valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 3 October 2013

ஷிர்டி சாயி சத்சரிதம் 

சாயி நியத பிரிவை சேர்ந்தவர். அவருடைய லீலைகளை நான் எவ்வாறு முழுமையாக விவரிக்க முடியும்? அவர் என்னுடைய புத்திசக்தியை  எப்படித் தூண்டுகிறாரோ, அப்படியே இப்பிரவசனம் உருவெடுக்கும். 

உலகியல் கலைகளுக்கும் வித்தைகளுக்கும் அநேக குருமார்கள் உண்டு. ஆனால், யார் நமக்கு ஆத்மா ஞானத்தை அளிக்கிறாரோ, அவரே சத்குரு. சத்குருவே சம்சாரக் கடலின் மறுகரையை காட்ட முடியும்; அவருடைய மகிமை எண்ணத்திர்கப்பார் பட்டது. 

யார் பாபாவை தரிசனம் செய்யச் சென்றாலும், அவருடைய இறந்த கால, நிகழ்  கால, எதிர்கால ரகசியங்கள் அனைத்தும் அவர் கேட்காமலேயேஅவருக்குச் சொல்லப் படும். 

இறைவனின் படைப்புகள் எல்லாவற்றிலும் அவனைக் கண்ட சாயி, நண்பனையும் விரோதியையும் சரிசமமாகவே பார்த்தார்; எள்ளளவும் வித்தியாசம் காட்ட வில்லை. 

அவர் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்கவில்லை. எல்லாரையும் ஒன்றுபோலவே சமமாகப் பார்த்தார். அபகாரம் செய்தவர்களுக்கும் அமுதத்தைப் பொழிந்தார். அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ அவருடைய சமநிலையைப் பாதிக்கவில்லை. விகற்பம் (மனக் கோணல்) அவரைத் தொடவேயில்லை. 

அழியக் கூடிய மனித உடலை ஏற்றுக் கொண்ட நிலையிலும், அவருக்கு உடல், வீடு, வாசல் போன்ற உலகியல் பொருள்களின் மேல் பற்றற்றே இருந்தார். அவ்வாறு யாராலாவது இருக்க முடிந்தால், அவருக்கு அந்த ஜென்மத்திலேயே முக்தி கிடைத்துவிடும். 

உணவு உண்ணும்போதும் நீரரந்தும் போதும் தூங்குமுபோதும் சாயியையே இடைவிடாது ஞாபகப் படுத்திக்கொண்டு , சாயி வழிபாட்டையே தெய்வ வழிபாடாகக் கொண்டவர்களான ஷிர்டி மக்கள் புண்ணியசாலிகள். 

கொட்டிலிலும் முற்றத்திலும் வேலை செய்யும்போதும் தானியத்தைக் குற்றும்போதும் எந்திரத்தில் மாவு அரைக்கும் போதும் தயிர் கடையும்போதும் அவர்களை பாபாவின் மகிமையைப் பாடச் செய்யும் பக்தியும் பிரேமையும் புனிதமானவை; புனிதமானவை. 

சாவகாசமாக உட்கார்ந்து கொண்டிருந்தபோதும் சாப்பிடும்போதும்  தூங்கும்போதுங்கூட, பாபாவினுடைய திருநாமம் அவர்களுடைய உதடுகளில் தவழ்ந்தது. பாபாவைத் தவிர வேறெந்த தெய்வத்தையும்  அவர்கள் வழிபடவில்லை. 

ஓ, ஷீரடியின் மகளிர் பாபவின்மேல் எவ்வளவு அன்பு பாராட்டினார்கள்! அவர்களுடைய அன்பார்ந்த பக்தி எவ்வளவு இனிமையானது! இம்மாதிரியான தோய அன்புதான், மகிழ்ச்சி தரும் பாட்டுகளை கவனம் செய்வதற்குண்டான உணர்வை ஊட்டுகிறது. பாண்டித்தியம் இங்கே செல்லாது. 


No comments:

Post a Comment