valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 14 November 2013

ஷிர்டி சாயி சத் சரிதம் 

அக்காதைகளை கேட்பதாலும் சிந்திப்பதாலும் மனமொன்றிப் படிப்பதாலும் பரிசீலனை செய்வதாலும் தியானிப்பதாலும்  அனைவரும் தூய்மை அடைவர்.

பிரேமை சிறிதும் இல்லாத மனிதனே இல்லை. ஒருவருக்கு ஒன்றின் மேல் பிரேமை. எதைப் பிரேமை செய்கிறார்கள் என்பதில்தான் மக்கள் வேறுபடுகிறார்கள்!

சிலருக்கு சந்ததியின் மேல் பிரேமை. மற்றவர்களுடைய பிரேமை செல்வத்தின்மேல், புகழின் மேல், சம்பத்துகளின் மேல், உடலின் மேல், வீட்டின் மேல், உலகியல் கீர்த்தியின்  மேல் இருக்கலாம். சிலருக்கு அறிவை விருத்தி செய்துகொள்வதில் பிரேமை. 

ஒருவர் விஷய சுகங்களில் தாம் செலுத்தும் பிரேமை அனைத்தையும் ஒன்றுசேர்ந்து வடித்து, இறைவனின் பாதங்கள் என்னும் அச்சில் ஊற்றிவிட்டால், அது பக்தியாக மலரும். 

ஆகவே, உம்மிடம் இருக்கும் உலகியல் பொருள்கள் அனைத்தையும் சமர்ப்பித்துவிட்டு, உம்மையே சாயிபாதங்களுக்கு சரணமாக்கி விடுங்கள். அவர் உம்மிடம் கிருபை காட்டுவார்; இது ஒரு சுலபமான உபாயம். 

மக்கள் இம்மாதிரியான சொல்பமான சாதனைகளால் பெருலாபத்தை அடையலாம். நிலைமை இவ்வாறிருக்க, ஏன் இந்த உதாசீனம்?

'மிகப் பெரிய லாபங்களை அல்பமான சாதனைகளால் பெறமுடியுமென்றால், பொதுவாக ஏன் மக்கள் இதில் ஈர்ப்பு இல்லாமல் அசிரத்தையாக இருக்கிறார்கள்?" என்று கதை கேட்பவர்களுக்கு சந்தேகம் வருவது இயற்கையே. 


அதற்கு ஒரே காரணம்தான் உண்டு. இறைவனுடைய அருள் இல்லாது இந்த ஆவல் எழாது. இறைவன் அருள்செய்ய விரும்பி முகம் மலர்ந்துவிட்டால், கதை கேட்க வேண்டும் என்னும் விருப்பமும் ஆவலும் உடனே எழும். 

ஆகவே சாயியை சரணடையுங்கள். இறைவன் உங்களுக்கு அருள் புரிவான். இக்கதையை கேட்கவேண்டுமென்ற விருப்பமும் ஆவலும் எழும்; சுலபமான ஆன்மீக சாதனையை அடைந்தவர்கள் ஆவீர்கள். 

குரு சரித்திரத்தின் சத் சங்கத்தை நாடுங்கள்; உலகியல் சங்கிலிகளிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். இதில்தான் உங்களுடைய ஆன்மீக முன்னேற்றமே இருக்கிறது. இதைப் பற்றி யாதொருவிதமான சந்தேகமே வேண்டா. 

உங்களுடைய சாதுரியமான வாதங்களைஎல்லாம் விட்டு விடுங்கள். அதற்குப் பதிலாக, சாயி சாயி என்று ஸ்மரணம் (நினைத்தல் ) செய்யுங்கள். அக்கறைக்கு எவ்வளவு சுலபமாக நீந்திச் செல்கிறீர்கள் என்று பாருங்கள்! இதைப் பற்றி எந்த சந்தேகமும் வேண்டா. 

இவை என்னுடைய வார்த்தைகளல்ல; சாயியினுடைய திருவாய் மொழியாகும். இவை வெறும் வார்த்தைகள்ள; எடை போடவும் முயற்சி செய்ய வேண்டா.  


No comments:

Post a Comment