ஷிர்டி சாயி சத்சரிதம்
எவர் இந்த அத்தியாயத்தை பயபக்தியுடன் படிக்கிறாரோ, அல்லது பலமுறைகள் திரும்பத் திரும்ப பாராயணம் செய்கிறாரோ, அவருடைய சங்கடங்கள் அனைத்தும் குருராயரால் நிவாரணம் செய்யப்படும்.
வேறெதையும் நாடாமல் சாயியின் பாதங்களில் எவர் சிரம் தாழ்த்துகிறாரோ அவர், தம்மைக் காக்கும் தெய்வமும் அபயம் அளிப்பவரும் நன்மையைச் செய்பவரும் தீமையை அழிப்பவரும் ஒரே அடைக்கலமும் சாயியே என்று உணர்ந்து கொள்வர்.
தவறு செய்துவிடாதீர்கள்; சந்தேஹம் வேண்டா! சாயினாதர் அத்தகையவரே! பக்தர்களின் நலனுக்காகவே என்னுடைய சூக்கும அனுபவ விசேஷத்தை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன்.
"இந்த ஜகத்தில் நான் ஒருவனே இருக்கிறேன்; என்னைத் தவிர வேறெதுவும் இல்லை. இப்பூவுலகம் மாத்திரமல்லாது மூன்று உலகங்களிலும் நான், நான் மாத்திரமே இருக்கின்றேன்;"
இந்த அத்வைத ஞானம் உணர்வூட்டபடும் போது, பயத்தின் நிழல் கூட இருக்காது. இந்த ஞானம் அடைந்தவருக்கு எல்லாமே பிரபஞ்ச உணர்வால் நிரம்பியிருக்கும். அஹங்காரதிற்கும் அபிமானத்திற்கும் இங்கு இடமே இல்லை.
ஹெமாத் பந்த் சாயியிடம் முழுமையாக சரணடைகிறேன்; அவருடைய பொற் கமலப் பாதங்களில் இருந்து ஒரு கணமும் பிரியமாட்டேன். ஏனெனில், சம்சார சாஹரத்தை கடப்பதற்கு அதுவே பத்திரமான வழியாகும். மேற்கொண்டு, சொல்லப் போகும் சுவாரசியமான காதையைக் கேளுங்கள்.
அடுத்த அத்தியாயத்தில், பிரம்ம ஞானம் என்பது விரல்களால் சிட்டிகை போடுவது போன்று சுலபம் என்று நினைக்கும் மக்கள், எப்படி பிரம்ம ஞானம் வேண்டுகிறார்கள் என்பதை ஒரு முக்கியமான நிகழ்ச்சியை உருவாக்குவதன் மூலம் குரு சிரேஷ்டரான சாயி விளக்குவார்.
ஒரு பேராசை பிடித்த மனிதர் பிரம்ம ஞானம் வேண்டுவார்; மகாராஜ் அம்மனிதருடைய ஜோபியில் இருந்தே அதை எடுத்துக் கொடுப்பார்.
'ஆசையை துறக்காதவன் பிரம்ம ஞானத்தை எக்காலத்தும் அடைய முடியாது; இதில் சந்தியம் வேண்டா' என்னும் கருத்தை பாபா எவ்வளவு அழகாக எடுத்துக் காட்டினார் என்பதை இக்காதையை கேட்பவர்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.
பிரம்ம ஞானம் அடையக்கூடிய அதிகார் யார்? அது யாருக்கு கிடைக்கும்? அதைப் பெற வழி யாது? இவற்றை எல்லாம் மகாராஜ் அடுத்த அத்தியாயத்தில் விவரமாக எடுத்துரைப்பார்.
அவருடைய அடிமையின் அடிமையாகிய நான், இந்த சாயி பிரேமவிலாசத்தை நீங்கள் மிக உல்லாசாமாக கேட்க வேண்டுமென்று பணிவுடன் ஆசை கொள்கிறேன்.
எவர் இந்த அத்தியாயத்தை பயபக்தியுடன் படிக்கிறாரோ, அல்லது பலமுறைகள் திரும்பத் திரும்ப பாராயணம் செய்கிறாரோ, அவருடைய சங்கடங்கள் அனைத்தும் குருராயரால் நிவாரணம் செய்யப்படும்.
வேறெதையும் நாடாமல் சாயியின் பாதங்களில் எவர் சிரம் தாழ்த்துகிறாரோ அவர், தம்மைக் காக்கும் தெய்வமும் அபயம் அளிப்பவரும் நன்மையைச் செய்பவரும் தீமையை அழிப்பவரும் ஒரே அடைக்கலமும் சாயியே என்று உணர்ந்து கொள்வர்.
தவறு செய்துவிடாதீர்கள்; சந்தேஹம் வேண்டா! சாயினாதர் அத்தகையவரே! பக்தர்களின் நலனுக்காகவே என்னுடைய சூக்கும அனுபவ விசேஷத்தை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன்.
"இந்த ஜகத்தில் நான் ஒருவனே இருக்கிறேன்; என்னைத் தவிர வேறெதுவும் இல்லை. இப்பூவுலகம் மாத்திரமல்லாது மூன்று உலகங்களிலும் நான், நான் மாத்திரமே இருக்கின்றேன்;"
இந்த அத்வைத ஞானம் உணர்வூட்டபடும் போது, பயத்தின் நிழல் கூட இருக்காது. இந்த ஞானம் அடைந்தவருக்கு எல்லாமே பிரபஞ்ச உணர்வால் நிரம்பியிருக்கும். அஹங்காரதிற்கும் அபிமானத்திற்கும் இங்கு இடமே இல்லை.
ஹெமாத் பந்த் சாயியிடம் முழுமையாக சரணடைகிறேன்; அவருடைய பொற் கமலப் பாதங்களில் இருந்து ஒரு கணமும் பிரியமாட்டேன். ஏனெனில், சம்சார சாஹரத்தை கடப்பதற்கு அதுவே பத்திரமான வழியாகும். மேற்கொண்டு, சொல்லப் போகும் சுவாரசியமான காதையைக் கேளுங்கள்.
அடுத்த அத்தியாயத்தில், பிரம்ம ஞானம் என்பது விரல்களால் சிட்டிகை போடுவது போன்று சுலபம் என்று நினைக்கும் மக்கள், எப்படி பிரம்ம ஞானம் வேண்டுகிறார்கள் என்பதை ஒரு முக்கியமான நிகழ்ச்சியை உருவாக்குவதன் மூலம் குரு சிரேஷ்டரான சாயி விளக்குவார்.
ஒரு பேராசை பிடித்த மனிதர் பிரம்ம ஞானம் வேண்டுவார்; மகாராஜ் அம்மனிதருடைய ஜோபியில் இருந்தே அதை எடுத்துக் கொடுப்பார்.
'ஆசையை துறக்காதவன் பிரம்ம ஞானத்தை எக்காலத்தும் அடைய முடியாது; இதில் சந்தியம் வேண்டா' என்னும் கருத்தை பாபா எவ்வளவு அழகாக எடுத்துக் காட்டினார் என்பதை இக்காதையை கேட்பவர்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.
பிரம்ம ஞானம் அடையக்கூடிய அதிகார் யார்? அது யாருக்கு கிடைக்கும்? அதைப் பெற வழி யாது? இவற்றை எல்லாம் மகாராஜ் அடுத்த அத்தியாயத்தில் விவரமாக எடுத்துரைப்பார்.
அவருடைய அடிமையின் அடிமையாகிய நான், இந்த சாயி பிரேமவிலாசத்தை நீங்கள் மிக உல்லாசாமாக கேட்க வேண்டுமென்று பணிவுடன் ஆசை கொள்கிறேன்.
No comments:
Post a Comment