valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 16 May 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

பாபாவுக்குக்  கீழ்படியாததன் விளைவுகள் - பாபா பிச்சை எடுத்தது ஏன் ? இல்லறத்தோரின்  ஐந்து பாவங்களும் (பஞ்ச சூனா ) பாவ நிவிர்த்தியும் - தர்கத் தம்பதியின் பக்தி

முந்தைய அத்தியாத்தின் கதையைத் தொடரும் விதமாக, பாபாவின் அனுமதியின்றித் தம் தம் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்ல முயன்றவர்கள், எவ்வாறு சங்கடங்களுக்கும் இன்னல்களுக்கும் உள்ளானார்கள் என்பதை விவரிக்கிறேன்
அதுபோலவே, இல்லறத்தோரின்  பஞ்சசூனா போன்ற பாவங்களை நிவர்த்தி செய்யும் விதமாகவும் மக்களுக்கு நன்மையளிக்கும் விதமாகவும் பாபா மதுகரி* பிச்சை எடுத்துப் பிழைத்ததையும் சொல்கிறேன்.

மேலும் படைக்கும் தெய்வமாகிய பிரம்மாவிலிருந்து புல்  பூண்டு வரை சாயி எவ்வாறு எங்கும் வியாபித்துள்ளார் என்பதையும், சாயியே அருள்கூர்ந்து இறைவன் எங்கும் நிறைந்திருப்பதை நம்முடைய மனத்தில்  பதியுமாறு செய்ததையும் சொல்கின்றேன்.

ஆகவே, என்னிடம் கதை கேட்கும் மக்களே! நீங்கள் கவனத்துடன் கேட்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன் . ஏனெனில், இப்புனிதமான கதைகளை சிரத்தையுடன் கேட்டால் ஷேமமடை வீர்கள்.

ஷிர்டிக்குச் செல்லும் புனிதப் பயணம் ஒரு லக்ஷணத்தை உடையது. பாபாவினுடைய  அனுமதியின்றிப் புனிதப் பயணி எவரும் வீடு திரும்ப முயன்றால் அவர் விக்கினங்களையே  எதிர்கொள்வார்.

வீடு திரும்ப அனுமதி கிடைத்தவர் ஷீரடியில் மேற்கொண்டு தங்கினாலும், சிரமங்களை அனுபவிப்பார். இதை எல்லாருமே நடைமுறையில் பார்த்துவிட்டனர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மதுகரீ என்னும் வார்த்தைக்குத் தேன் செய்யும் (வண்டு) என்று பொருள். தேனீ எவ்வாறு ஒவ்வொரு மலராகச் சென்று தேன்  செய்வதற்குண்டான மகரந்தத்தை சேகரிக்கிறதோ , அவ்வாறே பிச்சை எடுத்துப் பிழைப்பவர் ஒரே இல்லறதானைத் தொந்தரவு செய்யாமல், வீடுவீடாகச் சென்று பல இல்லங்களிலிருந்து உணவைத் தேடிக்கொள்வதே  மதுகரீ பிச்சை எனப்படும்.


Thursday, 9 May 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

"பாபா! இப்பொழுது  நான் அவசரமாகக் கிளம்பவில்லை எனில் பம்பாய் செல்லும் ரயிலைக் கோட்டை விட்டு விடுவேன் என்னுடைய உத்தியோகத்திற்கு குந்தகம் விளைந்து விடும் யஜமானர் என்னை நிச்சயமாக வேலையிலிருந்து  நீக்கிவிடுவர்." (பக்தரின் கவலை)

"இங்கு வேறு யஜமானர் எவரும் இல்லை! போய்  ஒரு சோள  ரொட்டியாவது சாப்பிடு மதிய உணவு உண்டபிறகு போ! (பாபாவின் பதில்)

இந்த ஆக்ஞையை  மீறுவதற்கு எவருக்கு தைரியம் இருந்தது? சிறியவர்கள், பெரியவர்கள், விவேகமுள்ளவர்கள், நல்லது-கெட்டது  தெரிந்தவர்கள், அனைவரும் சுயானுபவத்தால்  உண்மை நிலையை அறிந்திருந்தனர்.

பாபாவினுடைய  ஆக்ஞைக்கு அடிபணிந்தவர்கள் ரயிலை ஒருபோதும் தவற விட்டதில்லை ஆக்ஞையை அலட்சியம் செய்தவர்கள் நிச்சயமாக பிரச்சினைகளையும் ஆபத்துகளையும் எதிர்கொண்டார்கள்
இம்மாதிரி  அனுபவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக எத்தனை எத்தனையோ! ஒவ்வொன்றும் புதியது தனித்தன்மை வாய்ந்தது. இவற்றைச் சுருக்கமாக சொல்லுவேன்.

ஹெமாத் இப்பொழுது சாயி பாதங்களில் சரணடைகிறேன் அடுத்த அத்தியாயத்தில், ஷிர்டியில் இருந்து வீடு திரும்புவதற்கு பக்தர்கள் பாபாவின் அனுமதியைப் பெற வேண்டியதின் முக்கியத்துவம் விவரிக்கப்படும்.

பாபாவினுடைய  அனுமதி பெற்றவர்கள் வீடு திரும்பியதையும், அனுமதி கிடைக்காவதர்கள் ஷிர்டியிலேயே தங்கிவிட்டதையும், பாபாவின் ஆக்கையை மதிக்காதவர்கள் எவ்வாறு அபாயங்களில் மாட்டிக்கொண்டனர் என்பதையும் அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கிறேன்
அதுபோலவே, பாபா எவ்வாறு மதுகரீ பிக்ஷை எடுத்தார் என்பதுபற்றியும், ஏன் பாபா பிச்சை எடுத்து உண்டார் என்பது பற்றியும் பஞ்சசூனா பாவ நிவர்திபற்றியும் பிற்பாடு விளக்கப்படும்
ஆகவே கதை கேட்பவர்களின் பாதங்களைப் பற்றிக் கொண்டு மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு கணமும் கவனத்துடன் உங்களுடைய நன்மைக்காகவும் நல்வாழ்வுக்காவும் சாயி சரித்திரத்தை கேளுங்கள்.

எல்லாருக்கும் சேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாத் பந்தால் இயற்றப் பட்ட "ஸ்ரீ சமர்த சாயி சத் சரிதம்" என்னும் காவியத்தில், "நரஜன்ம மகிமை - பிச்சை எடுத்து உண்டது - பாயஜாபாயியின் ஒப்பில்லாத பக்தி - தாத்யாவுடனும் மகால்சாப்தியுடனும் மசூதியில் உறங்கியது" என்னும் எட்டாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும்



Thursday, 2 May 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

எவ்வாறு கண்பத் கோதே பாடீல் (ஷிர்டியை சேர்ந்தவர்) என்ற பக்தர் மீது பாபா விருப்பம் செலுத்தினாரோ, அவ்வாறே குசால்சந்தின் சிறிய தகப்பனாரின்மீதும் அவர் மிகப் பிரீதியுடையவராக இருந்தார்

மார்வாடி சமூகத்தவராக இருந்தாலும் அவர் பாபாவை மிக விரும்பினார் இருவரும் அடிக்கடி சந்தித்தனர்; பரஸ்பரம் மகிழ்ச்சியடைந்தனர்.

சில காலத்திற்குப் பிறகு, பெரிய சேட்  ஸ்ரீ ஹரியினுடைய இச்சைப்  படி வைகுண்ட பதவி யடைந்தார் ஆனால், பாபா இந்த நட்பை மறக்க வில்லை. வாஸ்தவத்தில் இக் குடும்பத்தின் மீது பாபா வைத்திருந்த அக்கறை பன்மடங்காகியது.

இதற்குப் பிறகும் பாபா குசால்சந்தின்மேல் வைத்திருந்த பிரேமை வளர்ந்தது. பாபா ஜீவிதமாக இருந்தவரை குசால்சந்தின் நல்வாழ்வை இரவுபகலாக கவனித்துக் கொண்டிருந்தார்.

தம் அன்பர்களுடன் சுமார் ஒன்றரை மைலுக்கப்பாலிருந்த  ரஹாதாவிருகுச் சில சமயங்களில் மாட்டுவண்டியிலும் சில சமயங்களில் குதிரை வண்டியிலும் பாபா செல்வார்.

கிராம எல்லையில் வாத்திய கோஷங்களோடு கிராம மக்களால் பாபா வரவேற்கப் படுவார். பிறகு, கிராம மக்கள் பிரேமையுடன் பாபாவின் பாதங்களில் விழுந்து வணங்குவர்
அங்கிருந்து பாபா ஆனந்தம் பொங்கும் ஆஅடல் பாடல்களுடன் கிராமத்தினுள் மரியாதையாக அழைத்து செல்லப் படுவார்.

பிறகு, குசால்சந்த் பாபாவைத் தம்முடைய இல்லத்தினுள் அழைத்துச் சென்று சுகமான ஆசனத்தில் உட்காரவைத்து விட்டுச் சிதறுண்டு ஏதாவது கொடுப்பார்.

இருவரும் பழைய நினைவுகளை பேசுவர்; மிகுந்த சந்தோஷத்தை அடைவர். அவர்களுடைய மகிழ்ச்சியை யாரால் வர்ணிக்க முடியும்!

மகிழ்ச்சி நிரம்பிய இந்தச் சந்திப்பு, பழ ஆயிரம் சாப்பிடுதல் ஆகியவை முடிந்தபிறகு, பாபா  அன்பர்களோடு தம்மிலே மூழ்கிய ஆனந்தத்துடன் திரும்பி ஷீரடிக்கு வருவார்.

ரஹாதா கிராமம் ஒரு திசையில் இருந்தது; நிம்காங்க்வ் கிராமம் மற்றொரு திசையில் இருந்தது. இரண்டுக்கும் நடுவில் ஷிர்டி கிராமம் இருந்தது.

மையமான ஷிர்டியில் இருந்து பாபா அவருடைய வாழ்நாளில் இவ்விரண்டு கிராமங்களை தாண்டி வேறெங்கும் சென்றதில்லை. இருப்பினும் அவருக்கு எங்கு நடக்கும் விஷயங்களும் (எல்லாமே) தெரிந்திருந்தன.

அவர் வேறெந்த ஊருக்கும் போனது கிடையாது; ரயிலையும் பார்த்தது கிடையாது. ஆனால், ரயில்கள் வரும் நேரம், கிளம்பும் நேரம், கால அட்டவணை அனைத்தும் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது.

நேரத்தில் ரயிலைப் பிடிப்பதற்காக பக்தர்கள் ஏற்பாடுகளை மும்முரமாக செய்வார்கள். வீடு திரும்ப பாபாவினுடைய  அனுமதியை வேண்டி அவர்கள் சென்றபோது, "ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள்" என்றுதான் கேட்பார் பாபா.



Thursday, 25 April 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

அப்போதிலிருந்து தினமும் உணவு கொண்டு போவதென்ற தவறாத பழக்கம் தம்பதியால் (பாயஜா பாயியும் அவருக்குக் கணவரும்) அனுசரிக்கப் பட்டது. அவர்களுக்குப் பிறகு தாத்யாவால் செய்யப் பட்டது.

எவருடைய இதயத்தில் வாசுதேவன் எப்பொழுதும் உரைகின்றானோ அந்த ஞானி புனிதமானவர்; புனிதமானவர். அரிய  பெரிய அதிர்ஷ்டத்தால் ஞானிகளுடன் புனித சங்கமெனும் வைபவத்தை பெரும் பக்தர்களோ புண்ணிய சாலிகள்.

தாத்யா  ஒரு மகா பாக்கியவான்! மகால்சாபதியும் பூர்வஜன்ம புண்ணியங்கள் பல சேர்த்தவராக இருக்க வேண்டும்! ஏனெனில், அவர்கள் இருவருமே பாபாவுடன் கூட இருப்பதென்னும்  முன்னுரிமையை சரிசமமாக அனுபவித்தார்கள்.

தாத்யா , மஹால்சாபதி , இருவருமே மசூதியில் உறங்கினர். பாபா இவ்விருவர்மீது வைத்த  சரிசமமான பிரீத்தி விவரிக்க முடியாததாகவே இருந்தது.

அவர்கள் மூவருடைய தலைகளும் கிழக்கு, மேற்கு, வடக்கு, என்று மூன்று திசைகளில் இருந்தன பாதங்களோ மத்தயில் பரஸ்பரம் தொட்டுக் கொண்டிருந்தன.

இவ்வாறு அவர்கள் படுக்கை விருப்புகளைப் போட்டுக் கொண்டு பலவிதமான விஷயங்களைப்  பேசிக் கொண்டிருப்பார்கள். யாராவது ஒருவருக்கு தூக்கக் கலக்கம் வருவதுபோலத் தெரிந்தால் மற்றவர் அவரை எழுப்புவார்.

தாத்யா  குறட்டைவிட ஆரம்பித்தால், பாபா சட்டென்று எழுந்து தாத்யாவை  புரட்டிப் போட்டுத் தலையைப் பிடித்து அமுக்குவார்.

மஹால்சாப்தி யையும் சேர்த்துக் கொண்டு இருவரும் தாத்யாவை  கெட்டியாகப் பிடித்து, இறுக்கமாக அணைத்து, கால்களைப் பிடித்துவிட்டு, முதுகையும் பலமாகத் தேய்த்து விடுவர்.

இவ்விதமாக தாத்யா  பதினான்கு முழு ஆண்டுகள் மசூதியில் பாபாவுடன் உறங்கினார் ஓ , எவ்வளவு அற்புதமான காலம் அது! அந்தக் காலம் அவர்களுடைய மனதில் என்றும் மறவாத வாறு பதிந்து விட்டது.

பெற்றோர்களை வீட்டில் விட்டுவிட்டு, பாபாவின் மீதிருந்த பிரேமையால் மசூதியில் உறங்கினார். எந்தப் படியை உபயோகித்து இந்த அன்பை அளப்பது? அந்தக் கிருபையை (பாபாவின்) யாரால் மதிப்பிட முடியும்?

தந்தை காலமான பிறகு, குடும்ப பொறுப்பு தாத்யாவின்  தலையில் இறங்கியது. தாமே ஒரு கணவராகவும் குடும்பத் தலைவராகவும் ஆகி விட்டார். அதன் பிறகு அவர், வீட்டிலேயே தூங்க ஆரம்பித்தார்.

நிஷ்டையுள்ள  பாவத்தினால் மட்டுமே சாயி அனுபவம் கிட்டும்; கேட்காமலேயே கிட்டும். பக்தனுக்கு இது ஓர் அற்புதம்.

அதுபோலவே, ரஹாதாவில்  விக்தியாதி பெற்ற தவன்தரும் கிராமத்தின் நகர்சேட்டுமான  குஷால்சண்ட்  என்பவர் இருந்தார்.


Thursday, 18 April 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

பூனைகளையும்  நாய்களையும் கூட கனவிலும் விரட்டாத மனிதர், எப்படி ஏழை எளியவர்களை விரட்டுவார்? அவருடைய வாழ்க்கை புனிதமானது.

ஆரம்ப காலத்தில் அவர் 'பைத்தியக்காரப் பக்கீர்" என்றே மக்களால் அழைக்கப் பட்டார். பிச்சை எடுத்து வயிறு வளர்ப்பவரை பெரிய மனிதராக எப்படி கருத முடியும்!

ஆனால், இந்தப் பக்கீர் தாராளமான மனமுள்ளவராக இருந்தார்; எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி சிநேகமாக இருந்தார். வெளிப்பார்வைக்குச் சஞ்சலமுடையவராகத் தெரிந்தாலும், அகத்தில் சஞ்சலமில்லாத அமைதியாக இருந்தார். அவருடைய நடத்தையைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை

அந்தக் குக்கிராமத்திலும் சிலர் இயற்கையாகவே தயையுள்ளவர்களாகவும்  பாக்கியவான்க ளாகவும்   இருந்தனர் . அவர்கள் இவரை ஒரு சாதுவாகவே ஏற்றுக் கொண்டனர்

தாத்யா  கோதே பாடீலின் தாயாரான பாயஜா பாயி  என்ற பெயர் கொண்டவர், சோள  ரொட்டிகள் நிரம்பிய ஒரு கூடையைத் தலைமேல் வைத்துக் கொண்டு மதிய நேரத்தில் காதினுள் செல்வார்

முட்செடிகள் மீதும் புதர்கள மீதும் நடந்து சென்று, மெயில் கணக்காகத் கானகத்தில் அலைந்து இந்தப் 'பைத்தியக்காரப் பக்கீர்' எங்கிருக்கிறார் என்று கண்டு பிடித்து, அவருடைய பாதங்களில் விழுந்து நமஸ்கரிப்பாள் .

அவருடைய அன்பும் பெருந்தன்மையும் எத்தகையது! மரங்களிடையேயும் காட்டினுள்ளும் சென்று எளிய உணவான சோள  ரொட்டியும் பாஜியும்  பாபாவுக்கு கொடுத்து பிற்பகல் நேரத்தில் உணவு இடுவார்
இந்த மாபெரும் பக்திபூர்வமான சேவையை பாபா தம்முடைய கடைசி நாள் வரையில் மறக்க வில்லை. இதை நன்கு ஞாபகத்தில் வைத்துக் கொண்டு பாய ஜாபாயி யின் மகனுக்கு வளமான வாழ்வளித்தார்

பாய ஜாபாயி யும்  அவருக்குக் கணவரும் பக்கீரின் மீது திடமான நம்பிக்கையும் விசுவாசமும் வைத்திருந்தனர் வாஸ்தவத்தில் அவர்கள் இருவரும் இந்தப் பக்கீரையே இறைவனாக கருதினார்கள். நம்புபவர் களுக்குதானே  நடராஜா!

பக்கீர் ஆழ்ந்த தியானத்தில் இருப்பார். பாய ஜாபாயி அவரெதிரில் ஓர் இலையைப் போட்டுக் கூடையில்ருக்கும் உணவை எடுத்து இலையின் மேல் பரிமாறி, பிரயத்தனம் செய்து பக்கீரை உண்ண வைப்பார்.

பாபா எப்பொழுதும் சொல்லுவார், "ஆண்டித்தனமே உண்மையான அரசபோகம்; ஏனெனில் ஆண்டியாக இருப்பதே நிரந்தரம்; செல்வம் எங்கும் நிலைக்காது எப்படி ஓடி விடுகிறது பாரீர்!

பிற்காலத்தில் பாபா காட்டைத்  துறந்து கிராமத்திலேயே  வசிக்க ஆரம்பித்தார். மசூதி யிலேயே உணவு உண்ண  ஆரம்பித்தார். தாயாருடைய (பாய ஜாபாயி ) கஷ்டங்களுக்கு ஒரு முடிவேற்பட்டது.

 

Thursday, 11 April 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

இன்பம் அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை; துன்பம் அவருக்கு சோகத்தைக் கொடுக்கவில்லை செல்வரும் ஆண்டியும் அவருக்குச் சரிசமானம் அம்  மனோ நிலை சாதாரணமாகக் கிடைக்கக் கூடியதா என்ன?

புருவத்தை உயர்த்துவதால் மட்டுமே ஓட்டாண்டியையும்  பெரும் செல்வராக்கக் கூடிய சக்தி பெற்றவராக இருந்தும், ஒரு ஜோலியைத்  தோளில்  மாட்டிக் கொண்டு வீடுவீடாகச் சென்றார்

யாருடைய வீட்டு வாசலில் பாபா பிச்சைக்காக நின்று, " ஓ, மகளே! எனக்கு உன் சோள  ரொட்டியிலிருந்து  கால் ரொட்டி கொண்டு வா" என்று கரமேந்திப் பிச்சை எடுத்தாரோ, அவர் மகா புண்ணியசாலி
ஒரு கரத்தில் ஜோலியை ஏந்தி, மற்றொரு கரத்தில் ஒரு தகர டப்பாவை வைத்துக் கொண்டு சில குறிப்பிட்ட இல்லங்களுக்கு வாயில்வாயிலாகச் சென்றார்.

பாஜி, சாம்பார், பால், மோர் போன்ற பதார்த்தங்கள் அனைத்தும் இந்தத் தகர டப்பாவில் பிச்சையிடுபவர்களால்  கொட்டப் பட்டன ஓ, என்ன வினோதமான உணவு சேர்க்கும் முறை!

சாதத்தையோ, சோள ரொட்டியையொ  வாங்கிக் கொள்வதற்கு அவர் தமது ஜோலியை விரிப்பார். ஆனால் திரவ ரூபமான பதார்த்தம் எதுவாக இருந்தாலும், அது அவர் வைத்திருந்த தகர் டப்பாவில் கொட்டப் பட்டது .

வித விதமான பதார்த்தங்களை தனித்தனியாக ருசித்துச் சாப்பிடவேண்டும்  என்கிற ஆவல் எங்கிருந்து எழும்? ருசிகளையும் வாசனைகளையும் நாக்கு அறியாதபோது மனதிலிருந்து இவ்வாசை எவ்வாறு எழும்?

ஜோலியில்  யதேச்சையாக எது வந்து விழுந்ததோ, அதை அவர் திருப்தியுடன் உண்டார். சுவை உள்ளதாயினும் சரி, சுவை அற்றதாயினும் சரி, அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. நாக்கு சுவையுணர்வையே இழந்துவிட்டது போலும்!

ஒவ்வொரு நாளும் காலைநேரத்தில் அவர் பிச்சை எடுப்பார். கிடைத்ததை கொண்டு வயிற்றை  நிரப்புவார்; திருப்தியும் அடைவார்.

பிச்சையையாவது ஒரு நியமனத்துடன் எடுத்தாரா? அதுவும் இல்லை; விருப்பப் பட்டபோதுதான் பிச்சை எடுக்கக் கிளம்புவார்!  சில நாள்களில் பிச்சை எடுக்கக் கிராமத்தினுள் பன்னிரண்டு சுற்றுகள் சென்றாலும் செல்வார்!

இம்மாதிரியாகப் பிச்சை எடுத்துச் சேர்க்கப் பட்ட உணவு, மசூதியில் இருந்த ஒரு வாயகன்ற மண் பாத்திரத்தில் கொட்டப்படும். இதிலிருந்து காகங்களும் நாய்களும் சுதந்திரமாக உணவுண்டன.

மசூதியையும் வெளி முற்றதையையும் தினமும் பெருக்கும்  பெண்மணி, பத்து  - பன்னிரண்டு சோள ரொட்டிகளை எடுத்துக் கொண்டு போவார். அவர் அவ்வாறு எடுத்துக் கொண்டு போனதை ஒருவரும் தடை செய்யவில்லை.



Thursday, 4 April 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

சமுத்திரத்தின் உப்புநீர் மேகங்களாக மாற்றம் அடைந்து, சுத்தமான குடிக்கத் தகுந்த நீராக மாறுகிறது. அவ்வாறே குருவின் பொன்னடிகளில்  மூழ்கினால் சுகம் கிடைக்கிறது.

குருவைத் தவிர வேறெவருக்கும் இம் மனிதவுடலுக்கு நற்கதியளிப்பது எப்படி என்பது தெரியாது. குரு தமது கரங்களால் தூக்குவதால் தான் ஜடம் போன்ற மனிதர்கள் மேல் எழுப்பப் படுகிறார்கள்.

மந்திரங்கள் புனிதத்தலங்கள், தேவதைகள், பிராமணர்கள், ஜோசியர்கள், வைத்தியர்கள், ஏழாவதாக குரு - இந்த ஏழுக்கும் ஒருவருடைய விசுவாசத்தைப் பொறுத்தே பலன்கள் அமையும்
நம்பிக்கையும் விசுவாசமும் எவ்வளவு ஆழமோ, அதற்கேற்றவாறே சித்திகளின் பரிமாணமும் அமையும்.

ஞானிகள், பந்தங்களால் கட்டுப்பட்ட மனிதனை முமுக்ஷவாக மாற்றுகிறார்கள். முமுக்ஷுவை முக்தனாக ஏற்றமடையச் செய்கிறார்கள். இதைச் செய்வதற்காக அவர்கள் தோன்றா நிலையிலிருந்து தோன்றிய நிலைக்கு மாறுகிறார்கள். இவை அனைத்தும் பரோபகாரம் கருதியே
வியாக்கியானங்கள் மற்றும் புராணங்கள் மூலமாக அடைய முடியாததை, ஞானிகளின் அசைவுகளும் நடத்தையும் மௌன உபதேசங்களாகும்

மன்னிக்கும் குணம், சாந்தி, தனிமை, காருண்யம், பரோரபகாரம், புலனடக்கம், அஹன்காரமின்மை ஆகிய நற்குணங்கள் நிறைந்திருக்கும் மனிதனைக் காண்பது அரிது
புத்தகத்தை படித்து அறிந்து கொள்ள முடியாததை எல்லாம் ஒரு மாமனிதரின் செயல்முறைகளைப் பார்த்து சுலபமாக அறிந்து கொள்ளலாம். கோடிக் கணக்கான வானத்து நட்சத்திரங்கள் எல்லாம் சேர்ந்து அளிக்கமுடியாத ஒளியை, சூரியன் ஒன்றே கொடுத்து விடுகிறது அன்றோ!

உதாரண குணம் ஞானிகளும் அவ்வாறே! அவர்களுடைய பலப் பல சஹசமான செயல்கள் மனிதர்களை பந்தங்களிலிருந்து விடுபடச் செய்து அவர்களுக்கு அத்தியந்த சௌக்கியத்தை அளிக்கின்றன.

சாயி மகாராஜ் இம்மாத்ரியான தலை சிறந்த ஞாநிகளுள் ஒருவர்; அளவிலா ஆன்மீகச் செல்வம் பெற்றவர்; ஸ்ரீமான். ஆத்மாவிலேயே எந்நேரமும் மூழ்கியவராயினும் அவர் ஒரு பக்கீரைப் போலவே வாழ்க்கை நடத்தினார்
அவர் எல்லாரையும் சமமாகவே பார்த்தார்; 'நான்' 'எனது' என்னும் எண்ணமே அவருக்கு இல்லை; எல்லா உயிர்களிலும் இறைவனைக் கண்டதால் அவற்றிடம் தயை காட்டினார்.