valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 21 November 2013

ஷிர்டி சாயி சத் சரிதம் 

துர்ச்சங்கம் என்றும் கெடுதலையே விளைவிக்கும்; நீங்கள் அறியாமலேயே உங்களைத் தடம் புரளச் செய்யும். மஹா துக்கங்களின் இருப்பிடம்; எல்லா சுகங்களையும் விரட்டிவிடும். 

சத்குரு சாயிநாதரைத்  தவிர வேறு யாரால் அம்மாதிரியான துர்ச்சங்கதினால் நமக்கு விளையக்கூடிய கெடுதல்களை விளக்க முடியும்? 

கருணையால் விளைந்து, ஆதங்கத்தினால் வெளிவந்த, சாயியின் திருவாய் மொழிகளை சிரத்தையுடன் பத்திரப் paduthungal. பக்தர்களே! இது துர்ச்சங்கதால் விளையக்கூடிய இன்னல்கள் வராது தடுக்கும். 

சிருஷ்டி செய்யப் பட்ட இவ்வுலகத்தை கண்களால் பார்த்தவுடனேயே, மனம் சௌந்தரியத்தினால் ஈர்க்கப் பட்டு ரமித்துப் போகிறது. அதே கண்களை அகமுகமாகச் செலுத்தினாலோ, மனம் ஞானிகளின் சத்சங்கத்தில் ஈடுபடுகிறது. 

நம்முடைய அஹங்காரத்தை நிர்மூலமாக அழிக்குமளவுக்கு சத்சங்கம் மகிமையுடயது. வேறு எந்த மார்க்கத்திற்கும் சத்சங்கதைப் போல ஆதனை புரியும் திறமை கிடையாது. 

ஞானிகளின் சங்கத்தையே எப்பொழுதும் நாடுங்கள்; மற்ற சங்கங்கள் அனைத்துமே குறையுடவை. சத்சங்கமே மருவில்லாதது. எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தூய்மையானது. 

சத்சங்கம் கிடைக்கும் பாக்கியம் இருந்தால், உபதேசங்கள் சஹஜமாக  வந்து சேரும். அந்தக் கணமே துர்ச்சங்கம் மறைந்தோடிவிடும் . மனம் சத்சங்கத்தில் மூழ்கி விடும். 

உலக விஷயங்களில் விரக்தி ஏற்படுவதே ஆன்மீக வாழ்வில் நுழைவதற்கு உபாயமாகும். சத் சங்க நாட்ட மெனும்  பலமான உந்துதல் இன்றி, 'நான் யார்' என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. 

சுகத்திற்குப் பிறகு துக்கம் விளைகிறது; துக்கத்திற்குப் பிறகுதான் சுகம் விளைகிறது; ஆனால், மானிடன் எப்பொழுதும் சுகத்திற்கு இன்முகம் காட்டுகிறான். துக்கத்திற்கு கடுமுகம் காட்டுகிறான். 

வரவேற்றாலும், முகத்தைத் திருப்பிக்கொண்டாலும், நடப்பது நடந்தே தீரும்; ஞானிகளுடைய சங்கம்தான் நம்மை இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பால் கொண்டு செல்ல முடியும். 

சத் சங்கம் தேஹாபிமானத்தை நாசம் செய்கிறது. சத் சங்கம் ஜனன மரணச் சுழலை உடைக்கும். சத் சங்கம் உலக பந்தங்களை பட்டென்று அறுத்து, இறைவனை அடைய வழிவகுக்கிறது. 

உத்தமமான கதியை அடைவதற்கு சத்சங்கமே புனிதத்தை அளிக்கக் கூடியது. வேறெதிலும் கவனம் செலுத்தாது ஞானிகளை சரணடைந்துவிட்டால், நிஜமான விச்ராந்தி கிடைக்கிறது. 


Thursday, 14 November 2013

ஷிர்டி சாயி சத் சரிதம் 

அக்காதைகளை கேட்பதாலும் சிந்திப்பதாலும் மனமொன்றிப் படிப்பதாலும் பரிசீலனை செய்வதாலும் தியானிப்பதாலும்  அனைவரும் தூய்மை அடைவர்.

பிரேமை சிறிதும் இல்லாத மனிதனே இல்லை. ஒருவருக்கு ஒன்றின் மேல் பிரேமை. எதைப் பிரேமை செய்கிறார்கள் என்பதில்தான் மக்கள் வேறுபடுகிறார்கள்!

சிலருக்கு சந்ததியின் மேல் பிரேமை. மற்றவர்களுடைய பிரேமை செல்வத்தின்மேல், புகழின் மேல், சம்பத்துகளின் மேல், உடலின் மேல், வீட்டின் மேல், உலகியல் கீர்த்தியின்  மேல் இருக்கலாம். சிலருக்கு அறிவை விருத்தி செய்துகொள்வதில் பிரேமை. 

ஒருவர் விஷய சுகங்களில் தாம் செலுத்தும் பிரேமை அனைத்தையும் ஒன்றுசேர்ந்து வடித்து, இறைவனின் பாதங்கள் என்னும் அச்சில் ஊற்றிவிட்டால், அது பக்தியாக மலரும். 

ஆகவே, உம்மிடம் இருக்கும் உலகியல் பொருள்கள் அனைத்தையும் சமர்ப்பித்துவிட்டு, உம்மையே சாயிபாதங்களுக்கு சரணமாக்கி விடுங்கள். அவர் உம்மிடம் கிருபை காட்டுவார்; இது ஒரு சுலபமான உபாயம். 

மக்கள் இம்மாதிரியான சொல்பமான சாதனைகளால் பெருலாபத்தை அடையலாம். நிலைமை இவ்வாறிருக்க, ஏன் இந்த உதாசீனம்?

'மிகப் பெரிய லாபங்களை அல்பமான சாதனைகளால் பெறமுடியுமென்றால், பொதுவாக ஏன் மக்கள் இதில் ஈர்ப்பு இல்லாமல் அசிரத்தையாக இருக்கிறார்கள்?" என்று கதை கேட்பவர்களுக்கு சந்தேகம் வருவது இயற்கையே. 


அதற்கு ஒரே காரணம்தான் உண்டு. இறைவனுடைய அருள் இல்லாது இந்த ஆவல் எழாது. இறைவன் அருள்செய்ய விரும்பி முகம் மலர்ந்துவிட்டால், கதை கேட்க வேண்டும் என்னும் விருப்பமும் ஆவலும் உடனே எழும். 

ஆகவே சாயியை சரணடையுங்கள். இறைவன் உங்களுக்கு அருள் புரிவான். இக்கதையை கேட்கவேண்டுமென்ற விருப்பமும் ஆவலும் எழும்; சுலபமான ஆன்மீக சாதனையை அடைந்தவர்கள் ஆவீர்கள். 

குரு சரித்திரத்தின் சத் சங்கத்தை நாடுங்கள்; உலகியல் சங்கிலிகளிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். இதில்தான் உங்களுடைய ஆன்மீக முன்னேற்றமே இருக்கிறது. இதைப் பற்றி யாதொருவிதமான சந்தேகமே வேண்டா. 

உங்களுடைய சாதுரியமான வாதங்களைஎல்லாம் விட்டு விடுங்கள். அதற்குப் பதிலாக, சாயி சாயி என்று ஸ்மரணம் (நினைத்தல் ) செய்யுங்கள். அக்கறைக்கு எவ்வளவு சுலபமாக நீந்திச் செல்கிறீர்கள் என்று பாருங்கள்! இதைப் பற்றி எந்த சந்தேகமும் வேண்டா. 

இவை என்னுடைய வார்த்தைகளல்ல; சாயியினுடைய திருவாய் மொழியாகும். இவை வெறும் வார்த்தைகள்ள; எடை போடவும் முயற்சி செய்ய வேண்டா.  


Thursday, 7 November 2013

ஷிர்டி சாயி சத் சரிதம் 

மேலெழுந்தவாறு பார்க்கும்போது அவர்  மற்றவர்களைப் போலவே பழக்க வழக்கங்கள் கொண்டவர் போன்று தெரிந்தார்; ஆனால், அகமுகமாக அவர் முற்றிலும் வேறுபட்டிருந்தார். உலகியல் செயல்பாடுகளில் அவர் மிக்க கவனமுடையவராகவும் கறாராகவும் இருந்தார். இது விஷயத்தில் அவருடைய திறமைக்கு ஈடு எவரிடமும் கிடையாது. 

பக்தர்களின் நன்மைக்காகவே ஞானிகள் அவதரிக்கின்றனர். அவர்களுடைய உணர்வுகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், உலகியல் செயல்பாடுகள் அனைத்துமே பக்தர்களுக்காகத்தான்; இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். 

சாயி மகாராஜ் சாந்தியின் இருப்பிடம்; சுத்தமான பரமானந்தம் வாசம் செய்யும் இடம். களங்கமில்லாத தூய இதயத்துடன் அவரை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன். 

மகாராஜ் தன்னிஷ்டமாக எவ்விடத்திற்கு நடந்து வந்தாரோ, அது மகா புண்ணியம் செய்த புனிதமான இடம். பூர்வ ஜன்மங்களில் ஏகமாக புண்ணியம் சேர்த்திரா விட்டால் இப்பொக்கிஷம்  கிடைப்பதரிது. 

சுத்தமானதும் பலமானதுமான கொட்டை, ரசமுள்ள ருசியான பழங்களைக் கொடுக்கும் என்பது பழமொழி. இது ஷிர்டி வாழ் மக்களால் பரீக்ஷை செய்து பார்க்கப்பட்டு விட்டது. 

பாபா ஹிந்துவமல்லர் . முஸ்லீமுமல்லர்; வர்ணத்திற்கும் ஆசிரமத்திற்கும் அப்பாற்பட்டவர் அவர். ஆனால், அவரால் உலகியல் துன்பங்களை நிர்மூலமாக அழிக்க முடியும். 

எல்லையற்ற, முடிவே இல்லாத, பரந்த வானத்தைப் போன்ற பாபாவினுடைய வாழ்கை சரித்திரம் எவருக்கும்  புரியாதது. அவரை தவிர வேறு யாரால் அதைப் புரிந்து கொள்ள முடியும்?

மனத்தினுடைய வேலை சிந்தனை செய்வது, ஆலோசிப்பது. அதைச் செய்யாமல் மனம் ஒரு கணமும் சும்மா இராது. புலனின்பங்களை அதற்குக் கொடுத்தால் புலனின்பன்களைப் பற்றியே  சிந்திக்கும்; குருவை அதற்குப் பொருளாகக் கொடுத்தால் குருவைப் பற்றியே சிந்திக்கும்.  

எல்லா இந்திரியங்களையும் செவிப்புலனில் ஒன்றுசேர்த்து குருவினுடைய மகிமையை நீங்கள் கேட்ட போது , அதுவே குருவைப் பற்றிய சஹஜமான சிந்தனையாகவும் சஹஜமான கீர்த்தனையாகவும்  சஹஜமான பஜனையாகவும் அமைந்துவிட்டது. 

பஞ்சாக்னி தவம், யாகம், மந்திரம், தந்திரம், அஷ்டாங்க யோகம் - இந்த வழிபாட்டு முறைகள் அனைத்தும் உயர்குலத்து ஆண்களுக்கே உரியது. மற்றவர்களுக்கு இவற்றால் என்ன பிரயோஜனம்?

ஞானிகளின் காதைகள் அவ்வாறு அல்ல; அவை சகல ஜனங்களையும் நல்வழிப்படுத்தும். உலக வாழ்வின் பயங்களையும் இன்னல்களையும் அழித்துவிடும். உயர்ந்த ஆன்மீக வாழ்க்கைக்கு வழிகாட்டும். 



Thursday, 31 October 2013

ஷிர்டி சாயி சத் சரிதம் 

பற்றற்றரவராகவும் தூய ஞானத்தின் உருவமாகவும் தம்மிலேயே லயித்தவராகவும் இருந்தார். காமமும் குரோதமும் அவருடைய காலடிகளில் ஓய்வெடுத்தன. அவர் ஆசையற்றவராகவும் எல்லா விருப்பங்களும் பூரணமாக நிறைவேறியவராகவும் இருந்தார். 

உலகவிவகாரங்களே பிரம்மமாக தெரியும் முத்திநிலையில் அவர் இருந்தார். பாவ புண்ணியங்களுக்கு அப்பாற்பட்ட, பூரணமான நிவிர்த்தி நிலை இது. 

தேஹாபிமானமே இல்லாத பாபா, மக்களுக்குள்ளே வித்தியாசம் பாராட்டுவதைக் கனவிலும் கருதவில்லை. நானாவல்லீ ஆசனத்திலிருந்து எழுந்துருக்கச் சொன்னபோது, உடனே அவருக்கு இடம் கொடுத்துவிட்டு நகர்ந்து விட்டார். 

இவ்வுலகத்தில் அவருக்கு அடைய வேண்டியது ஏதுமில்லை. பரவுலகத்தில் அடையவேண்டியதும் மீதி ஏதும் இல்லை. பக்தர்களுக்கு அருள்புரிவதர்கேன்றே அவதாரம் செய்த இந்த ஞானியின் மகிமை இவ்வாறே. 

கருணாமூர்த்தியான ஞானிகள் மக்களுக்கு அருள்புரிவதர்காகவே இப்பூவுலகில் அவதாரம் செய்கின்றனர். பிறருக்கு நன்மை செய்வதற்காகவே பூரண கிருபையுடன் செயல்படுகின்றனர். 

சிலர் ஞானிகளுடைய மனம் வெண்ணையைப் போல் இளகியது என்று கூறுகிறார்கள். வெண்ணை சூடுபடுத்தினால்தான் உருகுகிறது. ஞானிகளுடைய மனமோ, மற்றவர்கள் துன்பத்தினால் தாபமடைவதைக் கண்டே உருகிவிடுகிறது. 

நூறு இடங்களில் தையல் போட்ட கப்ணியை அணிந்து கொண்டும், கரடுமுரடான கோணிப்பையை ஆசனமாகவும் படுக்கையாகவும் உபயோகித்துகொண்டும், இதயத்தில் எந்தவிதமான ஆசையும் இல்லாமல் வாழ்பவருக்கு வெள்ளி சிம்மாசனம் எதற்கு?

அம்மாதிரியான சிம்மாசனம் அவருக்கு ஒரு தொந்தரவாகத்தான் இருக்க முடியும். இருப்பினும், அதை பக்தர்கள் பின்னாலிருந்து அவருக்கடியில் திணிக்க முயன்டால், அவர்களுடைய அன்பையும் பக்தியையும் மதிக்கும் வகையில், அதை எதிர்த்து அவர் போராடப் போவதில்லை. 

நிர்மலமான ஷிர்டி என்னும் நீர்நிலையில் ஓர் அழகான தாமரை பாபாவின் ரூபத்தில் பூத்தது. விசுவாசமுள்ளவர்கள் அதன் மணத்தை  மூக்கால் நுகர்ந்து ஆனந்தமடைந்தனர். நம்பிக்கையும் பாக்கியமுமற்ற தவளைகள் சேற்றிலும் சகதியுலுமே உழன்று கொண்டிருந்தன. 

பாபா யோகாசனத்தையோ, பிராணாயாமத்தையோ, இந்த்ரியங்களை பலவந்தமாக அடக்குவதையோ, மந்திரத்தையோ, தந்திரத்தையோ, யந்திர பூசையையோ, யாருக்கும் போதிக்கவோ விதிக்கவோ இல்லை. பக்தர்கள் காதில் மந்திரங்கூட ஓதவில்லை. 


Thursday, 24 October 2013

ஷிர்டி சாயி சத் சரிதம் 

ஓ, பாபா எவ்வளவு அடக்க முதியவராக இருந்தார்! எளிமையாக இருப்பதற்கு எவ்வளவு ஆவல்! எவ்வளவு தூய்மையான, அஹங்காரமற்ற நிலை! எவ்வளவு மரியாதை!

பாபா மேற்கண்டவாறு கூறிய நிகழ்ச்சி பரிசுத்தமான உண்மை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. இதைச் சொன்னது பாபாவுக்கு இழிவு என்று யாராவது நினைத்தால், அவர் என்னை மன்னித்துவிட வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன். 

என்னுடைய பேச்சு அசிங்கப்பட்டு விட்டது எனில், அதைக் காது  கொடுத்து கேட்ட பாவத்தை நீங்கள் நிவிர்த்தி செய்து கொள்ள வேண்டுமெனில், சாயி நாமத்தை ஜபம் செய்வோம்; சகல தோஷங்களும் அகன்று விடும்.

சாயியினுடைய அருள் பல ஜன்மங்களில் செய்த தவத்தால் கிடைத்த பயன், தாகத்தால் தவிக்கும் பயணி தண்ணீர் பந்தலைக் கண்டவுடன் மகிழ்ச்சியடைவது போல் நாம் மகிழ்ச்சியடைகிறோம். 

சுவையுணர்வு பலவித ருசிகளையும் வாசனைகளையும் விரும்பியது போல் பார்வையாளர்களுக்கு தெரிந்த போதிலும், அவருடைய நாக்கு சுவையே அறியாததால் அவருக்கு அந்த உணர்வே கிடையாது. 

புலன்களுக்கு ஆசையே இல்லாதபோது அவற்றிலிருந்து வரும் இன்பங்களை ஆர் எவ்வாறு அனுபவிக்க முடியும்? அவ்வின்பங்களுக்குப் புலன்களை உசுப்பிவிடக் கூடிய சக்தியே இல்லாதபோது அவர் எப்படி அத்தளைகளில் மாட்டிகொள்வார்?

கண்கள் எதிரில் வந்ததைப் பார்த்தன; ஆனால், அவருக்கு எதையும் பார்த்த உணர்வு ஏற்படவில்லை. ஏனெனில், அவருக்கு எதையும் பார்த்து என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இல்லை. 

ஹனுமார் லங்கோடுடன் பிறந்தார் என்பதும் (பிரமச்சரியத்தின் அடையாளம்) அவருடைய தாயாரையும் ஸ்ரீராமரையும்  தவிர வேறு எவருமே அதைப் பார்தத்தில்லை என்பதும் புராண வரலாறு. பிரம்மச்சரியத்தில் ஹனுமாருக்கு ஈடாக வேறேவரைச் சொல்ல முடியும்?

தாயே பிறவி உறுப்புகளை பார்த்ததில்லை என்று சொல்லும்போது மற்றவர்களைப் பற்றி என் சொல்வது? பாபாவினுடைய பிரமச்சரியமும் அவ்வாறானதே ; பூரணமானது; அபூர்வமானது. 

அவர் எப்பொழுதும் இடுப்பில் ஒரு லங்கோடு உடுத்திக் கொண்டிருந்தார். சிறுநீர் கழிப்பதை தவிர பிறவி உறுப்புக்கு வேறு வேலையே இல்லை. ஆடுகளின் தொண்டைக்கருகில் தொங்கும் இரண்டு சதைக் கோளங்களை போல, இருக்க வேண்டும் என்பதற்காகவே இருக்கும் உறுப்பைப் போன்ற நிலைமை. 

பாபாவினுடைய பௌதிக உடலைப் பொறுத்தவரை இதுதான் நிலைமை. உடல் உறுப்புகள் அனைத்தும் அவற்றின் வேலைகளைச் செய்தாலும், புலனின்பங்களை நாடும் எந்த விதமான ஆசையும் இல்லை; ஆசைகள் பற்றிய விழிப்புணர்வே இல்லை!

சத்துவம், இராஜசம், தாமசம், ஆகிய மூன்று குணங்களும் அவருடைய உடலுறுப்புகளில் இருப்பது போல் வெளிப்பார்வைக்கு தெரிந்தது; 'செயல் புரிபவரைப் போலக் கூடத் தென்பட்டார். ஆனால் , உண்மையில் அவர் முக்குணங்களுக்கு அப்பாற்பட்டு, உடலின்மீது  எவ்விதமான பற்றும் இல்லாமல் இருந்தார். 



Thursday, 10 October 2013

ஷிர்டி சாயி சத் சரிதம் 

மொழி சரளமாகவும் கருத்து வெளிப்பாடு நேரிடையாகவும் புலமையின் சாயல் ஏதுமில்லாமலும் இருந்தபோதிலும், சொற்களின் மூலமாக வெளிப்பட்ட கவிநயம், பண்டிதர்களும் தலையாட்டி ரசிக்கும்படி இருந்தது! 

உயர்ந்த கவிதை பரிசுத்தமான அன்பின் நேர்மையான வெளிப்பாடு அன்றோ? கேட்பவர்கள் இதை இம் மகளிரின் சொற்களில் உணர முடியும். 

சாயிபாபா விரும்பினால், ஷீரடியின் மகளிர் பாடிய எல்லாப் பாட்டுக்களையும் ஒன்று சேர்த்து ஒரு தனி அத்தியாயமாகவே என்னால் செய்ய முடியும். உங்களுக்கும் இப்பாட்டுகளைக் கேட்கவேண்டுமென்ற ஆசை நிறைவேறும். 

உருவமில்லாத இறைவன் பக்தர்களின் மேல் கொண்ட கிருபையினால், சாயியுனைடைய உருவத்தில் ஷீரடியில் தோன்றினான். அவனை அறிந்து கொள்வதற்கு, முதலில், அஹங்காரத்தையும் எல்லா ஆசைகளையும் பாசங்களையும் விட்டு விட வேண்டும். பக்தியாலும் பிரேமையாலும்தான் அவனை அறியமுடியும். 

ஷிர்டி மக்களின் கூட்டுப் புண்ணியம் பூரணமாக நிறைந்த பிறகு, பிராப்த காலத்தில்  பழுத்து, சாயி என்னும் மூளை விட்டிருக்கலாம். இது சில காலம் கழித்து ஷீரடிக்கு வந்து மக்களுக்குப் பலன் அளித்தது. 

விவரிக்கமுடியாத சக்தி தன்னை வெளிப்படுத்திக் கொண்டது; ஜன்மமில்லாதது ஜென்மத்தை ஏற்றுக் கொண்டது. உருவமில்லாதது உருவெடுத்தது. கருணையின் ரசம் மனித உருவெடுத்தது. 

புகழ், செல்வம், வைராக்கியம், ஞானம், பேராற்றல், கோடை - இந்த ஆறு மகோன்னதமான குணங்கள் அவரை அலங்கரித்தன. 

பாபாவினுடைய நிக்ரஹம் (வேண்டாமென்று ஒதுக்குதல்) அசாதாரணமானது; தோன்றா நிலையில் எதையும் தம்முடையதாக வைத்துக் கொள்ளாதவர், பக்தர்களுக்கு அருள் செய்வதற்காக உடலை ஏற்றுக் கொண்டார். 

ஆஹா ! அவருடைய கிருபைதான் என்னே! பக்தர்கள் அவரிடம் நம்பிக்கையும் அன்பும் செலுத்தினர். ஆனால், அவருடைய அலங்கரித்தன. 

வாக்கின் தேவதையாகிய சரஸ்வதியும் சொல்லத் துணியாத அவருடைய வார்த்தைகள், கேட்டவர்களை லஜ்ஜையால் தலை குனியச் செய்தன. சாயி இவ்வார்த்தைகளை பக்தர்களின் நல்வாழ்வை மனத்திற்கொண்டே  பேசினார். 

இந்த வார்த்தைகளை நான் தெரிவிப்பதைவிட மௌனமே சிறந்தது. இருப்பினும் கடமை தவறக் கூடாது என்னும் காரணத்தால் சொல்லியே தீர வேண்டியிருக்கிறது.

பக்தர்களின்மீது கருணை கொண்ட சாயி, மிக்க பணிவடக்கத்துடன் கூறினார்; "அடிமைகளுக்கு அடிமையாகிய நான் உங்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறே; உங்களுடைய தரிசனத்தை நாடுகிறேன். -

"உங்களுடைய மஹா கருணையினால்தான் நான் உங்களை சந்திக்க நேர்ந்தது. உங்களுடைய மலத்தில் இருக்கும் புழு நான். இந்த அந்தஸ்த்தினால்  நான் சிருஷ்டியிலேயே மிக்க பாக்கியசாலி".


Thursday, 3 October 2013

ஷிர்டி சாயி சத்சரிதம் 

சாயி நியத பிரிவை சேர்ந்தவர். அவருடைய லீலைகளை நான் எவ்வாறு முழுமையாக விவரிக்க முடியும்? அவர் என்னுடைய புத்திசக்தியை  எப்படித் தூண்டுகிறாரோ, அப்படியே இப்பிரவசனம் உருவெடுக்கும். 

உலகியல் கலைகளுக்கும் வித்தைகளுக்கும் அநேக குருமார்கள் உண்டு. ஆனால், யார் நமக்கு ஆத்மா ஞானத்தை அளிக்கிறாரோ, அவரே சத்குரு. சத்குருவே சம்சாரக் கடலின் மறுகரையை காட்ட முடியும்; அவருடைய மகிமை எண்ணத்திர்கப்பார் பட்டது. 

யார் பாபாவை தரிசனம் செய்யச் சென்றாலும், அவருடைய இறந்த கால, நிகழ்  கால, எதிர்கால ரகசியங்கள் அனைத்தும் அவர் கேட்காமலேயேஅவருக்குச் சொல்லப் படும். 

இறைவனின் படைப்புகள் எல்லாவற்றிலும் அவனைக் கண்ட சாயி, நண்பனையும் விரோதியையும் சரிசமமாகவே பார்த்தார்; எள்ளளவும் வித்தியாசம் காட்ட வில்லை. 

அவர் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்கவில்லை. எல்லாரையும் ஒன்றுபோலவே சமமாகப் பார்த்தார். அபகாரம் செய்தவர்களுக்கும் அமுதத்தைப் பொழிந்தார். அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ அவருடைய சமநிலையைப் பாதிக்கவில்லை. விகற்பம் (மனக் கோணல்) அவரைத் தொடவேயில்லை. 

அழியக் கூடிய மனித உடலை ஏற்றுக் கொண்ட நிலையிலும், அவருக்கு உடல், வீடு, வாசல் போன்ற உலகியல் பொருள்களின் மேல் பற்றற்றே இருந்தார். அவ்வாறு யாராலாவது இருக்க முடிந்தால், அவருக்கு அந்த ஜென்மத்திலேயே முக்தி கிடைத்துவிடும். 

உணவு உண்ணும்போதும் நீரரந்தும் போதும் தூங்குமுபோதும் சாயியையே இடைவிடாது ஞாபகப் படுத்திக்கொண்டு , சாயி வழிபாட்டையே தெய்வ வழிபாடாகக் கொண்டவர்களான ஷிர்டி மக்கள் புண்ணியசாலிகள். 

கொட்டிலிலும் முற்றத்திலும் வேலை செய்யும்போதும் தானியத்தைக் குற்றும்போதும் எந்திரத்தில் மாவு அரைக்கும் போதும் தயிர் கடையும்போதும் அவர்களை பாபாவின் மகிமையைப் பாடச் செய்யும் பக்தியும் பிரேமையும் புனிதமானவை; புனிதமானவை. 

சாவகாசமாக உட்கார்ந்து கொண்டிருந்தபோதும் சாப்பிடும்போதும்  தூங்கும்போதுங்கூட, பாபாவினுடைய திருநாமம் அவர்களுடைய உதடுகளில் தவழ்ந்தது. பாபாவைத் தவிர வேறெந்த தெய்வத்தையும்  அவர்கள் வழிபடவில்லை. 

ஓ, ஷீரடியின் மகளிர் பாபவின்மேல் எவ்வளவு அன்பு பாராட்டினார்கள்! அவர்களுடைய அன்பார்ந்த பக்தி எவ்வளவு இனிமையானது! இம்மாதிரியான தோய அன்புதான், மகிழ்ச்சி தரும் பாட்டுகளை கவனம் செய்வதற்குண்டான உணர்வை ஊட்டுகிறது. பாண்டித்தியம் இங்கே செல்லாது.