ஷிர்டி சாயி சத்சரிதம்
"நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் மன்றாடிக் கெஞ்சி பக்தியுடனும் விசுவாசத்துடனும் கை நீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும் விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவுபகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன்.-
"என்னுடைய உடலுடன் நான் இங்கு இருக்கலாம்; நீங்கள் தொலைதூரத்தில் இருக்கலாம். ஏழு கடல் தாண்டியும் செல்லலாம். இருப்பினும், அங்கு நீங்கள் என்ன செய்தாலும் அந்தக் கணமே எனக்கு இங்கு அது தெரிந்துவிடும்.-
"நீங்கள் இவ்வுலகில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், அங்கு நான் உங்களுடனே செல்கிறேன். உங்களுடைய இதயமே என்னுடைய வாசஸ்தலம்; நான் உங்களுக்குள்ளேயே உறைகின்றேன் .-
"உங்களுடைய இதயத்தில் வசிக்கும் என்னையே நீங்கள் வழிபடவேண்டும். எல்லா உயிரினங்களின் இதயங்களிலும் நானே உரைகின்றேன்.-
"வீட்டின் உள்ளோ, வெளியிலோ, அல்லது வழியிலோ, நீங்கள் எவரை எதிர்கொண்டாலும் அவர்களனைவரும் என்னுடைய ஆவிர்பாவங்களே (வெளிப்பாடுகளே). அவர்கள் அனைவருள்ளும் நான் உறைகின்றேன்.-
"பூச்சியோ, எறும்போ, நீரில் வாழும் பிராணிகளோ, வானத்தில் பறக்கும் பறவைகளோ, நிலத்தில் வாழும் நாய், பன்றி போன்ற மிருகங்களோ - அவையனைத்திலும் நான் அவசியம் நிரந்தரமாக வியாபிதிருக்கிறேன்.-
"ஆகவே, உங்களை என்னிடமிருந்து வேறுபட்டவர்களாக நினைக்காதீர். தம்மிலிருந்து என்னை வேறுபடாதவாறு அறிந்தவர் மகாபாக்கியசாலி."
இவ்வார்த்தைகள் சுருங்கச் சொல்லப்பட்டவை ஆயினும் ஆழமான பொருள் பொதிந்தவை; மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. சோல்கரின் மீது எவ்வளவு பிரியம் இருந்தால் பாபா அவருக்கு இந்த பக்திக் கஜானாவை வழங்குவார்!
சோல்கரின் மனதில் என்ன இருந்ததோ அதை நேரிடையான அனுபவமாக பாபா வெளிப்பாடு செய்துவிட்டார். ஞானிகளுடைய செயல்முறைத் திறன்தான் என்னே!
பாபாவினுடைய திருவாய் மொழி விலை மதிப்பற்றது. பக்தர்களுடைய இதயத்தில் ஆழமாகப் பாய்ந்து, பிரேமையாகிய பழ தோட்டத்திற்கு உயிர்ச் சத்தாகிறது . பக்தியாகிய கப்பலுக்குப் பாய் மரம் ஆகிறது.
சாதகப் பறவைகளின் தாகத்தை தீர்ப்பதற்காக மேகங்கள் மழையைப் பொழிகின்றன; இதன் மூலமாக பூமி முழுவதும் மழையால் குளிர்ந்து போகிறது. இங்கு நடந்ததும் அவ்வாறே.
சோல்கர், பாவம் ஏழை! யாருக்குமே தெரியாத, கேள்விப்படாத, முன்பின் தெரியாத ஆள் அல்லரோ? சோல்கரின் இதயத்தில் ஓர் எழுச்சியை ஏற்பட செய்து நேர்த்திகடன் ஏற்றுகொள்ள வாய்த்த தாஸ கணுவின் கீர்த்தனை கூட ஒரு நிமித்த காரணமே (கருவியே). அதுவே, கடைசியில் அவருக்கு பாபாவின் அருளைத் தேடிக் கொடுத்தது.
இதனைப் பின்பற்றி, ஞானிகள் மனதுள்ளே என்ன நினைக்கிறார்கள் என்னும் அற்புதம் வெளிப்பட்டது! அடியவர்களுக்குப் போதனை அளிப்பதில் பேராவல் கொண்ட பாபா, இது போன்ற சூழ்நிலைகளை சிருஷ்டி செய்தார்.
"நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் மன்றாடிக் கெஞ்சி பக்தியுடனும் விசுவாசத்துடனும் கை நீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும் விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவுபகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன்.-
"என்னுடைய உடலுடன் நான் இங்கு இருக்கலாம்; நீங்கள் தொலைதூரத்தில் இருக்கலாம். ஏழு கடல் தாண்டியும் செல்லலாம். இருப்பினும், அங்கு நீங்கள் என்ன செய்தாலும் அந்தக் கணமே எனக்கு இங்கு அது தெரிந்துவிடும்.-
"நீங்கள் இவ்வுலகில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், அங்கு நான் உங்களுடனே செல்கிறேன். உங்களுடைய இதயமே என்னுடைய வாசஸ்தலம்; நான் உங்களுக்குள்ளேயே உறைகின்றேன் .-
"உங்களுடைய இதயத்தில் வசிக்கும் என்னையே நீங்கள் வழிபடவேண்டும். எல்லா உயிரினங்களின் இதயங்களிலும் நானே உரைகின்றேன்.-
"வீட்டின் உள்ளோ, வெளியிலோ, அல்லது வழியிலோ, நீங்கள் எவரை எதிர்கொண்டாலும் அவர்களனைவரும் என்னுடைய ஆவிர்பாவங்களே (வெளிப்பாடுகளே). அவர்கள் அனைவருள்ளும் நான் உறைகின்றேன்.-
"பூச்சியோ, எறும்போ, நீரில் வாழும் பிராணிகளோ, வானத்தில் பறக்கும் பறவைகளோ, நிலத்தில் வாழும் நாய், பன்றி போன்ற மிருகங்களோ - அவையனைத்திலும் நான் அவசியம் நிரந்தரமாக வியாபிதிருக்கிறேன்.-
"ஆகவே, உங்களை என்னிடமிருந்து வேறுபட்டவர்களாக நினைக்காதீர். தம்மிலிருந்து என்னை வேறுபடாதவாறு அறிந்தவர் மகாபாக்கியசாலி."
இவ்வார்த்தைகள் சுருங்கச் சொல்லப்பட்டவை ஆயினும் ஆழமான பொருள் பொதிந்தவை; மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. சோல்கரின் மீது எவ்வளவு பிரியம் இருந்தால் பாபா அவருக்கு இந்த பக்திக் கஜானாவை வழங்குவார்!
சோல்கரின் மனதில் என்ன இருந்ததோ அதை நேரிடையான அனுபவமாக பாபா வெளிப்பாடு செய்துவிட்டார். ஞானிகளுடைய செயல்முறைத் திறன்தான் என்னே!
பாபாவினுடைய திருவாய் மொழி விலை மதிப்பற்றது. பக்தர்களுடைய இதயத்தில் ஆழமாகப் பாய்ந்து, பிரேமையாகிய பழ தோட்டத்திற்கு உயிர்ச் சத்தாகிறது . பக்தியாகிய கப்பலுக்குப் பாய் மரம் ஆகிறது.
சாதகப் பறவைகளின் தாகத்தை தீர்ப்பதற்காக மேகங்கள் மழையைப் பொழிகின்றன; இதன் மூலமாக பூமி முழுவதும் மழையால் குளிர்ந்து போகிறது. இங்கு நடந்ததும் அவ்வாறே.
சோல்கர், பாவம் ஏழை! யாருக்குமே தெரியாத, கேள்விப்படாத, முன்பின் தெரியாத ஆள் அல்லரோ? சோல்கரின் இதயத்தில் ஓர் எழுச்சியை ஏற்பட செய்து நேர்த்திகடன் ஏற்றுகொள்ள வாய்த்த தாஸ கணுவின் கீர்த்தனை கூட ஒரு நிமித்த காரணமே (கருவியே). அதுவே, கடைசியில் அவருக்கு பாபாவின் அருளைத் தேடிக் கொடுத்தது.
இதனைப் பின்பற்றி, ஞானிகள் மனதுள்ளே என்ன நினைக்கிறார்கள் என்னும் அற்புதம் வெளிப்பட்டது! அடியவர்களுக்குப் போதனை அளிப்பதில் பேராவல் கொண்ட பாபா, இது போன்ற சூழ்நிலைகளை சிருஷ்டி செய்தார்.
No comments:
Post a Comment