ஷிர்டி சாயி சத்சரிதம்
இங்கே சோல்கர் ஒரு கருவி மாத்திரமே! எப்பொழுதும்போல அடியவர்களுக்கு போதனை செய்யும் பாபாவின் லீலையே இது. கற்பனை செய்தும் பார்க்கமுடியாத லீலைகள் நம்மன் ஆச்சரியத்தில் ஆழ்த்தாத சந்தர்ப்பமே இல்லை.
இப்பொழுது பாபாவினுடைய நுண்ணிய திறன்பற்றி நிகழ்ச்சியொன்றை விவரித்துவிட்டு இந்த அத்தியாயத்தை முடித்துவிடுகிறேன். இது, ஒருவர், கேட்ட கேள்வியும் அதற்கு பாபா அளித்த பதிலுமான விவரம்.
ஒருசமயம் பாபா தம்முடைய வழக்கமான ஆசனத்தில் மசூதியில் உட்கார்ந்துகொண்டு இருந்தார். அவருக்கு எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்த அடியவர், ஒரு முக்கத்தைக் (பல்லி செய்த ஒலியைக் ) கேட்டார்.
பல்லி முக்கமிடுவதோ, அல்லது ஒருவருடைய உடலின் எந்த அங்கத்தின் மேலாவது விழுவதோ, வரப்போகும் நிகழ்ச்சிகளுக்கு சகுனமாக கருதபடுவதால், தமக்கிருந்த ஆர்வத்தால் அடியவர் பாபாவை மேம்போக்காக ஒரு கேள்வியைக் கேட்டார்.
"பாபா, பின்சுவரில் இருக்கும் பல்லி ஏன் முக்கமிடுகிறது? அதனுடைய மனத்தில் என்ன இருக்கிறது? அசுபமான விஷயமாக இருக்காதன்றோ?"
பாபா அவருக்கு பதில் அளித்தார், "அவுரங்காபாத்தில் இருந்து அவளுடைய சகோதரி இங்கு வருகிறாள் என்று தெரிந்து, பல்லிக்கு சந்தோசம் பொங்குகிறது".
பல்லி என்ன ஒரு பெரிய பிராணி! தாய், தந்தை, சகோதரன், சகோதரி உறவுகளைப் பற்றிய பேச்சு எங்கே? இவ்வுலக விவகாரங்களுக்கும் பல்லிக்கும் என்ன சம்பந்தம்?
அடியவர் மேற்கண்டவாறு நினைத்து, பாபா ஹாஸ்யமாக ஏதோ பதில் சொன்னார் என்று நினைத்துக் கொண்டு அங்கேயே சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.
திடீரென்று அவுரங்காபாத்தில் இருந்து குதிரையின் மேல் சவாரி செய்து கொண்டு பாபாவை தரிசனம் செய்வதற்கு ஒருவர் வந்தார். பாபா அப்பொழுது குளித்துக் கொண்டிருந்தார்.
மேற்கொண்டு பயணம் செய்யவேண்டிய அவசியம் இருந்ததாலும், குதிரைக்குத் தினப்படிப் போடவேண்டிய தீனியை போடாமல் குதிரையால் மேற்கொண்டு நடக்க முடியாதென்பதாலும் அம்மனிதர் ஏதாவது தானியம் வாங்கிக் கொண்டு வரலாம் என்று பஜாருக்கு கிளம்பினார்.
அவுரங்காபாத்தில் இருந்து வந்த மனிதர் (வியாபாரி), குதிரையின் தீனிப்பையைத் தம் கையில் எடுத்து உள்ளிருந்த குப்பை கூளங்களை உதறினார். பல்லியைப் பற்றி கேள்வி கேட்ட அடியவர் அதையே விறைத்து பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.
பையை உள்வெளியாக திருப்பி பூமியில் தட்டியபோது, அதிலிருந்து ஒரு பல்லி கீழே விழுந்தது. அவர்கள் பார்த்து கொண்டிருந்தபோதே பயத்துடன் குறுக்கே வேகமாக ஓடியது!
பாபா கேள்வி கேட்ட அடியவரிடம் சொன்னார், "இப்பொழுது இவளை கவனமாகப் பார்! இவள்தான் அந்தப் (மசூதியில் இருந்த) பல்லியின் சகோதரி. இந்த அற்புதத்தை வேடிக்கை பார்!"
இங்கே சோல்கர் ஒரு கருவி மாத்திரமே! எப்பொழுதும்போல அடியவர்களுக்கு போதனை செய்யும் பாபாவின் லீலையே இது. கற்பனை செய்தும் பார்க்கமுடியாத லீலைகள் நம்மன் ஆச்சரியத்தில் ஆழ்த்தாத சந்தர்ப்பமே இல்லை.
இப்பொழுது பாபாவினுடைய நுண்ணிய திறன்பற்றி நிகழ்ச்சியொன்றை விவரித்துவிட்டு இந்த அத்தியாயத்தை முடித்துவிடுகிறேன். இது, ஒருவர், கேட்ட கேள்வியும் அதற்கு பாபா அளித்த பதிலுமான விவரம்.
ஒருசமயம் பாபா தம்முடைய வழக்கமான ஆசனத்தில் மசூதியில் உட்கார்ந்துகொண்டு இருந்தார். அவருக்கு எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்த அடியவர், ஒரு முக்கத்தைக் (பல்லி செய்த ஒலியைக் ) கேட்டார்.
பல்லி முக்கமிடுவதோ, அல்லது ஒருவருடைய உடலின் எந்த அங்கத்தின் மேலாவது விழுவதோ, வரப்போகும் நிகழ்ச்சிகளுக்கு சகுனமாக கருதபடுவதால், தமக்கிருந்த ஆர்வத்தால் அடியவர் பாபாவை மேம்போக்காக ஒரு கேள்வியைக் கேட்டார்.
"பாபா, பின்சுவரில் இருக்கும் பல்லி ஏன் முக்கமிடுகிறது? அதனுடைய மனத்தில் என்ன இருக்கிறது? அசுபமான விஷயமாக இருக்காதன்றோ?"
பாபா அவருக்கு பதில் அளித்தார், "அவுரங்காபாத்தில் இருந்து அவளுடைய சகோதரி இங்கு வருகிறாள் என்று தெரிந்து, பல்லிக்கு சந்தோசம் பொங்குகிறது".
பல்லி என்ன ஒரு பெரிய பிராணி! தாய், தந்தை, சகோதரன், சகோதரி உறவுகளைப் பற்றிய பேச்சு எங்கே? இவ்வுலக விவகாரங்களுக்கும் பல்லிக்கும் என்ன சம்பந்தம்?
அடியவர் மேற்கண்டவாறு நினைத்து, பாபா ஹாஸ்யமாக ஏதோ பதில் சொன்னார் என்று நினைத்துக் கொண்டு அங்கேயே சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.
திடீரென்று அவுரங்காபாத்தில் இருந்து குதிரையின் மேல் சவாரி செய்து கொண்டு பாபாவை தரிசனம் செய்வதற்கு ஒருவர் வந்தார். பாபா அப்பொழுது குளித்துக் கொண்டிருந்தார்.
மேற்கொண்டு பயணம் செய்யவேண்டிய அவசியம் இருந்ததாலும், குதிரைக்குத் தினப்படிப் போடவேண்டிய தீனியை போடாமல் குதிரையால் மேற்கொண்டு நடக்க முடியாதென்பதாலும் அம்மனிதர் ஏதாவது தானியம் வாங்கிக் கொண்டு வரலாம் என்று பஜாருக்கு கிளம்பினார்.
அவுரங்காபாத்தில் இருந்து வந்த மனிதர் (வியாபாரி), குதிரையின் தீனிப்பையைத் தம் கையில் எடுத்து உள்ளிருந்த குப்பை கூளங்களை உதறினார். பல்லியைப் பற்றி கேள்வி கேட்ட அடியவர் அதையே விறைத்து பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.
பையை உள்வெளியாக திருப்பி பூமியில் தட்டியபோது, அதிலிருந்து ஒரு பல்லி கீழே விழுந்தது. அவர்கள் பார்த்து கொண்டிருந்தபோதே பயத்துடன் குறுக்கே வேகமாக ஓடியது!
பாபா கேள்வி கேட்ட அடியவரிடம் சொன்னார், "இப்பொழுது இவளை கவனமாகப் பார்! இவள்தான் அந்தப் (மசூதியில் இருந்த) பல்லியின் சகோதரி. இந்த அற்புதத்தை வேடிக்கை பார்!"
No comments:
Post a Comment