valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 25 June 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

அங்கிருந்து கிளம்பிய பல்லி , இடைவிடாது ஒலி  செய்து கொண்டிருந்த  தன்  அக்காள் பல்லியிடம்  நேராக ஓடியது. ஒலி  எங்கிருந்து வந்ததோ அந்த  திசையிலேயே  பெருமிதத்துடன் ராஜ நடை  போட்டுச் சென்றது.

எத்தனையோ நாட்களுக்குப் பிறகு, சகோதரிகள்  இரண்டும் சந்திக்க நேர்ந்தது. இரண்டும் கட்டியணைத்துக் கொண்டு வாயில் முத்தமிட்டுக் கொண்டன.  பிரேமையின் அபூர்வமான கொண்டாட்டம்!

ஒன்றை ஒன்று வட்டமாகச் சுற்றி மகிழ்ச்சியுடன்  தட்டாமாலை சுற்றி இஷ்டம்போல் செங்குத்தாகவும் கிடக்கையாகவும் குறுக்காகவும் சுழன்று ஆட்டம் போட்டன.

ஔரங்காபத் நகரம் எங்கே, ஷிரிடி எங்கே! எவ்வளவு விசித்திரமான நிகழ்ச்சி இது! குதிரையின்மீது திடீரென்று ஒருவர் எப்படி வந்தார்? ஒரு பல்லியை எப்படிக் கூட்டி வந்தார்?ஓ, என்ன வினோதம்!

அந்தப் பல்லி ஔரங்காபதில் இருந்து இருக்கலாம்; குதிரையின் தீனிப்பையில் புகுந்து இருக்கலாம். ஆனால், கேள்வியும் பதிலும் எப்படிச் சரியான தருணத்தில் நிகழ்ந்தது? மிகப் பொருத்தமான நேரத்தில் அது நிகழ்ந்தது உண்மையில் ஓர் ஆச்சரியம்!

ஓ, பல்லி முக்கமிட ஆரம்பித்து அடியவரை கேள்வி கேட்க வைத்ததே! நேரிடை அனுபவத்தால் பின்னர் நிரூபிக்கப் பட்ட பல்லி சொல்லின் முக்கியத்துவத்தை, எப்படி பாபா முன்னரே விளக்கினார்?

ஈடிணையற்ற நிகழ்ச்சியன்றோ இது! ஹாஸ்யத்தை எவருமே விரும்புவராதலால், ஞானிகள் இணையற்ற இந்த யுக்தியை பக்தர்களின் நல்வாழ்வுக்காக கையாண்டனர்.

யோசித்து பாருங்கள்! விவரம் அறிய விரும்பிய அடியவர் அங்கு இல்லை என்றால், அல்லது இருந்தும் அந்தக் கேள்வியைக் கேட்காமல் விட்டிருந்தால், சாயியினுடைய மகத்துவம் எவ்வாறு வெளிவந்திருக்கும்? எவருக்குப் பல்லி சொல்லின் அர்த்தம் புரிந்திருக்கும்?

எத்தனையோ பல்லிகள் எவ்வளவோ முறைகள் முக்கம் செய்ததை நாம் கேட்டிருக்கிறோம். பல்லிகள் ஏன் ஒலி செய்கின்றன என்றோ, அந்த ஒலிக்கு என்ன அர்த்தம் என்றோ, கண்டுபிடிக்க யாராவது முயற்சி செய்து இருக்கிறீர்களா?

சாராம்சம் என்னெவென்றால், பிரபஞ்ச விளையாட்டை நிர்வகிக்கும் சூத்திரங்கள் சூக்குமமானவை; ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை. யாரால் அவற்றை கற்பனை செய்ய முடியும்? எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகின்றன!

இதற்கு நேர்மாறாக, பல்லி முக்கமிட்டால் அனர்த்தம் விளையும் என்றும் கெடுதல் ஏதும் நேராமல் இருப்பதற்காக நாம் பல்லி சொல்லுக்குக் 'கிருஷ்ணா கிருஷ்ணா' என்று பதில் அளிக்க வேண்டுமென்றும் மக்கள் நினைக்கிறார்கள்.

அது எப்படியாவது இருந்துவிட்டு போகட்டும்! இது பக்தர்களுக்குத் தம்மீது இருந்த விசுவாசத்தை திடமாக்குவதற்கு பாபா கையாண்ட யுக்தியாகும். இது வெறும் அற்புதம் மாத்திரம் அன்று!


No comments:

Post a Comment