valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 20 August 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

"அவ்வாறே கோடைக்காலம், வசந்த காலம், குளிர்காலம் போன்ற பருவ காலங்களும் சரியான முறைப்படி வந்து போகின்றன. இந்திராதி தேவர்களும் மக்களைக் காப்பதற்காக எட்டுத் திக்குகளிலும் நியமிக்கப்பட்ட அஷ்ட பாலகர்களும் தங்களுடைய கடமைகளை செவ்வனே செய்கிறார்கள். இவை அனைத்துக்கும் மூலம் பிரம்மமே!

"ஆகவே, இந்த சரீரத்தை விட்டுப் போகுமுன் ஞானம் பெற்றவன், மனித வாழ்வின் குறிக்கோள் ஆகிய பிரம்மத்தை அடைகிறான். இல்லையெனில், பிறப்பு - இறப்பு என்னும் சுழல் அவனை விடாது துரத்துகிறது.-

"பிரம்மத்தை அறியுமுன்னரே இந்த உடல் வீழ்ந்து விட்டால், சம்சார பந்தத்தின் மிச்சம் அவனைத் தொடர்ந்து செல்லும். மறுபடியும் பிறவிஎடுப்பது தவிர்க்க முடியாததாகி விடும். -

"நான் உமக்கு பிரம்மத்தை மட்டுமன்று, பிரம்மச் சுறுளையே காட்டுகின்றேன். நகத்திலிருந்து சிகை வரை உம்மை மூடிகொண்டிருக்கும் அச்சுருளை விரித்துப் பிரித்துக் காட்டுகிறேன்."

ஓ! தேவாமிருதம் போன்ற இனிமையான வார்த்தைகள்; சுத்த அத்வைத ஞானச் சுரங்கம்; சந்தேஹத்தால் ஊஞ்சலாடும் மனிதர்களையும் கூட தூக்கி விடும் சக்தியுடையுது.

பாபாவின் அமுத மொழிகளின் சக்தியால், நிலையில்லாத புலனின்பங்களின் பின்னால் இரவும் பகலுமாக ஓடுபவர்கள் கூட, சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள பாதையை உறுதியாக நாடுவர்.

விநாயகர் சந்தோசம் அடைந்தால் (நாம் செய்யும் வழிபாட்டால்) உலகியல் சுகங்கள் அனைத்தும் கிடைக்கும். இந்திரன் சந்தோசம் அடைந்தால் சுவர்கத்தின் சம்பத்துகள் கிடைக்கும்.

குரு இவர்களையெல்லாம் விடச் சிறப்பானவர். சந்தோசம் அடைந்துவிட்டால், கிடைக்காத பொருளாகிய பிரம்மத்தையே காட்டிக் கொடுக்கக்கூடிய வள்ளல், குருவைத் தவிர வேறெவரும் இல்லை.

இந்த இனிமையான காதையைக் கேட்டால், சம்சார துக்கங்கள் அனைத்தும் மறந்து போய்விடும். பிரம்ம நாட்டம் உடையவர்களுக்கு என்ன பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று பாபாவுக்கு தெரியாதா!

ஆகவே, பாபா அவரை உட்காரச் செய்துவிட்டு, அவருடைய கவனத்தை வேறு திசையில் திருப்பி, அவர் கேட்ட கேள்வியை தாம் மறந்துவிட்டது போல, அவருக்குத் தோன்றும்படி செய்தார்.

பிறகு பாபா என்ன செய்தாரென்றால், ஒரு பையனைத் தம்மிடம் அழைத்து, "போ, சீக்கிரமாக போய் நந்துவுக்கு இந்தச் செய்தியைச் சொல்.-

Thursday, 13 August 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

"பிரம்மத்தை அறியவேண்டுமென்று உம்முடைய தேடல் அத்தகையதே. ஒரு பைசாவும் ஈயாத கஞ்சனாகிய நீர், உம்முடைய ஆசையை நிறைவேற்றி வைக்கக் கூடியவர் எவரையும் காணமாட்டீர்."

ஆயினும், பிரம்மத்தை அறியவேண்டுமென்ற பேராவல் கொண்ட இம்மனிதர், போகவர ஒரு குதிரை வண்டியை அமர்த்திக்கொண்டு ஷீரடிக்கு கிளம்பிவிட்டார். இவ்விதமாக சாயியின் பாதங்களுக்கு வந்து சேர்ந்தார்.

சாயியை தரிசனம் செய்துவிட்டு அவருடைய பாதங்களுக்கு நமஸ்காரம் செய்தார். கதை கேட்பவர்களே, சாயி அவருக்குச் சொன்ன மதுரமான வார்த்தைகளைக் கேளுங்கள்.

சாயியின் கதைகள் என்னும் கற்பக விருக்ஷதிற்குக் கவனமான கேள்வி என்னும் தண்ணீரைப் பாய்ச்சினால், அது நன்றாக வேர்விட்டு, கேட்பவர்களுடைய பயபக்தி வளர்ந்து பலப்பல விதமான பழங்களை உற்பத்தி செய்யும்.

இம் மரத்தின் எல்லாப் பாகங்களும் இனிமையாக இருக்கும்; சுகந்தமான புஷ்பங்கள் மலரும்; மதுரமான பழங்களின் பாரத்தால் மரமே தழையும்; அனுபவிப்பவர்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

அப்பொழுது அவர் சொன்னார், "பாபா, தயவு செய்து எனக்கு பிரம்மத்தை (முழு முதற் பொருளைக் ) காட்டுங்கள். இந்த ஒரே ஆவலுடன் நான் வந்திருக்கேன். ஷிர்டி பாபா தாமதமேதுமின்றி உடனே பிரம்மத்தை காட்டுகிறார் என்று சொல்கிறார்கள். -

"இதற்காகவே நான் நெடுந்தூரம் வந்திருக்கிறேன்; பயணம் செய்ததால் களைத்துவிட்டேன். ஆயினும் இப்பொழுது எனக்கு பிரம்மம் கிடைத்துவிட்டால், என்னுடைய முயற்சிகளுக்கு பலன் கிடைத்தவனாவேன்".

பாபா கூறினார், "கவலைப்படாதீர், நான் உமக்கு நேரத்தோடு உடனே பிரம்மத்தை காட்டுகிறேன். இங்கே கடன்வியாபாரமே என்றும் கிடையாது. உம்முடையதைப் போன்ற வேண்டுதலுடன் வருபவர்கள் அரிதினும் அரிது!-

"செல்வத்தையோ, சம்பத்தையோ, வியாதி நிவாரணத்தையோ, ஆபத்து விலக்கையோ, புகழையோ, கௌரவத்தையோ, ராஜிய பதவியையோதான்  மக்கள் கேட்கிறார்கள்; அனவரதமும் சுகத்தையே நாடுகிறார்கள்.-

"கேவலம் உலக சுகங்களை நாடியே மக்கள் ஷிர்டிக்கு ஓடி வருகின்றனர்; வெறும் பக்கீராகிய என்னை வழிபடுகின்றனர். யாரும் பிரம்மம் வேண்டுமென்ற கேட்பதில்லை.-

"இம்மாதிரியான மக்கள் (சுகம் நாடுபவர்) உம்மை போன்றவர்கள் மிகக் குறைவு. பிரம்ம ஞானம் கேட்டு யாரும் வரமாட்டார்களா என்று நான் ஏங்குகிறேன்; அவர்களை சந்திப்பது எனக்குப் பண்டிகையும் திருவிழாவுமாகும். -

"பிரம்மத்திற்கு பயந்தே சூரியனும் சந்திரனும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பாதைகளில் செல்கிறார்கள். உதயமாவதும் அஸ்தமனவாதும் ஒளி தருவதும் ஓய்வதும் குறிப்பிட்ட நேரங்களில் நடக்கிறது.- 

Thursday, 6 August 2015

ஷிர்டி சாய் சத்சரிதம்

கதை கேட்பவர்களிடம் நான் ஒரே ஒரு விண்ணப்பம் செய்கிறேன். நான் கடந்த பிரம்ம ஞானத்தை தேடி பாபாவிடம் வந்த மனிதரின் கதையாகும் இது. வாழ்க்கையின் மிகப்பெரியதும் முக்கியமானதுமான விஷயத்தை பற்றிக் கேளுங்கள்.

பிரம்ம ஞானம் பெறவேண்டுமென்று மிகுந்த ஆவலுடன் பாபாவிடம் வந்த மனிதரை பாபா எவ்விதம் திருப்தி செய்தார் என்பதையும், அவருக்கும் தம்மைச் சுற்றியிருந்த நிஜமான பக்தர்களுக்கும் பாபா அருளிய போதனையையும் கேளுங்கள்.

எல்லா ஆசைகளையும் பரிபூரணமாகத் துறந்த ஞானிகள் எப்பொழுதும் எந்நிலையிலும் நிறைவேறாத, அத்தியந்தமான (உயிருக்குயிரான) ஆசைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்;

சிலர் புத்திர சந்ததியை வேண்டுவர்; சிலர் என்றும் நிலைக்கும் ராஜ்யத்தையும் விரும்புவர்; சிலர் பாவ பக்தியையும் நாடுவர்; எவரோ ஒருவர்தான் பிறவிப் பிணியிலிருந்து விடுதலையை நாடுவர்.

பாபாவினுடைய பெரும் கீர்த்தியைக் கேள்விப்பட்டு, வாழ்நாள் முழுவதும் செல்வம் சேர்ப்பதிலேயே மூழ்கிப் போனவரும், தம்மைப் பக்தனாக பாவித்துக் கொண்டவருமான மனிதரொருவர், பாபாவை தரிசனம் செய்வதற்காக வந்தார்.

செல்வம், சந்ததி, வேலையாள்கள் போன்ற எல்லா சம்பத்துக்களும் அவரிடம் அபரிதமாக இருந்தன. இருப்பினும், பாபா உதார குணமே உருவெடுத்தவர் என்று தெரிந்து அவரை தரிசனம் செய்வதற்கு வந்தார்.

"பாபா ஓர் உயர்ந்த பிரம்ம ஞானி; சாதுக்களிலும் ஞானிகளிலும் மணிமகுடமானவர். அவருடைய பாதங்களில் சிரம் தாழ்த்துவேன்; ஏனெனில், அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்குட்பட்டவை.-

"எனக்கு எந்தவிதமான குறையோ தேவையோ இல்லை; ஆகவே, நான் அவரிடம் பிரம்ம ஞானம் கேட்டால் என்ன? அது மாத்திரம் சுலபமாக கிடைத்துவிட்டால் நான் எல்லாப் பேறுகளையும் பெற்றவனாவேன்!"

நண்பர் ஒருவர் அப்பொழுது சொன்னார், "பிரம்மத்தை அறிவது சுலபமான காரியம் அன்று. அதுவும் உம்மைப் போன்ற பேராசை பிடித்தவருக்கு பிரம்மம் தன்னை வெளிப்படுத்திக் காட்டுவது என்பது நடக்காத காரியம்.-

"செல்வம், மனைவி, மக்கள், இத்தியாதி விஷயங்களை தவிர வேறெதிலும் நீர் சுகம் காண்பதில்லை. உம்மைப் பொறுத்தவரை பிரம்மம் ஒரு மனபிராந்தியே. அது எப்படி உமக்கு விச்ராந்தி அளிக்கும்?-

"இந்திரிய சக்திகள் க்ஷனம்டைந்து போனபின் இவ்வுலகத்தார் யாரும் (நம்மை) மதிப்பதில்லை. அந்தக் கட்டத்தில், சோம்பித் திரியும் மனம், பிரம்மம், அது, இது என்று நூல் இழைக்கிறது.-

Thursday, 23 July 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

சத்குரு எல்லா விருப்பங்களும் நிறைவேறியவர் என்றால், ஓர் அடியவர் அவருடைய விருப்பத்தை எப்படி நிறைவேற்றி வைக்க முடியும்? ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், குருதான், குருவுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற பக்தனுடைய ஆவலை நிறைவேற்றி வைத்து அவனை நிஷ்காமனாகச் (விருப்பம் இல்லாதவனாக) செய்கிறார்.

உண்மையான பக்தியுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு பூவையோ ஓர் இலையையோ அவர் அன்புடன் ஏற்றுகொள்கிறார். அதுவே கர்வத்துடன் அளிக்கபட்டால், உடனே தலையை திருப்பிக் கொண்டு போய் விடுகிறார்.

சச்சிதானந்த கடலாகிய அவருக்குப் புறச்சடங்குகள் முக்கியமா என்ன? ஆயினும் பக்தியுடனும் விசுவாசத்துடனும் எது அளிக்கபட்டாலும் அதை சந்தோஷமாக ஏற்றுகொள்கிறார்.

எனகொன்றுமே தெரியாது என்னும் போர்வையின் கீழ், வாஸ்தவத்தில்  அவர் நம்முடைய அறியாமையை நீக்கி ஞானத்தை அளிக்கிறார். சாஸ்திர விதிகளில் இருந்து விலகாமல் தம் அடியவர்களுக்கு இனிமையான முறையில் போதனை நல்குகிறார்.

அவருக்கு பாவத்துடன் சேவை செய்யும் அடியவர், இறைவனிடம் ஒன்று கலந்த உணர்வை அடைகிறார். இதர சாதனைகளைத் தள்ளி வைத்து விட்டு குரு சேவையில் பணிவுடன் ஈடுபடுங்கள்.

அந்த சேவையில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும், கபடமான சாமர்த்தியத்தின் நிழல் பட்டாலும், சாதகருக்கு தீமையே விளையும். தேவை என்னவென்றால், குருவின் மீது உறுதியான விசுவாசமே.

மேலும், சிஷ்யன் சுயமுயற்சியால் என்ன செய்கிறான்? ஒன்றுமில்லையே! அவன் செய்வதையெல்லாம் சத்குருவன்றோ லாவகப் படுத்துகிறார்! சிஷ்யனுக்கு தனக்கு வரப்போகும் அபாயங்களை பற்றி எதுவும் தெரிவதில்லை. குரு அந்த அபாயங்களை விலக்குவதற்காக செய்யும் உபாயங்களும் கூட சிஷ்யனுக்கு தெரிவதில்லை!

மூவுலகங்களிலும் தேடினாலும் குருவைப் போன்ற தர்மதாதாவை காண்பதரிது. சரணமடைந்தவர்களுக்கு மாபெரும் புகலிடமான குருவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக சரணடைவோமாக.

குருவைச் சிந்தாமணிக்கு உபமானப்படுதுவதும் சரியாகாது. ஏனெனில், அந்த தேவ லோகத்து ரத்தினம் நாம் நினப்பதைதான் அளிக்கும். குருவோ, நிஜமான பக்தன் பரம ஆச்சரியம் அடையுமாறு அவன் நினைத்தே பார்க்காத வஸ்துகளையும் அளிப்பார்.

இந்திரனுடைய கற்பகதருவிற்கு உபமானப்படுத்துவோமேன்றால், அது நாம் கல்விதம் செய்வதைத்தான் (கற்பனையில் விரும்புவது) அளிக்கும். குருராயரோ, நாம் கற்பனை செய்தும் பார்க்கமுடியாத நிர்விகல்பசமாதியையும் அளிக்கும் சக்தி பெற்றவர்.

காமதேனு (தேவலோகத்துப் பசு) நாம் விரும்பிய பொருளை உடனே அளிக்கும். காமதேனுவை விடச் சிறந்தவர் குருதேனு. நம்மால் சிந்தனை செய்து பார்க்கமுடியாத பதவியையும் (வீடு பேறு நிலையையும்) அளிப்பார்! வேறு யாருக்கு 'கற்பனை செய்து பார்க்க முடியாததையும் அளிப்பவர்' என்னும் பட்டம் பொருந்தும்? 


Thursday, 16 July 2015

ஷிர்டி சாயி சத் சரிதம்

ராஜாதி ராஜச் சக்ரவர்த்தியும் சாந்திஎனும் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தெய்வமும் ஆத்மானந்த சாம்ராஜ்யத்தின் தலைவரும் நம்முடைய ஒரே அடைக்கலமுமாகிய குருராஜரை நமஸ்காரம் செய்வோம்.

அதே பக்தி, சஹஜ சமாதி என்னும் இரண்டு சாமரங்களும் ஆத்மானுபூதி, கைமேல் அனுபவம் என்னும் இரண்டு விசிறிகளும் அவருக்கு அருகே சதா மெதுவாக வீசப்படுகின்றன.

ஆத்மாவிலேயே லயித்துப் போதல் அவர் தலைக்குமேல் இருக்கும் குடை; சாந்தியும் நல்லுணர்வுகளும் அவருடைய கட்டியன்காரர்களின் கைகளில் இருக்கும் கோல்கள். காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியங்களுக்கும் மாயையுக்கும் அவர் சந்நிதியில் இம்மியளவும் இடமில்லை.

ஓ, அவருடைய தர்பாரின் கம்பீரந்தான் என்னே! நான்கு வேதங்களும் ஆறு சாத்திரங்களும் பதினெட்டு புராணங்களும் அவருடைய புகழ் பாடும் அரசவைப் புலவர்கள். சுத்த ஞானத்தின் ஒளியே அவருக்குப் பின்னால் பிரபையாக அமைகிறது. கனமான ஆத்மானந்தம் சூழலில் பரவியிருக்கிறது.

பற்றின்மை, பக்தி, சுத்த ஞானம், கேள்வி, மனனம், தியானம், நிதித்யாசனம், இறை தரிசனம் ஆகிய எட்டும் பிரதானமான மந்திரிகளாக சேவை புரிகின்றன.

சாந்தியும் புலனடக்கமும் அவர் கழுத்தில் அணியும் தெய்வீக மணிகள். அவருடைய இனிமையான பேச்சு வேதாந்தமென்னும் சமுத்திரத்தில் இருந்து அமிருதத்தை கொண்டு வருகிறது.

ஞானமெனும் ஒளி வீசும் கூர்மையான வாளால் அவர் வெட்டுவதற்காக கையை ஓங்கும்போது, மனிதப் பிறவி என்னும் மரம் பயந்து நாடு நடுங்குகிறது.

நிரஞ்சனரெ! குணங்களுக்கு அப்பாற்பட்டவரே! யோகிராயரே! ஜெய ஜெய! தீனார்களை ரகிஷிப்பதர்காகவும் பரோபகாரதிற்காகுவுமே தேவரீர் மனித உடல் தாங்கியிருக்கிறது.

கடந்த அத்தியாயத்தில், ஒரு பக்தருடைய விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காக அவருடைய விரதத்தை பூர்த்தி செய்ய வைத்து, அவருடைய ரஹசியம் தமக்கு தெரியும் என்னும் குரிய்ப்பையும் எவ்வாறு காட்டினார் என்பது விவரிக்கப்பட்டது.  


Thursday, 9 July 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

உங்களுடைய சித்தம் மகிழ்ச்சியால் பொங்கும்; உங்களுடைய பிரபஞ்ச உணர்வு மேன்மையுறும். ஆகவே, கதை கேட்பவர்களே, உங்களுடைய கவனத்தை கொடுத்து ஞானிகளுடைய மகிமையை அறிந்து கொள்ளுங்கள்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹெமாத் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத்சரிதம்' என்னும் காவியத்தில், 'சோல்கரின் கற்கண்டு விநியோகம்' என்னும்  பதினைந்தாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும். 


Thursday, 2 July 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

எவர் இந்த அத்தியாயத்தை பயபக்தியுடன் படிக்கிறாரோ, அல்லது பலமுறைகள் திரும்பத் திரும்ப பாராயணம் செய்கிறாரோ, அவருடைய சங்கடங்கள் அனைத்தும் குருராயரால் நிவாரணம் செய்யப்படும்.

வேறெதையும் நாடாமல் சாயியின் பாதங்களில் எவர் சிரம் தாழ்த்துகிறாரோ அவர், தம்மைக் காக்கும் தெய்வமும் அபயம் அளிப்பவரும் நன்மையைச் செய்பவரும் தீமையை அழிப்பவரும் ஒரே அடைக்கலமும் சாயியே என்று உணர்ந்து கொள்வர்.

தவறு செய்துவிடாதீர்கள்; சந்தேஹம் வேண்டா! சாயினாதர் அத்தகையவரே! பக்தர்களின் நலனுக்காகவே என்னுடைய சூக்கும அனுபவ விசேஷத்தை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன்.

"இந்த ஜகத்தில் நான் ஒருவனே இருக்கிறேன்; என்னைத் தவிர வேறெதுவும் இல்லை. இப்பூவுலகம் மாத்திரமல்லாது மூன்று உலகங்களிலும்  நான், நான் மாத்திரமே இருக்கின்றேன்;"

இந்த அத்வைத ஞானம் உணர்வூட்டபடும் போது, பயத்தின் நிழல் கூட இருக்காது. இந்த ஞானம் அடைந்தவருக்கு எல்லாமே பிரபஞ்ச உணர்வால் நிரம்பியிருக்கும். அஹங்காரதிற்கும் அபிமானத்திற்கும் இங்கு இடமே இல்லை.

ஹெமாத் பந்த் சாயியிடம் முழுமையாக சரணடைகிறேன்; அவருடைய பொற் கமலப் பாதங்களில் இருந்து ஒரு கணமும் பிரியமாட்டேன். ஏனெனில், சம்சார சாஹரத்தை கடப்பதற்கு அதுவே பத்திரமான வழியாகும். மேற்கொண்டு, சொல்லப் போகும்  சுவாரசியமான காதையைக் கேளுங்கள்.

அடுத்த அத்தியாயத்தில், பிரம்ம ஞானம் என்பது விரல்களால் சிட்டிகை போடுவது போன்று சுலபம் என்று நினைக்கும் மக்கள், எப்படி பிரம்ம ஞானம் வேண்டுகிறார்கள் என்பதை ஒரு முக்கியமான நிகழ்ச்சியை உருவாக்குவதன்  மூலம் குரு சிரேஷ்டரான சாயி விளக்குவார்.

ஒரு பேராசை பிடித்த மனிதர் பிரம்ம ஞானம் வேண்டுவார்; மகாராஜ் அம்மனிதருடைய ஜோபியில் இருந்தே அதை எடுத்துக் கொடுப்பார்.

'ஆசையை துறக்காதவன் பிரம்ம ஞானத்தை எக்காலத்தும் அடைய முடியாது; இதில் சந்தியம் வேண்டா' என்னும் கருத்தை பாபா எவ்வளவு அழகாக எடுத்துக் காட்டினார் என்பதை இக்காதையை கேட்பவர்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.

பிரம்ம ஞானம் அடையக்கூடிய அதிகார் யார்? அது யாருக்கு கிடைக்கும்? அதைப் பெற வழி யாது? இவற்றை எல்லாம் மகாராஜ் அடுத்த அத்தியாயத்தில் விவரமாக எடுத்துரைப்பார்.

அவருடைய அடிமையின் அடிமையாகிய நான், இந்த சாயி பிரேமவிலாசத்தை நீங்கள் மிக உல்லாசாமாக கேட்க வேண்டுமென்று  பணிவுடன் ஆசை கொள்கிறேன்.