valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 7 November 2013

ஷிர்டி சாயி சத் சரிதம் 

மேலெழுந்தவாறு பார்க்கும்போது அவர்  மற்றவர்களைப் போலவே பழக்க வழக்கங்கள் கொண்டவர் போன்று தெரிந்தார்; ஆனால், அகமுகமாக அவர் முற்றிலும் வேறுபட்டிருந்தார். உலகியல் செயல்பாடுகளில் அவர் மிக்க கவனமுடையவராகவும் கறாராகவும் இருந்தார். இது விஷயத்தில் அவருடைய திறமைக்கு ஈடு எவரிடமும் கிடையாது. 

பக்தர்களின் நன்மைக்காகவே ஞானிகள் அவதரிக்கின்றனர். அவர்களுடைய உணர்வுகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், உலகியல் செயல்பாடுகள் அனைத்துமே பக்தர்களுக்காகத்தான்; இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். 

சாயி மகாராஜ் சாந்தியின் இருப்பிடம்; சுத்தமான பரமானந்தம் வாசம் செய்யும் இடம். களங்கமில்லாத தூய இதயத்துடன் அவரை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன். 

மகாராஜ் தன்னிஷ்டமாக எவ்விடத்திற்கு நடந்து வந்தாரோ, அது மகா புண்ணியம் செய்த புனிதமான இடம். பூர்வ ஜன்மங்களில் ஏகமாக புண்ணியம் சேர்த்திரா விட்டால் இப்பொக்கிஷம்  கிடைப்பதரிது. 

சுத்தமானதும் பலமானதுமான கொட்டை, ரசமுள்ள ருசியான பழங்களைக் கொடுக்கும் என்பது பழமொழி. இது ஷிர்டி வாழ் மக்களால் பரீக்ஷை செய்து பார்க்கப்பட்டு விட்டது. 

பாபா ஹிந்துவமல்லர் . முஸ்லீமுமல்லர்; வர்ணத்திற்கும் ஆசிரமத்திற்கும் அப்பாற்பட்டவர் அவர். ஆனால், அவரால் உலகியல் துன்பங்களை நிர்மூலமாக அழிக்க முடியும். 

எல்லையற்ற, முடிவே இல்லாத, பரந்த வானத்தைப் போன்ற பாபாவினுடைய வாழ்கை சரித்திரம் எவருக்கும்  புரியாதது. அவரை தவிர வேறு யாரால் அதைப் புரிந்து கொள்ள முடியும்?

மனத்தினுடைய வேலை சிந்தனை செய்வது, ஆலோசிப்பது. அதைச் செய்யாமல் மனம் ஒரு கணமும் சும்மா இராது. புலனின்பங்களை அதற்குக் கொடுத்தால் புலனின்பன்களைப் பற்றியே  சிந்திக்கும்; குருவை அதற்குப் பொருளாகக் கொடுத்தால் குருவைப் பற்றியே சிந்திக்கும்.  

எல்லா இந்திரியங்களையும் செவிப்புலனில் ஒன்றுசேர்த்து குருவினுடைய மகிமையை நீங்கள் கேட்ட போது , அதுவே குருவைப் பற்றிய சஹஜமான சிந்தனையாகவும் சஹஜமான கீர்த்தனையாகவும்  சஹஜமான பஜனையாகவும் அமைந்துவிட்டது. 

பஞ்சாக்னி தவம், யாகம், மந்திரம், தந்திரம், அஷ்டாங்க யோகம் - இந்த வழிபாட்டு முறைகள் அனைத்தும் உயர்குலத்து ஆண்களுக்கே உரியது. மற்றவர்களுக்கு இவற்றால் என்ன பிரயோஜனம்?

ஞானிகளின் காதைகள் அவ்வாறு அல்ல; அவை சகல ஜனங்களையும் நல்வழிப்படுத்தும். உலக வாழ்வின் பயங்களையும் இன்னல்களையும் அழித்துவிடும். உயர்ந்த ஆன்மீக வாழ்க்கைக்கு வழிகாட்டும். 



No comments:

Post a Comment