்படும்போது, பானை என்று பெயர் பெறுகிறது. பானை உடைந்துவிட்டால், பெயரும் உருவமும் அடையாளமும் அதை விட்டு அகன்று விடுகின்றன.
இவ்வுலகமே மாயையிலிருந்து உருவானதுதான். இவ்விரண்டுக்குமுள்ள உறவு, காரணகாரிய உறவுதான். உண்மையில், மாயையே ஓர் உருவத்தை ஏற்றுக் கொண்டு இவ்வுலகமாகக் காட்சியளிக்கிறது.
இவ்வுலகம் தோன்றுவதற்கு முன், மாயையின் நிலை என்ன என்பதைச் சிந்தித்தால் அது அவள் தோன்றாத நிலை, பரமாத்மாவுடன் ஒன்றுபட்ட நிலை, உருவெடுக்காத நிலை.
உருவெடுத்த நிலையோ உருவெடுக்காத நிலையோ மாயை எப்பொழுதுமே பரமாத்மா ரூபம்தான். ஆகவே, இந்த மாயை பரமாத்மாவிலிருந்து பிரிக்க முடியாத, பரமாத்மாவின் ஒரு பாகமே.
மாயை, தமோ குணத்திலிருந்து உயிரில்லாதவையும் நகரமுடியாதவையுமான பொருள்களை சிருஷ்டி செய்தது. இது மாயையின் முதல் சிருஷிடி காரியம்.
பிறகு, மாயையினுடைய ரஜோகுணம் பரமாத்மாவின் 'சித்' குணத்துடன் சேர்ந்து உணர்வுள்ள, நகரக்கூடிய ஜீவராசிகளை, இக் கூட்டுச் சக்தி வெளிப்படும் வகையில் சிருஷ்டி செய்தது.
மாயையின் சத்துவ குணம் புத்தியை சிருஷ்டி செய்தது. புத்தி ஆனந்தத்தில் ஊடுர்வி, சிருஷ்டி என்னும் விளையாட்டைப் பூரணமாக்கியது.
இவ்வாறாக, மாயை பலவிதமாக மாற்றங்கள் அடையக் கூடியவள். அவள் அசைந்து செயல்பட ஆரம்பிக்காவிட்டால், முக்குணங்களும் தோன்றா நிலையிலேயே இருந்து விடுகின்றன. சிருஷ்டி என்று ஏதும் நடப்பதில்லை.
முக்குணங்களுடன் செயல்பட ஆரம்பிக்கும்வரை மாயை தோன்றா நிலையிலேயே இருக்கிறாள். தானே ஒடுங்கிய நிலையில் இருக்கும்வரை அவள் தோன்றா நிலையிலேயே இருக்க முடியும் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
மாயை பரமாத்மாவின் சிருஷ்டி; உலகம் மாயையின் சிருஷ்டி. "பார்ப்பதனைத்தும் பிரம்மமே" என்னும் சொற்றோடர்கு, பரமாத்மா, மாயை, இவ்வுலகம், இம்மூன்றும் ஒன்றே என்றுதான் பொருள்கொள்ள வேண்டும்.
இந்த ஒருமையை நாம் அனுபவிப்பது எப்படியென்று தெரிந்துகொள்ளத் தீவிர ஆர்வமுள்ளவர்கள் வேதங்களைப் பயில வேண்டும்.
மூல பரமாத்மா தனித்துச் செயல்படக்கூடிய சித்திகள் நிறைந்தது. அதுவே, சத், சித், ஆனந்தம் என்னும் முக்கூட்டான சக்தி, பக்தர்களுக்கு போதனை செய்வதற்காக அவதாரம் செய்கிறது.
பிரம்மம் சச்சிதானந்தமாக மாறும்போது, மாயையும் செயலாற்ற ஆரம்பித்து சத்துவம், ராஜசம், தாமசம் ஆகிய குணங்களின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
களிமண் ஓர் உருவகமாக வடிக்கப்படும்போது, பானை என்று பெயர் பெறுகிறது. பானை உடைந்துவிட்டால், பெயரும் உருவமும் அடையாளமும் அதை விட்டு அகன்று விடுகின்றன.
இவ்வுலகமே மாயையிலிருந்து உருவானதுதான். இவ்விரண்டுக்குமுள்ள உறவு, காரணகாரிய உறவுதான். உண்மையில், மாயையே ஓர் உருவத்தை ஏற்றுக் கொண்டு இவ்வுலகமாகக் காட்சியளிக்கிறது.
இவ்வுலகம் தோன்றுவதற்கு முன், மாயையின் நிலை என்ன என்பதைச் சிந்தித்தால் அது அவள் தோன்றாத நிலை, பரமாத்மாவுடன் ஒன்றுபட்ட நிலை, உருவெடுக்காத நிலை.
உருவெடுத்த நிலையோ உருவெடுக்காத நிலையோ மாயை எப்பொழுதுமே பரமாத்மா ரூபம்தான். ஆகவே, இந்த மாயை பரமாத்மாவிலிருந்து பிரிக்க முடியாத, பரமாத்மாவின் ஒரு பாகமே.
மாயை, தமோ குணத்திலிருந்து உயிரில்லாதவையும் நகரமுடியாதவையுமான பொருள்களை சிருஷ்டி செய்தது. இது மாயையின் முதல் சிருஷிடி காரியம்.
பிறகு, மாயையினுடைய ரஜோகுணம் பரமாத்மாவின் 'சித்' குணத்துடன் சேர்ந்து உணர்வுள்ள, நகரக்கூடிய ஜீவராசிகளை, இக் கூட்டுச் சக்தி வெளிப்படும் வகையில் சிருஷ்டி செய்தது.
மாயையின் சத்துவ குணம் புத்தியை சிருஷ்டி செய்தது. புத்தி ஆனந்தத்தில் ஊடுர்வி, சிருஷ்டி என்னும் விளையாட்டைப் பூரணமாக்கியது.
இவ்வாறாக, மாயை பலவிதமாக மாற்றங்கள் அடையக் கூடியவள். அவள் அசைந்து செயல்பட ஆரம்பிக்காவிட்டால், முக்குணங்களும் தோன்றா நிலையிலேயே இருந்து விடுகின்றன. சிருஷ்டி என்று ஏதும் நடப்பதில்லை.
முக்குணங்களுடன் செயல்பட ஆரம்பிக்கும்வரை மாயை தோன்றா நிலையிலேயே இருக்கிறாள். தானே ஒடுங்கிய நிலையில் இருக்கும்வரை அவள் தோன்றா நிலையிலேயே இருக்க முடியும் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
மாயை பரமாத்மாவின் சிருஷ்டி; உலகம் மாயையின் சிருஷ்டி. "பார்ப்பதனைத்தும் பிரம்மமே" என்னும் சொற்றோடர்கு, பரமாத்மா, மாயை, இவ்வுலகம், இம்மூன்றும் ஒன்றே என்றுதான் பொருள்கொள்ள வேண்டும்.
இந்த ஒருமையை நாம் அனுபவிப்பது எப்படியென்று தெரிந்துகொள்ளத் தீவிர ஆர்வமுள்ளவர்கள் வேதங்களைப் பயில வேண்டும்.
No comments:
Post a Comment