ஷிர்டி சாயி சத்சரிதம்
திடீரென்று பாபா சொன்னார், "இன்று வந்த பிராமணரிடமிருந்து தக்ஷிணை வாங்கிக் கொண்டு வாருங்கள்." உடனே, ஸ்ரீமான் புட்டியே தக்ஷிணை வாங்கிக் கொண்டு வருவதற்குக் கிளம்பினார்.
முலே ஸ்நானத்தை முடித்து விட்டு, மடி ஆசாரமான ஆடைகளை அணிந்து கொண்டு யோகாசமான நிலையில் நிம்மதியான மனதுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார்.
பாபா அனுப்பிய செய்தியைக் கேட்டவுடன் அவருடைய மனதை சந்தேகம் தாக்கியது. "நான் எதற்காக தக்ஷிணை கொடுக்க வேண்டும்? நான் தினமும் அக்கினிஹோத்திரம் செய்யும் நிர்மலமான பிராமணன். -
"பாபா ஓர் உயர்ந்த ஞானியாக இருக்கலாம். ஆனால், நான் அவருக்கு எவ்விதத்திலும் கடமைப் பட்டவன் அல்லேன்! என்னை ஏன் அவர் தக்ஷிணை கேட்கிறார்? அவருடைய மனம் தத்தளித்தது.
" அதே சமயம், ஒரு சிறந்த ஞானி தக்ஷிணை கேட்கிறார்; இச்செய்தியை ஒரு கோடீச்வரர் எனக்குக் கொண்டு வருகிறார்." முலே சாஸ்திரிக்கு மனதில் சந்தியம் இருந்தபோதிலும் கொஞ்சம் தக்ஷிணை எடுத்துக் கொண்டார்.
இன்னும் ஒரு சந்தேகமும் இருந்தது. ஆரம்பித்து விட்ட சடங்குகளை முடிக்காமல் மசூதிக்கு எப்படிச் செல்வது? ஆனால், (பாபாவுக்கு தக்ஷிணை) இல்லை என்று சொல்லவும் மனமில்லை.
சந்தேகம் கொண்ட மனதிற்கு முடிவெடுக்கும் உறுதி இருக்காது. ஏதாவது ஒரு வழியில் செல்லாது; அவர் 1 திரிசங்கு நிலையிலிருந்தார்.
ஆயினும், அவர் போவதற்கு முடிவு செய்து, சபா மண்டபத்தினுள் நுழைந்து தூரத்திலேயே நின்று கொண்டார்.
"நான் மடி ஆசாரமாக உடை உடுத்திக் கொண்டிருக்கிறேன்; மசொதி ஓர் ஆசரமில்லாத இடம்; பாபாவின் அருகில் நான் எப்படிப் போக முடியும்?" இவ்வாறு நினைத்துக் கொண்டு கூப்பிய கைகளுக்குள் இருந்த பூக்களை பாபாவின் மீது புஷ்பாஞ்சலி செய்தார். ஈதனைத்தும் தூரத்தில் இருந்துதான் நடந்தது.
ஓ! அவருடைய கண்ணெதிரிலேயே ஓர் அற்புதம் நிகழ்ந்தது! அமர்ந்திருந்த ஆசனத்தில் பாபா தெரியவில்லை; மாறாகத் தம் பூஜ்யகுரு கோலப் மகாராஜையே பார்த்தார்.
மற்றவர்கள் எப்பொழுதும்போல் சமர்த்த சாயியே பார்த்தனர். முலே சாஸ்த்ரியின் கண்களுக்கோ, எப்பொழுதோ சமாதியடைந்து விட்ட குரு கோலப் நாதரே தெரிந்தார். முலே சாஸ்த்ரி மிக ஆச்சரியமடைந்தார்.
அவருக்கு குரு வாஸ்தவத்தில் எப்பொழுதோ சமாதியாகி விட்டிருந்தாலும், தம் எதிரில் அவரை பூத உடலுடன் பார்த்த முலே, மிக வியப்படைந்தார். புதிய சந்தேகங்கள் பல முளைத்தன.
----------------------------------------------------------------------------------------------------------
1 சூரிய குலத்து அரசர். விசுவாமித்திர முனிவர் தம்முடைய தவ வலிமையால் அவரை மனித உடலுடன் சொர்கத்திற்கு அனுப்பினார். நுழையும்போது இந்திரன் அவரைப் பிடித்து கீழே தள்ளிவிட்டார். விசுவாமித்திரர் தவ வலிமையால் அவரைக் கீழே விழாது நிறுத்தினார். இதன் விளைவாக அவர் பூமிக்கும் சொர்க்கத்திற்கும் நடுவில் தலை கீழாக தொங்கும்படி நேர்ந்தது!
No comments:
Post a Comment