ஷிர்டி சாயி சத்சரிதம்
சத்குரு எல்லா விருப்பங்களும் நிறைவேறியவர் என்றால், ஓர் அடியவர் அவருடைய விருப்பத்தை எப்படி நிறைவேற்றி வைக்க முடியும்? ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், குருதான், குருவுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற பக்தனுடைய ஆவலை நிறைவேற்றி வைத்து அவனை நிஷ்காமனாகச் (விருப்பம் இல்லாதவனாக) செய்கிறார்.
உண்மையான பக்தியுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு பூவையோ ஓர் இலையையோ அவர் அன்புடன் ஏற்றுகொள்கிறார். அதுவே கர்வத்துடன் அளிக்கபட்டால், உடனே தலையை திருப்பிக் கொண்டு போய் விடுகிறார்.
சச்சிதானந்த கடலாகிய அவருக்குப் புறச்சடங்குகள் முக்கியமா என்ன? ஆயினும் பக்தியுடனும் விசுவாசத்துடனும் எது அளிக்கபட்டாலும் அதை சந்தோஷமாக ஏற்றுகொள்கிறார்.
எனகொன்றுமே தெரியாது என்னும் போர்வையின் கீழ், வாஸ்தவத்தில் அவர் நம்முடைய அறியாமையை நீக்கி ஞானத்தை அளிக்கிறார். சாஸ்திர விதிகளில் இருந்து விலகாமல் தம் அடியவர்களுக்கு இனிமையான முறையில் போதனை நல்குகிறார்.
அவருக்கு பாவத்துடன் சேவை செய்யும் அடியவர், இறைவனிடம் ஒன்று கலந்த உணர்வை அடைகிறார். இதர சாதனைகளைத் தள்ளி வைத்து விட்டு குரு சேவையில் பணிவுடன் ஈடுபடுங்கள்.
அந்த சேவையில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும், கபடமான சாமர்த்தியத்தின் நிழல் பட்டாலும், சாதகருக்கு தீமையே விளையும். தேவை என்னவென்றால், குருவின் மீது உறுதியான விசுவாசமே.
மேலும், சிஷ்யன் சுயமுயற்சியால் என்ன செய்கிறான்? ஒன்றுமில்லையே! அவன் செய்வதையெல்லாம் சத்குருவன்றோ லாவகப் படுத்துகிறார்! சிஷ்யனுக்கு தனக்கு வரப்போகும் அபாயங்களை பற்றி எதுவும் தெரிவதில்லை. குரு அந்த அபாயங்களை விலக்குவதற்காக செய்யும் உபாயங்களும் கூட சிஷ்யனுக்கு தெரிவதில்லை!
மூவுலகங்களிலும் தேடினாலும் குருவைப் போன்ற தர்மதாதாவை காண்பதரிது. சரணமடைந்தவர்களுக்கு மாபெரும் புகலிடமான குருவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக சரணடைவோமாக.
குருவைச் சிந்தாமணிக்கு உபமானப்படுதுவதும் சரியாகாது. ஏனெனில், அந்த தேவ லோகத்து ரத்தினம் நாம் நினப்பதைதான் அளிக்கும். குருவோ, நிஜமான பக்தன் பரம ஆச்சரியம் அடையுமாறு அவன் நினைத்தே பார்க்காத வஸ்துகளையும் அளிப்பார்.
இந்திரனுடைய கற்பகதருவிற்கு உபமானப்படுத்துவோமேன்றால், அது நாம் கல்விதம் செய்வதைத்தான் (கற்பனையில் விரும்புவது) அளிக்கும். குருராயரோ, நாம் கற்பனை செய்தும் பார்க்கமுடியாத நிர்விகல்பசமாதியையும் அளிக்கும் சக்தி பெற்றவர்.
காமதேனு (தேவலோகத்துப் பசு) நாம் விரும்பிய பொருளை உடனே அளிக்கும். காமதேனுவை விடச் சிறந்தவர் குருதேனு. நம்மால் சிந்தனை செய்து பார்க்கமுடியாத பதவியையும் (வீடு பேறு நிலையையும்) அளிப்பார்! வேறு யாருக்கு 'கற்பனை செய்து பார்க்க முடியாததையும் அளிப்பவர்' என்னும் பட்டம் பொருந்தும்?
சத்குரு எல்லா விருப்பங்களும் நிறைவேறியவர் என்றால், ஓர் அடியவர் அவருடைய விருப்பத்தை எப்படி நிறைவேற்றி வைக்க முடியும்? ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், குருதான், குருவுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற பக்தனுடைய ஆவலை நிறைவேற்றி வைத்து அவனை நிஷ்காமனாகச் (விருப்பம் இல்லாதவனாக) செய்கிறார்.
உண்மையான பக்தியுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு பூவையோ ஓர் இலையையோ அவர் அன்புடன் ஏற்றுகொள்கிறார். அதுவே கர்வத்துடன் அளிக்கபட்டால், உடனே தலையை திருப்பிக் கொண்டு போய் விடுகிறார்.
சச்சிதானந்த கடலாகிய அவருக்குப் புறச்சடங்குகள் முக்கியமா என்ன? ஆயினும் பக்தியுடனும் விசுவாசத்துடனும் எது அளிக்கபட்டாலும் அதை சந்தோஷமாக ஏற்றுகொள்கிறார்.
எனகொன்றுமே தெரியாது என்னும் போர்வையின் கீழ், வாஸ்தவத்தில் அவர் நம்முடைய அறியாமையை நீக்கி ஞானத்தை அளிக்கிறார். சாஸ்திர விதிகளில் இருந்து விலகாமல் தம் அடியவர்களுக்கு இனிமையான முறையில் போதனை நல்குகிறார்.
அவருக்கு பாவத்துடன் சேவை செய்யும் அடியவர், இறைவனிடம் ஒன்று கலந்த உணர்வை அடைகிறார். இதர சாதனைகளைத் தள்ளி வைத்து விட்டு குரு சேவையில் பணிவுடன் ஈடுபடுங்கள்.
அந்த சேவையில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும், கபடமான சாமர்த்தியத்தின் நிழல் பட்டாலும், சாதகருக்கு தீமையே விளையும். தேவை என்னவென்றால், குருவின் மீது உறுதியான விசுவாசமே.
மேலும், சிஷ்யன் சுயமுயற்சியால் என்ன செய்கிறான்? ஒன்றுமில்லையே! அவன் செய்வதையெல்லாம் சத்குருவன்றோ லாவகப் படுத்துகிறார்! சிஷ்யனுக்கு தனக்கு வரப்போகும் அபாயங்களை பற்றி எதுவும் தெரிவதில்லை. குரு அந்த அபாயங்களை விலக்குவதற்காக செய்யும் உபாயங்களும் கூட சிஷ்யனுக்கு தெரிவதில்லை!
மூவுலகங்களிலும் தேடினாலும் குருவைப் போன்ற தர்மதாதாவை காண்பதரிது. சரணமடைந்தவர்களுக்கு மாபெரும் புகலிடமான குருவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக சரணடைவோமாக.
குருவைச் சிந்தாமணிக்கு உபமானப்படுதுவதும் சரியாகாது. ஏனெனில், அந்த தேவ லோகத்து ரத்தினம் நாம் நினப்பதைதான் அளிக்கும். குருவோ, நிஜமான பக்தன் பரம ஆச்சரியம் அடையுமாறு அவன் நினைத்தே பார்க்காத வஸ்துகளையும் அளிப்பார்.
இந்திரனுடைய கற்பகதருவிற்கு உபமானப்படுத்துவோமேன்றால், அது நாம் கல்விதம் செய்வதைத்தான் (கற்பனையில் விரும்புவது) அளிக்கும். குருராயரோ, நாம் கற்பனை செய்தும் பார்க்கமுடியாத நிர்விகல்பசமாதியையும் அளிக்கும் சக்தி பெற்றவர்.
காமதேனு (தேவலோகத்துப் பசு) நாம் விரும்பிய பொருளை உடனே அளிக்கும். காமதேனுவை விடச் சிறந்தவர் குருதேனு. நம்மால் சிந்தனை செய்து பார்க்கமுடியாத பதவியையும் (வீடு பேறு நிலையையும்) அளிப்பார்! வேறு யாருக்கு 'கற்பனை செய்து பார்க்க முடியாததையும் அளிப்பவர்' என்னும் பட்டம் பொருந்தும்?
No comments:
Post a Comment