valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 18 April 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

பூனைகளையும்  நாய்களையும் கூட கனவிலும் விரட்டாத மனிதர், எப்படி ஏழை எளியவர்களை விரட்டுவார்? அவருடைய வாழ்க்கை புனிதமானது.

ஆரம்ப காலத்தில் அவர் 'பைத்தியக்காரப் பக்கீர்" என்றே மக்களால் அழைக்கப் பட்டார். பிச்சை எடுத்து வயிறு வளர்ப்பவரை பெரிய மனிதராக எப்படி கருத முடியும்!

ஆனால், இந்தப் பக்கீர் தாராளமான மனமுள்ளவராக இருந்தார்; எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி சிநேகமாக இருந்தார். வெளிப்பார்வைக்குச் சஞ்சலமுடையவராகத் தெரிந்தாலும், அகத்தில் சஞ்சலமில்லாத அமைதியாக இருந்தார். அவருடைய நடத்தையைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை

அந்தக் குக்கிராமத்திலும் சிலர் இயற்கையாகவே தயையுள்ளவர்களாகவும்  பாக்கியவான்க ளாகவும்   இருந்தனர் . அவர்கள் இவரை ஒரு சாதுவாகவே ஏற்றுக் கொண்டனர்

தாத்யா  கோதே பாடீலின் தாயாரான பாயஜா பாயி  என்ற பெயர் கொண்டவர், சோள  ரொட்டிகள் நிரம்பிய ஒரு கூடையைத் தலைமேல் வைத்துக் கொண்டு மதிய நேரத்தில் காதினுள் செல்வார்

முட்செடிகள் மீதும் புதர்கள மீதும் நடந்து சென்று, மெயில் கணக்காகத் கானகத்தில் அலைந்து இந்தப் 'பைத்தியக்காரப் பக்கீர்' எங்கிருக்கிறார் என்று கண்டு பிடித்து, அவருடைய பாதங்களில் விழுந்து நமஸ்கரிப்பாள் .

அவருடைய அன்பும் பெருந்தன்மையும் எத்தகையது! மரங்களிடையேயும் காட்டினுள்ளும் சென்று எளிய உணவான சோள  ரொட்டியும் பாஜியும்  பாபாவுக்கு கொடுத்து பிற்பகல் நேரத்தில் உணவு இடுவார்
இந்த மாபெரும் பக்திபூர்வமான சேவையை பாபா தம்முடைய கடைசி நாள் வரையில் மறக்க வில்லை. இதை நன்கு ஞாபகத்தில் வைத்துக் கொண்டு பாய ஜாபாயி யின் மகனுக்கு வளமான வாழ்வளித்தார்

பாய ஜாபாயி யும்  அவருக்குக் கணவரும் பக்கீரின் மீது திடமான நம்பிக்கையும் விசுவாசமும் வைத்திருந்தனர் வாஸ்தவத்தில் அவர்கள் இருவரும் இந்தப் பக்கீரையே இறைவனாக கருதினார்கள். நம்புபவர் களுக்குதானே  நடராஜா!

பக்கீர் ஆழ்ந்த தியானத்தில் இருப்பார். பாய ஜாபாயி அவரெதிரில் ஓர் இலையைப் போட்டுக் கூடையில்ருக்கும் உணவை எடுத்து இலையின் மேல் பரிமாறி, பிரயத்தனம் செய்து பக்கீரை உண்ண வைப்பார்.

பாபா எப்பொழுதும் சொல்லுவார், "ஆண்டித்தனமே உண்மையான அரசபோகம்; ஏனெனில் ஆண்டியாக இருப்பதே நிரந்தரம்; செல்வம் எங்கும் நிலைக்காது எப்படி ஓடி விடுகிறது பாரீர்!

பிற்காலத்தில் பாபா காட்டைத்  துறந்து கிராமத்திலேயே  வசிக்க ஆரம்பித்தார். மசூதி யிலேயே உணவு உண்ண  ஆரம்பித்தார். தாயாருடைய (பாய ஜாபாயி ) கஷ்டங்களுக்கு ஒரு முடிவேற்பட்டது.

 

No comments:

Post a Comment